Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனுரா, மங்கள, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி மூவரது அமைச்சுப் பதவிகளும் பறிப்பு!ஜனாதிபதி நேற்றிரவு அதிரடி நடவடிக்கை.

Featured Replies

அனுரா, மங்கள, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி மூவரது அமைச்சுப் பதவிகளும் பறிப்பு!ஜனாதிபதி நேற்றிரவு அதிரடி நடவடிக்கை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்களான அனுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராய்ச்சி ஆகியோரது அமைச்சுப் பதவிகள் நேற்றிரவு ஜனாதிபதியால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. மூவரது அமைச்சுப் பதவிகளையும் ஜனாதிபதி நேற்றிரவு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்தது.

கடந்த மாதம் 28ஆம் திகதி பதவியேற்ற புதிய அமைச்சரவையில் அனுரா பண்டாரநாயக்கா தேசிய பாரம்பரிய அமைச்சராகவும், மங்கள சமரவீர துறைமுகம் மற்றும் விமானசேவை அமைச்சராகவும், ஸ்ரீபதி சூரியாராய்ச்சி துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றிருந்தனர். இவர்களில் ஸ்ரீபதி சூரியாராய்ச்சி அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர். ஏனைய இருவரும் அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்கள்.

அரசியலமைப்பு விதிகளின்படி ஜனாதிபதி தமக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இவர்கள் மூவரையும் பதவி நீக்கம் செய்து, அவர்களது அமைச்சுப் பொறுப்புகளை நேற்றிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறார் என்று ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்தது.

இந்த மூன்று அமைச்சர்களும் சமீப காலமாக ஜனாதிபதியுடனும் அரசுடனும் முரண்பட்டுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக அனுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர ஆகியோருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைபேசி மூலம் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் கொலை அச்சுறுத்தலுக்கு அரசுத் தரப்பினரே காரணம் என்று அவர்கள் வெளிப்படையாகவே தெரிவித்து வந்தனர். அதற்காக அரசையும், ஜனாதிபதியையும் கடுமையாக விமர்சித்து நேற்றுமுன்தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார் அனுரா.

முன்னைய அமைச்சரவையில் வெளிவிவகாரம் மற்றும் துறைமுக, விமான சேவைகள் அமைச்சராக இருந்தவர் மங்கள சமரவீர. எனினும், சமீபத்திய அமைச்சரவை மறுசீரமைப்பின்போது அவரிடம் இருந்து வெளிவிவகார அமைச்சு பிடுங்கப்பட்டு துறைமுகம் மற்றும் விமான சேவை அமைச்சு மட்டுமே வழங்கப்பட்டிருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்துகொண்டு கட்சிக்கு விரோதமாகச் செயற்படுவோருக்கு எதிராகத் தாம் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று ஜனாதிபதி நேற்றுமுன்தினம் கட்சி அமைப்பாளர்கள் கூட்டத்தில் கடுந்தொனியில் கூறியிருந்தமையும் தெரிந்ததே.

-Sudaroli-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டமை மகிழ்ச்சிதான் என்கிறார் அனுரா எந்தப் பிரச்சினைக்கும் மஹிந்தவிடம் தீர்வு இல்லையாம்!

நாட்டின் இனப்பிரச்சினை உட்பட எந்தப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தீர்வு இல்லை. எனவே, அமைச்சர் பதவியிலிருந்து என்னை நீக்கியமை குறித்து தனிப்பட்ட ரீதியில் எனக்கு மகிழ்ச்சிதான்.

இவ்வாறு தெரிவித்திருக்கிறார் ஜனாதிபதியினால் நேற்றிரவு பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களில் ஒருவரான அனுரா பண்டாரநாயக்க. தமது அமைச்சுப் பொறுப்பு பிடுங்கப்பட்டமை தொடர்பாக அனுரா பண்டாரநாயக்கா நேற்றிரவு பி.பி.ஸிக்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

என்னை அவர் பதவி நீக்கம் செய்த செய்தி அறிந்து தனிப்பட்ட முறையில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவருடன் இணைந்து என்னால் பணியாற்ற முடியாது. இவரிடம் (மஹிந்தவிடம்) நாட்டுப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை; இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை. அதைத் தீர்ப்பதில் அவருக்கு ஈடுபாடும் கிடையாது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு அவரிடம் எந்தவிதமான தீர்வுமில்லை. வேலைவாய்ப்புப் பிரச்சினைக்கும் அவரிடம் தீர்வு இல்லை.

ஊழலுக்கும் இவரிடம் எந்தவிதமான தீர்வும் கிடையாது.

பலர் கடத்தப்படுவதற்கும் கொலை செய்யப்படுவதற்கும்கூட அவரிடம் எந்தவிதத் தீர்வும் இல்லை. மொத்தத்தில் நாடு குழம்பிப் போய்க் கிடக்கிறது. எனக்கு இவற்றில் எந்தவிதமான பங்கும் கிடையாது. ஆகவே, நான் நாட்டு மக்களுக்கு இவற்றுக்காக பதில் சொல்ல வேண்டியதில்லை. மிகவும் கடுமையான பிரச்சினைகளுக்கு மத்தியில் அவரது அமைச்சரவையில் இருந்துள்ளேன்.

இது என்னுடைய தந்தையின் கட்சி. அவருடைய தந்தையின் கட்சி அல்ல. ஆகவே, நான் இதைவிட்டு வெளியேறப்போவதில்லை. நான் தொடர்ந்து ஜனநாயகத்திற்காக, இனப்பிரச்சினைத் தீர்வுக்காக, அனைத்து மக்களின் சமத்துவத்துக்காகப் போராடுவேன். எமது சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத் துப் போராடுவோம். சந்திரிகா குமாரதுங்கவை அதற்கு தலைமை தாங்குமாறு கேட்போம் என்றார் அனுரா.

-Sudaroli-

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த ராஜுபக்சா ஆட்சிக்கு வருவதற்கு உழைத்த கட்சி ஜேவிபி. அதைக் கை கழுவி கட்சியை ஆட்டம் காணவைத்தார். இப்போது சந்திரிக்காவின் சுதந்திரக்கட்சி மீதான பிடியை விலகவைத்து, மகிந்தவின் வெற்றிக்காக உழைத்த மங்களசமரவீரவைக் கை கழுவி விட்டுள்ளார். மகிந்த வெற்றியடைய அவரது சகோதரங்களோ, சுற்றங்களோ அப்போது இருந்ததை விடவும் மங்கள சமரவீரா அதிகமாக போராடினார். அப்படிப்பட்டவரை கூட கைகழுவுகின்றார் என்றால் தமிழ் கைக்கூலிகளின் நிலமை எவ்வாறு அமையும்?

தமிழர் விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்காகத் தான், இந்தக் கைக்கூலிகள் தூக்கிப் பிடிக்கப்படுகின்றனர் என்பதை இவர்களும் உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் இதுவாகும். ஆனால் சிங்கள அரசின் பணம் இவர்களின் கண்களை மறைக்குமானால் நிச்சயம் இவர்களும் விரைவில் மறைக்கப்படுவார்கள்.

அமைச்சு பொறுப்புக்களில் இருந்து அநுர மங்கள, ஸ்ரீபதி சூரியாராச்சி திடீர் நீக்கம்

வீரகேசரி நாளேடு

நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களான அநுர பண்டாரநாயக்க,மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று மாலை திடீர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய மரபுரிமைகள் அமைச்சராக அநுரா பண்டாரநாயக்க துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சராக மங்கள சமரவீர, துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சராக ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் கடந்த 28 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மேற்படி மூன்று அமைச்சர்களே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் நேற்று மாலை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில், மேற்படி மூன்று அமைச்சர்களினதும் அமைச்சுப்பொறுப்புக்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும்வகையில் அரசியல் யாப்பின் 47 ஆவது சரத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரங்களை பயன்படுத்தியே இந்த அமைச்சுப்பதவிகள் ஜனாதிபதியினால் பொறுப்பேற்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது புதிய அமைச்சு பொறுப்புக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர்களான மங்கள சமரவீர , அநுர பண்டாரநாயக்க மற்றும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரான ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரின் அமைச்சு பதவிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று மாலை ஜனாதிபதியினால் பெறுப்பேற்கப்பட்டன.

ஜனாதிபதி ஐக்கிய தேசிய க் கட்சியின் மாற்றுக்குழு பாராளுமன்ற உறுப்பினர்கள் 18 பேரும், ஜாதிக ஹெல உறுமய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை இணைத்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் 28 ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தார் அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றத்தின் போது மங்களவிடம் இருந்த வெளிவிவகார அமைச்சும் பண்டாரநாயக்கவிடம் இருந்து சுற்றுலாத்துறை அமைச்சும் ஸ்ரீபதி சூரியாராச்சியிடம் இருந்து திறன் அபிவிருத்தி அமைச்சும் பறிக்கப்பட்டன.இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்களிடமிருந்த முக்கிய அமைச்சு பதவிகள் பறிக்கப்பட்டு ஏனைய உறுப்பினர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. இதனால் அக்கட்சி முக்கியஸ்தர்கள் மத்தியில் குழப்ப நிலை தோன்றியிருந்ததாக தெரியவருகின்றது .

இந் நிலையில் அமைச்சர் அநுரபண்டாரநாயக்கவுக்கு தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் பாராளுமன்றில் விசேட சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து அவர் நேற்று முன்தினம் உரையாற்றியிருந்தார். அந்த உரையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சீர் குலைப்பதற்கு சிலர் முயற்சி செய்வதாகவும் அதற்கு தானும் தனது அக்காவான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவும் இடமளிக்க மாட்டோம் என்றும் கூறியிருந்ததுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எனது அப்பா உருவாக்கினார். எனது அம்மா அதனைக் கட்டிக் காத்தார்.

அக்கா கட்சிக்காக கண்ணை இழந்தார். ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து என்னையும் எனது அக்காவையும் விரட்டுவதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை எவராலும் உடைத்தெறிய முடியாது. நாட்டின் சிறந்த சமூகத்தை உருவாக்குவதற்காக நானும் எனது அக்காவும் சுதந்திரக்கட்சியிலிருந்து போராடுவோம் என்றும் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது .

2005@Express Newspapers (Cey) Ltd. All rights reserved. Terms of Use |Trademarks |Privacy Statement

  • கருத்துக்கள உறவுகள்

அவங்கட ஆடும் அவங்கட குட்டியும். who cares about these jerks.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.