Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டெலிபோன் கால்

Featured Replies

டெலிபோன் கால் - எஸ்.கே. மூர்த்தி

 

பாழாய்ப் போன டெலிஃபோன் அடிக்கொரு தரம் கைகடிகாரத்தைப் போர்ட்டிகோவில் நின்று கொண்டிருந்த சியாமளாவின் இனிய கற்பனைகளை அதன் காரசாரமான ஒலி கலைத்தது. அவளது அழகு முகத்தில் ரவுஜ் மெருகையும் கலைத்துக் கொண்டு எள்ளும் கொள்ளும் வெடித்தன. வேண்டா வெறுப்போடு விரைந்து சென்று ரிஸீவரை எடுத்தாள்.

‘ஹலோ’

‘டியர் சியாமள்! வில் யூ ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ?’ போலியான பரிவு ததும்பும் அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்குச் சப்பென்றாகிவிட்டது. ஒரேடியாய்த் துள்ளிக் கொண்டிருந்த மனம் சோர்ந்து போய்விட்டது.

‘டோண்ட் பீட் எபெளட் த புஷ்! சினிமாவுக்கு வர முடியாதபடி ஒரு கேஸ் சீரியஸாக இருக்கிறதுஎன்று தானே சொல்லப் போகிறீர்கள்?’

‘சாரி! சியாமள்!...வந்து நான்….’

அதற்கு மேல் அந்தப் பசப்பு வார்த்தைகளைச் செவிமடுக்க முடியாதபடி அவளுக்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்துவிட்டது. ரிஸீவரை ‘க்ளக்’ என்று கிரேடிலில் அறைந்துவிட்டுச் சோபாவில் சாய்ந்தாள். ஏக்கம் அவள் நெஞ்சைப் பிழிந்தது.

IMG_20160415_155936750.jpg 

மனத்துயரை மறக்கும் ஆவலுடன் புத்தக அலமாரியிலிருந்து டெனிஸ் ரோபின்ஸின் நாவல் ஒன்றை எடுத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்து கொண்டாள் அவள்.

ஒரு பக்கம் படிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. வரிக்கு வரி அவளைப் போலவே கணவனின் அன்புக்காக ஏங்கும் ஒரு பெண்ணின் உணர்ச்சிக் கொந்தளிப்பு! மேற்கொண்டு படித்தால் அழுகை பீறிட்டுக் கொண்டு வந்துவிடும் போல் தோன்றியது. புத்தகத்தை வீசிவிட்டு ஜன்னல் அருகே நகர்ந்தாள் அவள். ‘டாக்டர்கள் என்றால் இப்படித்தானா? உணர்ச்சிகள் மரத்துப் போய்விடுமா? உடலின் புதிர்களுக்கு விடை காண்கிற வேகத்தில் உடலுக்குள் உள்ளம் என்று ஒன்று இருப்பதே மறந்து போய்விடுமா?’ இதயம் அங்கலாய்த்தது. ‘ஒரு வேளை, அவருக்கு இன்னொருத்தி..?’ நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்தது.

அறையில் நிலவிய மெல்லிய வெளிச்சத்தில் அங்கும் இங்கும் அலைந்த பார்வை மேஜை மீதிருந்த டைம்பிஸில் ஒரு கணம் நிலைத்தது. முட்களின் மினுமினுப்பு மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்த்தியது. சியாமளாவுக்கு இன்னும் தூக்கம் வந்தபாடில்லை. அருகே மெய்மறந்து உறங்கும் கணவனை அவள் ஏற இறங்கப் பார்த்தாள். ‘இப்படியும் ஒரு கல் நெஞ்சமா? சாப்பிடும் போதாகட்டும், படுக்கையறைக்கு வந்த பிறகாகட்டும், ஒரு வார்த்தை பேச வேண்டுமே? ஊஹும், நினைக்க நினைக்க அவளுக்குத் துக்கம் தொண்டையை அழுத்தியது.

அந்த லேசான விசும்பல் ஒலி கிருஷ்ணனின் தூக்கத்தை கலைத்துவிட்டது. விளக்கின் விசையை அழுத்திவிட்டு மனைவியை முறைத்துப் பார்த்தான் அவன். அந்தக் கூர்மையான பார்வையில் பளபளப்பது பரிவா இல்லை, வெறுப்பா…? சியாமளாவுக்கு ஒரே தவிப்பாகப் போய்விட்டது.

‘உங்களுடன் சினிமாவுக்குப் போக முடியாது என்கிற ஏமாற்றத்திலிருந்து எனக்கு கோபம் கோபமாய் வந்துவிட்டது! நீங்கள் பேசி முடிப்பதற்குள்…நான்..ஃபோனை டக்கென்று வைத்தது தப்புதான்!...என்னை மன்…’

அதற்கு மேல் அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவளது கரங்கள் பேச முடியாத நிலையில் நெடுநாளைக்கப்புறம் பெருக்கெடுத்து வரும் இந்த உரிமையையும் பரிவையையும் எண்ணி அவள் உள்ளம் ஒரு துள்ளு துள்ளியது. மெய் மறந்தவளானாள்.

‘ட்ரிங்…ட்ரிங்…’

கீழே ஹாலில் எழுந்த டெலிபோன் ஒலி இருவரது கிளுகிளுப்பையும் கலைத்தது.

‘ஓ! எக்ஸ்டென்ஷனுக்குக் கனெக்‌ஷன் போட மறந்து போயிருக்கிறேன்!’ மேஜை மீதிருந்த போனை வெறித்துப் பார்த்தபடி சொன்ன கிருஷ்ணன் கீழே செல்ல ஆயத்தமானான். ஆனால் அதற்குள் இன்னதென்று இல்லாத ஒரு துடிப்பு சியாமளாவை ஆட்டி வைத்தது.

IMG_20160415_160000386.jpg 

‘நான் போய் கனெக்ட் பண்ணுகிறேன். இங்கிருந்தே பேசுங்களேன்!’ என்று மொழிந்து விட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அவள்.

‘ஹலோ!’

‘டாக்டர் கிருஷ்ணன்ரெ வீடல்லே’

‘ஹும்’

‘இவிடே முல்லைக்கல் அம்பலத்தினடுத்து லாரியும் ஸ்கூட்டரும் கூட்டி முட்டி ஓர் ஆக்ஸிடென்ட்! ஸ்கூட்டரில் வன்ன ஆள் வளரெ ஆபத்திலாணு! டாக்டர் கிருஷ்ணனெ விளிக்கணும் என்னு என்று அயாள் பறஞ்சு!... ஞங்கள் இப்போள் ஆம்புலன்ஸினு போன் செய்திட்டு காத்திருக்குன்னு!.. ஏதாயாலும் டாக்டர் கிருஷ்ணன் இவிடெவன்னால் நல்லது!’

பேசிய குரலில் கலவரமும் வருத்தமும் தொனித்தன. எனினும் சியாமளாவுக்கு ஆத்திரம்தான் வந்தது. ஆலப்புழையில் இவர் ஒருவர்தானா டாக்டர்? ஜலதோஷத்திலிருந்து ஆக்ஸிடெண்ட் வரை எதற்கும் இவர் போய்த்தான் ஆகவேண்டுமா?’

‘ஐயோ!’ டாக்டரும் குடும்பமும் திருவனந்தபுரத்தேக்கு போயிருக்குக்யாணல்லோ! நாளை ராவிலேயே வரு!’ ஒப்பிப்பதை கேட்க அவளுக்கே வியப்பாக இருந்தது.

‘ஆராணு சம்சாரிக்குன்னது?’

‘வேலைக்காரி!’

மறுகோடியில் ரிஸீவரை வைக்கும் சத்தம் கேட்டது. வேண்டா வெறுப்போடு எக்ஸ்டென்ஷனுக்கு கனெக்‌ஷனைப் போட்டுவிட்டு, ஓட்டமும் நடையுமாய் மாடிக்குத் திரும்பினாள் சியாமளா.

கிருஷ்ணன் மனைவியை ஆவலுடன் பார்த்தான்.

‘மிஸ்டர் ராங் நம்பர் தான் அவசரமாய் அழைத்தார்! என்று சொன்னபடி படுக்கையில் பொத்தென்று விழுந்தாள் அவள்.

நல்ல வேளை. மீண்டும் தொலைபேசி தொல்லை கொடுக்கவில்லை.

பொழுது புலர்ந்தது. சியாமளாவுக்கு ஒரே குதூகலம். அங்குமிங்கும் ஓடியாடுவதும் வேலைக்காரர்களை மேற்பார்வை பார்ப்பதுமாய் பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள் அவள். ஒன்பது மணிக்கெல்லாம் கிருஷ்ணன் நர்ஸிங் ஹோமுக்குச் சென்றுவிட்டான்.

என்றைக்கும் இல்லாத கவர்ச்சியோடு சுவரில் மாட்டியிருந்த காலண்டர் சியாமளாவின் கருத்தைக் கவர்ந்தது. இதயத்தின் ஆழத்தில் இனிய கற்பனை ஒன்று விரிந்தது. இதுபோல் மூக்கும் விழியுமாய் கொழுக் மொழுக் என்று குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தைக்கு அழகாய் கணேஷ் என்று பெயர் வைக்க வேண்டும்.

 

வாசலில் என்னவோ பரபரப்பு. பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சியாமளா திடுக்கிட்டு எழுந்தாள். அவளது நீள் விழிகள் அகன்று விரிந்தன.

வாசலில் ஆம்புலன்ஸ் நிற்கிறது.

கணவர் இறங்குகிறார்.

ஸ்ட்ரெச்சரில் ஓர் உருவத்தை தூக்கி வருகிறார்கள்.

சியாமளாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. கண்ணுக்கும் மனத்துக்கும் தொடர்ந்து விட்ட, உணர்ச்சிகள் இல்லாத, துடிப்புகள் இல்லாத ஒரு நிலை.

கிருஷ்ணன் அதிர்ந்து நிற்கும் மனைவியை அணுகினான்.

’ஃபேட், சியாமள் ஃபேட்! டாக்டர் நம்பியாரைப் பார்ப்பதற்காக டிஸ்ட்ரிக்ட் ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். அங்கே இந்த நிலையில் இவன்…! இரண்டு மணிக்கே உயிர் பிரிந்திருக்கிறது. அடுத்த தெருவில் தான் ராத்திரி ஆக்ஸிடெண்ட் நடந்திருக்கிறது. நமக்குத் தெரியாமல் போய்விட்டது. சரியான முதலுதவி கிடைத்திருந்தால் பாவம், புது ஸ்கூட்டர் வாங்கிய பெருமிதத்தில் பறந்து வந்திருக்கிறான் போலும்! நூறு மைல் ஒழுங்காய் வந்தவன் கடைசி நிமிடத்தில் இப்படி…’

கிருஷ்ணனுக்கு மேற்கொண்டு பேச முடியவில்லை. தொண்டையை அடைத்துக் கொண்டுவிட்டது.

சிலைபோல் சமைந்திருந்த சியாமளாவின் உடல் திடீரென்று நடுங்கியது. உள்ளம் கடல்போல் கொந்தளித்தது. தலையிலும், நெஞ்சிலும், கால்களிலும், கட்டுக்களுடன் உயிர்த் துடிப்பிழந்து பிணமாய்க் கிடக்கும் அந்த உருவத்தை அவள் ஏறெடுத்துப் பார்த்தாள்.

‘அண்ணா! கணேசன்னா!’ தொண்டையை அடைத்துக் கொண்டிருந்த துக்கத்தை உடைத்துக் கொண்டு அவளது வேதனைக் குரல் ஒலித்தது.

http://www.dinamani.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.