Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும்

Featured Replies

கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும்

கிழக்கிலும் விரைவில் போராட்டம் நடைபெறும்

 

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேற்கொண்ட தொடர் உண்ணாவிரத போராட்டத்தை கிழக்கிலும் வெகுவிரைவில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் மாஞ்சோலை கலாசார மண்டப திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பிரதமரின் கருத்து வேடிக்கைக்குரியது,

தமிழர்களின் மத்தியில் பிரதமரின் கூற்றை ஒரு கேலிக் கூற்றாகவே பார்க்கின்றார்கள்.

வட, கிழக்கில் தங்களின் உறவுகளைத் தேடி நடாத்தும் போராட்டங்களை தென்னிலங்கையில் உள்ள அரசியல் சக்திகள் நாட்டை குழப்புகின்ற அல்லது அரசாங்கத்தை குழப்புகின்ற செயற்பாடு என சட்டம் போடுகின்றார்கள்.

தமிழ் மக்கள் அரசாங்கத்தை மாற்றவோ அல்லது ஜனாதிபதியாகுவதற்கோ போராட்டங்களை நடத்தவில்லை,

தங்களின் கையினால் இலங்கை பாதுகாப்பு படையினரிடம் கொடுத்த உறவுகளை விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை விரைவாக கண்டு பிடித்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே பல போராட்டங்களை நடாத்துகின்றார்கள்.

அதனையே தென்னிலங்கை அரசியல் சக்திகள் வேறு விதமாக சித்தரிக்கின்றார்கள்.

ஏறாவூர் போன்ற எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஏறாவூர் எல்லைப் பகுதியில் வசிக்கும் தமிழ் பேசும் மக்களின் வீட்டுத் திட்டம் மற்றும் ஏனைய வசதிகளை மாவட்ட அரச அதிபர் மிக விரைவாக பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அது தொடர்பாக விரைவாக அரச அதிபர் பெற்றுக் கொடுப்பதாக உறுதி வழங்கியிருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=87584

  • தொடங்கியவர்
'எழுக தமிழ் பேரெழுச்சியில் அரசியலில்லை'
 
05-02-2017 07:32 PM
Comments - 0       Views - 20

article_1486289054-LEAD-BOX-p7.jpgஎம்.எஸ்.எம்.நூர்தீன், கனகராசா சரவணன்

எழுக தமிழ் பேரணியானது, அரசியல் செய்வதற்காகச் செய்யவில்லை. இது மக்கள் எழுச்சிப் பேரணியாகும். இது அரசியல் செய்வதற்கான தளமல்ல. அரசியல் கட்சியோ அல்லது குறிப்பிட்ட நபர்களோ அரசியல் நடாத்துவதற்கான தளமோ அல்லது களமோ இது இல்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில், இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“எழுக தமிழ் பேரெழுச்சியானது, ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களும் தங்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும் ஜெனீவா மனித உரிமை பேரவைக்கும் அழுத்தத்தை கொடுப்பதற்குச் செய்யப்படும் செயற்பாடு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

"தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி அறவழிப் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைமை வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்டுள்ளது.

"கடந்த சில தினங்களுக்கு முன்பு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவுகள் வீதியோரங்களில் இருந்து நீர், ஆகரத்தைத் தவிர்த்து அறவழிப் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். பல தாய்மார் அந்த இடத்திலே மயங்கி விழுந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டார்கள்.

"2017ஆம் ஆண்டு மலர்ந்து தொடச்சியாக வன்னியிலே இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அறவழிப் போராட்டம் நடைபெற்றது.

"முல்லைத்தீவில்,  மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வீதியோரங்களில்  அறவழிப் போராட்டம் நடத்துகின்றனர்.

"நல்லாட்சியில் மக்கள் எதிர்ப்பார்த்த விடயங்கள் அரசியல் தீர்வு விடயம் அதற்கு முன்பு அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் காணி விடுவிப்பு இவ்வாறு பல்வேறு பட்ட நிலைமைகள் இன்னும் நடந்தேறவில்லை” என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/191020/-எழ-க-தம-ழ-ப-ர-ழ-ச-ச-ய-ல-அரச-யல-ல-ல-#sthash.XYVEIn2G.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.