Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க மீண்டும் கூவத்தூர் செல்கிறார் சசிகலா

Featured Replies

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க மீண்டும் கூவத்தூர் செல்கிறார் சசிகலா

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா மீண்டும் கூவத்தூர் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சந்திக்க மீண்டும் கூவத்தூர் செல்கிறார் சசிகலா
 
தமிழக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. சசிகலா, பன்னீர் செல்வம் இடையே ஆட்சியமைக்க கடும் போட்டி நிலவுகிறது. சசிகலாவிற்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சசிகலா நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. அதன்பின் சென்னை திரும்பினார். இந்நிலையில் இன்று மீண்டும் சசிகலா கூவத்தூர் செல்ல இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காவிட்டால் வேறு வடிவில் போராட்டத்தை கொண்டு செல்ல இருப்பதாக கூறியிருப்பதால், இன்றைய சந்திப்பிற்குப் பின் சசிகலா அதிரடி முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/12142344/1067824/sasikala-goes-kuvathur-again.vpf

  • தொடங்கியவர்
கூவத்தூர் ரிசார்டில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புலம்பல்!
-திமுக மா.செ. தரும் தகவல்!
 
koovathur%20resort%20il%20admk%20mla%20kkal.jpg
கூவத்தூர் ரெசார்ட்
 
 
 
sivasankar.jpgமுன்னாள் திமுக எம்.எல்.ஏ.வும்,  அரியலூர் மாவட்ட திமுக செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தனக்கு கிடைத்திருக்கும் தகவலை, புகைப்படத்துடன் வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
 
கூவத்தூர் ரிசார்டில் இருந்து சிவசங்கரின் நண்பர் அனுப்பிய போட்டோவாம் இது. அனுப்பியவர் எந்த தொகுதி எம்.எல்.ஏ. என்றெல்லாம் கேட்கக் கூடாதாம். அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் மனநிலையை தனது நண்பர் வெளிப்படுத்தியது குறித்து இப்படிச் சொல்கிறார் சிவசங்கர் –
 
சூப்பர் ரிசார்டாம்.. நல்ல சாப்பாடாம்.. மக்கள் திட்டுறது தான் சிலருக்கு கவலையாம்.. அதைவிட பாதுகாப்புக்கு இருக்கிறவங்க பார்வைதான் கொடுமையா இருக்காம். 
 
அந்த எம்.எல்.ஏ. நண்பர் சிவசங்கரிடம் “எலெக்ஷன் வராம இருக்கணுமேன்னு கட்சி இந்த முடிவு எடுத்தது. அதனால தான், இவங்ககிட்ட (சசிகலா) வந்தோம். இப்பவும் எலெக்ஷன் வந்துடும் போல இருக்கு. இவங்க ரெண்டு பேருமே கரை சேர்ப்பாங்கன்னு நம்பிக்கை இல்ல. கரை சேர்க்கக் கூடியவங்க கூப்பிட மாட்டேங்கறாங்க. சீக்கிரமா ஒரு முடிவு வந்தா நல்லது. ஏரியா கம்ப்ளீட்டா சீல்டு. வெளியில் வர வழியில்லை.” என்றாராம். நண்பரின் குரலில் கஷ்டம் தெரிந்தது என்கிறார் சிவசங்கர். 
 
“கண்ணுல பயத்த காட்டிட்டாங்க பரமா” என, சுப்பிரமணியபுரம் திரைப்படத்தில் ஹீரோ பேசும் வசனத்தை, தனது நண்பரின் சார்பில் வெளிப்படுத்தி இருக்கிறார் சிவசங்கர். 
 
10 வருடங்கள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பதால், கட்சி பாகுபாடு இல்லாமல் பலரிடமும் தொடர்பில் உள்ளவராக இருக்கிறார் சிவசங்கர். அவரிடம் பேசினோம். “கூவத்தூர் ரிசார்டில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏ.க்களின் புலம்பல் குறித்து எனக்கு கிடைத்த உண்மையான தகவல் இது. மிகவும் வெம்பிப் போய் இருக்கிறார்களாம். பழைய எம்.எல்.ஏ.க்களைக் காட்டிலும் புதிய எம்.எல்.ஏ.க்கள்தான்,  ‘அடுத்து என்ன செய்வது?’ என்ற தடுமாற்றத்தில் இருக்கிறார்களாம்.” என்றார். 
 
‘யார் முதலமைச்சர் ஆகப் போகிறார்?’ என்று தமிழக மக்களையும் அல்லவா தவிப்பில் ஆழ்த்தியிருக்கிறது ஆளும் கட்சியினரின் அரசியல்!

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184217

  • தொடங்கியவர்

WR_20170212203939.jpeg

 

கூவத்தூர் சென்ற சசிகலாவிற்கு அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் சூடம் ஏற்றி ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர். கடந்த காலத்தில் ஜெ.,விடம் பலரும் குனிந்து வணங்கி பணிவை காட்டுவதை போல் மீண்டும் ஒரு அதிகார தோற்றத்தை காட்டுகிறது.

WR_20170212182218.jpeg

ஆடம்பர பாணி: கூவத்தூரில் தங்கி இருக்கும் அதிமுக., எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க சசிகலா சென்ற போது அவரது பின்னால் எண்ணற்ற விலை உயர்ந்த கார்கள் அணிவகுத்து சென்றன. ஜெ.,பாணியில் ஆடம்பரம் இருந்ததாக இப்பகுதியினர் கூறினர்.

  • தொடங்கியவர்
50 கார்களுடன் சென்ற சசிகலா: ஒவ்வொரு காரிலும் என்ன இருக்கிறது? ஆளுநரை சந்தித்தபோது மைத்ரேயன்...
 
sa12111.jpg
 
சென்னை அருகே கூவத்தூரில் கடந்த புதன்கிழமை முதல் தங்க வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை இரண்டாவது முறையாக சந்திக்க ஞாயிற்றுக்கிழமை மாலை போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்டார் சசிகலா. அவரது காருக்கு முன்னும் பின்னும் சுமார் 50 கார்கள் சென்றன. இதில் ஒரு கேரவேனும் அடக்கம். அதில் அமைச்சர்கள் இருந்தனர். 
 
இதனிடையே ஞாயிற்றுக்கிழமை மாலை ஒ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் கவர்னர் மாளிகைக்கு சென்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்துள்ளார். கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்திய நேரத்தில், கவர்னர் மாளிகையில் மைத்ரேயன் இருந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, சசிகலாவுக்கு ஒரு கார். அமைச்சர்களுக்கு ஒரு கேரவேன். பாதுகாப்புக்கு ஒரு 4 கார் என 6 கார்களே போதுமானது. சரி 10 கார்களே போகட்டும். 50 கார்கள் எதற்கு. காருக்குள் என்ன இருக்கிறது. பல ஊடங்களில் செய்தி வருவதைப்போல பணம் தான் இருக்கிறது. ஒவ்வொரு எம்எல்ஏவுக்கும் ரொக்கமாக கொடுக்கிறார்கள் என நினைக்கிறோம். எவ்வளவோ பேசியும் சில எம்எல்ஏக்கள் சம்மதிக்கவில்லை என்பதால் பணத்தை நேரில் காட்டி சம்மதிக்க வைக்க நினைக்கிறார்கள். ஏன் செய்தியாளர்களை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் விடவில்லை. அவர்களை விட்டால் என்ன. எம்எல்ஏக்களை சந்திக்கின்ற சசிகலா என்ன பேசுகிறார் என்பதை மக்கள் அறிய வீடியோ எடுக்க அனுமதித்தால் என்ன. ஒ.பன்னீர்செல்வத்தை சந்திக்கிறவர்கள் மைக்கில் பேசுகிறார்களே. அவரை ஆதரிக்கிற அமைச்சர் உள்பட 6 எம்எல்ஏக்களும் சுதந்திரமாக செயல்படுகிறார்களே. கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைப்பது ஏன் என்பதைத்தான் மைத்ரேயன் ஆளுநரிடம் கூறியிருப்பார் என்கின்றனர். 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=184224

  • தொடங்கியவர்
உள்ளே எம்எல்ஏக்களுடன் சசிகலா பேச்சுவார்த்தை: வெளியே செய்தியாளர்களின் கேமரா, செல்போனை பறித்து அராஜகம்
 
322121.jpg
 
கடந்த 5 நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் சென்னை அருகே கூவத்தூர கோல்டன் பே ரெசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ரெசார்ட்டுக்கு வெளியே நின்றிருந்த மன்னார்குடி, தஞ்சாவூரைச் சேர்ந்த குண்டர்கள் செய்தியாளர்கள் மீது நேற்று கல்வீசி தாக்கினர். நேற்று சசிகலா இந்த ரெசார்ட்டுக்கு வந்தபோது செய்தி சேகரிக்க சென்றபோது இந்த கல்வீச்சு சம்வம் நடந்தது. 
 
இன்று மீண்டும் எம்எல்ஏக்களை சந்திக்க சசிகலா வந்தார். இதனை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. செய்தியாளர்களின் கேமரா, செல்போன் போன்றவற்றை குண்டர்கள் பிடிக்கி வைத்துக்கொண்டனர். இதனால் செய்தியாளர்கள் சாலை மறியல் செய்தனர். பின்னர் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் முயன்றனர். அதிமுக நிர்வாகிகள் சிலர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். செய்தியாளர்களுடன் இணைந்து கூவத்தூர் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 
  • கருத்துக்கள உறவுகள்

மிரட்டல் - உருட்டல் என்பவற்றை தாண்டி முதலமைச்சர் ஆக வருவேன் - சசிகலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.