Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பன்னீர்செல்வம்... சசிகலா... ஸ்டாலின்..! இப்போது என்ன செய்யலாம்?'' விளக்கும் சட்ட வல்லுநர்

Featured Replies

'பன்னீர்செல்வம்... சசிகலா... ஸ்டாலின்..! இப்போது என்ன செய்யலாம்?'' விளக்கும் சட்ட வல்லுநர்

7_14563.jpg

   
தமிழக அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் டி.ஏ.சி.ஜெனிதா விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அடுத்து அ.தி.மு.க. சட்டப்பேரவை குழுத் தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார். அந்தக் கடிதத்தையும் ஏற்றுக் கொள்வதாக ஆளுநர் அலுவலகமும் தெரிவித்ததோடு புதிய ஆட்சி அமையும் வரை முதல்வராக தொடர பன்னீர்செல்வத்துக்கு உத்தரவிட்டது.  பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த 7ம் தேதி இரவு ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார். அங்கு தியானத்தில் ஈடுபட்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சசிகலா மீது பகிரங்க குற்றச்சாட்டைத் தெரிவித்தார். இதனால் அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என இரண்டு அதிகார மையங்கள் உருவாகின. உட்கட்சி பூசலால் அ.தி.மு.க.வினர் அல்லல்பட்டு வருகின்றனர். அதோடு அரசு இயந்திரமும் முழுமையாக செயல்படாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி உள்ளனர். பன்னீர்செல்வத்தை ஆறு எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர பதினொரு எம்.பி.க்களும், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்துள்ளனர். ஆறு நாளில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதை சசிகலா தரப்பினர் அதிர்ச்சியோடு பார்த்து வருகின்றனர்.

Advocate_jenitha_15461.jpgசசிகலாவும், பன்னீர்செல்வமும் ஆளுநர்  வித்யாசாகர் ராவை சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் ஆளுநரை சந்தித்தார். ஆனால் ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப்பதிலும் வரவில்லை. ஆளுநரின் காலதாமதத்தால் சசிகலா தரப்பு கவலை அடைந்துள்ளது. இதனால் சசிகலாவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மைத்ரேயன் எம்.பி.யும், பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமியும் ஆளுநரைச் சந்தித்து பேசினர். தற்போதைய தமிழக அரசியல் பரபரப்பான சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆளுநர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் விவரத்தை குடியரசுத் தலைவருக்கும், மத்திய அரசுக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் தெரிவித்துள்ளார். அங்கிருந்து வரும் பதிலுக்காக அவர் காத்திருப்பதாக உள்விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சட்ட ரீதியாக என்ன செய்ய முடியும் என்பதை விவரித்தார் மூத்த வழக்கறிஞர் டி.ஏ.சி. ஜெனிதா. 

ops_garden_14049.jpg


 ஓ.பன்னீர்செல்வம்

"முதல்வராக இருக்கும் ஒருநபருக்கே மிரட்டல் வந்தால் அது ஜனநாயகத்துக்கே கேள்விகுறி ஏற்பட்டுள்ளதை தெரியப்படுத்துகிறது. இதனால் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், இதுதொடர்பாக உரிய ஆதாரத்துடன் ஆளுநரை சந்தித்து புகார் கொடுக்க சட்டத்தில் வழிவகை உள்ளது. அதற்கும் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவரிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை குடியரசுத் தலைவர் மத்திய புலனாய்வு மூலம் விசாரிக்க உத்தரவிடலாம். அந்த புகார் உண்மை என்று தெரியவரும்பட்சத்தில் மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அ.தி.மு.க. சட்டவிதியில், பதவிக்கு வருபவர்கள் கட்சியில் ஐந்து ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். ஆனால், தற்போது பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, ஐந்து ஆண்டுகளாக கட்சி உறுப்பினராக இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் அவர் பொதுச் செயலாளராக இருப்பது செல்லாது என்பதை சட்டரீதியாக நிரூபிக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழிவகை உள்ளது.

சசிகலா

ஆட்சி அமைக்கக்கூடிய மெஜாரிட்டி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சொல்லும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார். ஆனால், ஆளுநர் தரப்பிலிருந்து காலதாமதப்படுத்தப்படுகிறது என்று சசிகலா சொல்வதால் அதை சட்டரீதியாக அவர் எதிர்கொள்ளலாம். இதுதொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்தித்து மனு கொடுக்கலாம். இந்திய அரசியலமைப்பு சட்ட உறுப்பு 14ன் கீழ் பெண் என்று பாரபட்சம் பார்க்கக்கூடாது என்று அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க முடியும். 

மேலும் இந்திய அரசியலமைப்பு சட்ட  191(2) அட்டவணை 10ல் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பு 191(2) மற்றும் அட்டவணை 10ல் பாரா 2(1)(ஏ)ல் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் மூலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சசிகலா நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு சசிகலாவுக்கு கட்சியின் அதிகாரம் இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாடு சட்டசபை ஒழுங்குமுறை சட்டம் பிரிவு 7 மூலம் கட்சித் தாவிய எம்.எல்.ஏ.க்களின் பதவியை நீக்கவும் வழிவகை உள்ளது. 

1a_14343.jpg 

 

மு.க.ஸ்டாலின்

இன்றைய அரசியலின் அசாதாரண சூழ்நிலையில் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினும் குடியரசுத் தலைவரை சந்திக்கலாம். குடியரசுத் தலைவரை ஸ்டாலின் சந்தித்து, தமிழக அரசியல் சூழ்நிலையை குறித்து விளக்கமளித்து உள்நாட்டு குழப்பத்திலிருந்து தமிழகத்தை மீட்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 355ஐ அமல்படுத்த வலியுறுத்தலாம். அதன்பேரில் குடியரசுத் தலைவர் தமிழகத்தில் 355 சட்டப்பிரிவை அமல்படுத்த முடியும்" என்றார்.

- எஸ்.மகேஷ்

http://www.vikatan.com/news/tamilnadu/80615-how-can-sasikala-o-panneer-selvam-and-stalin-use-the-current-situation-in-tamil-nadu-explains-lawyer-jenitha.html

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜல்லிகட்டு போராட்டம் கையை மீறி சென்றபோது, அதனை ஒடுக்க லாரண்ஸை ஒரு கருவியாக பயன்படுத்த BJPக்கு உதவிய இந்த நபர் யார்.

பா.ஜ.கவின் செயல்திட்டத்தை செயல்படுத்தஓ.பன்னீர் செல்வத்தை இயக்கும் இந் நபர் யார் என்பதை கண்டுபிடியுங்கள்..

16602564_1907682462591091_6387666870999216711829_1907682612591076_61906326242709

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.