Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

' முதல்வர் ரேஸில் இருந்து விலகுகிறாரா சசிகலா?!' -எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம்

Featured Replies

' முதல்வர் ரேஸில் இருந்து விலகுகிறாரா சசிகலா?!'  -எதிர்ப்பை சமாளிக்க 'திடீர்' வியூகம்

சசிகலா-ஆளுநர் வித்யாசாகர் ராவ்

' முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்பட்டது கிடையாது. நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா இறந்த அன்றே முதலமைச்சராகியிருக்க முடியும்' -இன்று போயஸ் கார்டன் இல்லத்தின் முன்பு திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில்தான் சசிகலா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். ' மத்திய அரசின் அழுத்தத்தை அடுத்து, முதல்வர் பதவிக்கு கட்சியின் சீனியர்களை முன்னிறுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார்' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 

அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி நடந்த எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக முன்னிறுத்தப்பட்டார் சசிகலா. அடுத்த இரண்டே நாளில், 'என்னை மிரட்டி ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டனர்' என பகிரங்கமாக குற்றம் சாட்டினார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். இதையடுத்து, எம்.எல்.ஏக்களை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் தங்க வைத்தார் சசிகலா. ' சட்டசபையில் எனக்குத் தனி மெஜாரிட்டி உள்ளது. என்னைப் பதவியேற்க அழைப்பு விடுங்கள்' ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் கோரிக்கை மனு அளித்தார். ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநரிடம் தனியாகக் கடிதம் ஒன்றை அளித்தார். கடந்த ஐந்து நாட்களாக அதிகாரத்தை மையமாக வைத்து நடக்கும் போட்டியில், ஆளுநரின் கருத்து என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. இந்நிலையில், இன்று போயஸ் கார்டனில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய சசிகலா,

செங்கோட்டையன்" முதலமைச்சர் ஆக வேண்டும் என ஒரு நொடிகூட நான் எண்ணியதில்லை. எம்.ஜி.ஆர் இறந்த போது அவரது இறுதி ஊர்வல வண்டியில் ஏற விடாமல் ஜெயலலிதாவைத் தடுத்து தள்ளிவிட்டபோது, அவர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். அரசியலை விட்டே ஜெயலலிதா விலகலாம் என்று நினைத்தார். அதை பலமுறை என்னிடம் ஜெயலலிதா கூறியுள்ளார். நான்தான் அவருக்கு ஊக்கம் கொடுத்து அரசியலில் தொடர வைத்தேன். ஒரு பன்னீர்செல்வம் அல்ல, ஆயிரம் பன்னீர் செல்வத்தை நான் பார்த்திருக்கிறேன். 33 ஆண்டுகளாக நான் ஜெயலலிதாவுடன் இருந்ததால் பயமே இல்லாமல் போனது. தி.மு.க.வுடன் பன்னீர்செல்வம் மிகவும் இணக்கமாக சென்றது தவறாக தோன்றியது. அந்த காரணத்தினாலேயே நான் முதல்வராக முடிவு செய்தேன்' என மனம் திறந்து பேசினார். 

கோல்டன் ரிசார்ட்டில் எம்.எல்.ஏக்கள் மத்தியில் நேற்று அவர் பேசிய பேச்சுக்கும் இன்று அவருடைய வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் அ.தி.மு.க நிர்வாகிகள். ' ஒருவேளை முதல்வர் பதவியை கட்சியின் சீனியர்கள் யாருக்காவது விட்டுக் கொடுக்கும் மனநிலைக்கு வந்துவிட்டாரா?' எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய கார்டன் உதவியாளர் ஒருவர், " ஆளுநர் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காப்பதில் மிகுந்த வேதனையில் இருக்கிறார் சசிகலா. ' நமக்குப் போதுமான பெரும்பான்மை இருக்கிறது என்றால்கூட, கட்சியை உடைக்கும் வேலைகளைத் தீவிரப்படுத்துகிறார்கள்' என உறவினர்களிடம் வேதனைப்பட்டார்.

இதையடுத்து, பா.ஜ.க மேலிடத்திற்கு நேரடியாக சில தகவல்களைத் தெரிவிக்கும் வகையில் தூது வேலைகளைத் தொடங்கினர் அவரது உறவினர்கள். இந்தப் பணியில் நான்கு குழுக்கள் ஈடுபட்டன. சொல்லிவைத்தார்போல, அந்த நான்கு குழுக்களும், பா.ஜ.கவின் டிமாண்ட் என்ன என்பது பற்றி விவரித்துள்ளனர். அதைக் கேட்ட சசிகலா அதிர்ச்சியோடு, ' அவர்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது என்பது எந்தக் காலத்திலும் நடக்காத காரியம். அது தற்கொலைக்குச் சமம்' என ஆதங்கப்பட்டார். அந்தக் கோரிக்கையில் மிக முக்கியமானது, உள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் பா.ஜ.கவுக்கான இடப் பங்கீடு முதல் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கியதாக இருந்தது. இதன்பின்னர், 'அவர்களோடு பேசுவது சரியாக இருக்காது' என்ற நிலையில், சுப்ரமணியன் சுவாமியை நேரடியாக ஆளுநரை சந்திக்க வைத்தனர். அந்த சந்திப்பிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை" என விவரித்தவர், 

ops_new2_15436.jpg

" பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு பெருகிக் கொண்டே போகிறது. நாடாளுமன்றத்தில் உள்ள அ.தி.மு.க எம்.பிக்களுக்கு பா.ஜ.க மேலிடம் சில உத்தரவாதங்களை அளித்துள்ளது. அதன் விளைவாகத்தான் ஓ.பி.எஸ்ஸை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். அதுவும், ஒரேநாளில் அனைவரும் சந்திக்காமல் நாளொன்றுக்கு இருவர் வீதம் செல்லுமாறு உத்தரவு வந்துள்ளது. மீடியாக்களில் ஓ.பி.எஸ் செல்வாக்கு அதிகரிப்பது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருப்பது மிக முக்கியமான அசைன்மென்டாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாளுக்கு நாள் கட்சியின் பிடி கை நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்துவிட்டார். 'சசிகலா முதல்வர் ஆகக் கூடாது' என்பதுதான் மத்திய அரசின் முக்கிய நோக்கம். அதை எதிர்த்துத்தான் இவ்வளவு நாட்கள் போராடிக் கொண்டிருந்தார். ஆளுநர் தாமதிப்பதையும் இன்னொரு வெளிப்பாடாகப் பார்க்கிறார். கட்சி நிர்வாகிகளும் எம்.பிக்களும் நாளுக்கு நாள் ஓ.பி.எஸ் நோக்கிச் செல்கின்றனர். எம்.எல்.ஏக்களையும் நீண்டநாள் சிறை வைத்திருக்க முடியாது என்பதை உணர்ந்திருக்கிறார். ரிசார்ட்டில் இப்போதே சிலர் குரல் எழுப்பத் தொடங்கிவிட்டனர். இப்போது அவர் முன் மூன்று வாய்ப்புகள் உள்ளன.

ஒன்று சசிகலா முதல்வராவது; இரண்டாவது சசிகலா சொல்லும் நபர் முதல்வராக பதவியேற்பது; மூன்றாவது ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது. இதில் இரண்டாவது வாய்ப்பு குறித்துத்தான் தீவிர ஆலோசனையில் இருக்கிறார். தற்போதுள்ள சூழலில், கட்சியின் சீனியர் யாரையாவது முன்னிறுத்தலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார் சசிகலா. இதற்கு நடராசன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். அடுத்த முதல்வர் ரேஸில் கட்சியின் அவைத் தலைவரான செங்கோட்டையனை முன்னிறுத்தினால், பன்னீர்செல்வம் எதிர்ப்புக் குரல் அடங்கிப் போகும் என்பது அவருடைய எண்ணம். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதி என்ற தோற்றமும் குற்றச்சாட்டுகளில் அடிபடாதவர் என்ற இமேஜும் இருக்கிறது. கட்சித் தொண்டர்களும் செங்கோட்டையனை ஏற்றுக் கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறார். இதற்கு தம்பிதுரை தரப்பில் இருந்தும் எடப்பாடி பக்கம் இருந்து எதிர்ப்புக் குரல் எழும்புவதையும் கவனத்தில் எடுத்து வருகிறார். தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அடுத்தகட்ட முடிவை அறிவிப்பார் சசிகலா" என்றார் விளக்கமாக. 

அரசியல் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள முற்படுகிறார் சசிகலா. ' இதற்கும் முட்டுக்கட்டை விழுந்தால், அடுத்தகட்ட போராட்டத்தை நோக்கி அவர் செல்லலாம்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

http://www.vikatan.com/news/tamilnadu/80637-sasikala-plans-to-leave-the-chief-minister-race-as-a-safe-strategy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.