Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேசத்தின் அணுகுமுறைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

-சி.இதயச்சந்திரன்-

தனக்கு யுத்தத்தில் விருப்பமில்லையென்று வாகரையிலிருந்து கூறுகிறார் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ச.

சம்பூரையும் வாகரையையும் கைப்பற்றியவுடன் தமது படைவலு மேலோங்கியுள்ளதாகப் பெருமிதம் கொள்ளும் அரசின் கணிப்பீடுகளை சர்வதேசம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த எதிர்பார்க்கிறார் போலும்.

பலவீனமான நிலையிலிருந்து ரணில் விக்கிரமசிங்க சமரசப் பேச்சுவார்த்தைக்கு சென்றது போலல்லாமல் பலமிக்க தளத்தில் இருந்து புதிய பேச்சுக்களை நடத்த வேண்டுமென அரசாங்கம் விரும்புகிறது.

நாடாளுமன்றத்தில் தனது அதிகார பலத்தினை அதிகரிக்கும் வரை, பேச்சுவார்த்தைகளில் அதிக நாட்டத்தினை ஜனாதிபதி காட்டவில்லை.

அதேபோன்று இராணுவ உளவியல் பரிமாணத்தை விரிவடையச் செய்யாமல், தமது அதிகார வர்த்தக எதிரிகளை பலவீனமாக்க முடியாதென்பதையும் அவர் புரிந்து கொண்டுள்ளார்.

அதிகார சுகத்தை ஆண்டு அனுபவித்தவர்கள் அவை இல்லாத நிலையில், தரையில் வீசப்பட்ட மீன்கள் போலாகி விடுவார்கள். மறுபடியும் நீரை நோக்கிப் பாய்ந்தோடும் மீன்களை, தமது கட்டுக்குள் கொண்டு வருவது இலகுவான தென்பதை அதிகார வர்க்கம் நன்கு உணரும்.

தோல்வியைத் தழுவும் குதிரையின் வாலில் தொங்குவதைவிட வெல்கின்ற மஹிந்தவின் மேல் பணம் கட்டுவது சூதாட்டக் காரர்களின் புத்திசாலித்தனத்தையும் அரசியல் சாணக் கியத்தையும் வெளிப்படுத்துகிறது.

வாகரை ஆக்கிரமிப்பினால் சிங்கள தேசம் மஹிந்தவின் பக்கம் சாய்ந்ததால், கரு ஜெயசூரிய குழுவும் அவர் பக்கம் தலைசாய்ப்பது அரசியலில் சகஜம்.

புதிய அணியொன்றை உருவாக்கி, ஸ்ரீலங்கா அரசியல் தளத்தில் அதிர்ச்சியினை ஏற்படுத்தப் போவதாக ரணில் கூறுகிறார்.

மீதமுள்ள தனது நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மஹிந்தவின் அணியோடு சேராமல் தடுப்பதற்கு ரணில் போடும் அதிர்வேட்டு அரசியல் இது.

ஜனாதிபதி மஹிந்தவின் யுத்த முன்னெடுப்பு, சில வெற்றிச் செய்திகளை வெளிப்படுத்துவதால், சிங்கள மக்களின் பேராதரவு அவர் பக்கம் சேருகிறது. இதனால் கலக்கமடையும் ரணில் நாடு மிகவும் மோசமான நிலை நோக்கி நகருவதாக சித்தாந்தம் பேசுகிறார்.

எதிர்க்கட்சியில் அமரும் பொழுதே புதிய சிந்தனைகள் வெளிவரும் போலும். எதிர்க்கட்சிகளற்ற ஒரு கூட்டணி ஆட்சியை நிறுவுவதே ஒற்றையாட்சி என்று புது விளக்கத்தை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த முற்படுகிறார் போலும்.

அரச இயக்கத்தினைப் பாதுகாக்கும் இராணுவத்தை நெறிப்படுத்தி வழிநடத்தும் தலைமைப் பொறுப்பில் ஜனாதிபதி மஹிந்தவும், கோத்தபாயவும் இணைந்துள்ளார்கள்.

தமிழ் கூட்டமைப்பையும் அரசோடு இணைத்துவிட்டால், ஏறத்தாழ சக்கரவர்த்தியாகிவிடுவார் ஜனாதிபதி மஹிந்த.

மலையகத்தில் தொடரும் பரவலான கைதுகள் அங்குள்ள ஏனைய கட்சிகளையும் அரசோடு சேர வைக்கலாம்.

ஆட்சியை நடத்தும் முக்கிய செங்கோல் மஹிந்த சகோதரர்களின் கையில் இருக்க, குறுநில மன்னர்கள் தாளம் போட்டபடி ஆட்சி நீடிக்கப் போகிறது.

ஜனாதிபதி மஹிந்தவின் ஒரே ஒரு தலைவலி விடுதலைப் புலிகளே. அவர்களை அழித்தொழிக்க கோத்தபாய சரத் பொன்சேக்கா கூட்டணிக்கு சகல அதிகாரங்களையும் வழங்கியுள்ளார் ஜனாதிபதி.

கிழக்கை கைப்பற்றிய பின் வடக்கையும் முழுமையாக கைபற்றப்போவதாக சூளுரைக்கப்பட்டுள்ளது.

கடந்த கால வரலாறு திரும்பவும் உருவாகாது. ஆனாலும் ஸ்ரீலங்கா பாதுகாப்புப் பிரிவிலான நடவடிக்கைகள் முன்னைய கால இராணுவத்தின் உத்திகளை நினைவுபடுத்துகின்றன.

டென்சில் கொப்பேகடுவ தொடக்கம் சரத் பொன்சேகா வரை இராணுவ முன்னெடுப்புத் தந்திரங்கள் பழைய கோட்பாட்டோடு முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கில் அகலக்கால் பரப்பியதால் கிழக்கிலிருந்து முன்பு தமது படையணிகளை அகற்றினர். இன்று கிழக்கில் சிறு பகுதிகளை ஆக்கிரமித்தவுடன் முழு மாகாணத்தையும் தமது கட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கின்றார்கள்.

வாகரை, சம்பூரைப் பாதுகாப்பதற்கே படைப்பலத்தை பெருக்க வேண்டியுள்ளது.

இவ்வறான நிலையில் படுவான்கரை முன்னரங்க பகுதிகளிலும் முகமாலை, நாகர் கோவிலிலும் எறிகணைத் தாக்குதலை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் இராணுவம் பலவீனமான பகுதியூடாக ஊடுருவ முனைகிறது.

வலிந்த தாக்குதல்கள் ஊடாகப் புலிகளின் நவீன ஆயுத வலுவினை எடைபோட அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் சாதகமாக அமையவில்லையென்றே கூறலாம்.

மொரவேவ காட்டுப் பிரதேசத்தில், புலிகள் மீது தொடுக்கப்பட்ட உலங்கு வானூர்திகளின் தாக்குதல்களுக்கும் எறிகணை வீச்சிற்கும், எதிர்த்தாக்குதல் பெரிதாக இடம்பெறவில்லை.

இந்நிலையில் தாழப் பறக்கும் உலங்கு வானூர்திகளை வீழ்த்தும் வல்லமை புலிகளுக்கு இல்லையென்று இராணுவம் பெருமிதம் கொள்ளலாம்.

ஆனால் எதிரியைப் பலவீனர்களாக எடை போடுவதே முட்டாள்தனமான பல முடிவுகளிற்கு வழிவகுக்கும்.

இரண்டு வருடங்களாக ஊர்ந்து சென்ற ஜெயசிக்குறுவிற்கு இரண்டு கிழமைகளில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.

சம்பூரைக் கைப்பற்ற பல நாட்கள் சென்றன. ஆனாலும் மூதூர் இறங்குதுறை வரை புலிகள் செல்ல சில மணித்தியாலங்களே போதுமானதாகவிருந்தது.

இவ்வாறாக பழசுகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆகவே புலிகள் பொறுமை காப்பது போன்றதொரு தோற்றம் நிரந்தரமானது என கருதமுடியாது.

ஐம்பது வருடத்திற்கும் மேலான இன அடையாளமழித்தலை உள்வாங்கிக் கொண்டுள்ள இப் போராட்டம் புதுவடிவப் பிரசவமொன்றிற்காக காத்திருக்கிறது.

பேரழிவை ஏற்படுத்த, இன மேலாதிக்கவாதிகள் முரசு கொட்டுகிறார்கள். பலம், பலவீனமென்பதை போர்க்களம் மட்டும் தீர்மானிப்பதில்லை.

அதனோடு இணைந்த அக, புறக் காரணிகளும் வரலாற்றுத் தொடர் நிலையான முன்னோக்கிய பாய்ச்சலும் ஒன்று சேரத் தீர்மானிக்கின்றன.

அண்டை நாட்டு புறக்காரணிகளின் பங்களிப்பும் அடுத்த நகர்வினை பாதிக்கலாம். ஆனையிறவிலிருந்து மணியம் தோட்டம் வரை முன்னேறிய புலிகளின் வேகத்திற்கு தடை விதித்த பிற சக்திகளின் பிரயோக நடைமுறை எவ்வாறாக அமையுமென்பதில் இன்னமும் தெளிவற்ற நிலையே காணப்படுகிறது.

இனப்பிரச்சினையைக் கண்காணிக்க விசேட தூதுவர் ஒருவரை அனுப்பும்படி அமெரிக்க காங்கிரஸிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

பிரச்சினை முற்றிய நிலையில் தனது நேரடித் தலையீட்டை எவ்வழியிலாவது உட்புகுத்த அமெரிக்கா முயல்கிறது.

மனித அழிவுகள் கட்டுமீறிப் போவதால், அதைத் தடுக்க வேண்டிய காலம் நெருங்கி விட்டதாகக் கூறிக் கொண்டு நுழைய முயற்சிக்கிறது அமெரிக்கா.

இந்தியா என்றொரு நாடு பக்கத்தில் அமைந்திருக்காவிட்டால் பயங்கரவாதத்திற்கெதிரான போரெனக் கூறியபடி அமெரிக்கா நேரடியாகவே இறங்கியிருக்கும்.

இதைப் புரிந்து கொள்ளாத அரசு, பயங்கரவாதத்தினை முறியடிக்க இராணுவ தாக்குதல் தொடுப்பதாக அழுத்தமாக கூறி வருகிறது.

சர்வதேசமானது முற்றிலுமாக அரசின் பக்கம் சாயாதென்பதை ஜனாதிபதி மஹிந்த இன்னமும் உணரவில்லைப் போலும். போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அனைத்தும் மீறப்பட்டுவிட்டதென்பதை இணைத்தலைமையும், இந்தியாவும் எப்போதோ புரிந்து விட்டன.

அவர்களின் மௌனம் நீடிப்பதால் பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்று நடைபெறுகிறது. புலிப்பாய்ச்சல் எக்கணத்திலும் ஆரம்பிக்கலாமென்கிற கலக்கத்தில் சர்வதேசம் உள்ளது. அதற்கு முன்னர் சந்திரிகாவையும் ரணிலையும் ஒட்ட வைத்து புதிய சித்திரமொன்றை உருவாக்க இந்தியா முயற்சிக்கிறது.

இவர்களின் புதிய அணுகுமுறைகளை ஜனாதிபதி செயலிழக்கச் செய்தபடி உள்ளார். ஆதலால் தமது நகர்வுகள் தொடர்ந்தும் முறியடிக்கப்பட்டால் தமது பதில் நடவடிக்கைகளை சர்வதேசம் முன்னெடுக்ககக்கூடும்.

நன்றி: வீரகேசரி: 11.02.07

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/13.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.