Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரை நூற்றாண்டு அமைச்சர் அவையில் தமிழர் எத்தனை பேர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரை நூற்றாண்டு அமைச்சர் அவையில் தமிழர் எத்தனை பேர்?

-நம்முள் கவீரன்-

நண்பர் ஒருவர் எனக்கு தந்துதவிய எங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற பிரசுரமொன்றில் 1947 தொடக்கம் 1994 வரையிலான காலகட்டத்தில் பதவியேற்ற வெவ்வேறு அமைச்சர் அவைகளில் இடம்பெற்ற மந்திரிமார்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன. அவற்றுள் இடம்பெறும் தமிழ் அமைச்சர்களின் விபரங்களை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

1947 - 1952 டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சர் அவை (04.02.1948 - 30.03.1952)

சி.சிற்றம்பலம் - தபால், தொலைத் தொடர்பு அமைச்சர்.

சி.சுந்தரலிங்கம் - வணிக, வியாபார அமைச்சர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் - (1948 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் இருந்து) தொழிற்துறை, தொழிற்துறை ஆராய்ச்சி, மீன்பிடி அமைச்சர்.

1952 - 1953 டட்லி சேனாநாயக்கவின் அமைச்சர் அவை

(30.03.1952 - 19.06.1952) (19.06.1952 - 11.10.1953)

வி.நல்லையா - தபால், செய்தித்துறை அமைச்சர்.

எஸ்.நடேசன் - (திரு. நல்லையா 1952 ஜூலை 12 ஆம் திகதி இராஜிநாமா செய்ய அவர் இடத்திற்கு நியமிக்கப்பட்டார்) தபால், செய்தித்துறை அமைச்சர்.

ஜீ.ஜீ.பொன்னம்பலம் - தொழித்துறை, மீன்பிடி அமைச்சர்.

1953 - 1956 சேர் ஜோன் கொத்தலாவலவின் அமைச்சர் அவை (12.10.1953 - 11.04.1956)

ஜீ.ஜீ.பொன்னம்பலம் - தொழில்துறை, மீன்பிடி அமைச்சர்.

செனட்டர் சேர் கந்தையா வைத்தியநாதன் - அன்று ஜீ.ஜீ.இராஜிநாமாச் செய்ய அவர் இடத்திற்கு நியமிக்கப்பட்டார். இவர் செனட் சபையில் இருந்து தெரிவு செய்யப்பட்டார். மக்களால் தெரிவு செய்யப்படவில்லை. - வீடு, சமூகநலன் அமைச்சர்

எஸ்.நடேசன் - தபால், ஒலிபரப்பு அமைச்சர்.

1956 - 1959 எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவின் அமைச்சர் அவை

முதல் அமைச்சர் அவை (12.04.1956 தொடக்கம் 09.06.1959 வரை) - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.

இரண்டாம் அமைச்சர் அவை (09.06.59 தொடக்கம் 26.09.59 வரை) தமிழர் எவரும் இடம்பெறவில்லை.

1959 - 1960 டபிள்யூ தஹநாயகாவின் அமைச்சர் அவை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.

1960 - 1965 வரை - திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அமைச்சர் அவை

முதல் அமைச்சர் அவை 23.07.1960 தொடக்கம் 28.05. 1963 வரை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.

இரண்டாம் அமைச்சர் அவை 28.05.1963 தொடக்கம் 11.06.1964 வரை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.

மூன்றாம் அமைச்சர் அவை 11.06.1964 தொடக்கம் 25.03.1965 வரை - தமிழர் எவரும் இடம்பெறவில்லை.

1965 - 1970 டட்லி சேனாநாயக்க அமைச்சர் அவை

மு.திருச்செல்வம் - உள்ளூராட்சி அமைச்சர் - இவரின் இலங்கைத் தமிழரசுக் கட்சி 16.09.68 இல் அரசாங்கத்தை விட்டு வெளியேறியது. இவர் செனட் சபையில் இருந்து அமைச்சர் பதவி ஏற்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

1970 - 1977 திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அமைச்சர் அவை

செனட்டர் செல்லையா குமாரசூரியர் - தபால் தொலைத் தொடர்பு அமைச்சர். இவரும் மக்களால் தெரிவுசெய்யப்படாதவர்.

செனட் சபையில் இருந்து அமைச்சர் பதவி பெற்றார். சில காலம் இவர் வீடுகள், கட்டிட, நிர்மாணம் அமைச்சராகவும் கடமையாற்றினார்.

1977 - 1989 வரை ஜே.ஆர்.ஜயவர்தனவின் அமைச்சர் அவை.

முதல் அமைச்சர் அவை 23.07.1977 - 04.02.78 வரை

கே.டபிள்யூ. தேவநாயகம் - நீதி அமைச்சர்

இரண்டாம் அமைச்சர் அவை (04.02.1978 - 07.09.1978 (ஜே.ஆர்.ஜயவர்தன ஜனாதிபதியான பின்னர்)

கே.டபிள்யூ.தேவநாயகம் - நீதி அமைச்சர்

மூன்றாம் அமைச்சர் அவை (07.09.1978 - 02.1980)

கே.டபிள்யூ. தேவநாயகம் - நீதி அமைச்சர்.

சௌமிய மூர்த்தி தொண்டமான் - கிராமிய தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.

நான்காம் அமைச்சரவை ( 02.1980 - 24.07.2987)

கே.டபிள்யூ. தேவநாயகம் - உள்நாட்டலுவல்கள் அமைச்சர்.

சௌம்யமூர்த்தி தொண்டமான் - கிராமத் தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.

செல்லையா இராஜதுரை - பிரதேச மேம்பாட்டு அமைச்சர்.

முன்னையவரும் பின்னையவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். தொண்டமான் மலையகத்தைச் சேர்ந்தவர். வடமாகாணத்தில் இருந்து எவரும் இல்லை.

ஐந்தாம் அமைச்சர் அவை. (24.07.1987 - 30.11.1987) நான்காம் அமைச்சர் அவை போல்

ஆறாம் அமைச்சர் அவை (30.11.1987 - 18.02.1989) நான்காம் அமைச்சர் அவை போல்

1989 - 1991 இரணசிங்க பிரேமதாசவின் அமைச்சர் அவை

முதல் அமைச்சர் அவை 18.02.1989 - 30.03.1990

சௌ.தொண்டமான் - புடவைகள், கிராமிய தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.

இரண்டாம் அமைச்சர் அவை - (30.03.1990 - 14.03.1991) முதல் அமைச்சர் அவை போல்.

மூன்றாம் அமைச்சர் அவை 14.03.1991 - ?

சௌ.தொண்டமான் - சுற்றுலா கிராமிய தொழிற்துறை மேம்பாட்டு அமைச்சர்.

மேற்கண்ட விபரங்களில் இருந்து 1991 வரையில் சுதந்திர இலங்கையில் எந்த அளவுக்கு அமைச்சர் அவையில் வட, கிழக்குத் தமிழர் பிரதிநிதித்துவம் இடம்பெற்ற தென்பதை காணக் கூடியதாக உள்ளது. தொடக்கத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அமைச்சர் அவையில் இடம்பெறினும் திருவாளர்கள் திருச்செல்வம், குமாரசூரியர் ஆகியோர் செனட்சபைக்கு நியமிக்கப்பட்டு அங்கிருந்தே அமைச்சர்கள் ஆக்கப்பட்டார்கள். சற்று இடம் எடுப்பதாக அமையினும் பல விடயங்களை எடுத்துக் காட்டுவதாக இப்புள்ளி விபரங்கள் அமைந்துள்ளன. உதாரணமாகப் பல காலமாகத் (12.04.1956 - 25.03.1965 வரை) தமிழர்கள் அமைச்சர் அவையில் இடம்பெறவில்லை என்பது புலனாகிறது. டி.எஸ். சேனநாயக்க கொடுத்துக் கவிழ்த்தார் என்றால் பின்வந்தவர்கள் கொடுக்காமலே கவிழ்த்து வந்துள்ளார்கள்.

இன்றைய இந்தியாவைப் போல ஒரு காலத்தில் முழு இலங்கையையும் ஒரு சிறுபான்மையினர் வழி நடத்தக் கூடும் என்று எதிர்பார்த்து டி.எஸ்.சேனநாயக்கவை அன்று நம்பியவர்கள் உள்ளூர்த் தமிழர்களோ வெளியூர் ஆங்கிலேயரோ காலக் கிரமத்தில் இன ரீதியான, மொழி ரீதியான அடிப்படைச் சிந்தனைகளே மக்கட் குழுக்களிடம் மேலோங்க வந்துள்ளது என்பதை இன்று இருந்திருந்தால் அறிந்திருப்பார்கள். கொள்கையளவில் மக்கள் பிரிவார்கள் என்று நம்பிய இடதுசாரிகளும் ஏமாற்றம் அடைந்தார்கள். மொத்தத்தில் அன்று அவர்கள் வேறுவிதமாக நம்பி இன்று நாம் அவஸ்தைப்படுகிறோம்!

ஆனால், தமிழரிடையே நோக்களவில் மட்டும் முரண்பாடு ஏற்பட்டது என்று கொள்ள முடியாதிருக்கிறது. இன்றும் பொன்னம்பலமா செல்வநாயகமா உண்மையான தமிழ்த் தலைவர் என்ற வாதம் அவர்கள் இறந்த பின்னரும் யாழ் தமிழரிடையே இருந்து கொண்டிருக்கிறது. இந்த மாயையில் இருந்து தமிழ் மக்கள் விலக வேண்டும். கொள்கை அளவில் வித்தியாசமான நோக்குகள் எங்களிடையே இருக்கலாம். ஆனால், நாங்கள் யாவரும் தமிழ் பேசும் மக்கள். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து எங்கள் ஐக்கியத்தைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யூதர்களைப் போல் எம்முள் வளர வேண்டும். இவ்வாறு சிந்தியாதது தமிழரின் மிகப் பெரிய பலவீனமாக அமைந்துள்ளது. தமிழ் பேசும் முஸ்லிம்களிடையேயும் அப்படித் தான். நான் கூறுவதை மற்றவர்கள் ஏற்க வேண்டும். இல்லையென்றால் நான் பிரிந்து இன்னொரு அலகை உருவாக்கினால் தான் எனக்கு மதிப்பு என்று எண்ணுகிறேன். நான் தலைவன் ஆனால், என்ன, என் சகோதரன் தலைவன் ஆனால் என்ன எங்கள் இனம் சுபிட்சம் அடைய நாங்கள் இருவரும் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்ற எண்ணம் வளர்ச்சி அடைந்தால் தான் இன்று இலங்கைத் தமிழரிடையே எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு விடைகாண அது உதவும். முகத்தோடு பகைத்து மூக்கை அறுக்கும் பாணி எங்கள் அரசியல் கலாசாரத்தில் இருந்து நீங்க வேண்டும். ஒருவரின் அரசியல் நோக்கின் பலவீனங்களைச் சாடலாம். ஆனால், அவரை நிந்தித்து அவ்வாறு செய்யக் கூடாது. இன்று இருதுருவங்களாக இருக்கும் இளைஞர் குழாம்கள் கூட நினைத்தால் தமக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த முடியும். ஆனால், பயந்தான் இதனைத் தடுக்கிறது. எங்கே மற்றவன் தன்னை இல்லாதாக்கி விடுவானோ என்ற பயம். பொதுமக்கள் பிரயத்தனம் செய்தால் புரிந்துணர்வை இவர்களுக்குள் ஏற்படுத்த முடியும். அதற்கு எங்கள் சுயநலம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். பொதுநலம் மேலோங்க வேண்டும். தமிழர்களின் வருங்காலத்தை எண்ணி எங்கள் சுயநலச் சிந்தனையினைக் களைய முன்வர வேண்டும்.

சுயநலம் என்பது வெகுவாக ஒரு அடிமை இனத்திற்கே பொருந்தும். தலைமையிடம் இருந்து எனக்கு என்ன கிடைக்கும்? மற்றவனுக்கு என்ன கிடைத்து விட்டது? ஏன் அவனுக்குக் கூட எனக்குக் குறைய? என்ற பல கேள்விகளுள் மனோநிலையும் அண்டி வாழும் மக்களிடையே தான் பரவலாகக் காணப்படுகின்றன.

தலைமைத்துவத் தகைமை ஓங்கி இருக்கும் மக்களிடையே பொது நலக் கருத்துகளும் சேவை மனப்பான்மையும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் மேலோங்கி இருப்பன. ஆங்கிலேயர் காலத்தில் அண்டிப் பிழைத்து வந்தவர்களின் அடியில் வந்தவர்கள் என்ற முறையிலோ என்னவோ, நாங்கள் அடிமைத் தனத்தில் ஆழ்ந்தூறியுள்ளோம்.

வெள்ளைக்காரன் எங்கள் வேலையைப் பாத்துப் பாராட்டினால் போதும், அதற்கு என் சகலதையும் நான் கொடுப்பேன் என்ற மனோநிலையில் வாழ்ந்தவர்கள் எங்கள் இடை நிலை (Middle Class) மக்கள், பல ஆயிரம் ஏக்கர் காணிகளுக்கு ஏகபோக உரிமையாளர்களாக எங்கள் தமிழ் மக்கள் இருந்ததில்லை. அப்படி இருந்திருப்பினும் அது வன்னியில் அல்லது கிழக்கிலங்கையில் தான் இருந்திருக்க முடியும். மிகக் கொடூரமான பட்டினிச் சாவை எதிர்நோக்கியும் எங்கள் மக்கள் இருந்ததில்லை.

எங்கள் இடைநிலை மக்கள் ஆங்கிலேயர் காலத்தில் கிடைத்த வேலைகளை பின்னையவர் மனங்கோணாமல் சிறப்பாகச் செய்தார்கள். அதனால் பாராட்டும் பெற்றார்கள். இன்றும் பாராட்டை எதிர்பார்க்கும் மனோநிலையிலேயே எம்மக்கள் இருக்கின்றார்கள்.

இது அடிமைத்தனம் என்று கவீரனுக்குப்படுகிறது. பொது நலத்திற்காக உண்மையான நம்பிக்கையுடன் உழைக்கும் ஒருவர் பாராட்டை எதிர்பார்த்து காரியம் ஆற்ற முடியாது. எங்கள் சிந்தனைகள் நாம் தமிழர் எமது மேம்பாடு இன்றியமையாதது; அதற்காக எனது குறுகிய நன்மைகளையும் பாராட்டுகளையும் தியாகம் செய்ய நான் பின்னிற்கமாட்டேன். என்ற முறையில் விருத்தி அடைந்தால் தான் வருங்காலம் நற்காலமாக மாறும். அதுமட்டுமல்ல, விட்டுக் கொடுக்கும், தியாகம் செய்யும் எம்மவரை அடையாளம் கண்டு பாராட்டவும் செய்வது இந்நற்குணங்களை அடையாளம் காணுவதாக அமையும். எம்முள் பிரிவினைகள் ஏற்படப்படாதென்பதற்கு எம்மால் ஆன யாவற்றையும் செய்ய நாம் பின் நிற்கலாகாது. எம்மிடையேயான பிரிவினைகள் மாற்றானையே மகோன்னத நிலையில் வைக்கும்.

மேலும் கவீரன் சரித்திர இழைகளைக் கைநழுவ விட்டுவிட்டான். அடுத்து வருவது தான் இலங்கைத் தமிழர் வாழ்வில் ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவு. அதுதான் `சிங்களம் மட்டும்' சட்டம். அடுத்த கட்டுரையில் நிச்சயமாக அது பற்றி ஆராய்வோம்!

- தினக்குரல்

ஸ்றீ லங்கா வரலாற்றின் பக்கங்களில் டக்கு, சங்கு, கருநாய், லக்சின் பெயரைக் காணவில்லையே? :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்றீ லங்கா வரலாற்றின் பக்கங்களில் டக்கு, சங்கு, கருநாய், லக்சின் பெயரைக் காணவில்லையே? <_<

இக்கட்டுரையில் 47ல் இருந்து 94 ஆண்டு வரைக்கும், அமைச்சர் அவையில் இருந்த தமிழர்களின் பெயர்கள் மட்டுமே எழுதப்பட்டுள்ளது. அதனால் தான் டக்லஸ் தேவானந்தாவின் பெயர் இடம் பெறவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.