Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்மைச்சுற்றி நடப்பது என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[12 - February - 2007] [Font Size - A - A - A]

கோபம் மாதிரியே துக்கமும் ஒரு ரியாக்ஷன் தான். `இன்று நான் துக்கப்பட வேண்டும்' என்று யாருமே விரும்புவதில்லை. அதேமாதிரிதான் வெறுப்பும் பொறாமையும். மற்றவர்கள் நம்மீது வெறுப்பு காட்டினாலோ, பொறாமைப் பட்டாலோ நமக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. இந்த வெறுப்பும் பொறாமையும் நம்மிடமிருந்து வெளிப்படுவதையும் நாம் விரும்புவதில்லை. இருந்தாலும் இவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. காரணம், இவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய்விட்ட ரியாக்ஷன்கள்.

துக்கப்படக் கூடாது என்று நினைக்கிறோம். இருந்தாலும் துக்கம் நம்மை விடுவதில்லை! துக்கமும் சோகமும் நாம் சிந்திப்பதாலேயே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்... சில சமயம் ஒரே ஒரு எண்ணம் கூட நம்மைச் சோகத்தில் மாற்றிவிடலாம்... திடீரென்று மின்சாரம் போய்விடுகிறது. இது குறித்து புகார் செய்யலாம். `சே... சரியான நேரத்தில் கரண்ட் போய்விட்டதே' என்று விரக்தியடையலாம். மின்துறை மீது கோபப்படலாம் அல்லது இதைப் பற்றிக் கவலைப்படாமல் பேசாமல் தியானம் செய்ய உட்கார்ந்து விடலாம். மின்சாரம் தடைப்பட்டவுடன் அந்தச் சூழ்நிலையில் ஏதோ ஒரு ஆக்ஷன் நமக்குத் தேவைப்படுகிறது. எது இயலுமோ அதை நாம் செய்கிறோம்! சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளுதல் என்பது இதுதான். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது தான் சூழ்நிலையை ஏற்றுக் கொள்வது என்பதில்லை. செய்ய வேண்டியதைச் செய்வது தான் ஏற்றுக் கொள்ளுதல்.

எந்தச் சம்பவமும் நம்மை சோகப்படுத்துவதில்லை. ஆனால், உண்மைகளை ஏற்க மறுத்துவிட்டு நாம் எதிர்கால விளைவுகளைப் பற்றி கற்பனையில் மூழ்கும் போது தான் படிப்படியாகச் சோகம் நம்மைக் கௌவிக் கொள்கிறது. குறிப்பிட்ட ஒரு சம்பவம் நம் சிந்தனையைக் கிளறிவிட சோகம் ஏற்படுகிறது. ஏனென்றால், நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஏற்கனவே சோகம் புதைந்திருக்கிறது.

நிறைவேறாத விருப்பு - வெறுப்புகள் ஏராமாக இருப்பதால் ஏதோச்ச்த் ஒரு வகையில் ஒவ்வொருவரும் சோகப்படுகிறார்கள். இந்தவிருப்பு, வெறுப்புகளைக் கடந்து வந்து விட்டதாக நினைப்போம். ஆனால், உண்மை அதுவல்ல. நிறைவேறாது என்பது தெரிந்தவுடன் முயற்சியைக் கைவிட்டு விடுகிறோம், அவ்வளவு தான். எனவே, அது நமக்குள்ளேயே புதைந்து போய் சோகத்துக்கும் துயரத்துக்கும் வித்திட்டு விடுகிறது. துயரப்படுவதற்குப் பெரிய சம்பவம் எதுவும் நிகழ வேண்டும் என்பதல்ல.

கோபம், பொறாமை, வெறுப்பு, விரக்தி போன்றவை நம்மிடம் இயந்திரத் தனமாக ஏற்படுகின்றன. நமக்கு எது பிடிக்கவில்லையோ அது தானாகவே நடக்கிறது. நமக்குப் பிடித்தமானவற்றை நாம் உணர்வு பூர்வமாக முயன்று பெற வேண்டியிருக்கிறது.

ஆனால், நாம் இயந்திரத்தனமாகச் சிந்திப்பதால் சந்தோஷமான தருணங்கள் கூட நமது கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் ஏதோ இயந்திரத்தனமாக நடப்பது போன்ற பிரமை நமக்கு. உண்மை அதுவல்ல. மகிழ்ச்சியை உணர்வுபூர்வமாக அனுபவிக்கிறோம். மகிழ்ச்சியாக இருக்கும் போது தன்னைப் பற்றியும் சூழ்நிலை பற்றியும் உணர முடிகிறது. இசையைக் கேட்கும் போது சந்தோஷம் ஏற்படுகிறது. சூழ்நிலையை உணர்ந்து அதனுடன் ஐக்கியமாகிவிடுகிறோம். இசையோடு ஒன்றிப் போய்விடும் போது நாம் வேறு, இசை வேறு என்று பிரித்துப் பார்ப்பதில்லை. இரண்டறக் கலந்து விடுகிறோம்.

ஆக்ஷனுக்கும் ரியாக்ஷனுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். துயரம் ஒரு ரியாக்ஷன். கோபம், பொறாமை, வெறுப்பு, விரக்தி எல்லாமே ரியாக்ஷன்கள் தான்.

நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க முடியாது. விருப்பு, வெறுப்பு, கோபம், விரக்தி இவற்றின் பிடியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, சூழ்நிலையைச் சமாளிக்கும் திறன் நமக்கு அவசியமாகிறது. கோபம் வருமானால், அது ஏன், எங்கிருந்து எப்படி வருகிறது என்று வேர் வரை சென்று ஆராய வேண்டும்.

மதுவுக்கு அடிமையாகிவிட்ட உங்கள் நண்பரிடம் "ஏன் தினமும் இப்படி குடிக்கிறீர்கள்" என்று கேட்டுப் பாருங்கள்.

"நோ... நோ... நான் ஒன்றும் மதுவுக்கு அடிமை கிடையாது... குடிப்பழக்கத்தை எப்போது வேண்டுமானாலும் என்னால் நிறுத்திவிட முடியும்" என்று தான் அவர் சொல்வார்.

இந்தப் பதில் அவரிடமிருந்து வருகிறது என்பதை விட, மதுவிடமிருந்து வருகிறது என்பதே நிஜம்!

மதுப் பழக்கத்திலிருந்து விடுபட விரும்புபவர் முதலில் மதுவுக்குத் தான் அடிமை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். அதே மாதிரி தான் கோபம், துயரம், விரக்தி -இவை எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லை என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

"உற்சாகமிழக்க வேண்டாம்" என்று சிலர் அட்வைஸ் செய்வார்கள். மத போதகர்கள் அடிக்கடி இப்படி அட்வைஸர்களாக மாறிவிடுவது உண்டு. என்ன நடக்கிறது என்பதை யாருமே புரிந்து கொள்வதில்லை. யாருமே விருப்பப்பட்டு உற்சாகம் இழப்பதில்லை. அது தானாகவே நிகழ்ந்து விடுகிறது. இதில் உங்கள் சொய்ஸ் எதுவும் கிடையாது. எனவே, உற்சாகம் இழக்க வேண்டாம் என்று போகிற போக்கில் அறிவுரை கொடுப்பதில் அர்த்தமே இல்லை!

"கோபப்படாதீங்க சார்..." என்று யாருக்காவது அட்வைஸ் செய்தால் அவருக்குக் கோபம் பன்மடங்கு அதிகமாகிவிடும். "நீ யார் எனக்கு அட்வைஸ் கொடுப்பதற்கு?" என்று எகிறிக் குதிப்பார்.

எனவே, கோபமாகட்டும் துயரமாகட்டும் இவை எதுவுமே நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இவற்றைக் கட்டுப்படுத்த முடியும் என்றால், முதல் வேலையாக அவற்றைவிரட்டி விட்டுத் தானே மறுவேலை பார்ப்போம்!

எல்லாமே நமக்கு அளிக்கப்படுவது எனில், `கொடுப்பவர்' என்று ஒருவர் இருக்கிறாரா என்ற நியாயமான கேள்வி எழும். அப்படி ஒருவர் இருக்கிறார் என்றால், அவர் எப்படிப்பட்டவர் என்பது அடுத்த கேள்வி!

ரியாக்ஷன்களை கட்டுப்படுத்த இயலாமல் தவிக்கும் நேரத்தில் கொடுப்பவரின் உதவி கேட்டு அணுகலாம். காரணம், மற்ற எல்லோரும் நம் நிலையில் தான் இருக்கிறார்கள்.

நீங்கள் சோகமாக இருக்கிறீர்கள். அடுத்தவரும் சோகமாக இருக்கிறார். நீங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்தால் ஒரு போதும் மகிழ்ச்சிக்கு வழி ஏற்படாது.

சமுத்திரத்தில் மூழ்கிக் கொண்டிருப்பவர், அவரை மாதிரியே மூழ்கிக் கொண்டிருக்கும் இன்னொருவரின் கைகளைப் பற்றினால் இருவருமே மூழ்கிப் போக வேண்டியது தான்.

எனவே, கொடுப்பவரின் அதாவது கடவுளின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழி இல்லை.

`ஓ கடவுளே நான் இயலாமையில் தத்தளிக்கிறேன். என் குணங்களில் சிலவற்றை மாற்றியமைக்க முடியாமல் இருப்பதைப் புரிந்துகொள்ளும் மனப் பக்குவத்தை எனக்குக் கொடுங்கள்... மாற்றக் கூடிய விடயங்களை மாற்றியமைக்கும் துணிவையும் திறமையையும் எனக்கு அளியுங்கள். இரண்டுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை உணர எனக்குச் சக்தி கொடுங்கள்...!'

நம்மால் மாற்ற இயலாத விடயங்களை நினைத்துக் கவலைப்படுகிறோம். எதை மாற்ற இயலும், எதை மாற்ற இயலாது என்பது தெரிந்தால், நமது முயற்சிகளையும் சக்தியையும் அதற்கசாகச் செலவழிக்கலாம். நமது முயற்சிகளுக்கும் வழி புலப்படும்.

உண்மைகளை ஏற்க மறுப்பதே, பல பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது.

w3.thinnakkural.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.