Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் நிலைப்பாடுதான் என்ன?

Featured Replies

இந்தியாவின் நிலைப்பாடுதான் என்ன?

 

கால­தா­ம­தங்­களும் இழுத்­த­டிப்­பு­களும் இலங்­கையைப் பொறுத்­த­வரை புதி­ய­தொரு விட­ய­மல்ல, அதேபோல் ஏமாற்­றங்­க­ளையும் ஏமாறுதல்­க­ளையும் சந்­திப்­பது தமி­ழர்கள் வர­லாற்றில் நடக்­காத ஒரு விட­ய­மு­மல்ல. அர­சியல் தீர்வு விடயம் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை வழங்­காது இழுத்­த­டிக்கும் போக்கை உலகம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்­டி­ருக்­காது என இலங்­கை ­அ­ரசை எச்­ச­ரித்­துள்­ள­தா­கவும் ஜெய்­சங்கர் கூறி­யி­ருப்­பது தமிழ் மக்­களை திருப்­தி­ப்ப­டுத்தும் வார்த்­தை­யாக இருந்­தாலும் இந்த எச்­ச­ரிப்­பு­க­ளையும் எடுத்­து­ரைப்­பு­க­ளையும் இலங்கை அர­சாங்கம் எந்­த­ள­வுக்கு சுதா­­ரித்துக் கொள்­ளப்­போ­கி­றது என்­பதைப் பொறுத்­துத்தான் நிலை­மைகள் அனைத்­துக்கும்  சம­புள்ளி இடப்­ப­டலாம். 

 

இலங்­கையில் நீண்­ட­கா­ல­மாக புரை­யோடிப் போயி­ருக்கும் அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் 2017 ஆம் ஆண்­டுக்குள் தீர்வு காணப்­பட வேண்டும் என்ற செய்­தியை சம்­பந்­தப்­பட்ட அனை­வ­ருக்கும் வலி­யு­றுத்துவதே எனது இலங்கை விஜ­யத்­தின் பிர­தான நோக்­க­மென இந்­திய வெளி­வி­வ­கார செய­லாளர் ஜெய்­சங்கர் குறிப்­பிட்ட செய்தி இவ்­வா­ரத்தில் முக்­கிய இடம் பிடித்த செய்­தி­யாக காணப்­ப­டு­கி­றது.

நரேந்­தி­ர­மோடி இந்­தியப் பிர­த­ம­ராக பத­வி­யேற்றுக் கொண்ட காலம் தொடக்கம் இன்­றைய வாரம் வரை தேக்க நிலை பெற்­றி­ருந்த இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை தொடர்­பான இந்­தி­யாவின் கரி­ச­னையில் மீண்டும் ஒரு புது இரத்தம் பாய்ச்­சு­வ­தற்­கான செய்­தி­யாக ஜெய்­சங்­க­ரு­டைய செய்தி நோக்­கப்­ப­டு­கின்­றது.

கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக இலங்கை இனப்­பி­ரச்­சினை தீர்வு விட­யத்தில் மௌனம் சாதித்த, இன்­னு­மொரு வகையில் கூறு­வ­தனால் அடக்கி வாசித்த இந்­திய அரசு இப்­பொ­ழுது சுறு­சு­றுப்­ப­டைந்­தி­ருப்­பது போல் காட்­டு­வது அல்­லது நித்­திரை விட்­டெ­ழுந்­தது போல் தன்னை நிர்­வ­கித்து கொள்­வது ஆச்­ச­ரி­யத்தை ஊட்­டு­வ­தாக இருந்­தாலும் "சோழியன் குடும்பி சும்மா ஆடாது" என்­பது போல் அதன் சிதம்­பர இர­க­சியம் போகப் போகத் தெரி­ய­வ­ர­லா­மென்­பதை சாதா­ர­ண­மாக விளங்கிக் கொள்ள முடியும்.

இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் இலங்­கையின் சகல பிரச்­சி­னை­களும் 2017 ஆம் ஆண்­டுக்கு முன் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட வேண்­டு­மென்ற அழுத்­தத்தை நல்­கவே தனது இலங்கை விஜயம் அமைந்­தி­ருக்­கி­றது என்று கால எல்­லையை வகுத்­தி­ருப்­பது நீண்டு கொண்டு செல்லும் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வை தொடர்ந்தும் இழுத்­த­டிக்­காமல் முடி­வுக்குக் கொண்­டு­வ­ர­வேண்­டு­மென்ற விடயம் மறை­மு­க­மான அழுத்­த­மாக கொள்­ள­லாமா அல்­லது எச்­ச­ரிக்­கை­யாக எடுத்­துக்­கொள்­ளலாமா என்ற தர்க்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவே இருக்­கலாம்.

நல்­லாட்சி அர­சாங்­க­மொன்று கடந்த 2016 ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்­ட­போது நீண்ட கால இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ர­மான அர­சியல் தீர்­வொன்று காணப்­ப­ட­வேண்­டு­மென்ற கோரிக்­கை­யையும் கால அவ­கா­சத்­தையும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு விடுத்­தி­ருந்தார் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன். இரா.சம்­பந்தனுடைய கோரிக்­கையை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்கவும் அங்­கீ­க­ரிப்­பதை போலவோ அல்­லது ஒத்துக் கொண்ட தோர­ணை­யிலோ சம்­பந்­த­னு­டைய கருத்­து­களை எவ்­வி­ட­யத்­திலும் வெட்டிப் பேசா­மலும் மறு­த­லிக்­கா­மலும் இருந்­துள்­ளார்கள் என்ற யதார்த்­தத்தை எல்­லோரும் ஏற்­றுக்­கொண்­டுதான் ஆக வேண்டும்.

இன்­னு­மொரு வகையில் கூறு­வ­தானால் தமிழ் மக்­க­ளு­டைய நீண்ட கால அபி­லா­ஷை­க­ளுக்கு அர­சியல் ரீதி­யான நிரந்­தர தீர்­வொன்று காணப்­பட வேண்­டு­மென்ற யதார்த்­தத்தை ஆட்­சி­யா­ளர்கள் புரிந்து கொண்­டதன் கார­ண­மா­கவே அர­சியல் நிர்­ணய சபை­யொன்று உரு­வாக்­கப்­பட்டு வழிப்­ப­டுத்தல் குழு அதன் ஒட்டு அமைப்­பு­க­ளாக உப­கு­ழுக்கள் ஆறும் அமைக்­கப்­பட்டு கருத்­துக்­கோடல், ஆலோ­ச­னைகள், கலந்­து­ரை­யா­டல்கள், மக்கள் கருத்துப் பெறல் என ஏகப்­பட்ட நட­வ­டிக்­கைகள் நிகழ்ந்­தேறின. ஆனால் வரை­ய­றுக்­கப்­பட்ட காலத்­துக்குள் எதிர்­பார்க்­கப்­பட்ட ஆண்­டுக்குள் சொல்­லப்­பட்ட விட­யங்­களின் பத்து வீதம் கூட நடந்­தே­ற­வில்லை. எல்­லாமே தேக்க நிலை­யி­லேயே இருந்து கொண்­டி­ருக்­கின்­றன. இதனை எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தனே பகி­ரங்­க­மா­கவே சுட்டிக் காட்­டி­யுள்ளார்.

இவ்­வி­டத்­தி­லி­ருந்­துதான் இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளரின் வரு­கையை மதிப்­பீடு செய்ய வேண்­டி­யுள்­ளது. தமிழ் ஈழப் போராட்டம் ஆரம்­பித்த காலத்­தி­லி­ருந்து, இலங்கை இனப்­பி­ரச்­சினை, விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் வகி­பாகம் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் கன­தி­யா­கவே இருந்­தி­ருக்­கி­றது என்­பதை இலங்கை–இந்­திய அர­சி­ய­லோடு ஈடு­பாடு காட்­டி­வரும் சாமானிய மனி­தனும் தெரிந்து வைத்­தி­ருக்­கிற விட­ய­மாகும்.

1983 ஆம் ஆண்டு இனப் போர் இலங்­கையில் வெடித்த காலத்­தி­லி­ருந்து இந்­திய அர­சாங்­கத்தால் பல தூது­வர்கள் வரிசைக் கிர­ம­மாக அனுப்­பி­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். பார்த்­த­சா­ரதி, நர­சிம்ம ராவ், ரொமேஷ் பண்­டாரி, சிவ­சங்கர் மேனன் என ஏகப்­பட்­ட­வர்­களை அட்­ட­வ­ணைப்­ப­டுத்திக் காட்ட முடியும். அதே போலவே தூதுவர்கள் பலரும் விசே­ட­மாக நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

வந்­த­வர்கள், அனுப்பி வைக்­கப்­பட்­ட­வர்கள் ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கத்தின் வெளி­யு­றவுக் கொள்­கையை சுமந்து வந்­த­வர்­க­ளா­கவே காணப்­பட்­டார்கள். இதற்கு காரணம் இந்­திய அர­சாங்­கத்தின் புவிசார் நலன், பொரு­ளா­தார விருத்தி, வெளி­யு­றவு கொள்கை என்­ப­வற்றை மூல­த­ன­மாகக் கொண்டே, அவர்­களின் வரு­கைகள் இருந்­தி­ருக்­கி­றன. அதை மீறி, இலங்கைத் தமி­ழர்­களின் நாட்­ட­நி­லை­களில் கரி­சனை கொண்­ட­வர்­க­ளாக, வந்து போக­வில்­லை­யென்­பது, பின்­னைய காலங்­க­ளி­லேயே, உணரக் கூடி­ய­தாக இருந்­தது.

இந்­திய அர­சாங்­கத்தின் ஆட்சிக் கதிரை காங்­கி­ரஸின் பிடி­யி­லி­ருந்து மாறி நரேந்­தி­ர­மோ­டி­யெனும் புதிய தலை­மை­யிடம் வந்து சேர்ந்த போது இலங்கைத் தமி­ழர்­க­ளு­டைய எதிர்­பார்ப்­பு­களும் கற்­ப­னை­களும் அதி­க­மா­கவே இருந்­தன. நாட்­பட நாட்­பட, அது கழுதை தேய்ந்து கட்­டெ­றும்­பான கதை­யாக மாறிப் போய் விட்­டது என்­பது உண்­மையே.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடியின் அர­சாங்கம் கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு மேலாக இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையை கடைக்­கண்ணால் கூட, பார்க்க விரும்­ப­வில்­லை­யென்­பது வெளிப்­ப­டை­யா­கவே தெரிந்­த­வுண்மை. கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் இலங்­கைக்கு உத்­தி­யோகபூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த இந்­தியப் பிர­தமர் இரு நாட்டு வர்த்­தக மற்றும் வெளி­வி­வ­கார விட­யங்­களில் செலுத்­திய கவ­னத்தை சிறி­த­ள­வேனும், இனப்­பி­ரச்­சினை தீர்வு விடயம் பற்றி அவர் தனது விஜ­யத்­தின்­போது பேச எத்­த­னிக்­க­வு­மில்லை. அலட்டிக் கொள்­ள­வு­மில்லை.

யாழ்ப்­பாணம் சென்ற பிர­தமரால் மக்­களின் வாழ்­வி­யலைப் பார்த்து பரி­தா­பப்­பட முடிந்­ததே தவிர, அர­சியல் பரி­காரம் காணப்­ப­ட­வேண்­டு­மென்­பதில் அவர் அக்­கறை செலுத்­த­வில்லை. குறிப்­பாக, காணாமல் ஆக்­கப்­பட்டோர், அர­சியல் கைதிகள், காணி விவ­கா­ரங்கள், இரா­ணுவ மய­மாக்கல் என்ற எந்­த­வொரு விட­யத்தைப் பற்­றியும் புதிய அர­சாங்­கத்­துடன் அவர் கலந்­து­ரை­யா­டி­ய­தாக தக­வல்கள் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. அவரின் வருகையின் போது முற்­று­மு­ழு­தாக இரு நாட்டு வர்த்­தக மற்றும் முத­லீட்டு உற­வுகள் பற்­றியே பேசப்­பட்­டுள்­ளன.

நல்­லாட்சி அர­சாங்கம் வந்து இரண்டு வரு­டங்கள் நாள்காட்டி ஒற்­றைகள் போல் கிழிக்­கப்­பட்ட நிலையில் வெளி­யு­றவுக் செய­லாளரின் வருகை முக்­கி­யத்­துவம் வாய்ந்த பய­ண­மாக கரு­தப்­ப­டு­கி­றது. வருகை தந்த செயலாளர் இரு வகைக்­குண்­டு­களைத் தூக்கிப் போட்­டி­ருக்­கிறார். ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் வெளி­யு­றவுச் செய­லாளரை சந்­தித்த வேளையில் அவர் கூறி­ய­தா­வது.

 “வடக்கு – கிழக்கு இணைப்பு என்­பது 1987 ஆம் ஆண்டு இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்தின் ஒரு அங்­க­மாக இருந்­த­போ­திலும் கூட, தற்­போ­தைய நிலை­மையில், சிர­ம­மான போக்கு காணப்­ப­டு­வதால் சூழ்­நி­லையை அனு­ச­ரித்து நடந்து கொள்­ளுங்கள் என கூறி­யி­ருப்­ப­துடன், இன்­னு­மொரு ஆலோ­ச­னை­யாக தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு முழு­மை­யான, உறு­தி­யான தீர்­வு­களைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த கட்­சிகள் மற்றும் நபர்கள் ஒரு அணி­யாக செயற்­பட வேண்­டு­மென இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

வெளி­யு­றவுக் செய­லா­ளரின் இவ்­விரு கருத்­து­களும் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வரை இரண்­டு­வி­த­மான பரி­ணா­மங்­களை எடுத்துக் கூறு­வ­தாக அமை­கி­றது. இதில் முத­லா­வது விட­யத்தை பரி­சீ­லிப்­போ­மானால் இணைப்பு விடயத்தினை ஒட்­டு­மொத்த தீர்­வுக்கும் பண­ய­மாக வைத்துக் கொண்­டி­ருக்­காமல் இலங்கை அர­சாங்­கத்­துடன் உடன்­பாட்­டுக்­கான அம்­சங்­களை ஆரா­யு­மாறு அவர் வலி­யு­றுத்­தி­யுள்ளார்.

இவ்­வி­ட­யத்தை நோக்­கு­வ­தற்­குமுன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் சுட்­டிக்­காட்­டிய விட­யத்தை முதலில் நோக்கின் அனைத்து உப­கு­ழுக்­களும் அவற்றின் அறிக்­கை­களை சமர்ப்­பித்­து­விட்ட அதே­வேளை, வழிப்­ப­டுத்தல் குழுவும் வரைபு அறிக்­கை­யொன்றை ஒப்­ப­டைத்­து­விட்ட போதிலும் புதிய அர­சியல் அமைப்பை உரு­வாக்கும் பணி­களில் அர­சாங்கம் இழுத்­த­டிப்பு செய்து வரு­வ­தாக த.தே.கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

அது மட்­டு­மன்றி அர­சாங்­கத்தின் ஒற்றை அணியைக் சேர்ந்­த­வர்­களே, ஜனா­தி­பதி சிறி­சேன தரப்பு ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சிப் பிரி­வினர் வழிப்­ப­டுத்தல் குழுவின் வரைபு அறிக்கை திருத்­தப்­பட வேண்டும் என்று இறுதி நேரத்தில் திடீ­ரென ஆட்­சே­பம் தெரி­வித்து வரு­கின்­றார்கள் எனவும் கூட்­ட­மைப்­பினர் வெளி­யு­றவுச் செய­லா­ள­ரிடம் சுட்­டிக்­காட்­டி­யுள்ளனர்.

வடக்கு,­ கி­ழக்கு இணைப்­பில்லை, சமஷ்­டிக்கு நாட்டில் இட­மில்லை, அர­சியல் சாச­னத்தில் இழுத்­த­டிப்­புகள் இடம்­பெ­று­கின்­றன. அர­சியல் சாச­ன­மல்ல அர­சியல் அமைப்புத் திருத்­தமே கொண்­டு­வ­ரப்­படும். 13 ஆவது திருத்­தத்­துக்கு அப்பால் செல்ல முடி­யாது. காணி அதி­கா­ரங்­களோ பொலிஸ் அதி­கா­ரங்­களோ வழங்­கப்­பட முடி­யா­தவை என ஏகப்­பட்ட விவ­கா­ரங்கள் பூச்சிய நிலை­யி­லேயே இருக்­கின்ற போது தமி­ழர்­க­ளு­டைய நீண்ட காலப் பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­பட வேண்டும். காலம் கடத்­து­வதை தவித்­துக்­கொள்ள வேண்­டு­மென்­பதை இந்­திய வெளி­யு­றவுச் செய­லாளர் மாத்­தி­ர­மின்றி அனைத்து நாடுகளின் இரா­ஜ­தந்­தி­ரி­களும் எடுத்­து­ரைத்­து­வ­ரு­வது நாளாந்தம் நடக்­கின்ற விட­யந்தான்.

கால­தா­ம­தங்­களும் இழுத்­த­டிப்­பு­களும் இலங்­கையைப் பொறுத்­த­வரை புதி­ய­தொரு விட­ய­மல்ல, அதேபோல் ஏமாற்­றங்­க­ளையும் ஏமாறுதல்­க­ளையும் சந்­திப்­பது தமி­ழர்கள் வர­லாற்றில் நடக்­காத ஒரு விட­ய­மு­மல்ல. அர­சியல் தீர்வு விடயம் விரை­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வை வழங்­காது இழுத்­த­டிக்கும் போக்கை உலகம் தொடர்ந்தும் பார்த்துக் கொண்­டி­ருக்­காது என இலங்­கை ­அ­ரசை எச்­ச­ரித்­துள்­ள­தா­கவும் ஜெய்­சங்கர் கூறி­யி­ருப்­பது தமிழ் மக்­களை திருப்­தி­ப்ப­டுத்தும் வார்த்­தை­யாக இருந்­தாலும் இந்த எச்­ச­ரிப்­பு­க­ளையும் எடுத்­து­ரைப்­பு­க­ளையும் இலங்கை அர­சாங்கம் எந்­த­ள­வுக்கு சுதா­­ரித்துக் கொள்­ளப்­போ­கி­றது என்­பதைப் பொறுத்­துத்தான் நிலை­மைகள் அனைத்­துக்கும் சம­புள்ளி இடப்­ப­டலாம்.

இன்­றைய அர­சாங்­கமும் கடந்த காலங்­களைப் போலவே தமிழ் மக்­களை ஏமாற்றப் பார்க்­கி­றது. நடை­மு­றை­யி­லுள்ள அர­சாங்கம் தமது பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வைத்­த­ரு­மென்று தமிழ் மக்கள் நம்­பி­யி­ருக்கும் நிலையில் ஏமாற்­றங்கள் தொடரப் பார்க்­கி­றது. தமிழ் மக்கள் தொடர்ந்தும் கொடுமைப் படுத்­தப்­படும் நிலையே காணப்­ப­டு­கின்­றது. ஏலவே ஐ.நா.சபைக்கு வழங்­கிய உறுதி மொழி­க­ளி­லி­ருந்தோ அதே­போன்று இந்­தி­யா­வுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளி­லி­ருந்தோ இலங்கை அர­சாங்கம் தப்ப முடி­யாது என எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன் கடந்த 22 ஆம் திகதி புதன்கிழமை பாரா­ளு­மன்றில் தனி­நபர் பிரச்­சி­னையை முன்­வைத்து உரை­யாற்­றி­யி­ருந்­த­மை­யையும் இங்கு கோடிட்டுக் காட்ட வேண்­டி­யுள்­ளது.

தமிழ் மக்­களின் இன்­றைய மன நிலையில் ஒரு விரக்தித் தன்மை வேர்­விட்டு நிற்­பதை அவர்­களின் அதி­ருப்­தி­யான கருத்­து­க­ளி­லி­ருந்து அறிந்து கொள்ளக் கூடி­ய­தா­க­வுள்­ளது. அவர்கள் என்ன நினைக்­கி­றார்கள் என்றால் சிறு­பான்மைக் கட்­சிகள், குறிப்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சுக்கு வழங்கி வரும் மறை­மு­க­மான ஆத­ரவை மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்டும். அல்­லது உடன்பாட்டு நிலை­யி­லி­ருந்து விலகிக்­கொண்டு எதிர்­நிலைப் போக்கை கடைப்­பி­டிப்­பதன் மூலமே இந்த அர­சாங்­கத்­துக்கு எச்­ச­ரிக்­கை­யாக அமை­ய­மு­டி­யு­மென்ற கோதா­வி­லேயே அவர்கள் சிந்­திக்க ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள் என்­பதை அண்­மைக்­கால சம்­ப­வங்­களும் போராட்ட நிகழ்­வு­களும் எடுத்­துக்­காட்­டு­கின்­றன.

இருந்த போதிலும் கூட்­ட­மைப்பின் இரா­ஜ­தந்­திர மற்றும் உடன்­பாட்டு அர­சி­யலை உட­ன­டி­யாக வாபஸ் பெற்றுக் கொள்­வதன் மூலம் எத­னையும் அவ­ச­ர­மாகக் சாதித்­து­விட முடி­யாது என்­ப­தையும் அறி­வு­பூர்­வ­மாக ஏற்­றுக்­கொள்ள வேண்டும். இந்த அர­சாங்­கத்­துக்கு அனு­ச­ரணை வழங்கிக் கொண்­டி­ருக்­கிற உலகத் தரப்­பினர் அதீத நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கி­றார்கள். அதன் ஒரு ஒட்டு மொத்­த­மான வெளிப்­பா­டா­கவே 2017 ஆம் ஆண்டு இறு­திக்குள் அனைத்து பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­கா­ணப்­பட வேண்­டு­மென்ற இந்­திய அரசின் எச்­ச­ரிக்கை மணி அடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

என்­னதான் இருந்­தாலும் அண்­மைக்­கா­ல­மாக இந்­தி­யாவின் திரி­பு­வாத போக்கு தமிழ் மக்­க­ளுக்கு அவ­நம்­பி­கை­க­ளையும் அதி­ருப்­தி­க­ளை­யுமே உண்­டாக்­கி­யுள்­ளது என்­பது வெளிப்­ப­டை­யா­கவே கூறப்­ப­டு­கின்றது. அத்துடன் காங்­கிரஸ் காலத்­தி­லி­ருந்த அக்­க­றை­களில் ஒரு சத­வீதம் கூட தற்­போ­தைய பிர­தமர் நரேந்­தி­ர­மோடி காலத்தில் காட்­டப்­பட்­டி­ருக்­க­வில்­லை­யென்­பது தெரி­யப்­பட்ட நிலை­யி­லேயே சீனக்­கா­ல­னி­யாக இலங்­கையை மாற்றும் முயற்­சி­களில் தற்­போ­தைய அர­சாங்கம் தீவி­ர­மாக ஈடு­பட்­டு­வ­ரு­கி­றது என எதி­ர­ணி­யி­னரின் குற்­றச்­சாட்­டுக்கு மத்­தியில் இந்­திய வெளி­யு­றவு செயலாளரின் இலங்கை விஜயம் அமைந்து காணப்படுகின்றது.

இவைமட்டுமன்றி சீனக்குடா எண்ணெய்க்குத விவகாரத்தில் இரு அரசுகளுக்கும் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை, சீன இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் தொடர்ந்தும் இலங்கை விஜயங்களை மேற்கொண்டு வரும் நிலையில் தன்னுடைய பிடிக்குள்ளிருந்து இலங்கை விலகிவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக இந்த விஜயமும் அதனோடு ஒட்டிய இலங்கைத்தமிழர் விவகாரமும் கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இந்தியா மறைமுகமாக வடகிழக்கு இணைப்பை கைவிடுங்கள். இலங்கை அரசு தருவதை வாங்கிக் கொள்ளுங்கள் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக தமிழ் ஆர்வலர்களும் அரசியல் பிரமுகர்களும் கருதும் ஒரு நிலையையே செயலாளரின் கூற்றின் மூலம் உணருகிறோமென கருத்துத் தெரிவித்துவருகிறார்கள்.

ஐ.நா. சபையின் நிபுணர் ரீட்டா தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் சமஷ்டி முறையிலான தீர்வு முன்வைக்கப்பட வேண்டுமென அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கும் நிலையில் கூட இந்தியாவின் தெளிவான நிலைப்பாடு முன்வைக்கப்படவில்லை. ஜெனிவா விவகாரம் அரசியல் சாசன மந்த நிலை, வடகிழக்கில் காணி மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுவிப்பு என்பவற்றிலெல்லாம் போராட்டம் உக்கிரப்பட்டுப் போய்க்கொண்டிருக்கின்ற நிலையில் அரசியல் சாசனத்திலான தீர்வு என்ற கனவுக்கும் ஆப்பு வைக்கப்படுமா என்ற ஏமாற்ற நிலை கொண்டவர்களாகவே வடகிழக்கு தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள் என்ற நிதர்சனத்தை தெளிவாக புரிந்து கொண்டு எல்லாத் தரப்பினரும் நடந்து கொள்ள வேண்டுமென்பதே இன்றைய சூழ்நிலைக்கான மாற்றுவழியாக அமையமுடியும்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-02-25#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.