Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாசுதேவ நாணயக்கார சொன்னார்?

Featured Replies

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டின் எதிரியாகவே கணிக்கப்படுவார்கள்

[13 - February - 2007] [Font Size - A - A - A]

* இரத்தினபுரியில் வாசுதேவ நாணயக்கார

"இலங்கையில் இன்று கட்சித்தாவல்கள், அமைச்சு மாற்றங்கள், அமைச்சர்கள் பதவி விலகுதல், விலகுதல் சர்வ சாதாரண விடயமாகிவிட்ட நிலையில் அதனை பலரும் பல கோணங்களில் நோக்குகின்றனர். எனினும், இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தை யதார்த்தபூர்வமாக புரிந்துகொண்டு நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதே சாலச் சிறந்தது" என கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாநகர சபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் வருடாந்த மாநாடு நடைபெற்றது.

அந்நிகழ்வில் விசேட அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது;

ஜே.வி.பி. யை அரசாங்கத்திலிருந்து யாரும் விரட்டவில்லை. அவர்கள் பிரிந்து சென்றனர். இன்று அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றனர். அவர்கள் தனியாட்சிக்கு வரவே விரும்புகின்றனர்.

இதனால் ஐ.தே. கட்சி அல்லது முதலாளித்துவ நாடுகளின் கொள்கைகளைக் கூட கடைப்பிடிக்க தயங்கமாட்டார்கள்.

மங்கள சமரவீர எம்.பி., ஜே.வி.பி. யின் இதயபூர்வமான ஆதரவாளர். அவர் ஜே.வி.பி. யின் துதிபாடுகின்றார்.

இந்நிலையிலும் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்தார். அவர் வெளிநாட்டு அமைச்சராக இருந்தபோது ஐ.நா. சபையில் முதலாளித்துவ நாடுகளுக்கெதிராக கொண்டு வந்த தீர்மானம் ஒன்றை இலங்கை அரசாங்கம் கொள்கையளவில் எதிர்ப்பதாக இருந்தது.

இது குறித்து மங்கள சமரவீர எம்.பி. யிடம் தெரிவித்தபோது, அவர் எமது அரசாங்கத்தின் கொள்கைக்கெதிராக செயற்பட்டார். இவ்வாறானவர்களினால் எமது அரசாங்கத்துக்கு ஏதேனும் நன்மையுண்டா. ஷ்ரீபதி சூரியாராச்சி எம்.பி., மங்கள சமரவீர எம்.பி.யின் சிஷ்யர். குருவும் சிஷ்யனும் ஒன்றைத்தானே செய்வார்கள்.

அத்துடன், அநுரா பண்டாரநாயக்க, சந்திரிகா அம்மையாரின் பிரதிநிதியாக செயற்படுகின்றார். அத்துடன், அவர் 14 ஆவது வயதில் இடதுசாரி கொள்கையை எதிர்த்ததுடன் அமரர் எம்.என். பெரேராவை அப்போது அரசிலிருந்து வெளியேற்றுமாறு கோரினார்.

சந்திரிகா அம்மையாரின் திறந்த பொருளாதாரக் கொள்கையை இலங்கையில் பாதுகாத்தவர் மங்கள சமரவீர. இதனால் தான் இன்றுகூட விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளது.

புலிகளை இலங்கையில் தடை செய்வது பெரிய விடயமல்ல. அவர்களை தடை செய்வதனால் ஆகப்போவது பற்றி நாம் சிந்திக்கவில்லை. புலிகளுக்கும் அவர்களின் அதிகாரங்களுக்கும் அடிபணியாமல் இனப்பிரச்சினையை தீர்ப்பதே எமது அரசினதும் மகிந்த ராஜபக்ஷவினதும் கொள்கையாகும்.

சிறுபான்மையின மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும் அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் ஜே.வி.பி. எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது.

இதனை மங்கள சமரவீர எம்.பி. யும், சூரியாராச்சி எம்.பி. யும் வரவேற்று வருகின்றனர்.

புலிகள் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த மக்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். இதனை இல்லாதொழிக்க வேண்டும்.

புலிகள் தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் தனிமைப்படுத்தப்பட வேண்டும். இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வரும் மகிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளுக்கெதிராக செயற்படுபவர்கள் நாட்டின் எதிரியாக கணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

http://www.thinakkural.com/news/2007/2/13/...s_page21265.htm

வாசுதேவ நாணயக்கார தமிழர் பிரச்சனையில் ஒரளவு நடுநிலையான கொள்கையுடையவர் என எங்கோ படித்ததாக நினைவு. இச்செய்தி உண்மைதானா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.