Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

'கிஸ் ஆஃப் லவ்' போராட்டம் சொல்ல வருவது என்ன?

Featured Replies

'கிஸ் ஆஃப் லவ்' போராட்டம் சொல்ல வருவது என்ன?

கிஸ் ஆஃப் லவ்

லக மகளிர் தினத்தில் அனைவரும் பெண் உரிமை பற்றி பேசும் அதேநேரத்தில்தான் கேரள மாநிலத்தில் சிவசேனா கட்சியினர், கடற்கரையில் இருந்த காதலர்களை அடித்து விரட்டி உள்ளனர். இதுபோன்ற செயல், சிவசேனா அமைப்பினருக்கு புதிதல்ல. 'காதலர் தினம்', 'பெண்கள் தினம்' எல்லாம் இவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கையில் எடுக்கும் நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. என்றாலும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்த்து, சமீபகாலமாக இளைஞர்களே போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். இங்கும் அப்படித்தான். சிவசேனா அமைப்பினரின் இந்த அநாகரிகச் செயலை எதிர்த்து 'கிஸ் ஆஃப் லவ்' என்ற இயக்கத்தினர் முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடற்கரையில் ஊர்வலம்

கொச்சி கடற்கரையில் மகளிர் தினத்தையொட்டி சிவசேனா கட்சியினர் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தில் 'குடைக்குள் இருந்து காதல் செய்வதை நிறுத்துங்கள்' என்ற வாசகத்துடன் கோஷங்கள் எழுப்பினர். இந்த ஊர்வலத்தில் பலரும் கலந்து கொண்டனர். கடற்கரையில் இருந்த காதலர்களை சிவசேனாவினர் அடித்து துன்புறுத்தியதுடன், அங்கிருந்து விரட்டினர். தவறான வார்த்தைகளாலும் திட்டியுள்ளனர். அங்கிருந்த காதலர்கள் செய்வதறியாது திகைத்து, 'தப்பித்தோம், பிழைத்தோம்' என்று வெளியேறினர். இதுபோன்ற செயலில் ஈடுப்பட்ட சிவசேனா கட்சியினரை பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாரும் எதுவும் கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டார். விசாரணைக்குப் பின் ஒரு காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார். மேலும் எட்டு காவல்துறையினர் எர்ணாகுளம் ஆயுதப் படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

'கிஸ் ஆஃப் லவ்' அமைப்பினர் போராட்டம்

இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சியினரின் நடவடிக்கையைக் கண்டிக்கும்விதமாக 'கிஸ் ஆஃப் லவ்' அமைப்பினர், முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "கலாசாரத்தைக் காப்பதாகக் கூறிக் கொண்டு, சிவசேனாவினர் தனிமனித உரிமைகளைப் பறிக்கிறார்கள்" என்று குற்றம்சாட்டினர். இந்தப் போராட்டம், கொச்சி மட்டுமல்லாது, திருவனந்தபுரம், கோழிக்கோடு போன்ற இடங்களிலும் நடைபெற்றது. இந்தப் போரட்டத்தில் சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், திருநங்கைகள், கலைஞர்கள் என்று பல்வேறுதரப்பினரும் கலந்து கொண்டனர். ஓவியங்கள் வரைந்தும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

சிவ சேனா கட்சியினர்

 

சட்டசபையில் வாக்குவாதம்

சிவசேனா கட்சியினரின் ஊர்வலம், அதைத் தொடர்ந்து 'கிஸ் ஆஃப் லவ்' அமைப்பினரின் முத்தம் கொடுக்கும் போரட்டம் ஆகியவை குறித்து கேரள மாநில சட்டசபையில் நேற்று (9.3.2017) கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தப் பிரச்னை குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. காதலர்களை சிவசேனாவினர் விரட்டிய சம்பவத்தின்போது போலீஸாரும் சிரித்துக் கொண்டு,  வேடிக்கை பார்த்ததை காங்கிரஸ் எம்.எல்.ஏ சுட்டிக் காட்டி பேசினார். எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, "கேரள மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அவர்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடக்கிறது" என்று குற்றம்சாட்டினார். இதைக்கேட்ட முதல்வர் பினராயி விஜயன், கடற்கரையில், இளைஞர்களுக்கு, பெண்களுக்கு எதிராக செயல்பட்ட சிவசேனா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வேடிக்கை பார்த்த போலீஸார் மீதும் நடவடிகை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார். மேலும், "இதுபோன்ற சம்பவம் நடக்க எதிர்க்கட்சியினர்தான் காரணம்" என்றும் அவர் பதிலளித்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சட்டப்பேரவையின் மையப்பகுதிக்குச் சென்று கோஷம் எழுப்பினர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர், கைகலப்பாக மாறியது. இதனால், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

2014-ம் ஆண்டு முத்த போராட்டம்

இதேபோல், கடந்த 2014-ம் ஆண்டு கொச்சியில் நட்சத்திர ஹோட்டலில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல இளைஞர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளைஞர்களும், பெண்களும் அநாகரிக செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, அங்கு திரண்ட பாரதிய ஜனதா கட்சியினர், அங்கிருந்த இளைஞர்களிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். அவர்களை அங்கிருந்து விரட்டியதில், பா.ஜ.க-வினருக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதைக் கண்டித்து, 'கிஸ் ஆஃப் லவ்' அமைப்பினர், 2014 நவம்பர் மாதம், ஒன்று திரண்டு ஒருவருக்கு ஒருவர் முத்தமிட்டுக் கொண்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அங்கு வந்த போலீஸார், இந்த செயலில் ஈடுபட்டவர்களை விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, இந்தியாவில் பலர், இந்த அமைப்புக்கு ஆதரவு அளித்தனர். மும்பை ஐ.ஐ.டி மாணவர்கள், இதை ஆதரித்து கல்லூரி வளாகத்தில் முத்தப் போராட்டம் நடத்தினர். இதேபோல், முத்தப் போராட்டத்தை ஆதரித்து, சென்னை ஐ.ஐ.டி மாணவ மாணவிகளும் ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொண்டனர்.

உலக அளவில் ஆண், பெண் இருபாலருக்கும் 'காதல்' என்பது பொதுவான உணர்வாகும். அனைவராலும் வரவேற்கப்படும் காதல் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர், சிவசேனா கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர். காதலுக்கும், அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அரசியல் தலைவர்கள் செய்ய வேண்டிய பணி ஏராளமாக உள்ள நிலையில், அதை விடுத்து எதிர்கால இந்தியாவின் தூண்களாகத் திகழும் இளைஞர்களை இழிவுபடுத்தும் செயல்களில் இனிமேலாவது அவர்கள் ஈடுபட வேண்டாம். 'இளைஞர்களிடம் உங்கள் கருத்துகளை திணிக்காதீர்கள்' என்பதை உணர்த்தும் விதமாகவே இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளாவில் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கி உள்ளன. 'இளைஞர்களை சீண்ட வேண்டாம்' என்பதே இந்த செய்தி உணர்த்தும் பாடம் எனலாம்.

http://www.vikatan.com/news/coverstory/83284-this-is-why-kiss-of-love-protest-relaunched-in-kerala.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.