Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2015 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் தயாரா?

Featured Replies

2015 பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் தயாரா?

 

ரொபட் அன்­டனி  

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டாலும் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டாலும் தனது நாட்டு பிர­ஜை­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது தொடர்பில் அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும். அது மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தின் பொறுப்பும் கட­மை­யாகும். அது­மட்­டு­மன்றி சர்­வ­தேச மேடை­களில் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தாக கூறி­விட்டு இலங்­கையில் அதனை இழுத்­த­டித்துச் செல்லும் போக்கை  அர­சாங்கம் பின்­பற்­றக்­கூ­டாது. 

 

ஜெனிவா மனித உரிமை பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரின் அமர்­வுகள் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் இலங்கை நிலை­மைகள் சூடு­பித்­துள்­ளன. குறிப்­பாக இலங்கை தொடர்­பாக இது­வரை மூன்று அறிக்­கைகள் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

சித்­தி­ர­வ­தைகள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் மற்றும் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் விசேட நிபுணர் ஆகி­யோரின் அறிக்­கை­களும் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேனின் இலங்கை குறித்த அறிக்­கையும் வெ ளியி­டப்­பட்­டு­விட்­டன.

அத்­துடன் இலங்கை தொடர்­பான புதிய பிரே­ர­ணையும் அமெ­ரிக்கா, பிரிட்டன் உள்­ளிட்ட நான்கு நாடு­க­ளினால் ஜெனிவா மனித உரிமை பேர­வையில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு இலங்கை தொடர்­பான விட­யங்கள் நாளுக்­குநாள் ஜெனி­வாவில் தீவி­ர­ம­டைந்­து­வ­ரு­கின்­றன. எதிர்­வரும் 24 ஆம் திக­தி­யுடன் ஜெனிவா மனித உரிமை பேர­வை­யின் 34 ஆவது கூட்டத் தொடர் நிறை­வ­டை­கின்ற நிலையில் 23 ஆம் திகதி இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­ட­வுள்­ளது.

இந்­நி­லையில் இலங்கை தொடர்­பான புதிய பிரே­ர­ணை­யா­னது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை இலங்கை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வேண்டும் என்ற விட­யத்தை வலி­யு­றுத்தும் வகை­யி­லேயே முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது. விசே­ட­மாக நான்கு பரிந்­து­ரை­களை கொண்­டுள்ள புதிய பிரே­ர­ணை­யா­னது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 1, 2,19,18 ஆகிய செயற்­பாட்டு பந்­தி­களை திருத்தம் செய்யும் வகையில் அமைந்­துள்­ளது.

அந்­த­வ­கையில் பிரே­ர­ணையில் உள்­ளடக் ­கப்­பட்­டுள்ள 4 பரிந்­து­ரைகள் அல்­லது செயற்­பாட்டு பந்­தி­களில் என்ன விட­யங்கள் உள்­ளன என்­ப­தனை பார்ப்போம்.

முத­லா­வது பரிந்­துரை:- கடந்த 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் கோரிக்­கைக்கு அமைய ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்கை தொடர்­பாக 34 ஆவது கூட்டத் தொடரில் முன்­வைத்­துள்ள பரந்­து­பட்ட அறிக்­கையை பாராட்­டு­கின்றோம்.

அத்­துடன் அந்தப் பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் விசே­ட­மாக அதில் நிலு­வையில் உள்ள விட­யங்­களை அமுல்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் இலங்கை அர­சாங்­கத்­திடம் கோரிக்கை விடுக்­கின்றோம். இந்த விட­யத்­தையே முத­லா­வது பரிந்­துரை வலி­யு­றுத்­து­கின்­றது. (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் முத­லா­வது செயற்­பாட்டு பந்தி திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது)

இரண்­டா­வது பரிந்­து­ரை­யா­னது இலங்கை அர­சாங்­கத்தின் ஐக்­கிய நாடுகள் சபை­யு­ட­னான ஈடு­பாட்டை வலி­யு­றுத்­து­கின்­றது. அதா­வது கடந்த 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­ய­ாள­ரு­டனும் அவ­ரது அலு­வ­ல­கத்­து­டனும் மேற்­கொண்­டு­வரும் ஆரோக்­கி­ய­மான ஈடு­பாட்டை வர­வேற்­கின்றோம்.

அத்­துடன் விசேட ஆணை­யா­ளர்­க­ளுட­டான இந்த ஈடு­பாட்­டையும் வர­வேற்­கின்றோம். இதே­வேளை இலங்­கையின் மனித உரிமை உண்மை, நீதி, நல்­லி­ணக்கம், மற்றும் பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விப்­ப­தற்­காக இந்த ஈடு­பாட்டை தொட­ரு­மாறு ஊக்­கு­விக்­கின்றோம் என்று இரண்­டா­வது பரிந்­து­ரையில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 2ஆம் இலக்­கப் ­செ­யற்­பாட்டு பந்தி திருத்­தப்­ப­டு­கி­றது)

அடுத்­த­தாக மூன்­றா­வது பரிந்­துரை என்ன கூறு­கின்­றது என்று பார்க்­கலாம். அதா­வது ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் மற்றும் தொடர்­பு­பட்ட விசேட ஆணை­யா­ளர்கள் இலங்கை அர­சாங்­கத்­துடன் தொடர்ந்து ஆலோ­ச­னை­களை நடத்­த­வேண்­டு­மென்றும் இலங்­கையின் மனித உரிமை, உண்மை, நீதி, நல்­லி­ணக்கம், பொறுப்­புக்­கூ­றலை ஊக்­கு­விப்­ப­தற்­கான தொழி­ல்நுட்ப உத­வி­க­ளையும் வழங்­க­வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்­கின்றோம் என்று மூன்­றா­வது பரிந்­துரை அல்­லது செயற்­பாட்டு பந்தி குறிப்­பிட்­டுள்­ளது. (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 19 ஆவது செயற்­பாட்டு பந்தி திருத்தம் செய்­யப்­ப­டு­கி­றது)

இறு­தி­யாக நான்­கா­வது பந்­தி­யா­னது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யா­ள­ருக்­கான செயற்­பாட்டை வலி­யு­றுத்­து­கின்­றது. அதா­வது ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கையின் பிரே­ர­ணையின் பரிந்­து­ரை­களை அமுல்­ப­டுத்­து­வது தொடர்­பாக தொடர் மதிப்­பீ­டு­களை செய்­ய­வேண்டும். அத்­துடன் இலங்­கையின் நல்­லி­ணக்கம் பொறுப்­புக்­கூறல் மனித உரிமை நிலைமை தொடர்­பா­கவும் மதிப்­பீடு செய்­ய­வேண்டும்.

அது­மட்­டு­மின்றி இலங்கை ஜெனிவா பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­கின்­றமை தொடர்­பாக 2018 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் எழுத்­து­மூல அறிக்­கை­யையும் 2019 ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்ள ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 40 ஆவது கூட்டத் தொடரில் பரந்­து­பட்ட விப­ர­மான அறிக்­கை­யையும் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் சமர்ப்­பிக்­க­வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுக்­கின்றோம் என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. (இதன் மூலம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையின் 18 ஆவது செயற்­பாட்டு பந்தி திருத்தம் செய்­யப்­ப­டு­கின்­றது)

இவ்­வாறு நான்கு விட­யங்­க­ளையே இம்­முறை இலங்கை தொடர்­பான புதிய பிரே­ரணை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்­நி­லையில் இங்கு தற்­போது எழு­கின்ற விடயம் என்­ன­வென்றால் கடந்த 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. அதே­போன்று 2015 ஆண்டு பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­மாறு புதிய பிரே­ரணை அமைந்­துள்­ளதால் அதற்கும் இலங்கை அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்­கலாம்.

அப்­ப­டி­யாயின் இலங்கை அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த தயா­ராக இருக்­கின்­றதா? என்ற கேள்வி இங்கு எழு­கின்­றது. இவ்­வாரம் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கும் இலங்­கைக்கும் இடையில் நடை­பெற்ற வரு­டாந்த கூட்டு ஆணைக்­குழு பேச்­சு­வார்த்­தையில் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த தயார் என இலங்கை அறி­வித்­துள்­ளது.

அது மட்­டு­மின்றி பல சந்­தர்ப்­பங்­க­ளிலும் இலங்கை அர­சாங்கம் இந்த விட­யத்தை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. ஆனால் அவ்­வாறு 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்ள அர­சாங்கம் பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்த தயா­ராக இருக்­கின்­றதா? என்­பது இங்கு கரி­ச­னைக்கு உட்­படும் விட­ய­மாகும்.

அர­சாங்கம் 2015 ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளது. மனித உரிமைகள் மீறல் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் விசா­ரணை பொறி­முறை முன்­னெ­டுக்­கப்­படும் காணாமல் போனோர் தொடர்பில் உண்மை கண்­ட­றி­யப்­படும், அப­க­ரிக்­கப்­பட்ட காணிகள் மீள் வழங்­கப்­படும் , அர­சியல் கைதிகள் விட­யத்தில் தீர்க்­க­மான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் பொரு­ளா­தார ரீதியில் ஊக்­கு­விப்பு வேலைத்­திட்­டங்கள் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்ட­ஈடு குடும்ப தலை­வி­க­ளாக உள்ள விதவைப் பெண்­க­ளுக்கு வாழ்­வா­தார ஏற்­பா­டுகள் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் துரித கதியில் அபி­வி­ருத்தி செய்­யப்­படும் என்­பது உள்­ளிட்ட பல வாக்­கு­று­திகள் வழங்­கப்­பட்­டன.

ஆனால் இது­வரை அதற்கு தேவை­யான போது­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டே பர­வ­லாக முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­யி­லேயே அர­சாங்கம் தற்­போதும் 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுப்­ப­டுத்­துவோம் என்று கூறி­வ­ரு­கின்­றது.

ஆனால் அர­சாங்­கத்தின் ஒரு­சில அமைச்­சர்­களின் கூற்­றுக்­களைப் பார்க்­கும்­போது அர­சாங்­கத்தின் வாக்­கு­று­திகள் வாக்­கு­று­தி­ளா­கவே இருந்­து­வி­டுமா என்ற எண்ணம் ஏற்­ப­டு­கின்­றது. அதனை உறு­தி­ப­டுத்­து­வ­து­போன்றே நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களும் அமைந்­துள்­ளன.

கடந்த புதன்­கி­ழமை ஜெனிவா விவ­காரம் தொடர்பில் கருத்து வெ ளியிட்­டி­ருந்த பிர­தி­ய­மைச்சர் அஜித் பி. பெரெரா மனித உரிமைகள் செயற்­பா­டு­களை முன்­னேற்றும் விட­யத்தை நாங்கள் நினைத்த விதத்­தி­லேயே செய்வோம். அதை எங்­க­ளுக்கு தேவை­யான நேரத்­தி­லேயே செய்வோம். யாரும் எங்­க­ளுக்கு கால அட்­ட­வணை கொடுக்க முடி­யாது. ஆனால் நாங்கள் சர்­வ­தேச தரத்­தின்­படி இந்த செயற்­பா­டு­களை மேற்­கொண்டு சர்­வ­தே­சத்­திற்கு அறி­விப்போம். அதற்கு இரண்டு வருடம் மூன்று வருடம் என அவ­காசம் வழங்க முடி­யாது என்று திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு பார்க்­கும்­போது 2015 ஆம் ஆண்டு பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தாக அர­சாங்கம் என்­னதான் கூறி­வந்­தாலும் அர­சாங்­கத்தில் உள்ள முக்­கி­யஸ்­தர்­களின் கருத்­துக்­களை பார்க்­கும்­போது அந்த அர்ப்­ப­ணிப்பு தொடர்பில் கேள்வி எழு­கின்­றது.

அர­சாங்­கத்தைப் பொறுத்­த­வரை தேர்தல் காலத்­திலும் அதற்கு பின்­னரும் வழங்கி வந்த வாக்­கு­று­திகள் தொடர்பில் மறந்­து­வி­டக்­கூ­டாது. விசே­ட­மாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­கு­வ­தாக வலி­யு­றுத்­தியே அர­சாங்கம் பத­விக்கு வந்­தது. அதனை மறந்து தற்­போது செயற்­ப­டக்­கூ­டாது. ஐக்­கிய நாடுகள் மனிதகள் உரிமை பேர­வையில் பிரே­ர­ணைகள் நிறை­வேற்­றப்­பட்­டாலும் நிறை­வேற்­றப்­ப­டா­விட்­டாலும் தனது நாட்டு பிர­ஜை­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பது தொடர்பில் அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்டும். அது மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்ட அர­சாங்­கத்தின் பொறுப்பும் கட­மை­யு­மாகும். அது­மட்­டுமின்றி சர்­வ­தேச மேடை­களில் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­வ­தாக கூறி­விட்டு இலங்­கையில் அதனை இழுத்­த­டித்துச் செல்லும் போக்கை அர­சாங்கம் பின்­பற்­றக்­கூ­டாது.

தற்­போ­தைய அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்கு நாட்டின் சிறு­பான்மை மக்கள் பாரிய ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். விசே­ட­மாக பாதிக்­கப்­பட்ட மக்கள் பாரிய ஆத­ரவை வழங்­கி­யி­ருந்­தனர். எனவே அந்த மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்ப்­பதில் அர­சாங்கம் அச­மந்­த­மாக செயற்­ப­டக்­கூ­டாது.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அபகரிக்கப்பட்ட தமது காணிகளை மீட்டுத் தருமாறும் காணாமல் போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதனை வெ ளிப்படுத்துமாறும் வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இவ்வாறு மக்கள் தமது பிரச்சினைகளை தீர்க்குமாறு வலியுறுத்தி போராட்டங்களை நடத்திவருகின்ற நிலையில் அரசாங்கம் அசமந்தப் போக்கில் இருந்துவிடக்கூடாது. தற்போது மீண்டும் ஒரு பிரேரணை இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்திலும் பொறுப்புக்கூறலிலும் முன்னேற்றத்தை வெ ளிப்படுத்துவதற்கு அரசாங்கத்துக்கு இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

அந்தவகையில் அரசாங்கமானது உடனடியாக 2015 ஆம் ஆண்டு பிரேரணையை அமுல்படுத்த தயாரா இல்லையா என்பதனை வெளிப்படுத்தவேண்டும். அதற்கேற்ற வகையில் இதய சுத்தியுடன் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமே தவிர பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவோம் என்று கூறிவிட்டு காலத்தை இழுத்தடிக்க முயற்சிக்கக்கூடாது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-18#page-3

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.