Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா?

Featured Replies

இலங்கையில் சர்தேசத்தின் தலையீடுகள் சாத்தியமா?

 

கடந்த காலத்தில் இலங்கை விவ­காரம் தொடர்­பாக ஜெனீ­வாவில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்டத் தொடர்­களில் ஆரா­யப்­பட்ட வேளை­களில் அர­சியல் உணர்­வுகள் கிள­றி­வி­டப்­ப­டு­வதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ஆனால் தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்கும் கூட்டத் தொட­ரின்­போது அத்­த­கை­ய­தொரு சூழ்­நிலை இல்லை. மாற்றம் ஏற்­பட்டு விட்­டது. முன்­னைய அர­சாங்­கத்தைப் போலன்றி தற்­போ­தைய அர­சாங்கம் சர்­வ­தேச சமூ­கத்­துடன் நல்­லு­றவைக் கொண்­டி­ருக்­கி­றது.

பெரும்­பா­லான மக்கள் நம்­பு­கி­றார்கள். அதனால் ஜெனீ­வாவில் இருந்து உண்­மை­யான அச்­சு­றுத்தல் ஒன்று வரு­வ­தாக இவர்கள் நோக்­க­வில்லை. இத்­த­கை­ய­தொரு சூழ்­நி­லையில் அர­சாங்கம் பல சட்­டங்­களை இயற்றும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படக் கூடி­ய­தாக இருந்­தது. இவை பற்றி மக்கள் பெரி­தாக கவ­னத்தை செலுத்­த­வில்லை.

காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லக சட்­டத்தை திருத்­து­வ­தற்­கான நகல் வரைவை அர­சாங்கம் தயா­ரித்­தி­ருக்­கி­றது. இது தொடர்பில் வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது. சட்டமூலம் விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருக்­கி­றது. காணாமல் போகச் செய்­யப்­ப­டு­வ­தி­லி­ருந்து சகல ஆட்­க­ளையும் பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சாச­னத்தை ஏற்றுக் கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான சட்டமூலம் ஒன்று பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த சாச­னத்தில் இலங்கை 2015 டிசம்பர் 10 ஆம் திகதி கைச்­சாத்­திட்­டது.

கடந்த காலத்தில் இலங்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் பெரும் அர­சியல் சர்ச்­சை­களைத் தோற்­று­வித்­தன. 2009 மே மாத நடுப்­ப­கு­தியில் போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்ட சில வாரங்­க­ளி­லேயே மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை தொடர்­பாக தீர்­மானம் கொண்டு வரும் நட­வ­டிக்­கைகள் ஆரம்­பித்­து­விட்­டன.

பெரும் எண்­ணிக்­கை­யி­லான குடி மக்கள் உயி­ரி­ழப்­புக்கள் மற்றும் பார­தூ­ர­மான மனித உரிமை மீறல்­க­ளுடன் முன்­னைய அர­சாங்கம் போரை நடத்­திய முறைக்கு எதி­ரா­ன­வை­யா­கவே தீர்­மா­னங்கள் அமைந்­தி­ருந்­தன. அத் தீர்­மா­னங்­களை கடு­மை­யாக எதிர்த்த அர­சாங்கம் அதற்கு சாத­க­மான முறையில் மக்­களின் உணர்­வு­களை கிள­றி­வி­டு­வ­தற்­கான இன்­னொரு வாய்ப்­பா­கவும் அவற்றைப் பயன்­ப­டுத்திக் கொண்­டது. 2015 க்கு முன்னர் ஜெனீ­வாவில் மனித உரி­மைகள் பேர­வையின் ஒவ்­வொரு கூட்டத் தொட­ருமே இலங்கை ஒரு பெரிய தேசிய நெருக்­க­டியை எதிர்­நோக்­கு­கின்­றது என்ற உணர்வை (தேசிய அர­சியல் பிர­சா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி) மக்கள் மத்­தியில் தூண்டி விடு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்­க­ளா­கவே அமைந்­ததைக் காணக் கூடி­ய­தாக இருந்தது. விடு­தலைப் புலி­க­ளி­ட­மி­ருந்து நாட்டின் ஐக்­கி­யத்­துக்கு தோற்­று­விக்­கப்­பட்ட இரா­ணுவ ரீதி­யான அச்­சு­றுத்­தலை முடி­வுக்­கு கொண்டு வந்­த­மைக்­காக அநி­யா­ய­மான முறையில் அர­சாங்­கத்தைத் தண்­டிப்­ப­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­படுவ­தாக அதன் தலை­வர்கள் கூறி­ய­போது உள்­நாட்டில் அர­சாங்­கத்தின் மீது பெரு­ம­ளவு அனு­தாபம் தோன்­றி­யது.

2012 தொடக்கம் 2014 வரை அடுத்­த­டுத்து நிறை­வேற்­றப்­பட்ட ஜெனீவாத் தீர்­மா­னங்­களை மக்கள் மத்­தியில் தனது தேசி­ய­வாத அர­சியல் நம்­பகத் தன்­மையை வலு ப் படுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­தினால் பயன்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருந்­தது. அதன் விளை­வாக சர்­வ­தேச சமூ­கத்தின் மத்­தியில் அர­சாங்கம் அனு­தா­பத்தை இழந்­தது. குறிப்­பாக மேற்கு நாடு­களை அர­சாங்கம் பகைத்துக் கொண்­டது. ஜெனீ­வாவில் தீர்­மா­னங்­களைத் தோற்­க­டிக்க முயற்­சித்த வேளை எல்லாம் அர­சாங்கம் திரும்பத் திரும்ப தோல்­வி­க­ளையே சந்­திக்க வேண்­டி­யி­ருந்­தது.

அதன் விளை­வாக போர் முடி­வுக்கு பின்­னரான கால கட்­டத்தில் மனித உரி­மை­களை மதிக்­கின்ற நாடு என்ற பெயரை சம்­பா­தித்துக் கொள்ள முடி­யாமல் இலங்­கைக்கு அப­கீர்த்தி ஏற்­பட்­டது. சில மேற்­கு­லக நாடுகள் இலங்­கைக்கு விஜயம் செய்­வது ஆபத்­தா­னது என்று தங்­க­ளது பிர­ஜை­க­ளுக்கு அறி­வு­றுத்­தல்­க­ளையும் கூட விடுத்­தி­ருந்­தன. இது நாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது. பொரு­ளா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்குத் தேவை­யான வெளி­நாட்டு முத­லீ­டு­களைக் கவர்வது பெரும் கஷ்­ட­மாக இருந்­தது.

முன்­னைய அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக வெளி­நா­டுகளுக்கு மத்­தியில் இலங்­கைக்கு அனு­கூ­ல­மில்­லாத சூழ்­நி­லை­யொன்று தோன்­றி­யி­ருந்­தது. அந்த சூழ்­நி­லையை தற்­போ­தைய அர­சாங்கம் கையாள வேண்­டி­யி­ருந்­தது. 2014 ஆம் ஆண்டின் இறு­தியில் இலங்கை அதன் மீது அர­சியல் மற்றும் பொரு­ளா­தார தடைகள் விதிக்­கப்­படக் கூடி­ய­தொரு திசையில் சென்று கொண்­டி­ருந்­தது போலத் தோன்­றி­யது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­ட­மி­ருந்து ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லு­கையை இலங்கை ஏற்­க­னவே இழந்­தி­ருந்­தது. வேறு நாடு­களும் ஒரு தலை­பட்­ச­மான தடை­களை விதிக்கக் கூடு­மென்ற விச­னமும் தோன்­றி­யது. 2015 ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மா­னத்தை எதிர்ப்­பேச்­சின்றி இணங்கிக் கொள்­வதை அல்­லது எதிர்ப்­பதை விடுத்து அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்த முடிவு புதிய தீர்­மா­னத்தின் ஒரு பங்­கா­ளி­யாக வரு­வ­தற்கு உத­வி­யது.

சர்­வ­தேச சமூ­கத்­தினால் இலங்­கை­யிடம் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்­கை­களில் தளர்வு ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இது வழி­வ­குத்­தது. அதே­வேளை இலங்கை அர­சாங்­கத்­துக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பின் கார­ண­மாக தங்­க­ளது பிரச்­சி­னைகள் விரைவில் தீர்க்­கப்­பட்டு விடு­மென்ற எதிர்­பார்ப்பும் நம்­பிக்­கையும் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் தோன்­றின. இப்­போது 2017 ஆம் ஆண்டில் ஜெனீ­வாவில் கொண்டு வரப்­ப­ட­வி­ருக்கும் தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்­கு­வ­தற்கு இலங்கை திட்­ட­மி­டு­கி­றது. ஆனால் இத்­த­டவை எதிர்­பார்ப்­புகள் மிகவும் குறை­வா­கவே உள்­ளன.

2015 அக்­டோ­பரில் ஜெனீ­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தை­ய­டுத்து வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்­று­வ­தற்கு இரு வரு­ட­கால அவ­காசம் தர வேண்­டு­மென்று இலங்கை வேண்­டுகோள் விடுத்­தி­ருக்­கி­றது. இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையில் மனித உரி­மை­க­ளுக்­கான ஐக்­கிய நாடுகள் உயர்ஸ்­தா­னிகர் இள­வ­ரசர் செயிட் பின் ராட் அல் ஹுசைன் பல உறு­தி­மொ­ழிகள் நிறை­வேற்றப் பட­வில்லை என்று சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

நிலை­மா­று­கால நீதிச் செயன்­மு­றை­களின் பிர­தா­ன­மான கூறுகள் இந்த நிறை­வேற்­றப்­ப­டாத உறு­தி­மொ­ழி­களில் அடங்கும். உண்­மையைக் கண்­ட­றிதல், பொறுப்புக் கூறுதல், இழப்­பீடு மற்றும் நிறு­வன ரீதி­யான சீர்­தி­ருத்தம் ஆகி­ய­னவே அவை­யாகும். உண்மை கண்­ட­றியும் ஆணைக்­குழு, காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லகம், இழப்­பீ­டு­க­ளுக்­கான அலு­வ­லகம் மற்றும் விசேட நீதி­மன்­றங்கள் என்ற (2015 அக்­டோ­பரில்) உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட நான்கு பொறி­மு­றை­க­ளையும் அர­சாங்கம் இன்­னமும் செயற்­ப­டுத்­த­வில்லை. காணாமல் போனோர் விவ­கார அலு­வ­லகம் தொடர்­பான சட்டம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு விட்­ட­போ­திலும் அது இன்­னமும் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. குறிப்­பி­டத்­தக்க இந்த குறை­பா­டு­க­ளுக்கு மத்­தி­யிலும் அர­சாங்­கத்­தினால் கோரப்­பட்­டி­ருக்கும் கால அவ­காசம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யினால் வழங்­கப்­ப­டு­மென்றே தெரி­கி­றது.

மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னங்­க­ளுடன் தொடர்­பு­பட்ட விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச சமூ­கத்­துடன் முரண்­ப­டு­வதை நிறுத்­து­வ­தற்கு இலங்­கையின் புதிய அர­சாங்கம் காட்­டிய விருப்பம் உயர் மட்­டங்­களில் ஏற்­பட்ட மாற்­றத்தைப் பிர­தி­ப­லிக்­கி­றது. திசை மார்க்­கத்தில் ஒரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. அர­சாங்கத் தலை­வர்கள் இன ரீதி­யான, மத ரீதி­யான சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கு எதி­ரான பிர­சா­ரங்­களைச் செய்து வன்­மு­றை­க­ளுக்கு வழி­வ­குக்கும் போக்கு இப்­போது இல்­லாமல் போயி­ருப்­பது மிகவும் பாராட்­டத்­தக்க மாற்­றங்­களில் ஒன்­றாகும்.

உள்ளூர் மட்­டத்தில் வெறுப்பு பிர­சா­ரங்கள் தொட­ரவே செய்­கின்­றன. அவற்றை உட­ன­டி­யாக முற்று முழு­தாக அடக்கி விடு­வது கஷ்­ட­மா­னதே. ஆனால் அத்­த­கைய பிர­சா­ரங்­க­ளுக்கு அர­சி­யல சமு­தா­யத்தின் உயர் மட்­டங்­களின் ஆத­ரவு இப்­போது இல்லை. அதனால் வெறுப்பு பிர­சா­ரங்கள் ஒரு மக்கள் இயக்­க­மாக மாறு­வ­தற்­கான உத்­தேசம் இன்றி காணப்­ப­டு­கின்­றன. அவை உள்ளூர் மயப்­ப­டுத்­தப்­பட்டு விட்­டன.

மறு­பு­றத்தில் இந்த வெறுப்பு பிர­சா­ரங்­களைச் செய்­ப­வர்­களை ஒடுக்­கு­வ­தற்கு அர­சாங்கத் தலை­வர்கள் தலை­மைத்­து­வத்தைக் கொடுக்­காமல் இருப்­பது வெறுப்பு பிர­சா­ரங்­க­ளினால் பாதிக்­கப்­ப­டு­கின்ற சமூ­கங்கள் மத்­தியில் அதி­ருப்­தி­யையும் ஏமாற்­றத்­தையும் தோற்­று­வித்­தி­ருக்­கி­றது. அதே­போன்றே போரினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தங்­க­ளது அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்கும் மனக் குறை­க­ளுக்கும் தீர்வு காண்­ப­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்கம் காட்­டு­கின்ற தாம­தத்­தினால் பெரும் வேதனைக் குள்­ளா­கி­யி­ருக்­கி­றார்கள். காணாமல் போன தங்கள் குடும்­பத்­த­வர்­க­ளுக்கும் உற­வி­னர்­க­ளுக்கும் என்ன நேர்ந்தது என்று தெரி­யாமல் அவர்கள் ஏங்கிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். தங்­க­ளது காணிகள் தொடர்ந்தும் இரா­ணு­வத்­தி­னரால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டி­ருப்­பதால் அவர்கள் சொந்த இடங்­க­ளுக்கு திரும்ப முடி­யாமல் வழமை வாழ்வை முன்­னெ­டுக்க முடி­யாமல் தவிக்­கி­றார்கள்.

கால­வ­ரை­யறை

இலங்கை இன ரீதி­யாக பிள­வு­பட்­ட­தொரு சமு­தா­ய­மாக தொடர்ந்தும் இருப்­பதே பிரச்­சி­னையின் அடிப்­ப­டை­யாகும். இது ஒரு புதிய தோற்­றப்­பா­டல்ல. இந்தப் பிளவு 1948 ஆம் ஆண்டில் பிரித்தானிய­ரி­ட­மி­ருந்து இலங்கை சுதந்­திரம் பெறு­வ­தற்கு முன்னர் இருந்தே காணப்­ப­டு­கி­றது. 1936 ஆம் ஆண்டில் தனிச் சிங்­கள அமைச்­ச­ரவை (தமி­ழரோ அல்­லது முஸ்­லிம்­களோ அதில் இருக்­க­வில்லை)

1939 ஆம் ஆண்டில் ஐம்­ப­துக்கு ஐம்­பது கோரிக்கை (பாரா­ளு­மன்­றத்தில் சிங்­க­ள­வர்­க­ளுக்கும் சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கும் எண்­ணிக்­கையில் சமத்­து­வ­மான பிர­தி­நி­தித்­துவம்) ஆகி­ய­வற்றில் அந்த இனப்­பி­ளவு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது.

இன்­றைய அர­சாங்­கத்தின் தலை­வர்கள் தாரா­ள­வாதப் போக்­கு­டை­வர்­க­ளா­கவும் இன­வாத உணர்வு அற்­ற­வர்­க­ளா­கவும் கரு­தப்­ப­டக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக்­கின்ற அதே­வேளை, பல இனங்­க­ளையும் பல மதங்­க­ளையும் கொண்ட சமு­தா­ய­மொன்று எத்­த­கைய அர­சியல் வடி­வத்தை எடுக்க வேண்டும் என்­பது தொடர்பில் அவர்­களின் நோக்கு தெளி­வா­ன­தாக இல்லை. தங்­க­ளது நோக்கை அவர்கள் இன்­னமும் வெளிப்­ப­டுத்­த­வில்லை.

தேக்க நிலை­ய­டைந்­தி­ருக்கும் அர­சி­ய­ல­மைப்புச் சீர்­தி­ருத்த செயன்­மு­றை­களில் இதை தெளி­வாகக் காணக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது. அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் தொடர்பில் அர­சாங்கத் தலை­மைத்­துவம் அதன் நிலைப்­பாட்டை இன்­னமும் முன்­வைக்­க­வில்லை. இது விட­யத்தில் தெளி­வான நோக்கு ஒன்று இல்­லாத நிலையில் பல்­லின, பல்­மத அர­சியல் சமு­தா­ய­மொன்றை உரு­வாக்­கு­வ­தற்­கான இலட்­சி­யத்­துக்­கா­கவும் இலங்கை சமு­தா­யத்தில் காணப்­ப­டு­கின்ற இன ரீதி­யா­னதும் மத ரீதி­யா­ன­து­மான துரு­வ­மய நிலை­களை இல்­லாமல் செய்­வ­தற்­கா­கவும் இவர்கள் குரல் கொடுக்கப் போவ­தில்லை.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மானம் தொடர்பில் வடக்கு, கிழக்­கிற்கும் நாட்டின் ஏனைய பகு­திகளுக்கும் இடையே ஒரு பிரிவு இருக்­கி­றது. தற்­போது நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்ற ஜெனீவா கூட்டத் தொடர் நாட்டின் ஏனைய பகு­தி­களில் மக்கள் மத்­தியில் பெரும் ஆர்­வத்­தையோ உணர்­வு­க­ளையோ ஏற்­ப­டுத்­த­வில்லை என்ற போதிலும் வடக்கு, கிழக்கில் உள்ள முன்­னைய போர் வல­யங்­க­ளிலும் புலம்­பெயர் தமிழ் சமூ­கத்தின் மத்­தி­யிலும் இன்­னமும் அது தொடர்பில் அக்­கறை ஆழ­மாக வெளிப்­ப­டு­கி­றது.

அங்கு வாழ்­கின்ற மக்­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் சுமார் மூன்று தசாப்த கால­மாக நீடித்த போரில் நேர­டி­யாகப் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். தங்­க­ளுக்கும் தங்­க­ளது உற்றார், உற­வி­னர்­க­ளுக்கும் நீதி கிடைக்க வேண்டி அவர்கள் ஜெனீ­வாவில் நடை­பெறும் செயன்­மு­றை­களை உற்று நோக்­கி­ய­வர்­க­ளா­யி­ருக்­கி­றார்கள். சர்­வ­தேச தலை­யீடு தங்­க­ளது பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைத்து தங்­க­ளுக்கு நீதியைச் பெற்றுத் தரு­மென்று அவர்கள் நம்­பு­கி­றார்கள். இலங்­கை­யையும் விட படு­மோ­ச­மான மனித உரிமை மீறல்­க­ளையும் போர்க் குற்­றங்­க­ளையும் செய்த பல நாடு­களின் விவ­கா­ரங்­களில் சர்­வ­தேச சமூ­கத்­தினால் பெரி­தாக எதையும் செய்ய முடி­ய­வில்லை. அல்­லது எதை­யுமே செய்ய முடி­ய­வில்லை என்ற உண்­மையே இலங்­கையில் போரில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சர்­வ­தேச தலை­யீட்டில் கொண்­டி­ருக்­கின்ற நம்­பிக்­கையும் எதிர்­பார்ப்­புமே உள்ள பிரச்சினையாகும்.

இலங்கை கோருகின்ற கால அவகாசத்தை வழங்கக் கூடாது என்றும் அதற்குப் பதிலாக சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தமிழ் சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வேண்டுகோள் விடுத்திருக்கின்றன. இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்கின்ற விடயத்தில் இலங்கை அரசாங்கங்கள் தொடர்ச்சியாக உறுதிமொழிகளை காற்றில் பறக்க விட்டதைப் போன்றே மீண்டும் நிகழும் என்றே இந்த அமைப்புகளும் கட்சிகளும் கவலைப்படுகின்றன. ஆனால் இலங்கை இருவருட கால அவகாசத்தைப் பெறப் போவது சாத்தியமே.

புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் உள்ள முக்கியமான அமைப்புகளில் ஒன்றான வண.பிதா எஸ்.கே. இம்மானுவேல் தலை மையிலான உலகத் தமிழர் பேரவை இருவ ருடகால அவகாசம் இலங்கைக்கு வழங்கப் படுவதை இணங்கிக் கொள்கின்ற அதே வேளை 2015 அக்டோபர் ஜெனீவா தீர்மா னத்தின் நிபந்தனைகளை இலங்கை எந்த வித தவிர்ப்புமின்றி முழுமையாக கால அட்டவணை அடிப்படையில் நடைமுறைப் படுத்துவதை மனித உரிமைகள் பேரவை வசதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டிருக்கிறது. மனித உரிமைகள் பேர வையின் புதிய தீர்மானத்தில் இந்தக் கோரிக்கை உள்ளடக்கப்படுகின்றதோ இல் லையோ நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாகவும் உறுதிமொழிகளைக் காப்பாற்றுவதில் பற்றுறுதியை வெளிக் காட்டும் ஒரு செயற்பாடாகவும் அரசாங்கம் உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஒரு தெளிவான திட்டத்தையும் கால அட்டவணையையும் தனது சொந் தத்திலேயே வகுத்துக் கொள்ள முடியும்.

 

கலா­நிதி ஜெகான் பெரேரா

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-18#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.