Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

12 வயதில் அப்பாவான கேரள சிறுவன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

18 minutes ago, இசைக்கலைஞன் said:

இணக்கத்துடன் ஆரம்பித்ததால் இருவரும் ஒரு ஒப்பந்தத்துக்குள் நுழைந்துவிட்டதாக எழுத்துக்கொள்ள வேண்டும் யுவர் ஆனர். :D: பிறகு நிறுத்து என்று சொன்னால் அது Breach of Contract என எடுத்துக்கொள்ள வேண்டும். tw_blush:

 
 

இந்த மாதிரி சிக்கல் மிகுந்த விசயங்களில், விசயங்களை தெளிவாக்கி, அந்தமாதிரியான, பாயிண்டுகளை அடுக்கி வைக்கும், எங்கள் அண்ணன், தமிழ் சிறியர்... இப்போ சைவமாகி விட்டார், மக்களே. tw_cry:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

12 வயதில் தந்தையான சிறுவன் ; மருத்துவம் சொல்லும் காரணம் என்ன? 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 17 வயது இளம் பெண்ணுக்கு இரு மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு தந்தை என 12 வயது சிறுவன் ஒருவனை அடையாளம் காட்டினார். சிறுவனுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. சோதனையில் குழந்தைக்கு சிறுவன்தான் தந்தை என்பது உறுதியானது.  தற்போது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். சிறுவன் மீது போஸ்கோ(POCSO) எனப்படும் குழந்தைகள் பாலின கொடுமைச் சட்டம் பாய்ந்துள்ளது. இந்தியாவிலேயே இளம் வயது தந்தை இந்த சிறுவன்தான். இளம்பெண், சிறுவன், குழந்தை மூன்று பேரையும் பற்றியத் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. 

12 வயதில் தந்தையான சிறுவன்

இந்த விவகாரத்தில் பாலுறவு கொள்வதற்கு முதலில் தூண்டியவருக்குத் தண்டனை அளிக்கப்படுமாம். இப்போது குழந்தை வேறு பிறந்திருப்பதால், மூன்று பேரின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இளம் பெண்ணும்,  பெண்தான் தூண்டியதாக சிறுவனும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். எனவே இருவர் மீதுமே வழக்கு பாய்ந்துள்ளது.   

இது குறித்து பாலியல் மருத்துவர் அசோகனிடம் நாம் கேட்ட போது, ''சிறுமிகள் எப்படி விரைவில் பூப்பெய்து விடுகிறார்களோ... அப்படித்தான்  அந்தச் சிறுவன் முன்னதாக பருவம் எட்டியிருக்கிறான். ஆண் குழந்தைகளுக்கு விந்தணு வெளிப்படும் காலத்தைத்தான் பருவமாக பார்க்கிறோம். தற்போதைய தலைமுறைக்கு இணையம் வழியாக எல்லா வாய்ப்புமே கொட்டிக் கிடக்கிறது. மேற்கத்திய கலாசாரம், நம்ம கலாசாரம் அப்படி என்கிற எந்த வித்தியாசமும் இல்லை. உடை, நடை, பாவனைகளில் இருந்து எல்லாமே ஒரே கலாசாரமாக மாறிவிட்டது. உணவுப் பழக்க வழக்கங்கள் கூட மாறியிருக்கின்றன. 

இணையங்களில் பாலியல் தொடர்பான படங்களைப் பார்க்கும்போது,  உடல் ரீதியாகவும் துண்டப்படுகின்றனர். உடல் ரசாயனங்களால் ஆன குப்பை போன்றது. ஆனால், மனது நல்லது கெட்டது அறிய வேண்டும். நாம் செய்வது சரியா... தவறா என ஆராய வேண்டும். இவர்கள் விவகாரத்தில் இருவருமே மனரீதியாக ஆராயவில்லை.   

இப்போது, பத்து வயது சிறுவன் ஸ்மார்ட்போன் வைத்திருக்கிறான். மனம் பக்குவமடையாத வயது.  பாலியல் படங்களைப் பார்க்கும் போது  உடல் ரீதியாக தூண்டப்பட்டு விடுகிறான். மைனர்தானே என்று நாம் விட்டுவிட முடியாது. நிர்பயா விவகாரத்தில் கூட மைனர் குற்றவாளியின் செயல்பாடுதான், அவரது மரணத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது. வன்மத்துக்கும் வக்கிரத்துக்கும் வயதை விட மனதுதான் முக்கிய காரணம். எல்லா வயதிலும் வக்கிரம் நிறைந்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். 

இவர்களைப் பொறுத்தவரை விளையாட்டாக ஆரம்பித்து இப்போது வினையில் முடிந்திருக்கலாம். உடல் ஆசைப்படும்போது மனசுதானே கட்டுப்படுத்தப்பட வேண்டும். கட்டுப்பாட்டை மீறியுள்ளனர். திருமண வயது எதற்காக நிர்ணயித்திருக்கிறார்கள்? அப்போதுதான் ஒரு ஆண் குடும்பத்தை வழி நடத்தக் கூடிய அளவுக்கு முதிர்ச்சி பெற்றிருப்பான். வேலைக்கு போய் பணம் சம்பாதிப்பான். பெண் உடல் மற்றும் மனதளவில் உறவுக்கு தயாராகியிருப்பார். குடும்பத்தை வழி நடத்த அவளும் பக்குவமடைந்திருப்பார்.   இருவருக்குமே செக்ஸ் குறித்த விழிப்பு உணர்வு இருக்கும்.  

'போஸ்கோ' சட்டமே விவாதத்திற்குரியதுதான்.  சம்பந்தப்பட்ட மூன்று குழந்தைகளின் உரிமையும் இந்த விவகாரத்தில் காக்கப்பட  வேண்டும். குற்றம் புரிந்தவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் குழந்தைகள் என்பதால் அவசரகதியில் எந்த ஒரு முடிவுக்கும் வந்துவிட முடியாது. குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி 18 வயது கீழ் உள்ளவர்களை ஆண், பெண் என்று பிரித்துப் பார்ப்பதில்லை, குழந்தைகளாகவே பாவித்து இந்தப் பிரச்னையை மனிதாபிமானத்தோடுதான் அணுக வேண்டும்'' என்றார்.

 

http://www.vikatan.com/news/india/84871-kerala-boy-becomes-father-at-12-teenage-mother-booked-under-pocso-act.html

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனின் அப்பாவிடமும் கொஞ்சம் விசாரிங்க எஜமான்.. டி.என்.ஏ. ஒரே மாதிரியாக இருந்து குழப்பம் வந்திருக்கப்போகுது.. :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.