Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இழுத்தடிப்பு

Featured Replies

இழுத்தடிப்பு

 

ஜெனிவாவில் 34ஆவது கூட்டத் தொடர் பற்­றிய நம்­பிக்­கைகள், அவ­நம்­பிக்­கைகள், அதி­ருப்­திகள் கடந்த ஜன­வரி மாதம் முதலே ஏற்­படத் தொடங்­கிய நிலையில் இலங்கை பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்­க­ளுக்கு முடிவு காணும் நாளாக கடந்த 23 ஆம் திகதி மனித உரிமைப் பேர­வையில் இலங்கை விவ­காரம் தொடர்­பான தீர்­மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டமை சர்வ உல­கமும் அறிந்த ஒரு செய்­தி­யாகும்.

2012 ஆம் ஆண்டு அமெ­ரிக்­கா­வினால் கொண்டுவரப்பட்டு பிரித்தானியாவின் துணை­நி­லை­யுடன் இலங்­கைக்­கெ­தி­ரான தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்­றப்­பட்­ட­மையும் 2015 ஆம் ஆண்டு தீர்­மா­னத்தில் குறித்­துக்­காட்­டப்­பட்ட 30/01, தீர்­மா­னங்கள் முழு­வ­தையும் நிறை­வேற்றி வைப்­போ­மென இலங்கை, இணை­ அ­னு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­த­மையும், வழங்­கப்­பட்ட இணை­ அ­னு­ச­ர­ணை­யா­னது, தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றுவோம் என இலங்­கையால் ஒத்­துக்­கொள்­ளப்­பட்ட விவ­கா­ர­மா­னது 18 மாதங்கள் கழிந்­து­விட்ட நிலையில் எள்­ளளவும் நிறை­வேற்­றப்­ப­டாத சூழ்­நி­லையில் மீண்டும் இரு­வ­ரு­ட­ கால அவ­காசம் வழங்­கப்­ப­டு­வ­தென்­பது, தீவிரம் பெற்று நின்ற நிலையில் எல்­லோரும் வாயைப்­பொத்திக் கொண்­டி­ருங்கள் அவ­காசம் வழங்­கப்­ப­டவே வேண்­டு­மென்ற கோதாவில் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­டக்­கூ­டாது என்ற கடு­மை­யான நிபந்­த­னை­களை தமிழர் தரப்­பி­னரும், மனித உரிமைச் செயற்­பாட்­டா­ளர்­களும் சில­ம­னித உரிமை அமைப்­புக்­களும் புலம்பெயர் சாரார், நாடு கடந்த தமி­ழீழ செயற்­பாட்­டா­ளர்கள் இன்னும் ஒரு சில அமைப்­புக்கள் தங்கள் எதிர்ப்பை முன்­வைத்­தார்­களே தவிர மனித உரிமைகள் பேர­வையில் அங்கம் பெறும் எந்­த­வொரு நாடும் இது­வி­ட­யத்தில் தீவிரம் காட்­ட­வில்லை. குறிப்­பாக சொல்லப் போனால் கடந்த காலங்­களைப் போல் அல்­லது மனித உரிமைகள் பேர­வையில் அங்கம் பெறும், வல்­ல­ரசு நாடுகள், மென்­போக்கு நாடுகள், ஜன­நா­யகப் பாரம் பரி­யங்­க­ளைப்­பேணும் நாடுகள், மற்றும் சீனா, ரஷ்யா போன்ற இட­து­சாரி போக்­கு­டைய நாடுகள் என்ற எல்­லாத்­த­ரப்­பி­னரும் இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்­பதில் ஆர்வம் காட்­டி­னார்­களே தவிர மறு­த­லிப்புப் போக்கை எந்த நாடும் வெளிப்­ப­டுத்­த­வில்லை. இது ஒரு­வ­கையில் இலங்­கைக்கு பாரிய வெற்­றி­யென்றே கூற வேண்டும்.

ஐ.நா.சபையின் மனித உரிமைகள் பேர­வையின் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கை தொடர்­பாக அண்­மையில் சமர்ப்­பித்த அறிக்கை தொடர்­பான விவாதம் கடந்த 22 ஆம் திகதி பேர­வையில் விவா­தத்­துக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது, அவ்­வி­வா­தத்தில் ஐரோப்­பிய ஒன்­றியம், கனடா, செக்­ கு­டி­ய­ரசு, ஜேர்­மன், டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ், ஜப்பான், பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், அவுஸ்­தி­ரே­லியா, பிரித்­தா­னியா, சீனா, நியூ­ஸிலாந்து, சூடான், மஸி­டோ­னியா, நோர்வே, அயர்­லாந்து, ஸ்பெயின், பெல்­ஜியம், கானா, மாலை­தீவு போன்ற நாடுகள் பங்­கெ­டுத்துக் கொண்­டாலும், இவற்றில் பெருந்­தொ­கை­யான நாடுகள் இலங்­கைக்கு சார்பு நிலை கொண்ட கருத்­துக்­களை முன்­வைத்­த­துடன், இலங்­கைக்கு கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்டும். 30/1 தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மாயின், குறிக்­கப்­பட்ட கலண்டர் மாதத்­துக்குள் நிறை­வேற்ற முடி­யாது. தற்­பொ­ழுது இலங்­கையில் போர் இல்லை. அமைதி நில­வு­கி­றது. தேசிய நல்­லி­ணக்­கமும் இன ஐக்­கி­யமும் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்டு வரு­கி­றது. அதற்கு உதா­ரணம் இலங்­கையின் தேசிய கீதம் என்­று­மில்­லா­த­வாறு தமி­ழிலும் பாடப்­ப­டு­கி­றது. எனவே, போதிய கால அவ­காசம் வழங்­கப்­பட வேண்­டு­மென கடு­மை­யான ஆத­ரவை நல்­கி­யி­ருந்­தார்கள்.

இந்த தொகுதி நாடு­களில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், சூடான் போன்ற நாடுகள் இலங்­கைக்கு பேராதரவை நல்கி உரை­யாற்­றி­யி­ருந்­ததைக் காண முடிந்­தது. இது விட­யத்தில் குறிப்­பிட்டுக் காட்ட வேண்­டிய விட­ய­மென்­ன­வென்றால் இலங்கை பற்­றிய வாதப் பிர­தி­வா­தங்கள் இடம்பெற்ற போது இந்­தியா மௌனம் சாதித்­துக்­கொண்­டமை சர்­வ­தேச அளவில் பேசப்­படும் விட­ய­மாக மாறி­யுள்­ளது.

இதைப்­போன்­ற­தொரு நிலைதான், கடந்த 15 ஆம் திகதி ரீட்டா ஐசாக் நாடியா ஐ.நா.மனித உரிமைகள் பேர­வையில் உரை­யாற்­றி­ய­போது இருந்­த­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது. இரா­ணு­வத்தை அகற்­றுதல், காணாமல் போனோர் தொடர்பில் உண்மை நிலையை வெளிப்­ப­டுத்தல், காணி விடு­விப்பு, அர­சியல் கைதிகள் விடு­விக்­கப்­ப­டாமை போன்ற பிரச்­சி­னைகள் இலங்­கையில் உட­ன­டி­யாக ஆரா­யப்­பட்டு, தேவை­யான நட­வ­டிக்­கை­களை உடன் எடுக்க வேண்டும். இல்­லா­விடின் நெருக்­க­டி­க­ளுக்கு மத்­தியில் அடைந்­தி­ருக்கும் தற்­போ­தைய சந்­தர்ப்­பத்தை இழக்க வேண்­டிய அபாயம் ஏற்­படும். அத்­துடன் சிறு­பான்மை மக்­களைப் பாது­காப்­ப­தற்­கான வலு­வான வேலைத் திட்­டங்­களை முன்­வைக்க இலங்­கை­ அ­ர­சாங்கம் முன்­வ­ர­வேண்­டு­மென சிறு­பான்மை மக்கள் தொடர்­பாக ஆராயும் ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர் ரிட்டா ஐசாக் நாடியா மனித உரிமைகள் பேர­வையின் அமர்வில் இலங்கை தொடர்­பான அறிக்­கையைச் சமர்ப்­பித்து உரை­யாற்றும் போது கூறி­யி­ருந்தார்,

அவரின் இந்­த­ உ­ரை­யா­னது சர்­வ­தேச அரங்கில் ஒரு காத்­திரம் கொண்­ட­தாக இருந்­ததா என்­பதில் கார­சா­ர­மான விமர்­ச­னங்கள் அரச தரப்­பி­னரால் குறிப்­பாக ஆளுந்­த­ரப்­பி­னரால் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் இங்கு நினைவில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

தீர்­மா­னங்கள் வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­வதும் சர்­வ­தேச அரங்கில் இலங்­கைக்கு சார்­பான நாடுகள் அதி­க­மா­ன­வையா அல்­லது தீர்­மா­னத்­துக்கு சார்­பான நாடுகள் கூட­வுள்­ளதா? என்ற எண்­க­ணித கணிப்­பு­முறை கொண்ட வாக்கு முறை­களில் மனித உரிமைகள் பேரவை அதிக கவனம் செலுத்­து­கின்ற அள­வுக்கு நிறை­வேற்­றப்­படும் தீர்­மா­னங்கள் சார்ந்த அடைவு மட்­டங்­களில் அதிக கவனம் செலுத்த மனித உரிமைகள் பேரவை தவ­றி­வி­டு­கி­றது என்ற கண்­ட­னமும் முன்­வைக்­கப்­பட்­டு­வ­ரு­கின்ற நிலையில் தான் தீர்­மானம் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக கால அவகாசம் வழங்கி நிறைவேற்றப்பட்டுள்ளது. கால அவ­காசம் தொடர்பில் தமிழ்த் தரப்­பினர் தமது அதி­ருப்­தி­களைத் தெரி­வித்து வரு­கி­ற­போ­திலும் சர்­வ­தேச அளவில் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அவ­காசம் வழங்­கப்­பட வேண்­டு­மென்ற சார்­பான அபிப்­பி­ராயம் முன் நிற்­கின்ற நிலையில் இவ்­ அவ­காசம் இலங்­கைக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­ற­போதும், இக்­கால அவ­கா­சத்­துக்குள் இலங்­கை­ அர­சாங்கம் நிறை­வேற்ற வேண்­டி­ய­வற்றை உண்­மையில் நிறை­வேற்­று­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளுமா என்ற சந்­தே­கமே இன்று தமிழ் மக்கள் தரப்பில் மேலோங்கி நிற்­கின்­றது.

30/1 குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் அல்­லது பரிந்­து­ரைக்­கப்­பட்­டி­ருக்­கின்ற எல்லா விட­யங்­க­ளிலும் ஒரு இழு­பறி நிலை காணப்­ப­டு­வதை தாம் கண்டு கொண்­டி­ருக்­கின்றோம். இன்று நில­வு­கின்ற சர்­வ­தேச சமூக சூழ்­நி­லைகள், உலக நாடு­களின் ஆத­ர­வுகள், உள்­நாட்டு நிலை மைகள் இலங்­கைக்கு சார்­பாக இருக்­கின்­றதா அல்­லது பரி­காரம் காணப்­பட வேண்­டு­மென்ற பாதிக்­கப்­பட்ட மக்­களின் பக்­க­மி­ருக்­கி­றதா என்ற போட்­டியே வலுத்து நிற்­ப­தையும், அதற்கு ஆத­ரவு தேடும் முயற்­சி­க­ளி­லுமே போட்டி போடு­கின்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது.

ஜெனிவா மனித உரிமைகள் பேர­வையின் தொடர் நடைபெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்ற சூழ்­நி­லையில் தமிழ் மக்கள் தரப்பில், நாலா­தி­சை­களி­லு­மி­ருந்து ஜெனிவா சென்­றி­ருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. உதா­ர­ண­மாக இலங்­கை­யி­லி­ருந்து பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நியாயம் கிடைக்­க­வேண்­டு­மென்ற நிலை­மை­களை வலி­யு­றுத்­து­வ­தற்­காக பலர் தனிப்­பட்ட முறை­யிலும் கட்சி மற்றும் சமூக அமைப்பின் சார்பில் சென்று போராட்­டங்­களை நடத்தி வரு­வதும் இதே­வேளை இலங்கை தொடர்­பான பிரே­ரணை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து புலம் பெயர் அமைப்­பு­களும் இலங்­கையின் அர­சியல் கட்­சி­களும் சிவில் அமைப்­பு­களும் இணைந்து அறிக்­கை­களை ஜெனிவாவில் சமர்ப்­பித்­த­மையும் இதே­வேளை ஐ.நா.மனித உரி­மைகள் ­பே­ர­வையில் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை முழு­மை­யாக இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்­த­வேண்­டு­மெ­னக்­கோரி அண்­மையில் வட­மா­காண சபையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ­பே­ர­வைக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்ட சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

இதே சந்­தர்ப்­பத்தில் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் இணைந்து இலங்­கையில் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்கம், மனித உரி­மை­களை உறு­திப்­ப­டுத்தல், போர்க்­குற்றம் மற்றும் மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்கு முழு­மை­யான பொறுப்புக் கூறல் போன்ற விட­யங்­களை மேம்­ப­டுத்தும் நோக்கில் 30/1 தீர்­மா­னத்­தி­லுள்ள இலங்கை அரசின் மனித உரிமை மீறல், மனி­தா­பி­மானம் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ரான குற்­றங்­களை விசா­ரிப்­ப­தற்­காக உரு­வாக்­கப்­ப­ட­வுள்ள பொறி­மு­றையில் சர்­வ­தேச நீதி­ப­திகள், வழக்­க­றி­ஞர்கள் இருக்க வேண்­டு­மெ­னவும் இதனை ஏற்­றுக்­கொள்­வ­தற்­காக இலங்­கையைத் தூண்­ட­வேண்­டு­மென நாடு கடந்த தமி­ழீழ அர­சாங்­கத்தின் மனித உரி­மைகள் அமைச்சு, பிரித்­தா­னியா மற்றும் ஐரோப்­பிய நாடு­களை வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­மையும் ஜெனிவாவில் ஒரு போர்க்­கள நிலை­மையை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

இது ஒரு புற­மி­ருக்க இலங்கை அர­சாங்­கத்தின் சார்பில் ஏட்­டிக்குப் போட்­டி­யாக புலம்­பெயர் சிங்­கள மக்கள் என்ற கோதாவில் லண்டன் உள்­ளிட்ட ஐரோப்­பிய நாடு­க­ளி­லி­ருந்து பலர் கலந்து கொண்டு மனித உரிமைகள் பேர­வையின் முன் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.

ரோஹித்த அபே குண­வர்த்­தன, பந்­துல குண­வர்த்­தன ஆகியோர் இதில் பிர­தான பங்­கு­வ­கித்­த­துடன் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ, முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ பெயர்­களைக் கூறி கோஷம் எழுப்­பி­ய­துடன் விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனை நிந்தித்தும் கோஷம் எழுப்­பி­ய­தாக அங்­கி­ருந்து வரும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

கால அவ­காசம், சர்­வ­தேச விசா­ரணை அர­சியல் தீர்வு என்ற விவ­கா­ரங்கள் தொடர்பில் இழு­பறி நிலைகள் காணப்­ப­டு­வ­துடன் இவை மூன்று விட­யங்­களில் கால அவ­காசம் மற்றும் சர்­வ­தேச நீதி விசா­ர­ணை­யென்­பது சர்­வ­தேச சமூ­கத்­துடன் சார்ந்த விட­ய­மா­கவும் ஏனை­யவை உள்­நாட்டு விவ­கா­ர­மா­கவும் காணப்­ப­டு­கின்­ற­போதும் எந்­த­வொரு விடயம் தொடர்­பிலும் நிலை­யான இணக்­கப்­பாடு காணப்­ப­டாத நிலையே இன்னும் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. அர­சியல் தீர்வு விட­யத்தில் தீவிர முன்­னேற்­றமும் இணக்­கப்­பாடும் காணப்­ப­டு­மாயின் சர்­வ­தேச நீதி விசா­ரணை மற்றும் கால அவ­காசம் என்ற விட­யங்கள் கரைந்து போகக்­கூ­டிய வாய்ப்பு நிலை இருந்­தும்கூட இன்னும் இலங்­கை­ அர­சாங்கம் இழுத்­த­டிப்பு நிலை­க­ளையும் கால­தா­ம­தங்­க­ளையும் கடத்தும் போக்­கை­யுமே கொண்­டி­ருக்­கி­றது என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது.

இன்னும் ஆழ­மா­கக்­கூறப் போனால் அர­சியல் தீர்வு விட­யத்தில் கூட இன்னும் சில முடி­வு­களை எடுப்­ப­தற்கோ இணக்­கப்­பாடு காண்­ப­தற்கோ இலங்­கை­ அர­சாங்கம் தயா­ரான நிலையில் இல்­லை­யென்­பதன் கார­ண­மா­கவே தமிழ் மக்­களும் தலை­மை­களும் ஆத்­தி­ரப்­பட்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள் என்ற யதார்த்­தத்தை இலங்­கை­ அர­சாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். அர­சியல் தீர்வு பற்றி சர்­வ­தேச சமூ­கமும் உல­க ­நா­டு­களும் போதிய அழுத்­தங்­களைக் கொடுத்து வரு­கின்­ற­போதும் அதை ஒரு பொருட்­டாக இலங்­கை­ அ­ரசு கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை. அண்­மையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடுத்த ஒரு செய்­தியில் ஒற்­றை­யாட்­சிக்குள் இரட்டை அதி­கா­ர­மென்ற பொருத்­தப்­பாடு இல்­லாத கருத்தை வெளி­யிட்டு வரு­கிறார் என்­பது விமர்­ச­ன­மாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது­மட்­டு­மின்றி அர­சாங்கம் இவ்­வ­ரு­டத்­துக்

குள் அர­சியல் தீர்­வொன்­றினை நோக்கி செல்­லா­விட்டால் தோல்­வி­யுற்ற ஓர் அரசு என்ற கணிப்­பிற்கு உள்­ளாக வேண்­டி­வ­ரு­மென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் இலங்­கை­ அ­ரசை எச்­ச­ரித்­துள்ளார்.

இவை­யொரு புற­மி­ருக்க கால அவ­காசம் என்ற விவ­காரம் தொடர்பில் பாரிய சர்ச்­சைகள் உரு­வா­கி­யி­ருப்­ப­துடன் கடந்த 22 ஆம் திகதி ஐ.நா.மனித உரி­மைகள் ­பே­ர­வையில் இலங்கை விவ­காரம் குறித்து அறிக்கை சமர்ப்­பித்து உரை­யாற்­றி­யி­ருந்த செய­லாளர் செயிட் அல் ஹுசைன், ஐ.நா. மனித உரிமைகள் பேர­வையில் 2015 ஆம் ஆண்டு ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய பொறி­மு­றை­களை இலங்கை உரு­வாக்க வேண்­டு­மென்றும் பார­தூ­ர­மான குற்­றங்­களை விசா­ரித்து வழக்குத் தொடுத்து தண்­டனை வழங்­கு­வதில் காணப்­ப­டு­கின்ற தொடர்ச்­சி­யான தோல்வி அல்­லது பாது­காப்புப் படை­யி­ன­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்கப்படுவதற்கான பயம் காரணமாக வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அனுமதிக்கப்பட்ட வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் உள்ளடக்கவேண்டிய தேவையுள்ளதாகக் கூறியுள்ளார்.

எவை எவ்வாறு இருந்த போதிலும் இலங்கைக்கெதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பில் கடந்த காலங்களின் காரத்தன்மையை விட வருடாவருடம் கரைந்து செல்கின்ற நிலையே காணப்படுகிறது என்பது வெளிப்படையாகத் தெரியும் விடயம்.

இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் சாதகமான நல்லிணக்கப்போக்கை உருவாக்குமென்ற நம்பிக்கைகள் சர்வதேச அளவில் வளர்ந்து போன நிலையில் சர்வதேசத்தில் ஏற்பட்ட அண்மைய அரசியல் மாற்றங்கள் உதாரணமாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் இலங்கை அரசுக்கு சார்பான ஒரு போக்கைக் கொண்டிருப்பதுடன் வல்லரசு நாடுகள் என்ற வகையில் சீனா, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் இலங்கை சார்பான நிலைப்பாடுகள் தமிழ் மக்களுக்கோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கோ பெரியளவில் சாதகமாக இல்லையென்ற நிலைமையையே ஜெனிவா தீர்மான நிறைவேற்றம் கொண்டிருக்கிறது.

 

அதுவுமின்றி இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் நேரடியான அனுபவங்களைக் கொண்டிருக்கும் இந்திய அரசாங்கத்தின் செல்வாக்கு நிலையை தமிழ்த் தரப்பினர் தமக்கு சாதகமாக்கிக் கொள்ளாத ஒரு சூழ்நிலையில் 34 ஆவது கூட்டத்தொடரில் இந்தியா நடந்து கொண்ட விதம் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியையே தந்து நிற்கிறது.

– திரு­மலை நவம் –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-03-25#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.