Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எர்டோகானின் எழுச்சி ஒரு சுல்தானின் உருவாக்கம்

Featured Replies

எர்­டோ­கானின் எழுச்சி ஒரு சுல்­தானின் உரு­வாக்கம்

 

முற்று முழு­­தான  அதி­கா­ரத்தைக் கொண்ட ஆட்­சி­யா­ள­ராக துருக்­கியில் எர்­டோ­கானின் எழுச்சி ஜன­நா­யக நாடுகள் இன்று எதிர்­நோக்­கு­கின்ற நெருக்­க­டிக்கு  செம்­மை­யான  ஒரு உதா­ரணம்

 

துருக்­கியில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடை­பெ­ற­வி­ருக்கும் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் தனது அர­சி­ய­ல­மைப்புத் திருத்த திட்­டங்­க­ளுக்கு வாக்­கா­ளர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்கு ஜனா­தி­பதி றிசேப் தஜீப் எர்­டோனால் இய­லு­மாக இருந்­ததால் நாட்டின் அர­சியல் ஒழுங்கு முறை கடு­மை­யான மாற்­றங்­க­ளுக்கு உள்­ளாகும்.

எர்­டோ­கானின் தலை­மை­யி­லான நீதிக்கும் அபி­வி­ருத்­திக்­கு­மான கட்­சியின் (ஏ.கே.கட்சி என்று சுருக்­க­மாக அழைக்­கப்­ப­டு­கி­றது) ஆதிக்­கத்தில் உள்ள துருக்­கிய பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்புத் திருத்­த ­யோ­ச­னை­க­ளுக்கு ஏற்­க­னவே அங்­கீ­கா­ரத்தை அளித்­து­விட்­டது. இந்த யோச­னைகள் பாரா­ளு­மன்ற ஆட்­சி­மு­றையை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி ஆட்சி முறை­யாக மாற்­று­வ­தற்­கான நோக்கம் கொண்­டவை.

ஜனா­தி­பதி எர்­டோ­கானே அர­சாங்­கத்­தி­னதும் அர­சி­னதும் ஆளும் கட்­சி­யி­னதும் தலை­வ­ராக இருப்பார். பாரா­ளு­மன்­றத்தின் அங்­கீ­காரம் இன்றி அமைச்­ச­ரவை உறுப்­பி­னர்­க­ளையும் சிரேஷ்ட அதி­கா­ரி­க­ளையும் நிய­மனம் செய்­வ­தற்­கான அதி­கா­ரங்­களை அவர் கொண்­டி­ருப்பார். தற்­போது கோட்­பாட்­ட­ளவில் மிகவும் கூடுதல் சக்­தி­வாய்ந்த அர­சாங்கப் பத­வி­யாக இருக்கும் பிர­தமர் பதவி ஒழிக்­கப்­படும். நாட்டின் அதி­யுயர் நீதி­மன்­றத்­துக்கு அரை­வா­சிக்கும் அதி­க­மான நீதி­ப­தி­களை நிய­மிப்­ப­தற்கும் பாரா­ளு­மன்­றத்தை (தேசிய சட்­ட­சபை என்று அழைக்­கப்­ப­டு­கி­றது) கலைப்­ப­தற்கும் அவ­ச­ர­கால நிலையைப் பிர­க­டனம் செய்­வ­தற்­கு­மான அதி­கா­ரங்கள் அவ­ருக்கு இருக்கும்.

அர­சி­ய­ல­மைப்புத் திருத்­தங்கள் எர்­டோ­கா­னுக்கு இரு 5 வருட பதவிக் காலங்­களை உத்­த­ர­வா­தப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமையும். எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பிறகு இந்த மாற்­றங்கள் நடை­மு­றைக்கு வரு­கின்ற பட்­சத்தில் அவர் துருக்­கியை 2029 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும். சுல்தான் இராச்­சி­யத்தின் கீழ் துருக்கி இருந்த கால­கட்­டத்­துக்குப் பிறகு கமால் அட்­ட­டுர்க்கைத் தவிர (முத­லா­வது உலக மகா­யுத்த கால­கட்­டத்தில் இரா­ணுவ ஜென­ர­லாக இருந்து பின்னர் துருக்­கிய குடி­ய­ரசை ஸ்தாபித்து முத­லா­வது ஜனா­தி­ப­தி­யாக 1923 முதல் 1938 ஆம் ஆண்டு வரை பதவி வகித்­தவர்) அந்த நாட்டில் வேறு எந்த தலை­வரும் அனுப­வித்­தி­ராத பெரு­ம­ளவு அதி­கா­ரங்­களைக் கொண்­ட­வ­ராக எர்­டோகன் விளங்­குவார்.

அதி­கா­ரத்தை வலுப்­ப­டுத்தல்

முதலில் பத­விக்கு வந்து பிறகு மக்­களின் ஆத­ர­வுடன் முற்று முழு­தாக அதி­கா­ரத்தைக் கொண்ட ஆட்­சி­யா­ள­ராக எர்­டோ­கானின் எழுச்சி 21 ஆம் நூற்­றாண்டில் தேர்தல் ஜன­நா­ய­கங்கள் எதிர்நோக்­கு­கின்ற நெருக்­க­டிக்­கான ஒரு பாடநூல் உதா­ர­ண­மாக விளங்­கு­கி­றது.

வர­லாற்று ரீதி­யாக இரா­ணு­வத்­தி­னதும் பாரம்­ப­ரிய அர­சியல் கட்­சி­க­ளி­னதும் ஆதிக்­கத்தின் கீழ் இருந்த துருக்­கியின் கொந்­த­ளிப்­பான அர­சி­யலில் எர்­டோ­கானின் ஏ.கே.கட்சி ஒப்­பீட்­ட­ளவில் புதி­ய­தொரு தோற்­றப்­பா­டாகும். தாராள பொரு­ளா­தார நோக்­கு­டைய ஒரு பழ­மை­வாத அர­சியல் சக்­தி­யாக தன்னைக் காட்­டிக்­கொள்­கின்ற இக்­கட்சி நாட்­டுக்கு உறு­திப்­பாட்­டையும் அபி­வி­ருத்­தி­யையும் கொண்­டு­வ­ரு­வ­தாக ஆட்­சி­ய­தி­கார வர்க்­கத்தின் மீது பெரு­ம­ளவில் வெறுப்­ப­டைய ஆரம்­பித்­தி­ருக்கும் மக்­க­ளுக்கு உறு­தி­ய­ளித்­தது. ஏ.கே. கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு வரு­டத்­துக்குப் பிறகு 2002 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்றத் தேர்­தலில் அதிகப் பெரும்­பான்மை பலத்­துடன் அதி­கா­ரத்­துக்கு வந்­தது. சட்­ட­ரீ­தி­யாக இருந்த தடை­யொன்றை வெற்­றி­கொண்ட பிறகு 2003 ஆம் ஆண்டில் எர்­டோகான் பிர­த­ம­ராக வந்தார். அதற்குப் பிறகு துருக்கி மீதான தனது அதி­காரப்பிடி தளர்­வ­தற்கு அவர் இடம் கொடுக்­க­வில்லை.

எர்­டோகான் அடிப்­ப­டையில் ஒரு இஸ்­லா­மி­ய­வாதி. துருக்­கியின் இஸ்­லா­மிய கடந்த காலத்தை அடிக்­கடி பெரு­மை­யுடன் நினைவு மீட்­டு­கின்ற அவர் அந்த நாட்டின் நவீன மத­சார்­பற்ற விழு­மி­யங்­களை வெறுப்­ப­வ­ராக இருக்­கிறார். தொடக்­கத்தில் அவர் துருக்­கியின் பொரு­ளா­தார வளர்ச்­சியைத் துரி­தப்­ப­டுத்­திய திறந்த சந்தை சீர்­தி­ருத்­தங்­களில் கவ­னத்தைச் செலுத்­தினார். அதே சந்தைப் பொரு­ளா­தாரச் சீர்­தி­ருத்­தங்கள் புதிய மத்­திய தர வர்க்­க­மொன்­றையும் உரு­வாக்­கின.

அந்த வர்க்கம் நகர்­ப்பு­றங்­களில் ஏ.கே.கட்­சியின் விசு­வா­ச­மான ஆத­ரவுச் சக்­தி­யாக மாறி­யது. இக் கட்சி அதன் இஸ்­லா­மிய பேச்­சுக்­க­ளினால் கிரா­மப்­புற மக்­க­ளு­டனும் நெருக்­க­மான உறவை வளர்த்துக் கொண்­டது. இரா­ணு­வத்­தாலும் அர­சியல் உயர்­வர்க்­கத்­தவராலும் வலி­யு­றுத்தி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட மத­ சார்­பற்ற வாதத்தைக் கொண்ட ஒரு நாட்டில் ஏ.கே. கட்­சியின் நிலைப்­பா­டுகள் ஆட்­சி­ய­தி­கார வர்க்­கத்­துடன் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­தி­யது. துருக்­கிய மத­சார்­பற்ற வாதத்தின் காவ­லர்கள் என்று சொல்­லப்­ப­டக்­கூ­டிய பழைய கமால் கால ஒழுங்கு முறைக்கும் ஏ.கே.கட்­சியின் நல இஸ்­லா­மிய வாதத்­துக்கும் இடை­யி­லான பதற்றம் எர்­டோ­கானின் ஆட்­சிக்­கா­லத்தில் எப்­போதும் காணப்­ப­டு­கி­றது. ஆனால் பெரும்­பா­லான சர்­வா­தி­கா­ரி­களைப் போலன்றி அவர் ஒழுங்­கு­மு­றையை உட­ன­டி­யாக தீவிர மாற்­றங்­க­ளுக்­குள்­ளாக்கும் நட­வ­டிக்­கையில் இறங்­க­வில்லை. பதி­லாக பெரும்­பாலும் அவர் தனது அர­சி­ய­ல­மைப்பு வரை­ய­றை­க­ளுக்­குள்­ளேயே செயற்­பட்டார். அந்த வரை­ய­றை­களை விஸ்­த­ரிக்க அடிக்­கடி அவர் முயற்­சி­களை மேற்­கொண்டார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

துருக்­கிய அர­சியல் சமு­தா­யத்தை மாற்­றி­ய­மைக்கும் தனது மூல­முதல் இலக்கை அவர் கைவி­ட­வில்லை. ஆனால் படிப்­ப­டி­யான தலை­யீ­டு­களின் ஊடாக அர­சியல் கருத்­தா­டல்­களின் மீது அடிக்­கடி செல்­வாக்குச் செலுத்­திய வண்ணம் பொறு­மை­யுடன் காத்­தி­ருக்க தயா­ரா­யி­ருந்தார். அடுத்­த­டுத்து வந்த தேர்தல் வெற்­றிகள் துருக்கி அர­சி­யலில் ஏ.கே.கட்­சியின் நிலையை வலுப்­ப­டுத்­தின. தன்னை விமர்­சிப்­ப­வர்­களை இரா­ணு­வத்­திற்குள் இருந்து களை­யெ­டுப்­ப­தற்கு அந்த வலு­வான நிலை வசதி செய்­து­கொ­டுத்­தது. பாரா­ளு­மன்­றத்தில் ஏ.கே. கட்­சியின் உறுப்­பி­ன­ராக மூன்று பத­விக்­கா­லங்­களை நிறைவு செய்த நிலையில் எர்­டோகான் 2014 ஆம் ஆண்டில் தன்னைத் தானே ஜனா­தி­ப­தி­யாக்கிக் கொண்டார்.

(ஏ.கே. கட்­சியைச் சேர்ந்த உறுப்­பினர் பாரா­ளு­மன்­றத்தில் மூன்று பதவிக் காலங்­க­ளுக்கு மாத்­தி­ரமே அங்கம் வகிக்க முடி­யு­மென்று கட்­டுப்­பாட்டை நீண்­ட­கா­ல­மா­கவே அவர் நியா­யப்­ப­டுத்தி வந்தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது) இப்­போது அவர் தன்னை நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­ப­தி­யாக்­கு­வ­தற்கு முன்­னெ­டுத்­தி­ருக்கும் முயற்­சிகள் இறுதிக் கட்­டத்தில் பிர­வே­சித்­தி­ருக்­கி­றது.

மறைந்து போகும்

மித­வாதம்

பத­வியில் இருந்த ஆரம்ப வரு­டங்­க­ளுக்குப் பிறகு மித­வாதி என்ற அவரின் முக­மூடி அகன்று போனது. 2011 ஆம் ஆண்டு அரபு வசந்தக் கிளர்ச்­சி­க­ளுக்குப் பிறகு முஸ்லிம் சகோ­த­ரத்­துவப் பாணி­யி­லான இஸ்­லா­மிய வாதத்தை எர்­டோகான் வெளிப்­ப­டை­யா­கவே ஆத­ரிக்கத் தொடங்­கினார். மேற்­கா­சி­யாவில் புதி­ய­தொரு இஸ்­லா­மிய ஒழுங்கு முறை­யாக முஸ்லிம் சகோ­த­ரத்­துவ இயக்கம் விரி­வ­டையும் என்று எர்­டோ­கானும் பல சகோ­த­ரத்­துவ சிந்­த­னை­வா­தி­களும் எதிர்­பார்த்­தார்கள். அந்த இயக்­கத்­துடன் துருக்­கியை அணி­சேர்த்துக் கொள்­வ­தற்­காக தனது வெளி­யு­றவுக் கொள்­கை­யிலும் அவர் மாற்றம் செய்தார். ஆனால் அவர்கள் எதிர்­பார்த்­த­து­போன்று புதிய இஸ்­லா­மிய ஒழுங்­கு­முறை ஒரு­போதும் சாத்­தி­ய­மா­க­வில்லை. உள்­நாட்டில் எர்­டோ­கானின் நிர்­வாகம் பெரு­ம­ள­வுக்கு அடக்குமுறைத் தன்மை கொண்­ட­தாக மாறி­யது. கூடுதல் அதி­கா­ரங்­களைத் தன்­வ­சப்­ப­டுத்­து­வதில் அவ­ருக்­கி­ருந்த பெரு­வி­ருப்பம் இர­க­சி­ய­மா­ன­தாக இருக்­க­வில்லை.

புதி­ய­தொரு துருக்­கியைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான தங்­க­ளது திட்­டங்­க­ளுக்கு பெரிய தடை­யாக நடை­முறைச் சட்­டங்கள் இருப்­பதை தெரிந்து கொண்ட எர்­டோ­கானும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் அர­சி­ய­ல­மைப்பை மாற்­றி­ய­மைப்­பது குறித்த விவா­தத்தை 2011 ஆம் ஆண்டில் ஆரம்­பித்­தார்கள். ஆனால் துருக்­கியின் ஜன­நா­ய­கத்­துக்கு எதி­ராக முழு அள­வி­லான போரைத் தொடுப்­ப­தற்கு கார­ண­மொன்று அவ­ருக்குத் தேவைப்­பட்­டது. 2016 ஆம் ஆண்டில் இரா­ணு­வத்­தி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்சி அந்தக் கார­ணத்தை அவ­ருக்கு கொடுத்­து­த­வி­யது.

சந்­தர்ப்­பத்தை இறுகப் பிடித்துக் கொண்ட எர்­டோகான் "எனக்கு எதி­ராக அவர்கள்" என்ற பிர­சா­ரத்தை முன்­னெ­டுத்து துருக்­கியின் அண்­மைய வர­லாறு கண்­டி­ராத களை­யெ­டுப்பை கட்­ட­விழ்த்து விட்டார். பாது­காப்பு அதி­கா­ரிகள், நீதி­ப­திகள் உட்­பட ஒரு இலட்­சத்து முப்­பது ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான அர­சாங்க அதி­கா­ரிகள் ஆட்சிக் கவிழ்ப்புச் சதி முயற்­சியில் பங்­கேற்­றார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் கைது செய்­யப்­பட்­டார்கள். இடை­நி­றுத்­தப்­பட்­டார்கள். அல்­லது பதவி நீக்­கப்­பட்­டார்கள். பெரும்­பா­லான ஊடக நிறு­வ­னங்கள் அர­சாங்­கத்தின் நேரடி அல்­லது மறை­முக கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வ­ரப்­பட்­டன. நூற்­றுக்கும் அதி­க­மான ஊட­க­வி­ய­லா­ளர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இராணுவம் நிலை குலைந்து போனது. எதிரணி சின்னாபின்னமானது. இத்தகையதொரு பின்புலத்திலேயே இம் மாதம் சர்வஜன வாக்கெடுப்பில் துருக்கிப் பிரஜைகள் வாக்களிக்கப் போகிறார்கள்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்டுவருவற்கான எர்டோகானின் திட்டங்கள் 'சிம்மாசனம் இல்லாத சுல்தான் இராச்சியம்' ஒன்றுக்கான சாதனமாகப் போகிறது என்று தேசியவாத இயக்கக் கட்சியின் தலைவரான டெவ்லெற் பாஹ் செலி ஒரு தடவை எச்சரிக்கை செய்திருந்தார். அதே சுல்தான் இராச்சியத்தை உருவாக்குவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்களை இப்போது அதே பாஹ் செலி கூட ஆதரிக்கின்றார் என்பதுதான் இங்கு விசித்திரம்.

இந்த ‘சுல்தான் இராச்சியம்’ துருக்கியின் ஜனநாயகத்தை சீர்குலைக்கப் போவது மாத்திரமல்ல. ஒரு அரசியல் ஒழுங்கு முறையை அதற்குள் இருந்து கொண்டே எவ்வாறு கவிழ்ப்பது என்ற உதாரணத்தை உலகின் வேறு பகுதிகளில் வளர்ந்து கொண்டிருக்கின்ற (மற்றவர்களின் கருத்துகளை மதிக்காத) தேசியவாத இயக்கங்களுக்கு சொல்லிக் கொடுக்கவும் போகின்றது. 

ஸ்ரான்லி ஜொனி

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-04-01#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.