Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சினிமா விமர்சனம்: டோரா

Featured Replies

சினிமா விமர்சனம்: டோரா

 

படம்: டோரா

நடிகர்கள்: நயன்தாரா, தம்பி ராமையா, ஹாரிஸ் உத்தமன்; இசை: விவேக் - மெர்வின்; இயக்கம்: தாஸ் ராமசாமி

நயன்தாரா நடித்து இதற்கு முன்பாக வெளிவந்த திகில் படமான மாயா வெற்றி பெற்றிருந்ததால், தயாரிப்பில் இருந்த காலகட்டத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் டோரா

நயன்தாரா

தந்தை வைரக்கண்ணு(தம்பி ராமையா)வுடன் தனியாக வசித்துவருகிறார் பவளக்கொடி (நயன்தாரா). ஒரு சந்தர்ப்பத்தில் கால் டாக்ஸி நிறுவன உரிமையாளராக இருக்கும் அவர்களது உறவினர் ஒருவர் இவர்களை அவமானப்படுத்திவிட, பவளக்கொடியும் கால் டாக்ஸி நிறுவனத்தை துவங்க நினைக்கிறார். அதற்காக ஒரு பழைய ஆஸ்டின் - கேம்ப்ரிட்ஜ் காரை வாங்குகிறார்கள். ஆனால், அந்தக் காரை டோரா என்ற ஒரு நாயின் ஆவி பிடித்திருக்கிறது.

 

மற்றொரு பக்கம், தனியாக இருக்கும் ஒரு பெண்ணிடம் கொள்ளையடிக்கும் மூவர், அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து கொல்கின்றனர். இது தொடர்பான விசாரணையைத் துவங்குகிறது காவல்துறை. அப்போது அந்த குற்றவாளிகளில் ஒருவர் கொல்லப்படுகிறார்.

இந்த இரண்டு கதைகளையும் இணைக்கும் புள்ளியாக இருக்கிறார் பவளக்கொடியும் டோராவும்.

நயன்தாரா

முழுக்க முழுக்க நயன்தாராவை நம்பி உருவாக்கப்பட்டிருக்கும் படம். தாயின்றி தந்தையுடன் வசிக்கும் பெண்ணாக வரும் நயன்தாரா படம் முழுக்கவே ஆதிக்கம் செலுத்துகிறார். எந்தத் தருணத்திலும் மிகை நடிப்பை வெளிப்படுத்தாமல், படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் இவர். ஒரு காட்சியில் அன்னியன் படத்தின் விக்ரமைப் போல, மாற்றி மாற்றிப் பேசி அசர வைக்கிறார்.

 

நயன்தாராவுக்குத் தந்தையாக நடித்திருக்கும் தம்பி ராமையா எல்லாப் படங்களைப் போல, இதிலும் தனியாகப் பேசி சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். பல இடங்களில் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைப்பதில்லை.

இவர்களை விட்டுவிட்டால் காவல்துறை அதிகாரி, கொள்ளையர்கள் மூவர் என மிகக் குறைவான கதாபாத்திரங்களே படத்தில்.

p04ymxqp.jpg
 
ஆண்கள் உடை, தாலிபான் அச்சுறுத்தல்-அசராத வீரங்கனை

இருக்கும் ஒரே ஒரு பாடல் கேட்கும்படி இருக்கிறது என்றாலும் விவேக் - மெர்வினின் பின்னணி இசை பல இடங்களில் தடுமாறுகிறது.

நயன்தாரா

மாயாவைப் போல டோராவும் ஒரு திகில் படம் என்ற எதிர்பார்ப்புடன் சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். பேய் ஒரு காரில் புகுந்துகொண்டு பழிவாங்குகிறது என்பதால், பயமுறுத்தும் காட்சிகள் ரொம்பவுமே குறைவு. பளீரென்ற படமாக்கம், ஒரே ஒரு பாடல் மட்டுமே இடம்பெற்றிருப்பது, சண்டைக் காட்சிகள் இல்லாதது ஆகியவை படத்தின் சாதகமான அம்சங்கள்.

 

இதுவரை வந்த படங்களில் மனிதர்களின் ஆவி அட்டகாசம் செய்யுமென்றால், இந்தப் படத்தில் ஒரு நாயின் ஆவி, காருக்குள் புகுந்து கொள்வதாக காட்டியிருப்பது சற்று ஆசுவாசமளிக்கிறது. மேலும் கார் ஓடும்போது, நாய் ஓடுவதைப் போல நிழல் தெரிவது போன்றவையும் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

டோரா படம்

ஆனால், படம் துவங்கி வெகு நேரத்திற்குப் பிறகே பிரதான கதைக்குள் நுழைவதால், முதல் பாதியில் பெரும் ஆயாசம் ஏற்படுகிறது. தமிழகத்தில் வந்து பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் குறித்து ஏற்கனவே மோசமான பிம்பங்கள் உலவும் நிலையில், இந்தப் படத்திலும் குற்றவாளிகளாக வடமாநில இளைஞர்களைக் காட்டுவது நிலைமையை மேலும் மோசமாக்கவே உதவும்.

 

நயன்தாராவின் ரசிகர்களுக்கான ஒரு திரைப்படம்.

http://www.bbc.com/tamil/arts-and-culture-39465668

  • தொடங்கியவர்

பேய், கார், நயன்தாரா... எப்படி இருக்கிறது டோரா டூர்? - டோரா விமர்சனம்

ஆவி புகுந்த வீடு, ஆவி புகுந்த டி.வி, ஆவி புகுந்த ராகவா லாரன்ஸ் வரிசையில் இந்த முறை ஆவி புகுந்திருப்பது ஒரு காருக்குள். ஆவி புகுந்த கார் அசுர வேகத்தில் பறக்கிறதா இல்லையா?

டோரா நயன்தாரா

'வைரக்கொடி' தம்பிராமையாவின் மகள் 'பவளக்கொடி' நயன்தாரா. தன்னையும், தன் தந்தையையும் அவமானப்படுத்திய கால் டாக்ஸி உரிமையாளரான அத்தை முன்பு அவர்கள் போலவே பெரிய ட்ராவல் ஏஜென்சி நடத்திக் காட்டுவது பவளக்கொடியான நயன்தாராவின் லட்சியம். அந்த லட்சியத்தை காலண்டரில் குறித்துக் கொண்ட தம்பி ராமையா, இருக்கும் பணத்தைப் புரட்டிக்கொண்டு நயனோடு சேர்ந்து செகண்ட் ஹாண்ட் கார் வாங்கக் கிளம்புகிறார். அங்கு இருக்கும் ஆஸ்டின் கேம்ப்ரிட்ஜ் மாடல் காரை வாங்குகிறார்கள். அப்புறம்தான் தெரிகிறது.. காரை இவர்கள் வாங்கவில்லை, கார்தான் இவர்களை வாங்கியிருக்கிறது என்று. அது ஏன் என்பதுதான் கதை.

நயன்தாரா என்கிற ஒற்றை மனுஷியை நம்பித் தைரியமாகப் படத்தை ஆரம்பித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் தாஸ் ராமசாமி. ஒன் வுமன் ஷோவாக காஸ்ட்யூமில் வசீகரிக்கிறார். நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார் நயன். தனுஷ், ஜிவிபி வரிசையில் நயனுக்கு மூச்சுவிட முடியாத முழுநீள வசனம், ‘அண்ணாமலை’ ரஜினி பாணியில் ‘உன் காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோ’ சவால்கள், ‘அந்நியன்’ விக்ரம் பாணியில் மல்டிபிள் பெர்சனாலிடி பெர்ஃபார்மென்ஸுகள் என்று பின்னிப் பெடலெடுக்கிறார். ‘அவன மாதிரி தெருவுக்கு நாலு பேர் இருப்பான்மா, ஆனா உன்ன மிஞ்ச தென்னிந்தியாவிலேயே ஆள் கிடையாது’ என்று தம்பி ராமையா பஞ்ச் சொல்லும் அளவுக்கு நயனுக்குத்தான் படத்தில் முக்கியத்துவம்.  

டோரா

'கும்கி' படத்தில் ஆரம்பித்த மைண்ட் வாய்ஸ் காமெடியைத் துரதிர்ஷ்டவசமாக இந்தப் படத்திலும் தொடர்கிறார் தம்பி ராமையா. 'ஓவரா மொக்கை போடுகிறாரே' என்கிறது நம் மைண்ட் வாய்ஸ். சமயங்களில் தம்பி ராமையாவின் காமெடி டார்ச்சர் தாங்காமல், வேகமாக ஓடிவரும் 'டோரா' கார் முன்பு நாமே படுத்துவிடலாமா என்று தோன்றுகிறது. சவுண்டைக் குறைங்க சார்!

போலீஸ் ஆபீசராக ஹரீஷ் உத்தமன். இது நாயகிக்கு முக்கியத்துவமுள்ள படம் என்பதால் உத்தமனுக்கு அவ்வளவாக வேலையில்லை. வரும் கொஞ்சநேரமெல்லாம் முறைக்கிறார், நயன்தாராவைப் பெண் பார்க்க வரும் இடத்தில்கூட. இந்த மூவரைத் தவிர மற்ற கேரக்டர்களுக்குப் படத்தில் பெரிய முக்கியத்துவமில்லை. வடமாநிலக் கொள்ளைக்காரர்களாக வரும் வில்லன்கள், புதிதாகத் திருமணமான பெண்ணைக் கொல்லும் காட்சியில் மிரட்டுகிறார்கள். மற்ற காட்சிகளில் பானிபூரியோ பழைய பெட்ஷீட்டோ விற்கிறார்கள் (நிஜமாத்தான் பாஸ்!)

நாயின் ஆவி புகுந்த கார், அதன் கண்கள்தான் காரின் ஹெட்லைட், காதுகள்தான் ஹாரன், கால்கள்தான் சக்கரங்கள் என்ற உருவகம் சுவாரஸ்யம். ஒவ்வொரு கொலையின்போதும் பிரமாண்டமாய் நாயின் நிழல், வில்லன்களைக் கடித்துக்குதறுவதும் படத்தில் ஆங்காங்கே வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அசத்துகின்றன. பிளாஷ்பேக் கதையில் சிறுமி மீதான பாலியல் வன்முறையைச் சொல்லியிருப்பது சமகாலத்தை நினைவூட்டுகிறது.

Nayanthara

ஆனால் இந்த விஷயங்களைத் தாண்டி படத்தில் ஏகப்பட்ட மைனஸ்கள். படமே இன்டர்வெல்லில் பழிவாங்கும் நாயின் நிழலில்தான் தொடங்குகிறது.அதற்கு முன்பு  தம்பிராமையாவின் டார்ச்சர் காமெடிகள், கால் டாக்ஸி முயற்சிகள், பெண் பார்க்கும் படலம் என்று முதல்பாதி ஏகத்துக்கும் சோதிக்கிறது. புது பிளாட்டில் புதுப்பெண் கொலையை ஹரீஷ் உத்தமன் விசாரிக்கும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கின்றன. 

 ஸ்டார்ட் ஆனால் தான் ஆவியால் அந்தக் காரை இயக்க முடியும் என லாஜிக் வைத்ததும், அதை க்ளைமாக்ஸ் வரை தெளிவாக கொண்டு சென்றதும் சூப்பர். ஆனால், கொலையாளியைப் பிடிக்க, ரேடியேட்டர் மூடி, டயர் மார்க் என போலீஸ் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்க, நயன்தாராவுக்கு ஒரே போன் காலில் கிடைக்கும் அந்த சி.சி.டி.வி ஃபுட்டேஜ், அதன் மூலம் குற்றவாளியை தேடிப்போவது எல்லாம் லாஜிக் மீறல்கள். அதேபோல் இரண்டுபேரைக் கொல்வது என்று நயன் முடிவெடுத்தபிறகு அதை சைலன்டாகச் செய்யாமல்  ஹரீஷ் உத்தமனிடம் 'முடிஞ்சா தடுத்துப் பாருங்க' என்று ஏன் சவால் விடவேண்டும்?

விவேக் - மெர்வின் இசையில் 'எங்க போற டோரா' பாடல் ஓகே. ஆனால் பின்னணி இசை பல காட்சிகளுக்குப் பொருந்தாமல் பதற்றப்படுகிறது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு மூலம் படத்தின் திகிலைக் கூட்ட முடிந்தவரை முயற்சி செய்திருக்கிறார். காரின் நிழல் மூலம் அதற்குள் இருக்கும் ஆவி யாருடையது என சொன்ன ஐடியாவும், அந்த கிராஃபிக்ஸும் செம. அந்த நிழல் மூலமே சொன்னபின்னரும் அந்த சூனியக்காரி பாட்டி அதற்கு கோனார் நோட்ஸ் போடுவது கொட்டாவியை வரவழைக்கிறது. 

ஆரோ 3டி எஃபக்டில் சிரிக்கும் மந்திரவாதிப் பாட்டி, எலுமிச்சம் பழம், விபூதி என்று பழைய டெக்னிக்குகளைத் தவிர்த்திருக்கலாம். இப்போதெல்லாம் இதற்குப் பார்வையாளர்கள் பயப்படுவதில்லை என்பதை இனிவரும் இயக்குனர்களாவது புரிந்துகொள்ள வேண்டும். (எத்தனை பேய்ப்படங்கள் பார்த்தாச்சு!)

 
 

  ‘த கார்’, ‘பிள்ளைநிலா’ படங்களைப் போல காருக்குள் ஆவி. எல்லாம் ஓகேதான்.  ஆனால் சீரியல் பேய்களே கெத்து காட்டும்போது, சினிமா பேய், அதுவும் நல்லதுக்காக பழிவாங்கும் பேய் இன்னும் கொஞ்சம் பயமுறுத்திருக்க வேண்டாமா?  ஏராளமான ஸ்பீடு பிரேக்கர்களால் காரின் ஓட்டம், கொஞ்சம் தள்ளாட்டம்தான்.

http://www.vikatan.com/cinema/movie-review/85144-dora-tamil-movie-review.html

  • தொடங்கியவர்
 

திரை விமர்சனம்: டோரா

 
dorareview_3150027f.jpg
 
 
 

பவளக்கொடியும் (நயன்தாரா) அவரது அப்பாவும் (தம்பி ராமைய்யா) வாடகைக் கார் தொழில் செய்வதற்காகப் பழைய காரை விலைக்கு வாங்குகிறார்கள். அதனுடன் வில்லங்கத்தையும் அவர்கள் விலை கொடுத்து வாங்கியிருப்பது தெரியவருகிறது.

சென்னையில் திட்டமிட்டுக் கொலை செய்து கொள்ளை யடிக்கும் சில குற்றவாளிகளைக் காவல் துறை தேடுகிறது. அந்தத் தேடலுக்கும் இந்தக் காருக்கும் என்ன தொடர்பு? அமானுஷ்யம் நிறைந்த அந்தக் காரில் மறைந்து இருக்கும் முன்கதை என்ன? பவளக்கொடியும் அவர் அப்பா வும் என்ன ஆகிறார்கள்? இவை எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறது படம்.

ஆவியை மட்டுமே நம்பும் அமானுஷ்யப் படம்போல் இல் லாமல், புலன்விசாரணை, அப்பா, மகள் உறவு, விலங்குகளுக் கும் மனிதர்களுக்கும் இடை யிலான உறவு, பழிவாங்கும் உணர்வு எனப் பல அடுக்குகளில் கதை சொல்வதில் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குநர் தாஸ் ராமசாமி. முதல் பாதியில் ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக் கதை சொல்லி, ஆவிக்குப் பதிலாகக் கொட்டாவியை வரவழைக்கிறார். இரண்டாம் பாதி ஒப்பீட்டளவில் வேகமாகச் செல்கிறது. அமா னுஷ்ய சக்தியையும் அதன் பின்னணியையும் நயன்தாரா உணர்ந்துகொண்ட பிறகு படம் வேகமெடுக்கிறது. தனித்து வாழ் பவர்கள் குற்றவாளிகளின் இலக் காக எப்படி மாறுகிறார்கள் என்பது பற்றிய விழிப்புணர்வையும் படம் ஏற்படுத்துகிறது.

ஆவியின் பழிவாங்கும் கதையை மாறுபட்ட கோணத்தில் யோசித்ததற்காக இயக்குநரைப் பாராட்டாலாம். அமானுஷ்யமான காட்சிகளை வெறும் பூச்சாண்டிக் காட்சிகளாக இல்லாமல் நாய், கார், நிழல், சாவி, படபடப்பு எனக் கற்பனை வளத்தோடும் பொருத்த மான காட்சிகளோடும் படைத் திருக்கிறார். காரில் உள்ள ஆவியை நயன்தாரா தெளிவாக உணரும் தருணம் முதுகுத் தண்டைச் சில்லிட வைக்கிறது. இந்த இடத்தில் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் இசைவாக அமைந்து காட்சிக்கு வலு சேர்க் கின்றன. கார் செய்யும் கொலை கள் விறுவிறுப்பாகப் படமாக்கப் பட்டுள்ளன.

கால் டாக்ஸி வியாபாரம் எடுபடாத நிலையிலும் அப்பாவும் பெண்ணும் வசதியாகவே வாழ்வது எப்படி? அவர்கள் வீட்டிலிருக்கும் தரைவழித் தொலைபேசி போன நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருப் பது எப்படி? சம்மன் ஏதும் இல்லாமல் நள்ளிரவில் ஒரு பெண்ணைக் காவல் நிலையத் துக்கு அழைத்துவருவதற்குச் சட்டத்தில் இடமில்லை. நயன்தாரா காவல் துறையைச் சமாளிக்கும் விதம் சுவாரஸ்யமாக இருந்தாலும் நம்பும்படி இல்லை.

எல்லாப் படங்களிலும் காத லைத் திணிக்கும் தமிழ் சினிமா இயக்குநர்கள், நாயகியை மையப் படுத்தும் படங்களில் மட்டும் காதலை விலக்கிவைப்பது ஏன் என்று தெரியவில்லை.

பிழைப்புக்காக வந்திருக் கும் வெளிமாநிலத் தொழிலாளர் களையே கொடூரமான குற்றவாளி களாகச் சித்தரிப்பது அவர் களுக்கு எதிரான அச்சத்தையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தி விடக்கூடும். இதுபோன்ற சித்தரிப்பு களில் கூடுதலான பொறுப்புணர்வு தேவை. சிறுமிக்கு எதிரான வன் கொடுமையைச் சித்தரிக்கும் காட்சியமைப்பிலும் மேலும் கவனம் இருந்திருக்க வேண்டும்.

துணிவும் துடிப்பும் மிக்க பெண்ணாக நயன்தாரா அழுத்த மான நடிப்பை வழங்கியிருக்கிறார். தீவிரமான காட்சிகளில் மட்டுமில் லாமல் இலகுவான காட்சிகளிலும் அனாயாசமாக நடிக்கிறார். காவல் நிலையக் காட்சியில் அவர் எடுக்கும் ‘அந்நியன்’ அவதாரம் அட்டகாசம். தம்பி ராமைய்யாவின் நகைச்சுவை அலுப்பூட்டவில்லை. சிரிப்பும் மூட்டவில்லை. ஹரிஷ் உத்தமன் முகத்தை எப்போதும் இறுக்கமாக வைத்திருப்பது பொருத்தமாக இல்லை. ஜடாமுடி பாட்டி உட்பட மற்ற கதாபாத்திரங் களில் நடித்திருப்பவர்கள் பரவா யில்லை.

பி.தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, ஹரிஹரசுதனின் மெய்நிகர் காட்சிகள், செங்கை ஏ.ராஜாவின் கலை இயக்கம் ஆகிய மூன்று அம்சங்களும் படத்துக்குப் பெரும் பலம். விவேக் சிவா, மெர்வின் சாலமன் ஆகியோரின் இசைக் கூட்டணியில் தீம் மீயூசிக், பாடல்கள் ஆகியவை சுமார். பின்னணி இசை பல இடங்களில் நன்றாக உள்ளது.

ஆவியின் பிரவேசத்துக்கு முந்தைய காட்சிகளின் இழுவை யைக் குறைத்திருந்தால் ‘டோரா’ ரசிகர்கள் மனங்களில் ‘டேரா’ போட்டிருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-டோரா/article9612130.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.