Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம்- ஜேர்மன் சபாநாயகரிடம் சம்பந்தன்

Featured Replies

சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம்- ஜேர்மன் சபாநாயகரிடம் சம்பந்தன்

sambanthan-germany.jpg

சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள  ஜேர்மனி நாடாளுமன்றத்தின்  சபாநாயகர் நோபட் லம்மர்ட் (Norbert Lammert)  உடனான  சந்திப்பின் போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கையில் தற்போது உருவாக்கப்பட்டு வரும் உத்தேச அரசியல் யாப்பு குறித்தும் சம்பந்தன் ஜேர்மனி சபாநாயகருக்கு  தெளிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://globaltamilnews.net/archives/23204

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எப்பிடியும் "நோ ப்ரொப்பளம்" எண்ட சொல்லை மறக்காமல் மண்புமிகு சம்பந்தன் ஐயா மறக்காமல் உதிர்த்துவிட்டிருப்பார்.:cool:

  • தொடங்கியவர்
சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு அவசியம்'
 
05-04-2017 05:23 AM
Comments - 0       Views - 31

article_1491321358-b.jpgசிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் நாடாளுமன்றத்தின் தலைவர் பேராசிரியர் டொக்டர் நார்பெர்ட் லாமெர்ட்டுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு நேற்று (04) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அரசியல் அமைப்பு உருவாக்கம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தெளிவுபடுத்தினார். அத்துடன், சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு, சர்வதேச சமூகத்தின் தொடர்ச்சியான பங்களிப்பின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ரோய்ட் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

- See more at: http://www.tamilmirror.lk/194310/-சர-வத-ச-சம-கத-த-ன-பங-கள-ப-ப-அவச-யம-#sthash.fD5lVwSd.dpuf
  • தொடங்கியவர்

ஐ.நா.தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த அர­சாங்கம் இணங்­கினால் ஒத்­து­ழைக்க தயார்

p11-0207a4dac3ef10c085629c241c4ea08df36ec586.jpg

 

ஜேர்மன் குழு­வி­ன­ரிடம் எடுத்­து­ரைத்தார் எதிர்க்­கட்­சித்­த­லைவர்
(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) 

ஐ.நா.தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் இணங்­கு­மா­க­வி­ருந்தால் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதற்கு பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட் ­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள ஜேர்­ம­னிய  பாரா­ளு­மன்றத் தலைவர் பேரா­சி­ரியர் நோர்பேர்ட் லம்மேர்ட் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரி­டத்தில் தெரி­வித்­துள்ளார். 

தமிழ் மக்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யக்­கூ­டிய வகை­யி­லா­னதும் அனை­வ­ரி­னாலும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­து­மான புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­ட­வேண்­டி­யது அவ­சியம் என அக்­கு­ழு­வி­ன­ரி­டத்தில் வலி­யு­றுத்­திய எதிர்க்­கட்­சித்­த­லைவர் அக்­க­ரு­மத்தை வெற்றி கொள்­வ­தற்கு ஜேர்மன் உட்­பட சர்­வ­தேச சமுகம் கூட்­ட­மைப்­பிற்கு உறு­து­ணை­யாக இருக்க வேண்­டு­மெ­னவும் குறிப்­பிட்டார்.

இலங்கை விஜயம் செய்­துள்ள ஜேர்மன் பாரர்­ளு­மன்­றத்தின் தலைவர் பேரா­சி­ரியர் நோர்பேர்ட் லம்மேர்ட் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்பு பாரா­ளு­மன்­றத்தில் உள்ள எதிர்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்­றது.

சுமார் ஒரு­ம­ணித்­தி­யா­ல­மாக நடை­பெற்ற இச்­சந்­திப்பு குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் கருத்து வெ ளியி­டு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை குறித்து 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் பரிந்­து­ரை­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை­பெற்ற 34ஆவது அமர்­விலும் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

இவ்­வாறு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யான நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் இணங்­கினால், அதற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு புர­ண­மான ஒத்­து­ழைப்பை வழங்கும் என அவர்­க­ளித்தில் குறிப்­பிட்­டுள்ளேன்.

அத்­துடன் தற்­போது முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கும் செயற்­பாட்டில் எ எமது நிலைப்­பாட்டை தௌிவு­ப­டுத்­தினேன். விசே­ட­மாக தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாகப் புர்த்தி செய்­யப்­பட வேண்டும். நீடித்து நிலைத்து நிற்கும் வகை­யிலும் அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் அமைய வேண்டும். அந்தக் கரு­மத்தில் வெற்றிக் கொள்­வ­தற்கு சர்­வ­தேச சமூகம் எமக்கு உறு­து­ணை­யாக நிற்க வேண்டும் எனவும் கோரி­யுள்ளேன்.

இதனை விடவும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்­களின் உட­னடிப் பிரச்­சி­னை­களும் குறித்தும் அவர்­க­ளி­டத்தில் எடுத்­து­ரைத்தேன். குறிப்­பாக காணி விடு­விக்கும் கருமம் மந்த கதியில் நடை­பெ­று­கின்­றது. தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்கும் கருமம் முழுமை பெற­வில்லை. காணாமல் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை என்பதை சுட்டிக்காட்டினேன்.

இச்சமயத்தில் வடக்கிலும் கிழக்கிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி விடுவிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பாக அக்குழுவினர் கேள்வி எழுப்பினர். அதன்போது அந்த போராட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் அதிகளவு கரிசனை காட்ட வேண்டியதன் அவசியத்தை அவர்களிடத்தில் முன்வைத்துள்ளேன் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-05#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.