Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ! (படங்கள்)

Featured Replies

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ! (படங்கள்)

 

 

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலொன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

asfasfa.jpg

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென கருதப்படும் சரக்கு கப்பலே இவ்வாறு தீ பரவலுக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கடற்படை குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததுள்ளதாக தெரிவித்துள்ளது.

sfafasftu.jpg

 

http://www.virakesari.lk/article/18719

  • தொடங்கியவர்

கொழும்பு அருகே நடுக்கடலில் சரக்குக்கப்பலில் தீ விபத்து - தீயணைக்கும் பணியில் இந்திய கடற்படை கப்பல்

இலங்கை கடல் எல்லையில் நடுக்கடலில் பயணம் செய்த சரக்குக் கப்பல் எம்.வி டேனியலாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிக்காக இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

 
 
 
 
கொழும்பு அருகே நடுக்கடலில் சரக்குக்கப்பலில் தீ விபத்து -  தீயணைக்கும் பணியில் இந்திய கடற்படை கப்பல்
 
புதுடெல்லி:

இலங்கை கடல் எல்லையில் நடுக்கடலில் பயணம் செய்த சரக்குக் கப்பல் எம்.வி டேனியலாவில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணிக்காக இந்திய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.

இலங்கை கடல் எல்லையில் கொழும்பில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் பயணம் செய்த எம்.வி டேனியலா என்ற சரக்குக் கப்பலில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நடுக்கடலில் ஏற்பட்ட தீ என்பதால் கப்பல் நிறுவனம் இந்திய கடற்படையின் உதவியை நாடினர்.
201704050142045404_ship2._L_styvpf.gif
இதையடுத்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் காரியல் மற்றும் ஐ.என்.எஸ் தர்ஷாக் ஆகிய இரண்டு கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. எனினும் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கடற்படை செய்தித் தொடர்பாளர் டி.கே சர்மா ,”கொழும்பில் இருந்து மேற்கு பகுதியில் 11 கடல்மைல் தொலைவில் வணிகக் கப்பல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்துள்ளது. தீயை அணைக்கும் பணிக்காக கடற்படை கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

http://www.maalaimalar.com/News/National/2017/04/05014203/1078113/Cargo-ship-catches-fire-off-Colombo-coast.vpf

  • தொடங்கியவர்

கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் கடல், வான் படையினர் (படங்கள் இணைப்பு )

 

 

கொழும்புக்கு தெற்கு கடற்பரப்பில் பயணித்த கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் மற்றும் விமானப்படையினர் தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

unnamed-_16_.jpg

குறித்த கப்பலில் பரவிய தீயை கட்டுப்படுத்தம் நடவடிக்கையில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான இரு அதிவேக தாக்குதல் கப்பல்கள்களும் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இரு படகுகளும் பயன்படுத்தப்பட்டன.

unnamed-_21_.jpg

இந்நிலையில் அவற்றுக்கு உதவியாக இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்குவானூர்தியொன்றும் தற்போது சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

unnamed-_20_.jpg

கொழும்பு தெற்கு கடற்பரப்பில் பயணித்த பனாமா நாட்டுக்கு சொந்தமானதென சரக்கு கப்பலொன்றில் தீ பரவியிருந்த நிலையில் இலங்கை கடற்படைக்கு சம்பவம் பற்றி தெரிவிக்கப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையினர் தீயை கட்டுப்படுத்துவதற்கு தொடர்ந்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

unnamed-_19_.jpg

unnamed-_18_.jpg

unnamed-_17_.jpg

unnamed-_15_.jpg

unnamed-_13_.jpg

sfafasftu.jpg

asfasfa.jpg

 

http://www.virakesari.lk/article/18736

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு அருகே தீப்பற்றிய கப்பலில் ஆபத்தான பொருட்கள்

கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் பாரிய கொள்கலன் கப்பலில் ஏற்பட்டிருந்த தீ நேற்று மாலை அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா, இந்திய கடற்படைகள் தெரிவித்துள்ளன.

பனாமா கொடியுடன் கொழும்பில் இருந்து 120 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த எம்.வி.டானியேலா என்ற கொள்கலன் கப்பலில் நேற்றுமுன்தினம் தீவிபத்து ஏற்பட்டது.

சிங்கப்பூரில் இருந்து 14 ஆயிரம் கொள்கலன்களுடன், இந்தக் கப்பல் சூயெஸ் நோக்கி சென்று கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் காலை 10.55 மணியளவில் தீப்பிடித்தது.

இதையடுத்து, உள்ளூர் முகவரால் சிறிலங்கா கடற்படையிடம் உதவி கோரப்பட்டது.

உடனடியாக சிறிலங்கா கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும், இரண்டு இழுவைப் படகுகளும் விரைந்து சென்று கப்பலில் இருந்த 21 மாலுமிகளை மீட்டதுடன், கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.

எனினும் தீ பெருமெடுப்பில் பரவிக் கொண்டிருந்ததால், சிறிலங்கா கடற்படையினரால் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டது.

அதேவேளை, கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைலுக்கு அப்பால் வரை இழுத்து வரப்பட்டது.

m.v. Daniella -fire (1)m.v. Daniella -fire (2)m.v. Daniella -fire (3)m.v. Daniella -fire (4)m.v. Daniella -fire (5)

சிறிலங்கா கடற்படையின் சாகர என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பலுடன், இந்திய கடலோரக் காவல்படையின் சூர் என்ற கப்பலும், இந்திய கடற்படையின் காரியல் மற்றும் தர்ஷக் ஆகிய கப்பல்களும் விரைந்து சென்று தீயணைப்பில் ஈடுபட்டன.

இவற்றுக்கு மேலதிகமாக சிறிலங்கா கடற்படையின் மேலும் 3 அதிவேக தாக்குதல் படகுகளும், விமானப்படையின் பெல் உலங்குவானூர்தி ஒன்றும் தீயணைப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தக் கூட்டு முயற்சியின் விளைவாக, நேற்று பிற்பகல் கப்பலில் பரவிய தீ அணைக்கப்பட்டது. எனினும், கப்பலில் இருந்து புகை வந்து கொண்டிருப்பதால் தொடர்ந்தும் கடற்படைக் கப்பல்களில் இருந்து நீர் பாய்ச்சப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள இந்திய அதிகாரிகள், தீப்பிடித்த கப்பலில் ஆபத்தான பொருட்கள் இருப்பதாகவும் அதனால், கப்பல் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொண்டு தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்போது கொழும்பு துறைமுகத்தில் இருந்து 11 கடல் மைல் தொலைவில் எம்வி.டானியேலா என்ற கப்பல் தரித்துள்ளது.

கப்பலின் இடது பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த தீ நேற்றுக் காலை அணைக்கப்பட்டது. எனினும் வலப்பறத்தில் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், புகை வந்து கொண்டிருப்பதால், இந்திய, சிறிலங்கா கடற்படைக் கப்பல்கள் நீரைப் பாய்ச்சி வருகின்றன.

  • தொடங்கியவர்

தீ பரவலுக்கு உள்ளான கப்பலில் இருந்து இரசாயனம் கசிகிறதா?

Published by Pradhap on 2017-04-06 21:46:00

 

 

(எம்.எப்.எம். பஸீர்)

கொழும்புக்கு தெற்கு கடற்பரப்பில் தீ பரவலுக்கு உள்ளான  எம்.ஏ.எஸ். டெனியலா கப்பலில் இருந்து இலங்கை கடலில் இரசாயனம் மற்றும் எரிபொருள் பதார்த்தங்கள் கலந்துள்ளனவா? என்பது தொடர்பிலான ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

unnamed-_19_.jpg

இதுதொடர்பான ஆய்வுக்காக விசேட குழுவொன்று கப்பல் தீப்பற்றிய கடற்பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக அதிகார சபையின் பொது முகாமையாளர் டர்னி பிரதீப் குமார குறிப்பிட்டார்.

இந்த குழுவினர் வௌ;வேறு கோணங்களில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளதாகவும் அதிகார சபையின் பொது முகாமையாளர் கூறினார்.

எதேனுமொரு வகையில் இலங்கை கடற்பரப்பினுள் எரிபொருள் பதார்த்தங்கள் கலந்திருப்பின் அவற்றை விரைவாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து எகிப்து நோக்கி பயணித்த உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்களில் ஒன்றான எம்.எஸ்.சீ. டெனியலாவில் பரவிய தீ நேற்று பிற்பகல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இலங்கை மற்றும் இந்திய கடற்படையினர் கூட்டாக மேற்கொண்ட முயற்சியினால் கப்பலில் பரவிய தீ கட்டுப்படுத்தப்பட்டது.

கப்பலில் இருந்த கொள்கலன்களில் இரசாயனப் பதார்த்தங்கள் இருந்தமை தெரியவந்ததை அடுத்து, இலங்கைக்கு 13 கடல் மைல்களுக்கு அப்பாலுள்ள கடலில் வைத்து தீயை அணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கடற்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்றும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

தீ பரவலுக்கு இரசாயன பதார்த்தங்களே காரணம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையிலேயே, கடலில் இரசாயனம் கலந்துள்ளதா? என ஆராய சமுத்திர சூழல் பாதுகபபு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.virakesari.lk/article/18819

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.