Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெ.வுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம் முக்கிய தகவல்

Featured Replies

ஜெ.வுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம் முக்கிய தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

sc

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாய் அபராதமும்இ மற்ற மூவருக்கும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் செலுத்த வேண்டிய 100 கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது குறித்த சீராய்வு மனுவை கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் அமிதவ ராய், பினாகி சந்திரகோஷ் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் அபராதம் செலுத்துவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அபராதத்தை வசூலிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடவில்லையே  என்று கூறிய நீதிபதிகள், கர்நாடக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதனிடையே, கர்நாடக அரசு சொத்துக்குவிப்பு வழக்கிற்காக 2.78 கோடி ரூபாய்  செலவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இத்தொகையை தமிழக அரசு செலுத்தவேண்டும் எனவும் கர்நாடகா நீதித்துறை சார்பில் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.vikatan.com/news/tamilnadu/85511-supreme-court-dismisses-karnatakas-plea.html

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நவீனன் said:

ஜெ.வுக்கு நூறு கோடி ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம் முக்கிய தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட நூறு கோடி ரூபாய் அபராதத்தை வசூலிப்பது தொடர்பாக கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அப்போது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைந்துவிட்டதால் அவர் அபராதம் செலுத்துவதில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அபராதத்தை வசூலிக்க வேண்டும் என தீர்ப்பில் குறிப்பிடவில்லையே  என்று கூறிய நீதிபதிகள், கர்நாடக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

சசிகலாவுக்கு 100 கோடி லாபம்

எல்லாத்தையும்  போட  முதலே 

கணக்கு போட்டிருப்பார்களோ...?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
57 minutes ago, விசுகு said:

சசிகலாவுக்கு 100 கோடி லாபம்

எல்லாத்தையும்  போட  முதலே 

கணக்கு போட்டிருப்பார்களோ...?

சில நேரம் சசிகலாவிட்டை மன்னிப்பு கேட்டு உடனடியாய் விடுதலை செய்தாலும் செய்வினம்......இந்திய அரசியல்லை எதுவும் நடக்கலாம்.

  • தொடங்கியவர்
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கை
தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
 
 
 

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நீக்கியதை எதிர்த்து, கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

 

Tamil_News_large_174555920170405232207_318_219.jpg

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான, சொத்து குவிப்பு வழக்கில், இந்த ஆண்டு, பிப்., 14ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.

ஜெயலலிதா கால மானதால், வழக்கில் இருந்து அவரை நீக்கி விட்டு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு, தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா, 10 கோடி ரூபாய்

அபராதத்தை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது; அதில், கூறப்பட்டுள்ளதாவது:

ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான வழக்கில், பெங்களூரு சிறப்புகோர்ட் அளித்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. சிறப்பு கோர்ட், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறை மற்றும், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது. சிறை தண்டனையை அனுபவிக்க, ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை.
அதே நேரத்தில், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்க முடியும். அதனால், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை நீக்கிய உத்தரவை திரும்பப் பெற வேண்டும்; அவருக்கான தண்டனை விபரத்தை அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கைவிசாரணைக்கு ஏற்பது குறித்து, தங்கள் அறையில் விசாரிப்பதாக, நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ ராய் தெரிவித்திருந்த னர்; அதன்படி, அவர்களது அறையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது;

 

அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கில் தான், சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஜெயலலிதா காலமானதால், வழக்கில் இருந்து அவரை நீக்கி, தீர்ப்பு அளிக்கப்பட்டது. கர்நாடக அரசின் இந்த சீராய்வு மனுவை முழுமையாக பரிசீலித் தோம். இந்த வழக்கில், ஏற்கனவே அளித்த தீர்ப் பில் எந்தத் திருத்தத்தை யும் செய்ய விரும்ப வில்லை. அதனால், இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1745559

  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவுக்கு எதிரான கர்நாடக மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

 

 
 
 
உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்.
உச்ச நீதிமன்றம் | கோப்புப் படம்.
 
 

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை குற்றவாளி என அறிவிக்க வேண்டும், அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை வசூலிப்பது எப்படி என்பது குறித்து வழிகாட்ட வேண்டும் என்று கோரி கர்நாடக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மரணமடைந்ததால் அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதாகவும், ஆனால் ரூ.100 கோடி அபராதம் செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்கக் கோரியும், அவருக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதத்தை எப்படி வசூலிக்கலாம் என்று வழிகாட்ட வேண்டும் என்று கோரியும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு செய்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்த போது இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறி கர்நாடக அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

கர்நாடக அரசு தனது சீராய்வு மனுவில், “வாதங்கள் நிறைவடைந்த பிறகு, தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளார் என்பதால் மேல்முறையீடு அற்று போய் விடாது, எனவே மரணத்திற்கு முன்பாக அளிக்கப்பட்ட தீர்ப்பு மரணத்திற்குப் பிறகும் செயல்படுத்தப் படவேண்டியதாகவே கருதப்பட வேண்டும். இப்படி மேல்முறையீடு அற்றுப்போவதற்கு அரசியல் சாசனத்தில் எந்தப் பிரிவிலும் வகை செய்யப்படவில்லை. அதே போல் உச்ச நீதிமன்றத்தின் 2013-ம் ஆண்டு விதிகளும் கூறவில்லை.

மற்றொரு வகையில் பார்த்தால், சுப்ரீம் கோர்ட்டு விதிகள் 2013, சிவில் அப்பீல் வழக்குகளிலும் சரி, தேர்தல் வழக்குகளிலும் சரி, விசாரணை முடிந்தபிறகு சம்மந்தப்பட்ட நபர் இறந்து விட்டால், வழக்கு அற்றுப்போகும் என்ற நிலை வராது என கூறுகிறது.

இந்த வழக்கை பொறுத்தமட்டில், தண்டிக்கப்பட்ட நபர் இறந்து விட்டதால் சிறைத்தண்டனை பலனற்றது. இருந்தபோதிலும், தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ.100 கோடி அபராதம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருக்க வேண்டும். அந்த அபராதத்தை அவரது சொத்துகள் மூலம் வசூலித்திருக்க வேண்டும்.

இந்த வழக்கில் ஜெயலலிதா சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிலை இல்லை. ஆனால் அபராதம் செலுத்த வேண்டும் என்பது சட்டப்படி நிலைத்து நிற்கத்தக்கது. அதை அவர் சொத்துகள் மூலம் வசூலிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக வருமானத்துக்கு மீறி சொத்து குவித்த வழக்குகளில் இது தேவைப்படுகிறது.

இந்த வழக்கில், அப்பீல் அற்றுப்போகிறது என்பதற்கு இடமில்லை, எனவே இறந்துபோன நபருக்கு சிறைத்தண்டனை வழங்குவது பலனற்றது என்றபோதிலும், அபராதம் விதிக்கப்படுவதும், சட்டவிரோதமாக சேர்த்த சொத்தை பறிமுதல் செய்யலாமா என்பதும் பரிசீலனைக்கு உரியது.

இந்த நிலையில், பிப்ரவரி 14-ந்தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றி அமைக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு எதிராக தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது

ஆனால் ஜெயலலிதா இறந்து போனதால் அவர் மீதான வழக்கு அற்றுப்போகிறது என்று மீண்டும் தெரிவித்து இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று மனுவை தள்ளுபடி செய்தது.

http://tamil.thehindu.com/india/சொத்துக்-குவிப்பு-வழக்கு-ஜெயலலிதாவுக்கு-எதிரான-கர்நாடக-மறுசீராய்வு-மனுவை-தள்ளுபடி-செய்தது-உச்ச-நீதிமன்றம்/article9617411.ece?homepage=true

  • தொடங்கியவர்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் ரூ. 113 கோடி சொத்துக்கள் யாருக்கு சேரும்?

 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் அபராதத்தை வசூலிக்க தேவை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு சேரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 
 
 
 
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் ரூ. 113 கோடி சொத்துக்கள் யாருக்கு சேரும்?
 
பெங்களூர்:

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இறந்து விட்டதால் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது. ஆனால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த ரூ. 100 கோடி அபராதத் தொகையை உறுதி செய்து கடந்த பிப்ரவரி 14-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீர்ப்பு அளித்திருந்தனர்.

இந்த நிலையில் கர்நாடக மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவருக்காக விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை எப்படி வசூலிக்கவேண்டும் என்று தெரிவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று கூறி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமீத்வாய்ராய் ஆகியோர் நேற்று கர்நாடகாவின் கோரிக்கையை தள்ளுபடி செய்தனர்.

மேலும் ஜெயலலிதாவை வழக்கில் இருந்து விடுவித்ததை மறு பரிசீலனை செய்ய முடியாது என்றும் அவர்கள் அறிவித்தனர். ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை கட்ட தேவை இல்லை என்றும் உத்தரவிட்டனர்.

201704061018297864_poes._L_styvpf.gif

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு காரணமாக சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு தற்போது கர்நாடக நீதிமன்றத்தில் முடங்கி கிடக்கும் 10 ஆயிரத்து 500 சேலைகள், 750 ஜோடி செருப்புகள், 3 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், ரூ. 1 கோடி மதிப்புள்ள வைர நகைகள், 44 ஏர்கன்டி‌ஷன் எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த பொருட்களை கோர்ட்டில் மனு செய்து பெறுவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேபோல ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ. 113 கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் யார் பிரித்துக் கொள்வது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

201704061018297864_deepak._L_styvpf.gif

ஏற்கனவே ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் கிடையாது. அவரது அண்ணன் ஜெயராமனின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் உரிமை கொண்டாட வாய்ப்பு உள்ளது.

தமிழக அரசு விரும்பினால் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றலாம். இந்த இல்லத்தை அரசு எடுத்துக் கொள்ளலாம்.

அதேபோல ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கர்நாடக கோர்ட்டு பராமரிப்பில் உள்ள பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க கோரி கர்நாடக கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் வழக்கும் தொடரலாம்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன், மகள் ஆகியோரும் இந்த பொருட்களை கேட்டு மனு தாக்கல் செய்யலாம். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.

201704061018297864_deepa._L_styvpf.gif

தமிழக அரசுடன் தீபக் மற்றும் தீபா ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை உருவாக்கி அதன்பிறகு தான் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சொத்துக்களை பெற முடியும்.

இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஒருவர் கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பெயரில் மொத்தம் ரூ.113 கோடியே 72 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இதில் அசையும் சொத்துக்கள் ரூ. 41கோடியே 64 லட்சம் ஆகும். அசையா சொத்துக்கள் ரூ. 72 கோடியே 9 லட்சம் ஆகும்.

ஜெயலலிதாவின் சொத்துக்களில் மிக அதிக மதிப்புடையது சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது வேதா நிலைய பங்களா வீடாகும்.

தற்போது இந்த வீட்டின் மதிப்பு ரூ. 90 கோடி வரை இருக்கும் என்று ரியல் எஸ்டேட் அதிபர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழக அரசின் வழிகாட்டி மதிப்பின்படி இந்த சொத்தின் மதிப்பு ரூ.43 கோடியே 96 லட்சம் ஆகும்.

இதுதவிர ஜெயலலிதாவுக்கு சென்னையில் 3 வணிக வளாகங்களும், ஐதராபாத்தில் ஒரு வணிக வளாகமும் உள்ளது. இவற்றின் மதிப்பு ரூ. 13 கோடியே 30 லட்சம் ஆகும்.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ஜெயலலிதா பெயரில் 14.50 ஏக்கரில் பண்ணை நிலம் உள்ளது. மதுராந்தகம் அருகே செய்யூர் கிராமத்தில் ஜெயலலிதா பெயரில் 3.43 ஏக்கரில் நிலம் உள்ளது.

பல்வேறு வங்கிகளில் ஜெயலலிதா பெயரில் 10 கோடியே 63 லட்சம் ரூபாய் உள்ளது. மேலும் 2 டொயோட்டா கார்கள், ஒரு டெம்போ டிராவலர், ஒரு டெம்போ டிராக்ஸ், 2 மகேந்திரா வேன்கள், ஒரு சுவராஜ் மஸ்தா கார், ஒரு அம்பாசிடர், ஒரு கண்டஷா கார் ஆகியன உள்ளன. இந்த வாகனங்களின் மதிப்பு 42 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ஆகும்.

கொடநாடு எஸ்டேட், பங்களா, ஸ்ரீ விஜயா பப்ளிகே‌ஷன், சசி எண்டர்பிரைசஸ், ராயல்வேலி மற்றும் கிரீன் டீ எஸ்டேட் ஆகிய 5 சொத்துக்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். இந்த வகையில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ. 24 கோடியே 44 லட்சமாக உள்ளது.

ஜெயலலிதா மறைந்து விட்டதால் அவரது சொத்துக்கள் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது.

ஜெயலலிதா உயில் எழுதி வைத்து இருந்தால் அந்த உயில்படி அதில் யாருக்கு சொத்துக்கள் சேர வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறதோ அவருக்குத்தான் சொத்துக்கள் சேரும்.

சொத்துக்களுக்கு அவர் உயில் எழுதி வைக்கவில்லை என்றால் அவர் சம்பந்தப்பட்ட வாரிசுகள் அந்த சொத்துக்கு உரிமை கொண்டாட முடியும்.

ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என்பதால் அவரது அண்ணன் ஜெயராமனின் மகன் தீபக், மகள் தீபா ஆகியோர் இந்த சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும். ஆனாலும் அவர்களுக்குள் ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும்.

தமிழக மக்கள் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஒருவேளை தமிழக அரசு அந்த வீட்டை நினைவு இல்லமாக ஆக்க விரும்பினால் அதுகுறித்து தீபா, தீபக் ஆகியோருடன் பேசிதான் முடிவு செய்ய வேண்டும். அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் கோர்ட்டில் மனு செய்து அந்த இல்லத்தை நினைவு இல்லமாக ஆக்குவதற்கு எடுத்துக் கொள்ளலாம். அல்லது அந்த சொத்துக்குரிய பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு அந்த சொத்தை எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

அதேபோல ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு தற்போது கர்நாடக கோர்ட்டு பராமரிப்பில் உள்ள பொருட்களையும் தமிழக அரசு மனு செய்து பெற்று அவற்றை போயஸ் கார்டனில் வைத்துக் கொள்ளலாம். இந்த பொருட்களை பெறுவதற்கு தீபக், தீபாவுக்கும் உரிமை உண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டு விட்டதால் அவருடைய படங்களை தமிழக அரசு அலுவலகங்களில் வைக்கலாம் அதற்கு தடை இல்லை.

அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை யார் வேண்டுமானாலும் எழுப்பலாம். அதற்கான தடையும் நீங்கி விட்டது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/06101828/1078372/supreme-court-judgement-echo-to-whom-own-Jayalalithaa.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.