Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரன் மீதான 'பெரா' வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு

Featured Replies

தினகரன் மீதான 'பெரா' வழக்கு
விசாரணையை தள்ளி வைக்கும்படி
உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு
 
 
 

சென்னை:அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் தினகரன் மீதான, அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

 

Tamil_News_large_1746381_318_219.jpg

வெளிநாட்டில் பணம் 'டிபாசிட்' விவகாரத்தில், தினகரன் மீது, அன்னிய செலாவணி ஒழுங்கு முறை சட்டத்தின் கீழ், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இவை, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத் தில், விசாரணை யில் இருந்தன.இரண்டு வழக்குகளில் இருந்தும், தினகரனை விடுவித்து, எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில்,

அமலாக்கப்பிரிவு மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் இருந்து விடுவித்ததை ரத்து செய்து உத்தரவிட்டது.

தற்போது, இந்த இரு வழக்குகளும், எழும்பூர் நீதிமன்ற விசாரணையில் உள்ளன. சென்னை, ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தலில், தினகரன் போட்டியிடுவதால், வழக்கு விசார ணையை, ஆறு வாரங்களுக்கு தள்ளி வைக்கும்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் சார்பில் கோரப் பட்டது. அதை, மாஜிஸ்திரேட் நிராகரித்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தினகரன் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி மகாதேவன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. தினகரன் தரப்பில், மூத்த வழக்கறிஞர் பி.குமார் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக் கோரி, ஏற்கனவே மனுத்தாக்கல் செய்துள்ளோம். அதனால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும் படி, எழும்பூர் நீதிமன்றத்துக்குஉத்தரவிட வேண்டும்,'' என்றார்.

அமலாக்கப்பிரிவு சார்பில், சிறப்பு வழக்கறிஞர் தண்டபாணி ஆஜராகி, ''உயர் நீதிமன்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனு வுக்கு, இன்னும் எண் வழங்கப்படவில்லை. எழும்பூர் நீதிமன்றம் விசாரணையை தொடர, தடை

 

ஏதுமில்லை,'' என்றார். நீதிமன்றத்தில், தினகரன் நேரில் ஆஜராவது குறித்து, நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு, வழக்கறிஞர் தண்டபாணி, ''அவர் நேரில் ஆஜராகும்படி, அமலாக்கப்பிரிவு வலியுறுத்த போவதில்லை; நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்கு என்பதால், விசார ணையை நடத்த வேண்டும் என, வலியுறுத்து கிறோம்,'' என்றார். அதைத்தொடர்ந்து, தற்போது எந்த உத்தரவை யும் பிறப்பிக்க வில்லை எனக்கூறி, மனு மீதான விசார ணையை, வரும், 13ம் தேதிக்கு, நீதிபதி மகாதேவன் தள்ளி வைத்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1746381

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.