Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவு! - ஐ.டி-க்கு அல்வா கொடுக்க அதிரடி #VikatanExclusvie

Featured Replies

அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவு! - ஐ.டி-க்கு அல்வா கொடுக்க அதிரடி #VikatanExclusvie

விஜயபாஸ்கர்

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனைக்குப் பிறகு, அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் தலைமறைவாகியுள்ளதாகத்  தகவல்கள் வெளியாகி உள்ளன. தங்களது ஆடிட்டர்மூலம் வருமான வரித்துறையினருக்கு அல்வா கொடுக்கும் வேலையில் மும்முரமாக சிலர் ஈடுபட்டுவருகின்றனர். 

 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ரத்துசெய்யப்பட்டுவிட்டது. இதனால், வேட்பாளர்கள் பிரசாரத்தை நிறுத்திவிட்டு, அடுத்தகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக, அ.தி.மு.க. சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், கட்சியினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அதுபோல, ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன், பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை நடத்தியுள்ளார்.  இது தவிர, தி.மு.க.வேட்பாளர் மருது கணேஷ், பா.ஜ.க.வேட்பாளர் கங்கைஅமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்பட, ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்களும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். 


 இந்தச் சூழ்நிலையில்... தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை, மற்ற அமைச்சர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர்களைவிட, அவர்களின் நிழல் மனிதர்கள் அதிகளவில் கதிகலங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 
 ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், குறிப்பிட்ட சில அமைச்சர்களின் வலதுகரமாகச் செயல்பட்ட அந்த நபர்கள் தலைமறைவாகி விட்டனர். வருமான வரிச்சோதனைகுறித்து முன்கூட்டியே மோப்பமிட்ட அவர்கள், தங்களது அலுவலகம், வீடுகளிலிருந்த குப்பைகளை அப்புறப்படுத்திவிட்டனராம். அதோடு, ஆடிட்டர்கள்மூலம் வருமான வரிக் கணக்கை மீண்டும் ஆய்வுசெய்து, அதில் உள்ள குறைகளைச் சரிசெய்யவும் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சரத்குமார் ரெய்டு


 இது தொடர்பாக, ஆடிட்டர்களுடன் தீவிர ஆலோசனையில் அமைச்சர்களின் நிழல் மனிதர்கள் ஈடுபட்டுவருகின்றனர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சரின் உதவியாளர், இரண்டு நாட்களாகத் தலைமறைவாகிவிட்டாராம். அவர், கொங்கு மண்டலத்துக்குச் சென்று, அமைச்சருக்கு வேண்டப்பட்டவர்களிடம் ஆலோசனை நடத்தியுள்ளாராம். அந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சருக்கு வேண்டப்பட்ட நபர்கள், தங்களிடமிருந்த சில ஆவணங்களை குப்பைமேட்டுக்கு அனுப்பியுள்ளனர். இன்னும் சிலர், கரன்சிகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.


 அமைச்சர்களுக்கு விசுவாசமானவர்களுக்கு அவசர கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். அதில், அமைச்சர் தரப்பினருடன் யாரும் தொடர்புகொள்ள வேண்டாம். குறிப்பாக போனில் யாருக்கும் தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால், சில நிழல் மனிதர்கள் தங்களது போன் நம்பரை மாற்றிவிட்டனர். புதிய நம்பர்களில் குறிப்பிட்ட சிலருடன் பேசுகின்றனர். அதிகமாக யாரும் பேசுவதில்லையாம். 
  நிழல்மனிதர்களின் நடவடிக்கைகளை வருமானவரித்துறை  உன்னிப்பாகக்  கவனித்துவருகிறதாம். அமைச்சர் விஜயபாஸ்கரைத் தொடந்து, சில அமைச்சர்களின் பெயர்கள் சோதனைப் பட்டியலில் இருக்கிறதாம். அந்த அமைச்சர்களின் வீடு, அலுவலகங்களைத் தேடி வருமான வரித்துறையினர் செல்வதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனராம். குறிப்பாக, தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் அதிக நெருக்கத்தில் இருந்த அமைச்சர்கள், விசாரணை வளையத்துக்குள் உள்ளனர். அவர்கள், குறித்த ஆதாரங்கள் அனைத்தும் வருமான வரித்துறையினரிடம் இருந்தும் மேலிட சிக்னலுக்காகக் காத்திருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. 

ரெய்டு


 இதுகுறித்து நம்மிடம் பேசிய வருமான வரித்துறை உயரதிகாரி ஒருவர், "தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் வருமான வரிச் சோதனைக்கான நடவடிக்கைகள், சில ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. எங்களுக்கு கிடைக்கும் ரகசியத் தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்களின் நடவடிக்கைகளை சில மாதங்களாகக் கண்காணித்து நடவடிக்கையில் களமிறங்குவோம். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்த சில மாதங்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டோம். சேகர் ரெட்டி வீடு, அலுவலகத்தில் நடந்த சோதனையில் சில ஆவணங்கள் எங்களுக்கு சிக்கின. அதன் அடிப்படையில் முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் அவரது மகன், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டன. குறிப்பாக, கூவாத்தூர் ரிசார்ட்டில் நடந்த அனைத்து விவரங்களையும் இன்ஃபார்மர் மூலம் சேகரித்துள்ளோம். அங்கு அமைச்சர்கள், எம்எல்ஏ-க்களுக்கு கொடுக்கப்பட்ட உறுதி மொழிகள் எல்லாம் எங்களுக்கு ஆதாரத்துடன் கிடைத்துள்ளன. அதன்அடிப்படையில் சோதனை நடத்த முடிவு செய்திருந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணபட்டுவாடா மற்றும் அன்பளிப்பு குறித்த தகவல்கள் கூடுதலாகக் கிடைத்தன. இதனால், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள், அலுவலகம் ஆகியவற்றில் சோதனை நடத்த முடிவுசெய்துள்ளோம். முதல்கட்டமாக அமைச்சர் விஜயபாஸ்கர், ச.ம.க தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் எம்பி.,சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில், எங்களுக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. கோடிக்கணக்கில் பணமும் சிக்கியுள்ளன. அதன்அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்"என்றார். 

ரெய்டு

 அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த, வருமான வரித்துறை அதிகாரிகள் தயாராக உள்ளனர். இதற்காக, அவர்களிடம் கேட்கவேண்டிய கேள்விகளைத் தயாராக வைத்துள்ளனர். எப்படியும் அவர்களிடம் இருந்து பதிலைப் பெற, ஒரே பதிலுக்கு பலகேள்விகள் தயாராக வைத்துள்ளார்களாம். வருமான வரித்துறை அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கும் பதில்கள் அடிப்படையில், சிக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவற்றுக்கு கொடுக்கும் விளக்கத்தின்படி அடுத்தகட்ட நகர்வு செல்லும் என்கிறது, வருமான வரித்துறை வட்டாரம்.

http://www.vikatan.com/news/tamilnadu/85953-ministers-benami-go-missing-plan-to-escape-from-it-raid.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.