Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தடை? தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை

Featured Replies

தடை?
தேர்தலில் போட்டியிட தினகரனுக்கு
தேர்தல் கமிஷன் தீவிர ஆலோசனை
 
 
 

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த காரணத்திற்காகவும், வரம்பு மீறி செலவு செய்ததற்காகவும், தேர்தலில் போட்டியிட முடியாமல், தினகரனை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

 

Tamil_News_large_1749103_318_219.jpg

சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார். வெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். செருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. எதிர்ப்பை குறைத்து, மக்களை தங்கள் பக்கம் இழுக்க, வீடு வீடாக பணம் கொடுக்க, தினகரன் அணியினர் முடிவு செய்தனர். அதன்படி, 5ம் தேதி இரவு, வீடு வீடாக சென்று, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் என, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தனர்.இது தொடர்பாக, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; 74 பேர் கைது செய்யப்பட்டனர்; 32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
 

தினகரனின் செலவு கணக்கில்


இதன் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததற்கான, ஆவணங்கள் சிக்கின. மேலும், தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட, தொப்பி சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக, வாக்காளர்கள் அனைவருக்கும், தொப்பி வழங்கப்பட்டுள்ளது.தினகரன் தரப்பில், ஒரு முறை மட்டும், 1,000 தொப்பிகள், 30 ஆயிரம் ரூபாய்க்கு

வாங்கப்பட்டதாக, தேர்தல் செலவு கணக்கில் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு வியாபாரி ஒருவர், தினமும், 10 ஆயிரம் தொப்பிகளை, மூன்று லட்சம் ரூபாய்க்கு வழங்கியுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.இத்தொகை விபரம், தேர்தல் பார்வையாளர்கள் பராமரித்து வந்த, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், வாக்காளர்களுக்குவழங்கப்பட்ட பணத்தையும், தொப்பி செலவையும், தினகரனின் செலவு கணக்கில் சேர்த்து, அவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
 

விளக்கம் கேட்க வேண்டும்.


இது குறித்து, தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை தொகுதியில், ஒரு வேட்பாளர், 28 லட்சம் ரூபாய்க்கு மேல், செலவு செய்யக்கூடாது. தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு வழங்கிய பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தொகையை, அவர் கணக்கில் சேர்த்தால், கோடிக்கணக்கான ரூபாய் வருகிறது.எனவே, வரம்புக்கு மீறி செலவு செய்ததன் அடிப்படையில், அவரை தகுதி நீக்கம் செய்து, மூன்று ஆண்டுகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும். அதற்கு முன், செலவு கணக்கு தொடர்பாக, 'நோட்டீஸ்' அனுப்பி, அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.விளக்கம் ஏற்க முடியாததாக இருந்தால், நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். அதன்பின்னரே, தகுதி நீக்கம் செய்ய முடியும். தேர்தல் செலவு, பணம் பட்டுவாடா தொடர்பாக, விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

பணம் சப்ளை செய்தவர்கள் தவிப்பு



ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தால், தினகரன் பட்டுவாடாவுக்கு உதவிய,தொழிலதிபர்கள் தவிப்பில் உள்ளனர். சென்னை, ஆர்.கே.நகரில் போட்டியிட்ட, அ.தி.மு.க., - சசிகலா அணியை சேர்ந்த தினகரன் தரப்பு, ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வரை வழங்கியது. அதற்காக, 89 கோடி ரூபாய் வரை செலவு செய்ததற்கான ஆவணத்தை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

 


இந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தினகரன் தரப்புக்கு பணம் சப்ளை செய்து உதவிய, தொழிலதிபர்கள் தவிப்பில் உள்ளனர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:தினகரன் அணியினர், வாக்காளர்களுக்கு வழங்கிய பணத்தை, மொத்தமாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு வரவில்லை. ஆர்.கே.நகரில், அ.தி.மு.க.,வுக்கு வேண்டிய, பைனான்சியர், நகை கடை உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என, பல தொழிலதிபர்கள் உள்ளனர்.
அவர்களிடம் இருந்து, தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கும்படியும், அதை வேறு வழியில் திரும்ப தருவதாகவும் உதவி கேட்கப்பட்டது. அவர்களும், ஆளுங்கட்சியை பகைத்து கொள்ள விரும்பாமல், உதவி செய்வதாக
தெரிவித்தனர். அதன்படி, தலா, ஒருவரிடம் இருந்து, தினசரி, 20 லட்சம் ரூபாய் வரை ரொக்க பணத்தை பெற்று, 500 பேருக்கு வழங்கப்பட்டது. அப்படியே, தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் இருந்து மட்டும், 10 கோடி ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது.
அவர்களும், தினமும் பிரசார நிகழ்வுகளை பற்றி போனில் கேட்பர். அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரின் நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் இருந்து, அவர்கள் எங்களிடம் பேசுவதில்லை.
தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், பணம் கொடுத்தவர்கள், தினகரன் தரப்பு பணத்தை திருப்பி தருமா; விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தது போல், நம் வீடுகளிலும் நடக்குமா என்ற பீதியில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1749103

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.