Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனை முதல்வராக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு

Featured Replies

 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப் பட்டதால், பழனிசாமியை பதவியிறக்கி விட்டு, தினகரனை முதல்வராக்கும் முயற்சியில், சசிகலா தரப்பு இறங்கியுள்ளது. 'கூஜா துாக்கி' களின் இந்த திட்டத்தை முறியடிக்க, சசி எதிர்ப்பு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், அமைச்சர் கள் பலர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

Tamil_News_large_1749606_318_219.jpg

அ.தி.மு.க., தற்காலிக பொதுச்செயலராக அறிவிக்கப்பட்ட சசிகலா, சிறையில் அடைக்கப் பட்ட பின், கட்சியின் முழு கட்டுப்பாடும், தினகரன் கைக்கு வந்து விட்டது. சசிகலாவை ஆதரித்த அதே கும்பல், இப்போது தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அவரை நிறுத்தி வெற்றி பெற வைக்கவும், பண பலத்துடன் களமிறங்கி யது. தினகரன் வெற்றி பெற்ற பின், அவரை முதல்வராக்கவும் திட்டமிட்டிருந்தனர். இதை அறிந்ததும், கொங்கு மண்டல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்தனர்.

அதை சமாளிக்க, 'இடைத்தேர்தலில் வெற்றி பெற்றாலும், முதல்வராக பொறுப்பேற்க மாட்டேன்; பழனிசாமியே முதல்வராக இருப்பார்' என, தினகரன் அறிவித்தார்; ஆனால், அதை யாரும் நம்பவில்லை.இடைத்தேர்தலில், அவர் வெற்றி பெற்றால், முதல்வராகி விடுவார் என்பதால், கொங்கு மண்டல அமைச்சர்கள் அடக்கியே வாசித்தனர். தினகரன் விசுவாசி களும், அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும்

எம்.எல்.ஏ.,க்களும், வரிந்து கட்டி, தேர்தல் பணியாற்றினர்.

தினகரனின் வலது கரமாக செயல்பட்ட, அமைச்சர் விஜய பாஸ்கர், பணம் பட்டுவாடா முழுவதையும் கவனித்தார்.

அவர் வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை யில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த ஆவணங்கள் சிக்கின.அதன் தொடர்ச்சியாக, இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அமைச்சர் வீட்டில் சிக்கிய ஆவணங்களில், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அமைச்சர் கள்பட்டியலும் கிடைத்துள்ளது.அதில், முதல் வர் பெயரும் இடம் பெற்றிருப்பது, மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சட்டத்திற்கு புறம்பாக, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த, அமைச்சர்கள் மற்றும் முதல் வர் பதவி விலக வேண்டும் என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்த துவங்கி உள்ளன.இந்தச் சூழ்நிலை யில், 'இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், மீண்டும் எப்போது தேர்தல் நடைபெறும் என்பது தெரியாது.

எனவே, நேரடியாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். அதன்பின், வெற்றி வாய்ப்புள்ள தொகுதியை தேர்வு செய்து,அந்த தொகுதியில் நீங்கள் நிற்கலாம்' என, தினகரனிடம் கூஜா துாக்கிகள் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த தினகரனும், அதற்காக காய் நகர்த்தும்படி, தன் ஆதரவு கூஜா துாக்கிகளுக்கு உத்தரவிட்டுள் ளார். இதையடுத்து, இது குறித்து விவாதிப்பதற் காக, நேற்று முன்தினம், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வரும்படி, அனைத்து அமைச்சர்களையும் தினகரன் அழைத்துள்ளனர். ஆனால், பெரும்பாலான அமைச்சர்கள் கூட்டத்திற்கு வரவில்லை.

 

தினகரனைமுதல்வராக்க, ஒரு கும்பல் முயற்சிப்பது, முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், கட்சியில் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

முதல்வராக பன்னீர்செல்வம் இருந்த போது, ஆட்சி நன்றாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது, சில அமைச்சர்கள், தங்களுடைய சுய லாபத்திற்காக, முதல்வராக பொறுப்பேற் கும்படி, சசிகலாவை துாண்டி விட்டனர்.

மக்களின் எதிர்ப்பை அறிந்திருந்தும், அவர் களின் புகழ் பேச்சில் மயங்கி, முதல்வராக சசிகலா முன்வந்தார். இறுதியில், அவர் சிறைக்கு சென்றார். அதே அமைச்சர்கள், தினகரனை முதல்வராகும்படி, இப்போது வற்புறுத்த துவங்கி உள்ளனர்.அமைச்சர்கள் ராதா கிருஷ்ணன், ராஜு, காமராஜ், உதயகுமார், முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போன்றோர், இந்த பட்டியலில் உள்ளனர். அவர்கள் தான், தினகரனை முதல்வராக்க துடிக்கின்றனர். இவர்களால், கட்சி மீண்டும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள்
தெரிவித்தனர்.
 

வதந்தியால் பரபரப்பு!


அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது, வாக்காளர்களுக்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப்படை யில், ஆட்சியை கலைக்க, மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, நேற்று முன்தினம் இரவு தகவல் பரவியது. இதனால், மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. - நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1749606

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.