Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் செலவினப் பட்டியல் விவகாரம்! எடப்பாடி பழனிசாமிடம் விசாரணை?

Featured Replies

தேர்தல் செலவினப் பட்டியல் விவகாரம்!  எடப்பாடி பழனிசாமிடம் விசாரணை?


                  எடப்பாடி பழனிச்சாமி                                                

சென்னை ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி நடப்பதாக இருந்த இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில், வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம், பரிசுப் பொருட்கள் வழங்கியது, குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகள் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பல காரணங்களை தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அனைத்துக்கும் உச்சமாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலம் முதல்வர் உள்பட அமைச்சர்களுக்கு ரூ.89 கோடி பணம் வழங்கியதற்கான ஆவணங்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறையினர் துணை ராணுவப்படையின் உதவியுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்திய சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது. விஜயபாஸ்கர் மூலமாக பணம் பெற்றோர் பட்டியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தவிர மூத்த அமைச்சர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. 

வருமான வரித்துறையினரின் சோதனையைத் தொடர்ந்து, விஜயபாஸ்கரை வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வரவழைத்து சுமார் 5 மணி நேரம் விசாரணையும் நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், என்ன தெரிவிக்கப்பட்டது என்ற விஷயங்கள் தெரியவரவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விசாரணையை நிறைவு செய்த அமைச்சர் விஜயபாஸ்கர், "அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன்" என்று மட்டும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.விஜயபாஸ்கரின் அழைப்பின்பேரிலேயே டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய வந்தார் என்று சொல்லப்பட்ட சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, அவரிடமும் விசாரணை நடத்தியுள்ளனர். தவிர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி எனவருமான வரித்துறையினரின் விசாரணைப் பட்டியலில் பலரின் பெயர்கள் இருந்தன. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, "ஒரு மாநிலத்தின் முதல்வர், நேரடியாகவோ, மறைமுகமாகவோ அசையும், அசையாச்சொத்து விவகாரங்களில் சம்பந்தப்படக்கூடாது என்பது அரசியலமைப்புச் சட்ட விதியாகும். தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் விஷயத்தில், அந்த விதிமுறைகள் எல்லாம் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. மேலும் ஜனநாயகத்தின் மாண்பினைக் காக்க வேண்டிய முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் அமைச்சர்கள். தேர்தல் சமயங்களில் அவர்கள் பொதுவானவர்களாகத்தான் இருக்க முடியும். கட்சி சார்பாக செயல்படவே கூடாது. இந்த விதிமுறைகளை விஜயபாஸ்கர் மட்டுமல்ல, அனைத்து அமைச்சர்களுமே மீறியிருக்கின்றனர். அனைத்தையும் விட பெரிய விதிமீறல், விஜயபாஸ்கர் மூலமாக பணப்பட்டுவாடா நடந்திருப்பதுதான். ஒருமாநிலத்தின் முதல்வரும் பணப்பட்டுவாடா தொடர்பான ஆவணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதால், தேவைப்பட்டால் அவரையும் விசாரிப்போம்" என்றனர்.

            அமைச்சர் விஜயபாஸ்கர்                                              

ஏற்கெனவே தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டிலும், கோட்டையில் உள்ள அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவருடைய அறையில் இருந்தபோதே இப்படி ஒருசோதனை நடத்தப்பட்டு, தமிழகத்தையே தலைகுனிய வைத்தது. இந்நிலையில், முதல்வர் பழனிசாமி வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவார்களா அல்லது அவரை நேரில் அழைத்து விசாரிப்பார்களா என்பது தெரியவில்லை. எது நடந்தாலும், அதுவும் தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாகத்தான் இருக்கும். மொத்தத்தில் 2016-17-ம் ஆண்டு, தமிழகத்தை பல விதங்களிலும் அவமானப்படுத்திய ஆண்டாகவே அமைந்து விட்டது!

http://www.vikatan.com/news/tamilnadu/86119-it-department-plans-to-enquire-edapadi-palaniswamy.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.