Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரத், ராதிகாவிடம் வரித்துறை துருவி துருவி விசாரணை

Featured Replies

சரத், ராதிகாவிடம் வரித்துறை
துருவி துருவி விசாரணை
 
 
 

நடிகை ராதிகா மற்றும் கணவர் சரத்குமாரிடம், வருமான வரித்துறை அதிகாரிகள், ஐந்து மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர்; பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமியிடம், ஏழு மணி நேரம், துருவித் துருவி விசாரணை நடத்தினர்.

 

Tamil_News_large_1750247_318_219.jpg

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் குவாரி தொழிலில், பங்குதாரராக இருந்து வந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, நண்பர்கள், உதவியாளர்கள் வீடுகள், தொழில்
நிறுவனங்களிலும், 7ம் தேதி வருமான வரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, ஆர்.கே.நகர் தொகுதியில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் சிக்கின; மேலும், 5 கோடி ரூபாய் ரொக்கமும் சிக்கியது.

அதே நேரத்தில், தினகரனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், விஜயபாஸ்கர் மூலம், 7 கோடி ரூபாய் வாங்கியதாக தகவல் பரவிய தால், கொட்டிவாக்கத்தில் உள்ள அவரது வீட்டி லும் சோதனை நடந்தது. சரத்குமார், விஜய பாஸ்கர், சிட்லபாக்கம் ராஜேந்திரன் ஆகியோர், 10ம் தேதி, வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகி, விளக்கம் அளித்தனர்.

நேற்று முன்தினம், சரத்குமாரின் மனைவி ராதிகாவுக்கு சொந்தமான, 'ரேடான் மீடியா ஒர்க்ஸ்' நிறுவனத்தில், நேற்று முன்தினம், 10 மணி நேரம் சோதனை நடந்தது.அங்கு அழைத்து வரப்பட்ட சரத், மீண்டும் விசாரிக் கப்பட்டார். இந்நிலையில் சரத்குமாரும், அவர் மனைவி ராதிகாவும், விசாரணைக்கு ஆஜராயினர்.

 

கீதாலட்சுமி ஆஜர் :


இதனிடையே, ஏப்., 7ல், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான கீதாலட்சுமி, விசாரணைக்கு, 10ம் தேதி வரவில்லை. அவர், நீதிமன்றத்தை அணுகி, மனு தள்ளுபடியானதால், நேற்று விசாரணைக்கு ஆஜரானார்.

முற்பகல், 11:00 மணிக்கு, சென்னை, நுங்கம்பாக்கத் தில் உள்ள, புலனாய்வு அலுவலகத் தின், முதல் தளத்தில் விசாரிக்கப்பட்டார். அவர், ஏழு மணிநேர விசாரணைக்குப் பின், வீடு திரும்ப அனுமதிக் கப்பட்டார். இதுபோல், மாலை, 3:00 மணிக்கு, சரத்குமார், ராதிகா ஆகியோர் ஒரே வாகனத்தில், விசாரணைக்கு வந்தனர். அவர்களி டம், இரவு, 8:30 மணிக்கு பிறகும் விசாரணை தொடர்ந்தது.
 

ரூ.32 லட்சம் லஞ்சம்?


வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தினகரன் தரப்பில் இருந்து, சரத்குமாருக்கு, 7 கோடி ரூபாய் தரப்பட்டது குறித்தும், எந்த வகையில் பரி வர்த்தனை நடந்தது என்பது குறித்தும், சரத்குமார், ராதிகா இருவரிடமும் விசாரணை நடந்தது. அது போல், பணி நியமனம் மற்றும் மருந்து வாங்கிய தில், துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு பணம் கை மாறியது தொடர்பான, நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்ததால், அவரது வீட்டில் சோதனை நடந்தது.

எம்.ஜி.ஆர்., பல்கலைக்கழகத்தில், அலுவலக உதவியாளர் பணி நியமனத்திற்கு, 32 லட்சம் ரூபாய் கைமாறியது குறித்தும், விசாரணை நடத்தப்பட்டது. மூன்று பேரும் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப் படுவர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஆய்வு நிறைவு


புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில், உள்ள விஜயபாஸ்கருக்கு சொந்தமானகுவாரியில், மத்திய பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், வருமான வரித் துறையினர் இணைந்து, இரண்டு நாளாக ஆய்வு செய்தனர். அது நிறைவடைந்த நிலையில், ஆய்வறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்று அல்லது நாளை, வருமான வரித்துறையிடம் அறிக்கை ஒப்படைக்கப்படும் என, தெரிகிறது.

 

 

போலீசில் புகார்



பணி செய்ய விடாமல் தடுத்ததாக, அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு மற்றும் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது, வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசில் புகார் செய்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் கூறியதாவது: கடந்த, 7ம் தேதி, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி னோம். அப்போது, அமைச்சர்கள் காமராஜ், ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு மற்றும் முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் ஆகியோர், அத்துமீறி உள்ளே நுழைந்து, விசாரணைக்கு இடையூறு செய்தனர். அதனால், அவர்கள் மீது, 'இ - மெயில்' வாயிலாக, 7ம் தேதி, காவல் துறைக்கு புகார் அனுப்பினோம். அதன் தொடர்ச்சியாக, சென்னை கமிஷனர் அலுவலகத்தில், நேற்று நேரிலும் புகார் அளித்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
 

ராதிகா ஒப்புதல்?


வருமான வரித்துறையினர் நடத்திய விசாரணையில், ரேடான் நிறுவனத்தில், பல கோடி வருமான வரி ஏய்ப்பு செய்ததை ராதிகா, ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியது.

இது குறித்து, ராதிகாவிடம் கேட்டபோது, ''நான், 2016 - 17க்கான கணக்கு மட்டுமே, தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. வரி ஏய்ப்பு செய்ததாக ஒப்புக் கொள்ளவில்லை,'' என்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1750247

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.