Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இந்த 16 எம்.எல்.ஏக்களும் என் கட்டுப்பாட்டில்!' -கார்டனை கதிகலங்க வைத்த விஜயபாஸ்கர்

Featured Replies

'இந்த 16 எம்.எல்.ஏக்களும் என் கட்டுப்பாட்டில்!'  -கார்டனை கதிகலங்க வைத்த விஜயபாஸ்கர்

 
 

விஜயபாஸ்கர்

'தமிழக அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கரை நீக்குங்கள்' என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்துப் போராடிவருகின்றனர் மூத்த அமைச்சர்கள். ' டெல்லியின் கோபத்தில் இருந்து தப்பிக்க வேண்டுமானால் இது ஒன்றுதான் ஒரே வழி என தினகரனிடம் எடுத்துக் கூறியும், விஜயபாஸ்கரைக் காப்பாற்றும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறது கார்டன்' என்கின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை மையமாக வைத்து, ஆளும்கட்சி வட்டாரத்தை அதிர வைத்துக்கொண்டிருக்கிறது வருமான வரித்துறை. கடந்த 7-ம் தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் வருமான வரித்துறை அதிகாரிகள் நுழைந்தனர். இந்த ஆய்வில், வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்பட்டதற்கான 89 கோடி ரூபாய்க்கான ஆதாரத்தைக் கைப்பற்றினர். ' அத்தனைக்கும் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன' என அமைச்சர் தரப்பில் இருந்து கூறினாலும், முறையான கணக்கு வழக்குகளை இன்னும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவில்லை. "விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் மூலம் ஏழு அமைச்சர்கள் வரையில் வகையாக சிக்கியுள்ளனர். தலைமைச் செயலகத்துக்குள் நுழைந்ததுபோல, 'முதலமைச்சர் அலுவலகத்தை நோக்கி விசாரணை வளையம் நெருங்கிவிடக் கூடாது' என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் உள்ளனர். தினகரனுக்கு ஆதரவாகச் செயல்படும் தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் காமராஜ், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் மீது வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின்பேரில், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஆளும்கட்சி அமைச்சர்களுக்கு விடுக்கப்பட்ட நேரடியான சவால்தான். மத்திய அரசின் ஒரே நோக்கம், விஜயபாஸ்கர் அமைச்சர் பதவியில் நீடிக்கக் கூடாது என்பதுதான்" என விவரித்த அ.தி.மு.க அம்மா அணி நிர்வாகி ஒருவர், 

தினகரன்"ஆர்.கே.நகர்த் தொகுதி இடைத்தேர்தலில் விநியோகிக்கப்பட்ட பணம் தொடர்பாகத்தான், வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக கட்சித் தொண்டர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. இப்போது நடக்கும் விசாரணைகள் முழுக்க சேகர் ரெட்டி தொடர்பானவை. அவரது சுரங்க நிறுவனத்தில் அமைச்சர்கள் பலரும் சைலண்ட் பார்ட்னர்களாக இருக்கின்றனர். இதுதொடர்பாக டிசம்பர் மாதமே சேகர் ரெட்டியிடம் வாக்குமூலம் வாங்கிவிட்டார்கள். இந்த வாக்குமூலத்தை வைத்துக் கொண்டுதான் தமிழக அரசை மிரட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. 'அனைத்தையும் பறித்துக்கொண்டு தெருவில் விடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள். நாம் தேவையில்லாமல் பகைத்துக்கொள்ள வேண்டாம்' என தினகரனுக்கு நெருக்கமான மன்னார்குடி உறவுகளும் பேசியிருக்கின்றனர். நேற்று தினகரனை, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.

அவர்களிடம் பேசிய தினகரன், 'கொஞ்ச நாளில் அனைத்தும் சரியாகிவிடும். விஜயபாஸ்கரைத் தேவையில்லாமல் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டாம். நாம் பேசித் தீர்த்துக்கொள்வோம்' என சமாதானம் பேச, ' நிலைமை கைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. உடனடியாக அவரைப் பதவியில் இருந்து தூக்குங்கள்' எனக் குரலை உயர்த்த, 'அவர் ஊருக்குப் போயிருக்கிறார். சென்னை வந்ததும் பேசிக் கொள்வோம்' எனப் பதில் சொல்லியிருக்கிறார். இந்த விளக்கத்தை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கொங்கு மண்டல அமைச்சர்கள் ஒருவரும் ரசிக்கவில்லை. இதன்பிறகு, விஜயபாஸ்கரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் கார்டன் எடப்பாடி பழனிசாமிநிர்வாகிகள். அவர்களிடம் கொந்தளித்த விஜயபாஸ்கர், 'என்னை நீக்கச் சொல்லும் அளவுக்கு வந்துவிட்டார்களா, நான் யார் என்பதைக் காட்ட ஐந்து நிமிடம் போதாது. இதோ நான் சொல்லும் பட்டியலில் உள்ள 16 எம்.எல்.ஏக்களைத் தொடர்பு கொண்டு பேசுங்கள். அவர்கள் அனைவரும் என் கட்டுப்பாட்டில் உள்ளனர். என்னைத்தாண்டி அவர்கள் செல்லமாட்டார்கள். ஆட்சி அதிகாரம் நீடிக்க வேண்டும் என்று எடப்பாடி உண்மையிலேயே விரும்புகிறாரா' என ஆவேசப்பட்டிருக்கிறார். அவரை சமாதானப்படுத்திவிட்டு, நடக்கும் நிலவரங்களை விவரித்துள்ளனர். அவருடைய கோபத்தை யாராலும் தணிக்க முடியவில்லை" என்றார் விரிவாக. 

"கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தபோது, அடியாட்கள் சகிதம் பாதுகாப்பு வளையத்தை அமைத்தவர் விஜயபாஸ்கர். 'எங்கள் அணிக்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் வருவார்கள்' என ஓ.பன்னீர்செல்வம் பேசிக்கொண்டிருந்தாலும், அவரால் பெரும்பான்மையைக் காட்ட முடியவில்லை. பன்னீர்செல்வத்தைத் தேடி வந்த எம்.பிக்களும், மத்திய அரசின் சில அமைச்சர்கள் கொடுத்த உறுதிமொழிக்காக வந்தவர்கள். இப்போது சின்னத்தை வைத்துக் கொண்டு பன்னீர்செல்வம் தரப்பினர் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். துணைப் பொதுச் செயலாளராக தினகரன் பதவிக்கு வந்த நாளில் இருந்து, 'பன்னீர்செல்வம், பாண்டியராஜன் தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம்' எனப் பேசி வந்தவர், நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டுவிட்டு பேசும்போது, ' கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போனவர்கள், தங்கள் தவறுகளை உணர்ந்து திருந்தி வந்தால் ஏற்றுக்கொள்வோம்' என ஒரு சிறு மாற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்கள் கட்சிக்குள் வந்தால், பழைய மரியாதையோடு வலம் வரலாம். ஆனால், மறுபடியும் முதலமைச்சர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்கும் எண்ணத்தில் தினகரன் இல்லை" என்கின்றனர் தலைமைக் கழக நிர்வாகிகள். 

இரட்டை இலையை மீட்பது பிரதானமான பிரச்னை என்றாலும், விஜயபாஸ்கரை வழிக்குக் கொண்டு வரும் வித்தை தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'அமைச்சரவையில் இருந்து அவர் நீக்கப்பட்டால் மட்டுமே, எடப்பாடி பழனிசாமியின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி அகலும்' என்கின்றனர் பா.ஜ.க நிர்வாகிகள். 

http://www.vikatan.com/news/tamilnadu/86508-senior-minister-demands-resignation-of-tn-health-minister-vijayabhaskar.html

  • தொடங்கியவர்

"உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்திடாத சசிகலா அணியினர்!"  - அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன் #VikatanExclusive

 
 

ஓ.பன்னீர்செல்வம் சசிகலா

இரட்டை இலைச் சின்னத்தை மீட்க, சசிகலா அணியின் நிர்வாகிகளிடம் உறுதிமொழிப் பத்திரங்களில் கையெழுத்துப் பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான நிர்வாகிகள் கையெழுத்துப்  போட மறுத்துவிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது, சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கிவிட்டது. இதனால், சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகிய இரண்டு தரப்புகளிலும் சின்னத்தை மீட்டெடுக்க கடும் முயற்சிகள் நடந்துவருகின்றன. இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணையத்திடம் பெரும்பான்மையை நிரூபிக்க அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் உறுதிமொழிப் பத்திரத்திரங்களில் கையெழுத்துப் பெற்றுவருகின்றனர். 20, 50, 100 ரூபாய் மதிப்பிலான 'ஸ்டாம்ப் பேப்பர்'களில் பெறப்படும் நிர்வாகிகளின் கையெழுத்துக்களை, வரும் 17-ம் தேதிக்குள் கட்சித் தலைமையிடம் கொடுக்கும்படி, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சின்னத்தை மீட்டெடுத்துவிட்டால், அனைத்துப் பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளிவைத்துவிடலாம் என்று கருதினர், சசிகலா அணியினர். 
இந்தச் சூழ்நிலையில், வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரால், சசிகலா அணியில் கடும் களேபரம் ஏற்பட்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டையொட்டி, டி.டி.வி.தினகரனைச் சந்திக்க  அவரது சென்னை பெசன்ட்நகர் வீட்டுக்குச் சென்றனர் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள். அப்போது, அமைச்சர் விஜயபாஸ்கர் விவகாரம் தொடர்பாக சில அமைச்சர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களை கட்சியின் மூத்த நிர்வாகிகள் சமரசப்படுத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமிட்டிருந்தார் டி.டி.வி.தினகரன். ஆனால், அமைச்சர்களின் வாக்குவாதம் காரணமாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கட்சி உள்வட்டாரங்கள் தெரிவித்தன.

 இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா அணியினர், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க அனைத்து நிர்வாகிகளிடமும் சசிகலாஉறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெற, கட்சித் தலைமை உத்தரவிட்டது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி கடைசிநாள் என்று தெரிவித்தனர். அதற்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் என அனைவரும் சென்றுவிட்டதால், உறுதிமொழிப் பத்திரங்களில் கையெழுத்துப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டதும், உறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெற ஏப்ரல்-17 கடைசிநாள் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இதனால், அவசர அவசரமாக கையெழுத்துப் பெறும் பணிகளில் மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர். 

இதற்காக, தமிழகம் முழுவதும் ஆலோசனைக் கூட்டத்தை மாவட்டச் செயலாளர்கள் நடத்தினர். கூட்டத்தில், நிர்வாகிகளிடம் உறுதிமொழிக் கையெழுத்துப் பெற முயன்றபோது, பெரும்பாலானவர்கள் கையெழுத்திட மறுத்துவிட்டனர். அவர்களிடம் மாவட்ட நிர்வாகிகள் பேச்சுவார்தை நடத்தியும் கையெழுத்துப் போடாமல் கலைந்துசென்றுவிட்டனர். கட்டாயப்படுத்தி யாரிடமும் கையெழுத்துப் பெற முயற்சிக்கவில்லை. இதனால், விருப்பம் உள்ளவர்களிடம் மட்டும் கையெழுத்துப் பெற்று, கட்சித் தலைமைக்கு அனுப்பி உள்ளோம். கையெழுத்துப் போட விரும்பாத நிர்வாகிகளின் பட்டியல்களையும் கட்சித் தலைமைக்குத் தெரிவித்துள்ளோம். இதைப் பார்த்து, கட்சித் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது. இதனால், எப்படியாவது, அனைவரிடமும் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்துப் பெற்றுவிடுங்கள் என்று கட்சித்தலைமை மீண்டும் தெரிவித்துள்ளது. இதனால், கையெழுத்துப் போடாத நிர்வாகிகளை மாவட்டச் செயலாளர்கள் தனியாகச் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தினர்.  அதன்பிறகு, சில நிர்வாகிகள் கையெழுத்துப் போட்டனர். இருப்பினும், எங்கள் அணியில் உள்ள அனைவரும் கையெழுத்துப் போடவில்லை. அத்தகையவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. அப்போது, கையெழுத்துப் போட மறுப்பு தெரிவித்தவர்களுக்கு சில உறுதிமொழி தொடர்பான உத்தரவாதத்தை கட்சித் தலைமை கொடுத்துள்ளது.  அதன்பிறகு, அவர்கள் கையெழுத்துப் போடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் அணியில் உள்ள அனைவரும் கையெழுத்துப் போட்டால்தான், சின்னத்தை மீட்டெடுக்க முடியும். கையெழுத்துப் போட மறுப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், சின்னத்தை எப்படி மீட்டெடுக்க முடியும் என்ற கவலையில் கட்சித்தலைமை உள்ளது"என்றனர். 

டி.டி.வி.தினகரன்இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்திடாத நிர்வாகிகளைக் கவனிக்கும்படி கட்சித் தலைமை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான 'சி' க்கள் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. உறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெற்றவுடன், அதற்குரிய கவனிப்பை உடனடியாக கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால், சில மாவட்டங்களில் அதை சரியாகச் செய்யவில்லை. அதனால்தான், நிர்வாகிகள் கையெழுத்திட மறுப்பு தெரிவிக்கின்றனர். ஒன்றியப் பதவியில் இருப்பவர்களுக்கு, 'எல்'களும், நகர, மாவட்டப் பதவிகளில் இருப்பவர்களுக்கு அதைவிடக் கூடுதல் 'எல்'கள் என்று நிர்ணயம்செய்யப்பட்டுள்ளது. இதனால், எங்கள் அணியில் உள்ளவர்கள் அனைவரும் உறுதிமொழிப்பத்திரத்தில் கையெழுத்திடுவார்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது. இதற்கிடையில்... வருமானவரி சோதனை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தம் உள்ளிட்டவையால் உறுதிமொழிப்பத்திரங்களில் கையெழுத்துப் பெறும் பணியில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால்தான், தேர்தல் ஆணையத்திடம் காலஅவசகாசம் கேட்டுள்ளோம். தேர்தல் ஆணையத்திடம் மெஜாரிட்டியை நிரூபித்து, சின்னத்தை மீட்டெடுப்போம். அதற்கான அனைத்துப் பணிகளும் துரிதமாக நடந்துவருகின்றன" என்றார். 

http://www.vikatan.com/news/tamilnadu/86515-sasikala-team-never-signed-papers-dinakaran-in-shock.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.