Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பதவி விலகத் தயங்கோம்'

Featured Replies

'பதவி விலகத் தயங்கோம்'
 
 

article_1492324638-Mavai.jpgஎஸ்.நிதர்ஷன்

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலகுவது தான் தமிழ் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வாக இருக்குமென்றோ அல்லது தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வை ஏற்படுத்துவதற்காக  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதவி விலக வேண்டுமென்றோ இருந்தால், நாங்கள் அதனைச் செய்யத் தயங்க மாட்டோம். பதவி விலகுவதென்பது எங்களுக்கு புதிய விடயமல்ல. " என்று, தமிழரசுக் கட்சியின் தலைவரும் த.தே.கூவின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

சமகால நிலமைகள் தொடர்பில் மாவை சேனாதிராசா எம்.பியிடம் நேற்றுச் சனிக்கிழமை (15) வினவிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில், நாடாளுமன்றத்தில் நாங்கள் எல்லோரும் பதவி விலக்கியிருந்தோம். ஆகவே, பதவி விலகுவதென்பது எமக்குப் புதிய விடயமல்ல என்று, எமது கட்சித் தலைவர் சம்பந்தனும் கூறியிருக்கிறார்.

ஆகவே, பதவி விலகுவதன் மூலம் மக்களுடைய பிரச்சனைக்குத் தீர்வைக் காணலாம் அல்லது தீர்மானங்களை நிறைவேற்றலாம் அல்லது எங்கள் இலக்குகளை நாங்கள் அடையலாம் என்றதொரு தேவை ஏற்படுமிடத்து நாங்கள் அதைச் செய்வதற்குத் தயங்கமாட்டோம்.

அதனைச் சர்வதேச சமூகத்தோடு இணைந்து தான் அது தொடர்பான தீர்மானங்களை எடுப்போம். அப்படிப் பதவி விலகுவதென்பது தான் எங்களுடைய பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்குமென்றால், நாங்கள் அதனைச் செய்யத் தவறமாட்டோம். ஏற்கெனவே நாங்கள் அந்த விடயங்களில் அப்படிச் செய்து காட்டியிருக்கிறோம். ஆகையினால், பதவி விலகல் என்பது எங்களுக்கொன்றும் புதிய விடயமல்ல.

இதேவேளை, தற்போது எமது மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்தப் பிரச்சனைகள் தீர்க்கப்படுமென்ற நம்பிக்கையுடனே மக்கள் விரும்பி வாக்களித்து ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். ஆனால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் பெரும் ஏமாற்றத்தையே மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த தாமாகவே போராட்டங்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டங்களிலும் தீர்வு கிடைக்காது தொடர்வதால் மக்கள் தங்களுடைய விரக்தியை வெளிப்படுத்துகின்றனர்.

குறிப்பாக மாதக் கணக்காக போராடி வருகின்ற மக்களுக்கு அதற்கான தீர்வு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தினால் அம்மக்கள் பிரதிநிதிகளை பதவி விலகச்சொல்லியிருப்பார்கள் என்பதும் எங்களுக்குத் தெரியும்.

இருந்தும் நாங்கள் போராட்டங்களின் மத்தியில் அவர்களுடன் பேசுகின்ற பொழுது பல விடயங்களை விளங்கிக் கொண்டனர். நாங்கள் தொடர்ந்தும் அவர்களுக்காக எடுக்க வேண்டிய அத்தனை நடவடிக்கைகளையும் தற்போதும் எடுத்தே வருகிறோம். அதாவது, எமது மக்களது போராட்டங்கள் தொடராது அவர்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்" என்றார்.

- See more at: http://www.tamilmirror.lk/194812/-பதவ-வ-லகத-தயங-க-ம-#sthash.Q4NkBsRK.dpuf
  • தொடங்கியவர்
அரசு மீண்டும் ஏமாற்றினால் பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து கூட்டமைப்புத் தீர்மானத்தை எடுக்கும் - புங்குடுதீவில் மாவை எம்.பி. தெரிவிப்பு
 
 
 
அரசு மீண்டும் ஏமாற்றினால் பன்னாட்டுச் சமூகத்துடன் இணைந்து  கூட்டமைப்புத் தீர்மானத்தை எடுக்கும் - புங்குடுதீவில் மாவை எம்.பி. தெரிவிப்பு
“2 வருட கால­அ­வ­கா­சம் இலங்கை அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய உறு­தி­மொ­ழி­களை நிறை­வேற்ற வழங்­கப்­பட்ட இறு­திச் சந்­தர்ப்­ப­மா­கும். அரசு எங்­களை ஏமாற்ற நினைத்­தால் அது உலக நாடு­களை ஏமாற்­றும் செய­லா­கவே அமை­யும். அவ்­வா­றான நிலமை ஏற்­பட்­டால்  நாங்­கள் வெளி­நா­டு­க­ளு­டன்  இணைந்து எவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுப்­போம் என்று எமக்­கும் பன்­னாட்டு சமூ­கத்­துக்­கும்­தான் தெரி­யும்”
 
இவ்­வாறு தமிழ் அர­சுக் கட்­சி­யின் தலை­வ­ரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா தெரி­வித்­தார்.
 
புங்­கு­டு­தீவு கலைப்­பெ­ரு­மன்­றத்­தின் அம்­ப­ல­வா­ணர் கலை­ய­ரங்க திறப்­பு­வி­ழா­வின் இரண்­டாம் நாள் நிகழ்வு நேற்­றை­ய­தி­னம்  சட்­டத்­த­ரணி மு.நேமி­நா­தன் தலை­மை­யில் நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,
 
கிடைத்­துள்ள கால அவ­கா­சத்­தில் இலங்கை அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வேண்­டும்.அத­னை­வி­டுத்து மீண்­டும் இந்த அரசு எங்­களை ஏமாற்ற நினைத்­தால், நாம் வெளி­நா­டு­க­ளு­டன் இணைந்து இரா­ஜ­தந்­திர ரீதி­யில் எவ்­வா­றான தீர்­மா­னத்தை எடுக்­க­வுள்­ளோம் என பன்­னாட்­டுச் சமூ­கம் நன்கு அறி­யும்.
 
எமது மக்­க­ளின் விடு­த­லைக்­காக இலட்­சக்­க­ணக்­கான உயிர்­களை இழந்து விட்­டோம். தமிழ் மக்­க­ளின் காணி­களை இன்­றும் இரா­ணு­வம் கைய­கப்­ப­டுத்தி வைத்­துள்­ளது. காணி விடு­விப்­புத் தொடர்­பாக இன்­றை­ய­தி­னம் பாது­காப்புத் தரப்­பு­டன் முக்­கிய கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­ள­வுள்­ளோம்.
 
புங்­கு­டு­தீவு பிர­தே­சத்தை நாம் மறக்­க­மு­டி­யாத அள­வுக்கு சில சம்­ப­வங்­கள் மற்­றும் அந்த மக்­க­ளின் உத­வி­கள் போன்­றன காணப்­ப­டு­கின்­றன. கடந்த காலங்­க­ளில் நாம் இந்தப் பிர­தே­சத்­துக்கு வந்­தி­ருந்த போது ஆயு­தக் குழு ஒன்று எம்மை துப்­பாக்­கி­க­ளால் சுட்­டும், வாள்­க­ளால் வெட்­டி­யும் சரித்­தது. அந்தக் கொடூர சம்­ப­வத்­தால் இரண்டு உயிர்­களை  நாம் இழந்­தோம்.
 
குரு­திக் கறை­யு­டன் படு­கா­யத்­து­டன் இருந்த எங்­களை இந்த மக்­கள்­தான் காப்­பாற்­றி­னார்­கள்.அதனை நாம் எந்­தக் காலத்­தி­லும் மறக்க மாட்­டோம். எனது விடு­த­லைப் போராட்ட காலத்­தில் நான் சிறைக்குச் சென்ற போதும் என்­னு­டன் இந்­தப் பிர­தே­சத்தை சேர்ந்த சிலர் என்­னு­டன் இருந்­த­னர்.
 
நாங்­கள் சிறை­யில் இருந்து விடு­த­லை­யாகி வெளியே வரும்­போது இந்த மக்­கள் தங்­க­ளின் உட­லில் காயத்தை ஏற்­ப­டுத்தி அவர்­க­ளின் குரு­தியை எமது நெற்­றி­யில் பூசி­னார்­கள். அவ்­வா­றான போராட்­டத்­துக்கு முக்­கிய பங்­காற்­றிய மக்­கள்­தான் இந்தப் பிர­தேச மக்­கள்.
 
இவ்­வாறு எமது விடு­த­லைக்­காக பல போராட்­டங்­களை மேற்­கொண்­டி­ருந்த காலத்­தில் ஆயு­தம் ஏந்­திப் போராட வேண்­டிய நிலமை உரு ­வா­கி­ய­தால் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்பு உரு­வா­னது. அதன் ஊடா­க­வும் அர­சி­யல் ரீதி­யா­க­வும் என இரண்­டாக நாம் எமது உரி­மை­களை வென்­றெ­டுக்க போரா­டி­னோம். எனி­னும் ஆயு­தப் போராட்­டம் மௌனிக்க பட்­ட­பின்­னர் நாம் அர­சி­யல் ரீதி­யாக உரி­மை­களை வென்­றெ­டுக்க போரா­டி­வ­ரு­கின்­றோம்.
 
 ஆனால் இலட்­சக்­க­ணக்­கான உயிர்­களை இழந்து ஜன­நா­யக ரீதி­யில் நாங்­கள் போரா­டி­வ­ரும் நிலை­யில் எமது சமூ­கம் போதைக்கு அடி­மை­யாகி வரு­கின்­றது.போதை­யின் அடி­மைத்­த­னத்­துக்கு ஒரு உதா­ர­ண­மாக இந்த பிர­தே­சத் திலும் ஒரு கொடூ­ர­மான சம்­ப­வம் நடந்­தே­றி­யது அனை­வ­ரும் அறிந்­தி­ருப்­பீர்­கள். இந்­தப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த பாட­சாலை மாண­வியை அவ ­ளது உற­வி­னர்­களே கூட்டு பலாத்­கா­ரம் செய்­த­தா­கக் குற்­றஞ்­சாட்டி சிலர் கைது செய்­யப்­பட்டு வழக்­கும் நடை­பெற்று வரு­கின்­றது. 
 
எமது சமூ­கத்­தில் உற­வி­னர்­க­ளா­லேயே இவ்­வா­றான கொடூ­ரம் நடை­பெற்­றுள்­ளது என்­பதைப் பார்க்­கும்­போது எமது சமூ­கம் எந்­த­ள­வுக்கு போதைக்கு அடி­மை­யாகி வரு­கின்­றது என்­பதை உணர முடி­கின்­றது.
எமது மாகா­ணத்­தில் அதி­க­ள­வான போதைப்­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­ப­டு­கி­றன.
 
அவை யாருக்கு எங்கு செல்­கின்­றன என்­பது கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்­கின்­றது. எமது பிள்­ளை­கள் என்ன செய்­கின்­ற­னர் என்று பெற் றோர்­க­ளும் ஆசி­ரி­யர்­க­ளும் அறிந்­தி­ருக்க வேண்­டி­யது கட்­டா­ய­மா­கும்.
போருக்கு முன்­ன­ரும் போர்க்­கா­லத்­தி­லும் கல்­வி­யில் கொடி­கட்­டிப் பறந்த நாம் தற்­போது பின்­ன­டைவைச் சந்­தித்­துள்­ளோம்.கடந்த ஜி.சீ.ஈ. சாதா­ரண தரப் பரீட்சை முடி­வு­கள் ஓர­ளவு திருப்­தி­யான முடி­வு­களைத் தந்­தா­லும் கல்­வி­யில்  மேலும் உயர வேண்­டிய தேவை இருக்­கின்­றது.
 
பாட­சா­லை­க­ளில் ஆசி­ரி­யர்­கள் பத்­தாம் தரத்­துக்கு மாண­வன் வரும்­போதே அவர்­கள் உயர்­த­ரத்­தில் எந்த துறையை தெரிவு செய்ய வேண்­டும், பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­குச் சென்று எந்­தத் துறையைக் கற்க வேண்­டும் என ஆலோ­ச­னையை வழங்க வேண்­டும்.
 
எமது பிர­தே­சத்­தில் உள்ள பல்­க­லைக்­க­ழ­கத்­தி­லி­ருந்து வெளி­யே­று­வோ­ரில் 65 வீத­மா­னோர் கலைப் பிரிவுப் பட்­ட­தா­ரி­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­ற­னர். இவ்­வா­றான நிலமை இருந்­தால் எமது பிர­தே­சத்­துக்கு தேவை­யான மருத்­து­வர்­கள், பொறி­யி­ய­லா­ளர்­கள் போன்­ற­வர்­களை எவ்­வாறு நிய­மிப்­பது - என்­றார்.
 
இந்த நிகழ்­வில் பேரா­சி­ரி­யர் கா.குக­பா­ல­னால் எழு­தப்­பட்ட தீவ­கத்­தின் தொன்­மை­யும் மேன்­மை­யும் என்ற நூல் வெளி­யி­டப்­பட்­டது. இந்த நூலை யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக வணி­க­பீ­டத்­தின் பீடா­தி­பதி பேரா­சி­ரி­யர் வேல்­நம்பி வெளி­யிட்டு வைத்­தார்.

http://www.onlineuthayan.com/news/25601

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.