Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் மீது வழக்குப் பதிவு!

Featured Replies

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம்: தினகரன் மீது வழக்குப் பதிவு!

 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் போர்க் கொடி தூக்கியதை அடுத்து, அந்தக் கட்சி இரண்டாகப் பிரிந்தது. பிறகு, நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா, பன்னீர்செல்வம்  அணிகள், தனித்தனியாகப் போட்டியிட்டன.

TTV Dinakaran


இதையடுத்து, இரு அணியினரும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோர, இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்துக்காக, அ.தி.மு.க அம்மா அணியின் தினகரனிடமிருந்து ரூ. 50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல்செய்துள்ளது. இதையடுத்து, லஞ்சம் கொடுத்த குற்றத்துக்காக, டி.டி.வி தினகரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் வழக்குப்பதிவுசெய்துள்ளது.

http://www.vikatan.com/news/india/86668-dinakaran-gave-bribery-for-two-leaves-symbol-broker-arrested.html

  • தொடங்கியவர்

தினகரனை சிக்க வைத்த மா.ஃபா.பாண்டியராஜன்! - சுகேஷ் சந்தர் சிக்கிய பின்னணி #VikatanExclusive

 

தினகரன்

ரட்டை இலைச் சின்னத்தைக் காப்பாற்ற ஐம்பது லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்த புகாரில் நடவடிக்கையை எதிர்கொள்ள இருக்கிறார் டி.டி.வி.தினகரன். 'தேர்தல் ஆணையத்தைச் சரிக்கட்ட என்னென்ன வழிகளில் தினகரன் தரப்பினர் இறங்குவார்கள் என்பதை அறிந்து வலைவிரித்தது மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாகத்தான் இடைத்தரகர் சுகேஷ் சந்தர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் புகாரின்பேரில் தினகரன் கைது செய்யப்படவும் வாய்ப்பு அதிகம்' என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில். 

‘அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றது செல்லாது’ என அறிவிக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்தார் சசிகலா புஷ்பா எம்.பி. இதே புகாரை பன்னீர்செல்வம் ஆதரவு அணியின் மைத்ரேயன் எம்.பியும் கொடுத்தார். இதன்மீதான சுகேஷ் சந்தர்விசாரணைகள் வேகம் எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி வைத்தது தேர்தல் ஆணையம். இதனையடுத்து, ‘உண்மையான அ.தி.மு.க நாங்கள்தான்' என நிரூபிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கையெழுத்து வாங்கும் வேலைகளில் அமைச்சர்களைக் களமிறக்கினார் தினகரன். இதுதொடர்பாக, இன்று தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்க இருந்த சூழலில், லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார் டி.டி.வி.  “பன்னீர்செல்வம் தனி அணியாகக் கிளம்பிய நேரத்தில், தேர்தல் ஆணையத்தை சமாதானப்படுத்தும் வேலைகளில் கார்டனில் உள்ளவர்கள் இறங்கினர். ‘டெல்லியில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம்' என சசிகலா தரப்புக்கு நம்பிக்கை அளித்தார் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. ஆனால், அவரால் சிறிதளவுகூட காய் நகர்த்த முடியவில்லை. காரணம். பிரதமர் அலுவலகம் அ.தி.மு.க மீதான கண்காணிப்பை பலப்படுத்தியதுதான்" என விவரித்த பன்னீர்செல்வம் அணியின் ஆதரவாளர் ஒருவர், 

பாண்டியராஜன்"கூவத்தூர் ரிசார்ட்டுக்கு அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் அழைத்துச் செல்லப்பட்ட நாளில், சசிகலா அணிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்தார் அப்போது பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த பாண்டியராஜன். அந்த நேரத்தில் டெல்லியில் நடந்த அரசு தொடர்பான சில கூட்டங்களுக்கும் அவர் சென்றுவந்தார். டெல்லி தொடர்புகளை அவர் எளிதாகக் கையாண்டதால், அவரை நம்பி சில பொறுப்புகளையும் ஒப்படைத்திருந்தனர் சசிகலா தரப்பினர். அப்போது இடைத்தரகர்கள் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த தகவல்களையும் அறிந்து வைத்திருந்தார் பாண்டியராஜன். 'தேர்தல் ஆணையத்தை சரிக்கட்டிவிட்டோம். நமக்கு எந்தச் சிக்கலும் இருக்காது. நமக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வரும்' என சசிகலா நம்பும் அளவுக்குக் காரியங்களும் வேகம் எடுத்தன. இந்தநேரத்தில், பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார் பாண்டியராஜன். இதுவே, தினகரன் ஆட்களுக்குக் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியது. 'டெல்லியில் யார் மூலம் காரியம் சாதிக்கிறார்கள்? என்னென்ன வேலைகளைத் தினகரன் தொடங்கியிருக்கிறார் என பிரதமர் அலுவலகத்துக்கு நெருக்கமான புள்ளிகளிடம் விரிவாக எடுத்துக் கூறியது பன்னீர்செல்வம் அணி. இதையடுத்து, இடைத்தரகர்களைக் கண்காணிக்கத் தொடங்கியது மத்திய உளவுப்பிரிவு.

இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரன் தரப்பில் இருந்து பேசப்பட்ட பெரும் தொகை சம்பந்தமான விவரங்களையும் கையில் எடுத்தது பி.எம்.ஓ அலுவலகம். பத்து நாட்களுக்கு முன்பே இந்த விவகாரத்தை வெளியில் கொண்டு வந்திருக்க முடியும். தேர்தல் ஆணையத்தில் சசிகலாவிசாரணை நடக்கும் நாளில் வெளிவந்தால், தினகரன் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்க முடியும் என்பதால்தான், இன்று காலை இந்த விவகாரம் வெளியில் வந்தது. சுகேஷ் சந்தர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இது கிரிமினல் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால், தினகரன் கைதாவதற்கான வாய்ப்புகளும் அதிகம்" என்றார் விரிவாக. 

"அ.தி.மு.கவில் நடக்கும் உள்கட்சி குழப்பங்களை டெல்லியில் உள்ள தரகர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். 'இந்த நேரத்தில் நாம் உதவி செய்தால், எதிர்பார்க்காத அளவுக்குப் பணம் வரும்' என்ற நம்பிக்கையில், பல குழுக்கள் செயல்பட்டு வந்தன. இந்தக் குழுக்களில் மிக முக்கியமானவர் சுகேஷ் சந்தர். நீண்டகாலமாக இந்தப் பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, கட்சி அங்கீகாரம் தொடர்பான விஷயங்களுக்கு இவரைத்தான் பயன்படுத்தி வந்தனர். 'தினகரனின் முக்கிய சோர்ஸ் சுகேஷ்தான்' என்பதை அறிந்த பின்னர், அவரது தொலைபேசி தொடர்புகளையும் அ.தி.மு.கவின் டெல்லி பிரதிநிதிகளையும் மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தினகரன் மீண்டு வருவது கடினம்" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், "எடப்பாடி பழனிசாமி கையில் ஆட்சி அதிகாரத்தையும் பன்னீர்செல்வம் கையில் கட்சி அதிகாரத்தையும் ஒப்படைப்பதற்கான வேலைகள் தீவிரமாகி வருகின்றன. இந்தப் பணிகளுக்கு இடையூறாக இருப்பது தினகரன் மட்டும்தான். சொத்துக் குவிப்பு வழக்கோடு சசிகலாவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. தற்போது தினகரனைக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளனர். அவரும் சிறைக்குச் சென்றுவிட்டால், இணைப்பு விழா இனிதே நடக்கும் என்பதுதான் மொத்தக் கதையின் சுருக்கம்" என்றார் நிதானமாக. 

இதுகுறித்து இன்று விளக்கமளித்த டி.டி.வி.தினகரன்,  "இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்தரிடம் பேசவில்லை. யாரிடமும் பணம் கொடுக்கவிலலை. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. குற்றச்சாட்டின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது தெரியவில்லை. கட்சியை அழிப்பதற்காக இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. கட்சியை அழிக்கும் நோக்கத்துடன் யாரோ திட்டம் போடுகிறார்கள். டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திக்க தயாராகவே இருக்கிறேன்" என்றார் கொந்தளிப்போடு. 

http://www.vikatan.com/news/tamilnadu/86677-how-sukesh-chander-was-caught---mafoi-pandiarajan-checkmates-dinakaran.html

  • தொடங்கியவர்

லஞ்சம் கொடுத்தேனா? டி.டி.வி.தினகரன் பரபர பேட்டி!

 
 

ttv_dinakaran_long_1_10148.jpg

'டெல்லியில் கைதானவர்கள் யார் என்றே தெரியாது' என்று மறுப்பு தெரிவித்துள்ள அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 'டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பினால் சட்டப்படி சந்திக்கத் தயார்' என்று கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க மூன்றாக உடைந்தது. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தலைமையில் கட்சி உருவாகியுள்ளது. இதனிடையே, சசிகலா, பன்னீர்செல்வம் அணியினர் இரட்டை இலைச் சின்னம், கட்சிப் பெயருக்குp போட்டிபோட்டதால் இரண்டையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னம் தொடர்பான விசாரணை, தேர்தல் ஆணையத்தில் இன்று நடைபெற உள்ளது. இதனிடையே, சின்னத்தைப் பெற்றுத் தர டி.டி.வி.தினகரன் 50 லட்சம் ரூபாய் கொடுத்ததாக இடைத்தரகர் சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி காவல்துறையினர் இன்று கைதுசெய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, சென்னை அடையாறில் உள்ள தனது இல்லத்தில் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது கூறிய அவர், "இரட்டை இலைச் சின்னம் தொடர்பாக நான் சுகேஷ் சந்தரிடம் பேசவில்லை. யாரிடமும் பணம் கொடுக்கவில்லை. அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. குற்றச்சாட்டின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது தெரியவில்லை. கட்சியை அழிப்பதற்காக இதுபோன்ற தகவல்கள் பரப்பப்படுகின்றன. கட்சியை அழிக்கும் நோக்கத்துடன் யாரோ திட்டம் போடுகிறார்கள். டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பினால், சட்டப்படி சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். காவல்துறை தரப்பில் யாரும் என்னிடம் பேசவில்லை.

சசிகலாவைச் சந்திக்க இன்று பெங்களூரு சிறைக்குச் செல்ல உள்ளேன். கட்சியில் இருந்து விஜயபாஸ்கரை நீக்கும்படி அமைச்சர்கள் யாரும் என்னிடம் பேசவில்லை. வருமான வரித்துறையினர் அளித்த புகாரின்பேரில் பதிவுசெய்யப்பட்டுள்ள வழக்கை, மூன்று அமைச்சர்களும் சட்டப்படி சந்திப்பார்கள். கட்சியில் எந்தவித நெருக்கடியும் கிடையாது" என்று கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/86673-ttvdinakaran-denied-allegations-over-bribery-case.html

  • தொடங்கியவர்

டி.டி.வி.தினகரன் கைதா? சென்னை வருகிறது டெல்லி போலீஸ்!

 
 

இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதை தொடர்ந்து, இது குறித்து டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது.  விசாரணை முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

TTV dinakaran
 

இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணையை தேர்தல் கமிஷன் இன்று நடத்த உள்ளது. இந்நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக அவர் மீது டெல்லி போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த வழக்கு தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த சுரேஷ் சந்தர் என்பவர் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக டி.டி.வி.தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இது குறித்து விசாரணை நடத்த ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் நாளை சென்னை வருகிறது. சுரேஷின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து டிடிவிதினகரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதனால், டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் லஞ்சம் கொடுத்தது உறுதி ஆகும் பட்சத்தில் கைது செய்யப்படுவார் என தகவல்கள் கூறுகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/86683-ttv-dinakaran-may-get-arrested-as-delhi-police-files-bribery-case-against-him.html

  • தொடங்கியவர்

டி.டி.வி.தினகரன் ஆடியோ கிடைத்துள்ளது! டெல்லி போலீஸ் பகீர் தகவல்

 
 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்ததாக எழுந்தப் புகாரை தொடர்ந்து அவர் மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் இடைத்தரகர் என்று கைது செய்யப்பட்டுள்ள  சுகேஷ் சந்தர்  என்பவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியது தெரியவந்துள்ளது. 

ttv dinakaran

மேலும், சுகேஷ் தங்கி இருந்த ஹோட்டல் அறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரிடம் இருந்து 1.3 கோடி ரூபாய் கைப்பற்றியதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அவரின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினகரன், சுகேஷுடன் பேசிய ஆடியோ கிடைத்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையிலான டெல்லி போலீஸ் நாளை சென்னை வருகிறது.  இதற்கிடையில் டெல்லியில் கைது செய்யப்பட்ட நபர் யாரென்றே தெரியாது என்று தினகரன் கூறி வருகிறார். 
 

http://www.vikatan.com/news/tamilnadu/86692-delhi-police-traced-ttv-dinakaran-phone-calls-with-sukesh-chander.html

  • தொடங்கியவர்

தினகரன் சிக்குவது தெரிந்தே தம்பிதுரை மல்லுக்கட்டினார்? டெல்லியில் ஏப்.12ல் நடந்தது இதுதான்!

 

தினகரன் சிக்கப் போகிறார் என்பதை உணர்ந்தே மத்திய அரசுடன் மல்லுக்கட்ட வேண்டாம் என தம்பிதுரை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

டெல்லி: டிடிவி தினகரனுக்கு டெல்லி குறிவைத்துவிட்டது என்பதை தெரிந்துதான் நீங்க அடக்கி வாசியுங்க என அன்பாக மல்லுக்கட்டினார் தம்பிதுரை என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

காவிரி உள்ளிட்ட தமிழக பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக அதிமுக எம்பிக்களுடன் டெல்லிக்கு படையெடுத்துப் பார்த்தார் தம்பிதுரை. ஆனால் ஒருபோதும் பிரதமர் மோடி, தம்பிதுரை அண்ட்கோவை சந்திக்க நேரம் ஒதுக்கவே இல்லை.

 

இந்த நிலையில் திடீரென கடந்த 12-ந் தேதியன்று பிரதமர் மோடியை சந்திக்க தம்பிதுரைக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது தம்பிதுரை அண்ட்கோவை ரொம்பவே மகிழ்ச்சிப்படுத்தியது.

சரண்டர் தம்பிதுரை

இச்சந்திப்பில் தம்பிதுரை எடுத்த எடுப்பிலேயே, மத்திய அரசு சொல்வதை நாங்கள் அப்படியே கேட்டுக் கொள்கிறோம். எங்கள் மீதான வழக்குகளை மட்டும் துரிதப்படுத்தாமல் இருந்தால் உதவியாக இருக்கும் என கெஞ்சியிருக்கிறார். இப்படி தடாலடியாக தம்பிதுரை சரணடைந்ததை பிரதமர் மோடியும் எதிர்பார்க்கவில்லையாம்.


சிக்னல் தந்த டெல்லி

இதைத் தொடர்ந்து, நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை அனைத்தும் என்பது சட்டப்படியானது... அதை நீங்க சட்டரீதியாகவே நீங்க எதிர்கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்திருக்கிறார் மோடி. பிரதமர் மோடியின் இந்த அட்வைஸ் ஏதோ ஒன்றை குறிப்பாக உணர்த்துவதாக உணர்ந்திருக்கிறார் தம்பிதுரை./


தினகரனுக்கு அட்வைஸ்

இதையடுத்தே சென்னைக்கு பறந்துவந்து தினகரனிடம் மத்திய அரசுடன் மல்லுக்கட்டாமல் இருங்கள்.. விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்யலாம் என கூறியிருக்கிறார். ஆனால் தினகரனோ விஜயபாஸ்கரை டிஸ்மிஸ் செய்ய முடியாது என கறாராக இருந்திருக்கிறார். 

 

டெல்லி அதிருப்தி

ஏற்கனவே தளவாய்சுந்தரம் மூலம் தினகரன் தரப்பின் ஒவ்வொரு நகர்வையும் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது மத்திய உளவுத்துறை. இந்த நிலையில் தம்பிதுரை மூலம் நாம் சிக்னல் கொடுத்தும் தினகரன், விஜயபாஸ்கர் விவகாரத்தில் அடம்பிடிக்கிறாரே என அதிருப்தியில் இருந்து வந்தது டெல்லி.

புலம்பும் தம்பிதுரை

இந்த நிலையில்தான் தற்போது தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து வசமாக பொறியில் சிக்கிக் கொண்டுள்ளார் தினகரன். இதையெல்லாம் எதிர்பார்த்துதான் அன்றே நான் தினகரனிடம் எச்சரித்தேன்...அவர்தான் கேட்கவில்லை என கூறி வருகிறராம் தம்பிதுரை.


Read more at: http://tamil.oneindia.com/news/india/why-delhi-police-book-ttv-dinakaran-280009.html

  • தொடங்கியவர்

யார் இந்த சுகேஷ் சந்தர்? வெளிவராத பின்னணி! #VikatanExclusive

 
 

சுகேஷ் சந்தர்

டெல்லியில் கைதுசெய்யப்பட்ட சுகேஷ் சந்தர், அரசியல் கட்சியினரின் புரோக்கர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு அணிகள் உருவாகின. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணி வேட்பாளர் டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் அணி வேட்பாளர் மதுசூதனன் ஆகியோர் போட்டியிட்டனர். அப்போது, இரட்டை இலைச் சின்னத்துக்கு இரண்டு அணிகளும் உரிமைகோரியதால், சின்னம் முடக்கப்பட்டது. இதனால், டி.டி.வி.தினகரன் தொப்பி சின்னத்திலும் மதுசூதனன் மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிட்டனர். வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதால், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில், சின்னத்தை மீட்க இரண்டு அணிகளும் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இதுதொடர்பாக, இன்று தேர்தல் ஆணையம் இரு அணிகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தும் சூழ்நிலையில், டெல்லியில் சுகேஷ் சந்தர் என்பவரை டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவரிடம் இருந்து ஒருகோடியே 50 லட்சம் ரூபாயும் இரண்டு சொகுசு கார்களும் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. கைதான சுகேஷ் சந்தரிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

டி.டி.வி.தினகரன்

இதுகுறித்து, டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க, சசிகலா அணி தரப்பில் குறுக்குவழியில் முயற்சிகள் நடப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில், சசிகலா அணியினரின் நடவடிக்கைகளைக் கண்காணித்தோம். அப்போது, சசிகலா தரப்பிலிருந்து பிரபல புரோக்கர் சுகேஷ் சந்தர் என்பவரிடம் தொடர்பு கொண்டது தெரியவந்தது. உடனடியாக அவரது போன் உரையாடல்கள், நடவடிக்கைகளைக் கண்காணிக்கத் தொடங்கினோம்.

சுகேஷ் சந்தர், டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிருக்கும் தகவல் எங்களுக்குக் கிடைத்தது. உடனடியாக அவர் தங்கியிருந்த ஓட்டலுக்குச் சென்று, அவரது அறையில் அதிரடியாக சோதனை நடத்தினோம். அப்போது, சுகேஷ் சந்தர் அறையில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் ஒருகோடியே 50 லட்சம் இருந்தன. அதைக் கைப்பற்றி, சுகேஷ் சந்தரிடம் விசாரணை நடத்தினோம்.  
தனியறையில் சுகேஷ் சந்தரிடம் விடிய விடிய நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னத்தை மீட்டெடுக்க டி.டி.வி.தினகரன் தரப்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டது. அட்வான்ஸாக ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. சின்னத்தை மீட்டெடுக்க தேர்தல் ஆணையத்தில் சில அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதைக் கேட்டு, நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். அடுத்து, அவர் சொன்னத் தகவல் வியப்பை ஏற்படுத்தியது. 

தேர்தல் ஆணையத்தில் உள்ள கறுப்பு ஆடுகளுக்கு இந்தப் பணத்தைக் கொடுக்கவே டெல்லி வந்ததாகவும் சுகேஷ் சந்தர் தெரிவித்தார். உடனடியாக அவரை கைதுசெய்தோம். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதுதொடர்பாக டி.டி.வி.தினகரனிடம் விசாரணை நடத்த உள்ளோம். இதற்காக, டெல்லி போலீஸார் சென்னை  வர உள்ளனர்" என்றனர்.

இதுகுறித்து, பெயரைக் குறிப்பிட விரும்பாத டெல்லி போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சுகேஷ் சந்தருக்குப் பல பெயர்கள் உள்ளன. சுகேஷ் சந்தரா, சுகேஷ் சந்திரசேகர் என அவரை அழைப்பதுண்டு. சுகேஷ் சந்தர், பெங்களூரைச் சேர்ந்தவர். இவருக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் நெருங்கிய பழக்கம் இருக்கிறது. மேலும், சுகேஷ் சந்தர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2013ல் விபத்தில் சுகேஷ் சந்தர் சிக்கியபோது, அவரது இடது கையில் நான்கு விரல்கள் துண்டிக்கப்பட்டன. 

சுகேஷ் சந்தர், அனைத்து அரசியல் கட்சியினருக்கும் புரோக்கராக இருந்ததாக எங்களது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது சுகேஷ் சந்தர்பொருளாதார குற்றப்பிரிவில் அதிகமான வழக்குகள் உள்ளன. சென்னையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரிடம்கூட கோடிக்கணக்கான ரூபாயை வாங்கி இவர் ஏமாற்றியுள்ளார். பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொடுப்பதிலும் சுகேஷ் சந்தருக்கு தொடர்பு உள்ளது. சுகேஷ் சந்தரிடமிருந்து பறிமுதல்செய்யப்பட்ட சொகுசு காரில், எம்பி ஒருவரின் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு இருந்தது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்திவருகிறோம்.

சுகேஷ் சந்தரிடம், டி.டி.வி.தினகரன் தரப்பினர் போனில் பேசிய ஆடியோ, எங்களுக்கு ஆதாரமாக உள்ளது. இதனால், சுகேஷ் சந்தர் யார் என்று தெரியாது என டி.டி.வி.தினகரன் சொல்வது முற்றிலும் பொய். டி.டி.வி.தினகரன் மீது 170 ஐ.பி.சி, 120 பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால், விசாரணைக்குப் பிறகு டி.டி.வி.தினகரன் கைதுசெய்யப்படவும் வாய்ப்புள்ளது" என்றார். 
சுகேஷ் சந்தரிடம் டி.டி.வி.தினகரன் தரப்பில் பேசிய நபர் யார் என்று டெல்லி போலீஸ் உயரதிகாரியிடம் கேட்டதற்கு, 'வழக்கு விசாரணையில் இருப்பதால், பதில் சொல்ல முடியாது. இருப்பினும், அந்த நபர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். டி.டி.வி.தினகரன் தரப்பு, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக சுகேஷ் சந்தரிடம் தொடர்பில் இருந்து வந்ததாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியலைத் தயாரித்துவருகிறோம். மேலும், சுகேஷ் சந்தரின் கூட்டாளிகள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது' என்று அவர் தெரிவித்தார். 

சுகேஷ் சந்தர் கைதுகுறித்து அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், 'அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படியொரு நபரை நான் சந்திக்கவில்லை' என்று தெரிவித்தார். ஆனால், டி.டி.வி.தினகரனுக்கும் சுகேஷ் சந்தருக்கும் தொடர்பு இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் சிக்கியிருப்பதாக, டெல்லி குற்றப்பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. கைதான சுகேஷ் சந்தரை டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளார். 

சுகேஷ் சந்தர் மீதுள்ள வழக்குகள் 

 1. கடந்த 2003ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள முன்னணி கட்சித் தலைவரின் பேரன் என்று கூறி சுகேஷ்சந்தர் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு. 
 2. கடந்த 2010ல் சென்னையில் இரண்டு தொழிலதிபர்களிடம் பல லட்சம் மோசடி செய்த குற்றச்சாட்டு.  மோசடி செய்வதற்காக சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட விலை உயர்ந்த கார்களில் வலம் வருவார்.
 3. மலையாள திரைப்பட நடிகை ஒருவரிடம் திரைப்பட வாய்ப்புகள் வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்துள்ளார். அடுத்து அந்த நடிகையுடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். 
4. கடந்த 2013ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.அதிகாரி என்று கூறி 19 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகை, சுகேஷ் சந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 
 5.சென்னையில் உள்ள வங்கியில் 19 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார். 
 6.கர்நாடகாவில் ஆணுறை கான்டிராக்ட்ர் வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார். 

http://www.vikatan.com/news/india/86698-who-is-sukesh-chandar---report.html

  • தொடங்கியவர்

4 மாநிலத்தில் 50 வழக்குகள்- நடிகை லீனா மரியாபாலின் காதலன்- அதிரவைக்கும் தினகரனின் புரோக்கர் சுகேஷ்!

 

டெல்லியில் சிக்கிய டிடிவி தினகரனின் புரோக்கர் சுகேஷின் மறுபக்கம் அதிரவைக்கிறது. இவர்தான் மெட்ராஸ் கபே படத்தில் நடித்த நடிகை லீனாவின் காதலன்.

 டெல்லி: தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம் கொடுத்து நாட்டையே திரும்பி பார்க்க வைத்திருப்பவர்கள் டிடிவி தினகரனும் அவரது டெல்லி புரோக்கருமான சுகேஷ் சந்திராவும்தான்.. டெல்லியில் சிக்கியுள்ள சுகேஷ் சந்திராவின் மறுபக்கம் அதிரவைக்கிறது.

பெங்களூரில் பாலாஜி என்ற பெயரில் வலம் வந்த சுகேஷ் 17 வயதிலேயே கிரிமினலாகிப் போனவர். பெங்களூரு ரெசிடென்சி சாலையில் உள்ள பள்ளியில்தான் சுகேஷ் என்கிற பாலாஜி படித்தார்.

உயர்ந்த பதவிகளில் இருப்பவர்கள் பெயரை குறிப்பிட்டு அவரது உறவினர் எனக் கூறி மோசடியில் ஈடுபடுவதுதான் சுகேஷின் ஸ்டைல். இப்படித்தான் பெங்களூருவில் 100 பேரிடம் ரூ75 கோடியை ஆட்டைய போட்டார் சுகேஷ்.

4 மாநிலங்களில் 50 வழக்குகள்

 

4 மாநிலங்களில் 50 வழக்குகள்

கர்நாடகாவில் மட்டுமல்ல தமிழகம் உட்பட 4 மாநிலங்களிலும் கைவரிசையை காட்டியதால் சுகேஷ் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்லன. 2013-ம் ஆண்டு தமிழக ஊடகங்களில் பரபரப்பாக அடிபட்டவர் சுகேஷ்.

லீனாவின் காதலன்

லீனாவின் காதலன்

மெட்ராஸ் கபே இந்தி படத்தில் நடித்த கேரளா நடிகை லீனா மரியபாலின் காதலன்தான் இந்த சுகேஷ். இந்த இருவரும் 2013-ல் சென்னையில் பலரிடம் பணம் பறித்ததாக போலீசில் சிக்கினர். சென்னை அம்பத்தூர் கனரா வங்கியில் ரூ19 கோடி மோசடி செய்த புகாரும் சுகேஷ் மீது நிலுவையில் உள்ளது

மும்பையில் நிதி நிறுவனம்

சென்னை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சுகேஷ் மும்பைக்கு ஓடிப் போய் நிதிநிறுவனம் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப்பானவர். மக்களிடம் கொள்ளையடிக்கும் இந்த பணம் மூலமாக காதலி மரியாபாலினுடன் சேர்ந்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார் சுகேஷ்.

உல்லாசமே உலகம்

ஆடம்பர கார்கள், விலை உயர்ந்த கை கடிகாரங்கள் என பொதுமக்கள் பணத்தில் காதலியுடன் உல்லாசமாக வாழ்ந்திருக்கிறார் சுகேஷ். இத்தகைய பக்கா பிராடுவான சுகேஷ்தான் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின் துணைப் பொதுச்செயலர் பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கும் டிடிவி தினகரனுடனும் தொடர்பில் இருந்திருக்கிறார்.

 

தினகரனின் புரோக்கர்

இந்த தொடர்பில்தான் ரூ50 கோடி பணம்தாங்க... டெல்லி தேர்தல் ஆணைய அதிகாரிகள் மூலமாக இரட்டை இலை சின்னத்தை மீட்டுவிடலாம் என டிடிவி தினகரனிடம் பேரம் பேசியிருக்கிறார். தினகரனும் முதல் கட்டமாக ரூ1.30 கோடி கொடுத்துவிட டெல்லி போலீஸில் கையும் களவுமாக சிக்கிவிட்டார் சுகேஷ். தற்போது 27 வயதுதான் ஆகும் சுகேஷுக்கு டிடிவி தினகரனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது? சசிகலா உறவினர்கள் யார் யார் சுகேஷுடன் தொடர்பில் இருந்தனர் என துருவி துருவி விசாரிக்கிறது டெல்லி போலீஸ்.



Read more at: http://tamil.oneindia.com/news/india/meet-the-conman-from-bengaluru-who-promised-dinakaran-the-admk-symbol-280018.html

  • தொடங்கியவர்

டெல்லி போலீஸ் வெளியிட்ட புகைப்படம்!

 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற டி.டி.வி.தினகரன் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில், இடைத்தரகர் என்று கைதுசெய்யப்பட்டுள்ள  சுகேஷ் சந்தர் என்பவரிடம், காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொண்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இரட்டை இலைச் சின்னம் பெறுவதற்காக தினகரனிடம் இருந்து பணம் வாங்கியதாக, சுகேஷ் வாக்குமூலம் அளித்தார்.

C9mUoZHUAAApIth_14179.jpg


சுகேஷ் தங்கி இருந்த ஹோட்டல் அறை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவரின் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சுகேஷிடம் பறிமுதல் செய்யப்பட்ட 1.30 கோடி பணத்தின் புகைப்படத்தை, டெல்லி காவல்துறை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, அவரிடம் இருந்து 1.30 கோடி பணமும், 2 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, அவர் டெல்லி, திஸ்ஹசாரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அப்போது அவரை 14 நாள்கள் காவலில் வைத்து, விசாரிக்க காவல்துறை கோரிக்கை வைக்க உள்ளது. 

 

http://www.vikatan.com/news/india/86705-delhi-police-recovered-rs-13-crore-from-sueksh.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.