Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினகரனுக்கு திகார்?

Featured Replies

gallerye_005434701_1753453.jpg

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர, சசிகலாவின் அக்கா மகன், தினகரன் முயற்சித்தது அம்பலமாகி உள்ளது. இடைத்தரகராக செயல்பட்டவன், 1.30 கோடி ரூபாயுடன் டில்லியில் சிக்கியதை அடுத்து, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்துள்ள டில்லி போலீசார், இன்று அவரிடம் விசாரணை நடத்தியதும், கைது செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tamil_News_large_1753453_318_219.jpg


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, ஓட்டுக்களை பெற முற்பட்ட தினகரனின், அடுத்த தில்லாலங்கடி தற்போது அம்பலமாகி உள்ளது.

இரட்டை இலை சின்னத்துக்கு, தேர்தல் கமிஷனில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் உரிமை கொண்டாடியதால், இருதரப்புக்கும் இடையிலான பஞ்சாயத்து, சமீபத்தில், டில்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் நடந்தது.
அப்போது, ஊடகங்களில் வெளியான செய்தியில், 'சின்னத்தை கைப்பற்ற, அதிகார, அரசியல் தரகர்கள் பலரை, இருதரப்பினரும் களமிறக்கி, பல கோடி ரூபாய் பேரம் பேசி வருகின்றனர்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த செய்தியை உண்மையாக்கும் விதமாக, நேற்று டில்லியில், சுகேஷ் சந்தர், 27, என்ற அதிகார தரகரை, போலீசார் கைது செய்தனர். ஒரு மாதமாகவே, இவனது தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும், டில்லி போலீஸ் கண்காணித்து வந்துள்ளது.

இவனுடன், தினகரனுக்கு ஏற்கனவே, நான்கு ஆண்டுகளாக தொடர்பு இருந்து உள்ளது. பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் தான், இரு தரப்பினரும் நேரடியாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். அப்போது, தனக்கு, 10 கோடி ரூபாய், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சமாக தர, 50 கோடி ரூபாய் என, 60 கோடி ரூபாய்க்கு, சுகேஷ் சந்தர் பேரம் பேசியுள்ளான்.
 

கண்காணித்தனர்


இதன்பின், கேரளாவின் கொச்சியிலும், டில்லியில், சாந்தினி சவுக் பகுதியிலும் உள்ள ஹவாலா புரோக்கர்கள் மூலமாக, முதல் கட்டமாக, இரண்டு கோடி ரூபாய், சுகேஷ் சந்தருக்கு கைமாறியுள்ளது. அதனால், டில்லியில், சுகேஷ் சந்தரின் நடவடிக்கைகளை, போலீசார் கண்காணிக்க துவங்கினர்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தான பின், மீண்டும் சின்னம் விவகாரம் சூடுபிடித்ததால், அதை மையமாக வைத்து, தொலைபேசி உரையாடல்களும் தீவிரமடைந்தன. எனவே, சுகேஷ் சந்தரின் ஒவ்வொரு அசைவையும், டில்லி துணை கமிஷனர் மாதுார் வர்மா தலைமையிலான போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கடந்த வாரத்தில், தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு என பேரம் பேசப்பட்ட, ௫௦ கோடி ரூபாய், வெவ்வேறு ஹவாலா வழிகளில் கைமாறியதாக தெரிகிறது. இதையடுத்து, டில்லி மோதிபாக்கில் உள்ள ஹயாத் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த, சுகேஷ் சந்தர், நேற்று வளைக்கப்பட்டான். அவன்பயன்படுத்திய, பி.எம்.டபிள்யூ., உயர் ரக காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 1.30 கோடி ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுகேஷ் சந்தர் பயன்படுத்திய, மற்றொரு மெர்சிடிஸ் காரும் அங்கு இருந்தது. அதில், 'பார்லிமென்ட் உறுப்பினர்' என்ற, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. ஓட்டலுக்கு இந்த காரில் தான், அவன் வந்து போவது வழக்கம். அதில் தான், எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும், கார் பாஸ் ஸ்டிக்கரை ஒட்டியுள்ளான். அந்த காரும், பறிமுதல் செய்யப்பட்டது.
 

மூன்றுபிரிவுகளில் வழக்கு


உடனடியாக, சாணக்யபுரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, சுகேஷ் அழைத்து வரப்பட்டான்; அவனிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், தினகரனுடன், அவன் பலமுறை தொலைபேசியில் பேசியுள்ளது உறுதியானது. இருவரும், 40 நிமிடங்கள் பேசிய பதிவையும், டில்லி கிரைம் பிராஞ்ச் போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், தினகரனின் துாதர்களாக, சில முக்கிய வக்கீல்களும் செயல்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும், விரைவில் வளைக்கப்பட உள்ளனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, டில்லி போலீசார், குற்றச் சதி, லஞ்சம் தருதல் உட்பட, மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். எப்.ஐ.ஆர்., எனப்படும், முதல் தகவல் அறிக்கையில், முதல் குற்றவாளியாக தினகரனும், இரண்டாம் குற்றவாளியாக சுகேஷ் சந்தரும் இடம் பெற்றுள்ளனர்.

தினகரனை நேரில் சந்தித்து சம்மனை வழங்குவதற்காக, டில்லி துணை கமிஷனர் சஞ்சய் ஷெராவத், சென்னை வந்துள்ளார். இன்று, தினகரனை சந்தித்து, சம்மனை வழங்குவதோடு, அவரிடம் விசாரணையும் நடத்தப்படலாம். அதன்பின், அவரை டில்லி அழைத்துச் சென்று, சுகேஷ் சந்தருடன் ஒன்றாக அமரவைத்து விசாரணை நடத்த, டில்லி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின், தினகரன் கைது செய்யப்பட்டு, டில்லி திகார் சிறையில் அடைக்கப்படலாம் என, டில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


 

ஆடம்பரத்தில் திளைத்தவன்


டில்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்தர், ஆடம்பரமாக வாழ்வதில் விருப்பம் உடையவன். நாட்டின் பல பகுதிகளில், அவனுக்கு சொந்தமாக, ஏராளமான பண்ணை வீடுகள் உள்ளன.
சுகேஷ் சந்தர், கையில் அணிந்திருந்த, 'பிரேஸ்லெட்'டின் விலை, 6.5 கோடி ரூபாய் என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலை உயர்ந்த, விதம் விதமான, 'ஷூ'க்களை, சுகேஷ் சந்தர் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
 

அவர் யாரென்றே தெரியாது: தினகரன்


''டில்லியில் கைதாகியுள்ள சுகேஷ் சந்திரசேகர் என்பவர், யார் என்றே தெரியாது,'' என, சசிகலா அக்கா மகன் தினகரன் தெரிவித்தார்.தினகரன் அளித்த பேட்டி: இரட்டை இலை சின்னத்தை பெற, நான் லஞ்சம் கொடுக்க முன்வந்ததாக கூறப்படுவது, தவறான தகவல். டில்லியில் கைது செய்யப்பட்ட, சுகேஷ் சந்திரசேகர், யார் என்றே தெரியவில்லை.
எனக்கு எதுவும் புரியவில்லை. 'டிவி' பார்த்து தான் தெரிந்து கொண்டேன். என்னிடம் பணம் வாங்கினார் என்றால், எங்கு வாங்கினார்?இதன் பின்னணி புரியவில்லை. இப்பிரச்னையை, சட்டப்படி சந்திப்பேன். என் வாழ்க்கையில், சுகேஷ் சந்திரசேகர் என, யாரிடமும் பேசியதில்லை. வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர்களிடம் பேசி உள்ளேன்.
அ.தி.மு.க.,வை அழிப்பதற்காக, இது போன்ற தகவலை பரப்புகின்றனர்; அது, யாருடைய திட்டம் என, தெரியவில்லை. சசிகலாவை சந்திக்க, பெங்களூருக்கு புறப்பட்ட போது, 'டிவி'யில் செய்தி பார்த்தேன். இது தொடர்பாக, போலீசாரிடம் இருந்தும், எந்த தகவலும் வரவில்லை.
என்னுடன், ஆயிரம் பேர் போனில் பேசுவர்; ஆயிரம் விஷயங்கள் சொல்வர்; எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறுவர். அந்த நேரத்தில், சரி என்போம். அதற்காக, பேசிய எல்ேலாரையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, ஆவணங்கள் எதையும், அமைச்சர்கள் அழிக்கவில்லை. கட்சியில், பிரச்னை எதுவும் இல்லை. என்னை விலகும்படி, அமைச்சர்கள் யாரும் கூறவில்லை. விஜயபாஸ்கரை, அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படியும், யாரும் வற்புறுத்தவில்லை; அவரிடமும், யாரும் பேசவில்லை.
இவ்வாறு தினகரன் கூறினார்.


- நமது டில்லி நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1753453

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.