Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.என்.எஸ் சென்னை கப்பலுக்கு அ.தி.மு.கவால் கிடைக்கவிருக்கும் ‘அடடே’ பெருமைகள்!

Featured Replies

ஐ.என்.எஸ் சென்னை கப்பலுக்கு அ.தி.மு.கவால் கிடைக்கவிருக்கும் ‘அடடே’ பெருமைகள்!

 

ஐ.என்.எஸ் சென்னை ( INS Chennai) போர்க்கப்பலை சென்னைக்கு அர்ப்பணிக்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்தப் போர்க்கப்பல் 7500 டன் எடை மற்றும் 164 டன் நீளம் கொண்டது. மணிக்கு 60 கி.மீ வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்ட போர்க் கப்பல் இது. கடலின் மேற்பரப்பு, கடலின் அடிப் பரப்பு, ஆகாயம் என மூன்று நிலைகளில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை எல்லாம் விட இன்னும் பல பெருமைகளை அ.தி.மு.க-வின் மூலம் அடையப்போகிறது ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல். இந்தப் போர்க்கப்பலைப் பார்வையிடுவதற்காகத்தான் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். போர்க்கப்பலில் அணிப் பேச்சுவார்த்தையா... இது பெரும் அக்கப்போராக அல்லவா இருக்கிறது? என ஆதங்கப்படாமல் மேலே படியுங்கள். 

INS chennai - ஐ.என்.எஸ்

பொதுவாக, விருதுகள் வழங்கும்போது 'விருது பெறும் பிரபலத்தால் அந்த விருது பெருமை கொள்கிறது' எனச் சொல்வார்கள். அதேபோலத்தான் பல பெருமை வாய்ந்ததாகக் கருதப்படும் ஐ.என்.எஸ் போர்க்கப்பல் தற்போது ஒரு மாநிலக் கட்சியின் ஒரு மந்தையிலிருந்து பிரிந்த இரண்டு ஆடுகள் சந்தித்துக் கொள்வதற்குப் பாலமாக இருக்கப் போகிறது. அதுமட்டுமல்லாது, ஒரே நேரத்தில் ஒரு மாநிலத்தின் ஆட்சியிலிருக்கும் முக்கிய நிர்வாகிகளைச் சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றிருக்கிறது ஐ.என்.எஸ் போர்க்கப்பல். 

தமிழக மீனவர்களுக்குப் பெரும் துயரமாக நீடித்துக் கொண்டிருப்பது கச்சத்தீவு விவகாரம். இன்று கப்பலில் நடக்கும் பேச்சுவார்த்தை முடிந்ததும் அ.தி.மு.க நிர்வாகிகள் அப்படியே கச்சத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்று அதையும் மீட்டு இந்தியாவோடு சேர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஒன்று நடந்தால் அந்தப் பெருமையும் ஐ.என்.எஸ் போர்க்கப்பலுக்கே சென்று சேரும். 

அப்படியே அவர்கள் ஸ்ட்ரைட்டாக சிலோனுக்குப் போய், இலங்கை கடற்படையோடு பேச்சுவார்த்தை நடத்தினால், இரு நாட்டு உறவுகளைப் பலப்படுத்திய மொத்தப் பெருமையும் கப்பலுக்கே வந்து சேரும். 

கப்பலில் ஆலோசனை நடத்தி முடித்துத் திரும்பும் அமைச்சர்கள் 'தர்மம் மறுபடி வென்றது' எனச் சூளுரைப்பார்கள். 'தர்மத்தைக் காத்த கப்பலே' என ரத்தத்தின் ரத்தங்கள் பேனர் வைப்பார்கள்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு இரு அணிகளும் இணக்கமாகச் செயல்பட முடிவெடுத்தால் பல பஞ்சாயத்துகளுக்கும் தீர்வு ஏற்படும். ஜெயலலிதா மரணத்தில் இருந்துவந்த மர்மம் விலகி அது இயற்கையான மரணம் எனும் செய்தி பரவும். அப்போலோ மருத்துவமனையின் மீது ஏற்பட்டுள்ள களங்கம் தெளியும். மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்பதால் தொடங்கப்பட்ட பல கட்சிகள் சர்ச்சை தீர்ந்தபின்பு கட்சியைக் கலைக்கவும் வாய்ப்புள்ளது. 

ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பலின் சாதனைகளின் நினைவாக 'விக்ராந்த்' பைக் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டதைப் போல, இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிபெற்று அ.தி.மு.க காக்கப்பட்டால் அதன் நினைவாக இந்தக் கப்பலையே கொண்டுவந்து அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்படலாம். வெளியூரிலிருந்து வரும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அவரது சமாதியில் காதை வைத்து கடிகாரச் சத்தம் கேட்பதைப் போல அ.தி.மு.க தொண்டர்கள் கப்பலை குலதெய்வமாகக் கொண்டாடுவார்கள்.

துரோகிகள் என மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்ட இரு அணியினரும் ஆரத்தழுவிக் கட்டிக்கொண்டால், ஆரோக்கியமான அரசியல் என தமிழக மக்கள் புளகாங்கிதம் அடைந்து கொள்ளலாம். இந்தியாவிலேயே... ஏன் உலகிலேயே... ஆட்சியைக் காப்பாற்ற போர்க்கப்பலில் ஆலோசனை செய்த இனம் தமிழினம் என நாளைய வரலாறு பேசும். 

http://www.vikatan.com/news/miscellaneous/86782-a-satirical-article-on-the-admk-party-meet-happening-on-ins-chennai.html

  • தொடங்கியவர்
உல்லாச பயணம்!
கப்பலில் உல்லாச பயணம்:
கரைபுரண்டது உற்சாகம்!
 
 
 

சென்னை வந்துள்ள போர்க் கப்பலில், சசிகலா அணி எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள், நேற்று உல்லாச பயணம் மேற்கொண்டனர்.

 

Tamil_News_large_175418420170419004555_318_219.jpg

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, 'ஐ.என்.எஸ்., சென்னை' போர் கப்பல், சென்னையின் பெயரை தாங்கியுள்ளதால், பாரம்பரிய முறைப்படி, மூன்று நாள் பயணமாக இங்கு வந்துள்ளது. அதை, முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர் கள், நேற்று முன் தினம் பார்வையிட்டனர். தமிழக எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் பார்வையிட வரும்படி, கடற்படை அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கிடையே, அ.தி.மு.க.,வில் இரு அணி களும் இணைவதற்கான முயற்சி துவங்கி யுள்ளது. இதனால், பன்னீர் அணி எம்.எல்.ஏ.,க் களும் வருவர் என எதிர்பார்க்கப் பட்டது; ஆனால், வரவில்லை.மேலும், தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், தினகரன் சிக்கியுள்ளதால், சசி அணியினர் வர மாட்டார்கள் என கருதப்பட்டது.

ஆனால், நேற்று காலை, 7:00 மணி முதல், எம்.எல்.ஏ.,க்களும், அமைச்சர்களும், குடும்பத் தினருடன் வந்திறங்கினர். அவர்களில், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட சில எம்.எல்.ஏ.,க் கள்; நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட சில எம்.பி.,க்கள், 'ஐ.என்.எஸ்., சுமேதா' கப்பலில் சென்றனர்.

ஜெயக்குமார், ராஜு, ஓ.எஸ்.மணியன், விஜய பாஸ்கர், நிலோபர் கபில் உள்ளிட்ட, 14க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும், 106 எம்.எல்.ஏ.,க்கள், நான்கு எம்.பி.,க்கள் வந்திருந்தனர்.

இக்கப்பல்களுடன், 'ஐ.என்.எஸ்., ரன்வீர்' போர்க் கப்பலும் சேர்ந்து கொண்டது.இது, நீர்மூழ்கி கப்பலை தாக்கி அழிக்கும் ராக்கெட்களை செலுத்துவது, துப்பாக்கியால் சுடுவது என, சாகசங் களை செய்தபடியே பின்தொடர்ந்தது. ஐ.என்.எஸ்., சென்னை கப்பலும், தன் பங்கிற்கு சாகசங்கள் செய்தது.

 

உற்சாக வெள்ளம்:


பெரும்பாலான எம்.எல்.ஏ.,க் கள் மற்றும் அமைச்சர்கள், ஐ.என்.எஸ்., சென்னை கப்பலில் பயணம் செய்தனர். அவர்கள், மகன், மகள், பேரன், பேத்தி என, குடும்பத்தினருடன் உற்சாகமாக பொழுதை கழித்தனர். அவர்களுக்காக, இரு கப்பல் களிலும் பிரம்மாண்ட பந்தல் போடப்பட்டு இருந்தது.

நடுக்கடலுக்கு சென்ற பின், கப்பல்வேகமாக, அசைந்து அசைந்து சென்ற போது, கடற்படை யினர் ஆசையாக கொடுத்த ரொட்டி, பிஸ்கெட், ஜூஸ் எல்லாம் அடிவயிற்றில் இருந்து மேலே வர துடித் தன. இதனால், பலர், கப்பல் கரையை அடையும் வரை, கீழ்தளத்தில் இருந்த கழிப்பறைக்கு போவதும், வருவதுமாக இருந்தனர்.ஒரு வழியாக, கடலில், 20 கடல் மைல் சென்ற பின், மாலை, 4:00 மணிக்கு, கப்பல் கரை திரும்பியது.
 

கப்பலில் கடத்தலா?


கப்பலில் பயணம் செய்த எம்.எல்.ஏ.,க்களுக்கு, ரகசிய கூட்டம் நடக்க இருப்பதாக, 'வாட்ஸ் ஆப்' மூலமாக தகவல் வந்தது. இதனால், கப்பலில் திட்டமிட்டு கடத்தப்படுகிறோமோ என்ற பயம் தெரிந்தது.அப்படி எதுவும் இல்லை என தெரிந்த பின், நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சில எம்.எல்.ஏ.,க் கள் கூறும்போது, 'கப்பலில் பிரம்மாண்ட அறையில் ஆலோசனை நடக்கும் என நினைத்தோம். இங்கே வெட்டவெளியில் உட்கார வைத்து விட்டனர். எனினும், போர்க் கப்பல் அனுபவம் புதிது' என்றனர்.
 

விஜயபாஸ்கர் வருத்தம்!


கடைசி நேரத்தில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், குடும்பத்துடன் வந்து ஏறினார். செய்தியாளர்களிடம் மனம் திறந்து பேசினார். அப்போது, 'என் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட் டது. அதை கடுமையாக உழைத்து, சரி செய்வேன். வருமான வரி சோதனையில் கைப்பற்றிய ஆவணங்கள் போலியானவை. நான் திருமணத் துக்கு போனால், ஓடியாடி வேலை செய்யும் ரகம். கட்சியிலும் ஓடியாடி வேலை செய்தேன். அதனால் தான், இலக்காக ஆகியுள்ளேன்' என்றார்.
 

இணைப்புக்கு ஆதரவு!:


அமைச்சர்கள், ராஜு, ஜெயகுமார், உதயகுமார் உள்ளிட்டோர் பேசுகை யில்,இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டியது அவசியம்.

 

இரு தரப்பும் இணைவது தான், கட்சியின் எதிர்காலத்திற்கு உகந்தது. மக்களும், அதை தான் விரும்புகின்றனர். இது அண்ணன் - தம்பி பிரிவைப் போன்றதே. இரு தரப்பும் இணைய அமைக்கப்பட்ட குழு, விரைவில் பேச்சு வார்த்தை நடத்தும் என நம்புகிறோம்' என்றனர்.

பெண் எம்.எல்.ஏ.,உடல்நிலை பாதிப்பு


கப்பல் குலுங்க துவங்கியதும், மண்ணச்ச நல்லுார் எம்.எல்.ஏ., பரமேஸ்வரிக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு சோர்வு அதிகரித்ததால், தனி அறையில் ஓய்வு எடுத் தார். பின், அவருக்கு மாத்திரை வழங்கப் பட்டது. ரத்த அழுத்த பரிசோதனையும் செய்யப்பட்டது.
 

மனைவியை இழந்த சோகம்...


கப்பலில் உற்சாகமாக பயணம் செய்து கொண்டிருந்த, சீர்காழி எம்.எல்.ஏ., பாரதிக்கு, அவரது மனைவி மாரடைப்பால் உயிரிழந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். அவரை சுற்றி அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.,க்களும், சோகம் அடைந்தனர்.
 

தி.மு.க., - காங்.,அழைப்பு இல்லை!


கடற்படை அழைப்பிதழ்கள், முதல்வர் அலுவலகத்தில் தரப்பட்டுள்ளன. ஆனால், அவை, சசிகலா அணிக்கு மட்டும் வழங்கப் பட்டதாக தெரிகிறது. இதனால், பன்னீர் அணி, தி.மு.க., - காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வர வில்லை. அத்துடன், அ.தி.மு.க., 'மாஜி' அமைச் சர் செந்தில் பாலாஜி போன்றோரும் புறக்கணித்தனர்.
- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.