Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி!

Featured Replies

சசிகலா, தினகரன் குடும்பத்தை ஒதுக்குவோம் : சசிகலா அணியில் இருந்த அமைச்சர்கள் அதிரடி!

 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், நேற்று முதல் ஆலோசனையில் ஈடுபட்டுவந்தனர்.

Jayakumar

குறிப்பாக, இன்றும் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்,  "தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, ஆட்சியை நடத்துவோம். கட்சியும் ஆட்சியும் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடாது. தினகரன் குடும்பத்துக்கு இனி கட்சியில் இடம் கிடையாது. பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தைக்கு வந்தால், அவருடன் பேசத்  தயார். தினகரன் குடும்பத்தின் தலையீடு, கட்சியிலும் ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக்கூடாது. ஒற்றுமையாகக் கட்சியை வழிநடத்த வேண்டும் என்பதுதான் அனைவரது விருப்பமும்.  கட்சியை வழிநடத்த குழு அமைக்கப்படும். ஒற்றுமையாக இருந்து இரட்டை இலையை மீட்டு, சிறப்பான ஆட்சியைத் தொடர்வோம். முதலமைச்சர் உள்பட, அனைத்து அமைச்சர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பர்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கிவைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். ஆட்சியைத் தொடர்ந்து சிறப்பாக நடத்துவது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது" என்றார்.

"தினகரன் குடும்பத்தால் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளது . பன்னீர்செல்வம் எப்போது வந்தாலும் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார்" என்று அமைச்சர் சி.வி சண்முகம் கூறினார்.

"அனைவரின் ஒட்டுமொத்த முடிவைதான் ஜெயக்குமார் கூறினார். அனைவரும் சேர்ந்து இரட்டை இலையை பெறுவோம்" என்று நடராஜன் கூறினார்.

'ஜெயலலிதா விருப்பத்தின்படி ஆட்சியை கொண்டு செல்வோம்' என்று வைத்திலிங்கம் கூறினார்.

'கட்சியில் பிரிவு இருக்கக்கூடாது என்பதே அனைவரின் விருப்பம்" என்று அமைச்சர் மணிகண்டன் கூறினார்.

http://www.vikatan.com/news/tamilnadu/86861-we-will-remove-sasikala-and-family-says-minister-jayakumar.html

  • தொடங்கியவர்

தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 

 
அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்.
அமைச்சர் ஜெயக்குமார் | கோப்புப் படம்.
 
 

தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''ஆட்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசித்தோம். தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். தினகரன் குடும்பத்தின் தலையீடு கட்சியிலும், ஆட்சியிலும் எள்ளளவும் இருக்கக் கூடாது. அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட செயலர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், அனைவருமே கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம்.

ஆட்சியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறோம். தொண்டர்கள் விருப்பப்படி குடும்ப அரசியலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்தின் தலையீடு இன்றி, டிடிவி தினகரன் சார்ந்த குடும்பத்தை முழுமையாக ஒதுக்கிவிட்டு வழிநடத்த வேண்டும் என்பதே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள், தமிழக மக்கள் ஆகியோரின் ஒட்டுமொத்த விருப்பமாக உள்ளது. எனவே, தினகரன் குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு ஆட்சி நடத்துவோம். அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்.

கட்சியை வழி நடத்த குழு அமைப்போம். தொடர்ந்து 4 ஆண்டு கால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்வோம். ஓபிஎஸ் பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவருடன் பேச்சு நடத்தப்படும்'' என்றார்.

முன்னதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

'அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத் தயார்' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திங்கட்கிழமை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து 'ஒற்றுமையாக இருக்க ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம்' என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.

இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திங்கட்கிழமை இரவு திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து வரவேற்கத்தக்கது. ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்'' என்றார்.

'சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை' என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை அன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, 'ஓ.பன்னீர்செல்வத்தை நிபந்தனைகளுடன் சேர்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை' என்று அதிமுக அம்மா கட்சியின் எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறினார். இதனிடையே, அதிமுகவின் இரு அணிகளும் இணைய முதல்வர், 6 அமைச்சர் பதவிகள் வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதிப்பதாக வெற்றிவேல் எம்.எல்.ஏ குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி இல்லத்தில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், தினகரனையும், அவர் சார்ந்த குடும்பத்தையும் முழுமையாக ஒதுக்கிவைக்கிறோம். அனைத்து நிர்வாகிகளுடன் கலந்து பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/தினகரன்-குடும்பத்தின்-தலையீடு-கட்சியிலும்-ஆட்சியிலும்-எள்ளளவும்-இருக்கக்-கூடாது-அமைச்சர்-ஜெயக்குமார்-பேட்டி/article9647673.ece?homepage=true

  • தொடங்கியவர்
gallerye_234908659_1754086.jpg

சென்னை: சசிகலா குடும்பத்திற்கு எதிரான தர்மயுத்தத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் சாதித்து காட்டியுள்ளார். அ.தி.மு.க., வில் இருந்து, தினகரன் கும்பல் அடியோடு வெளியேற்றப்பட்டது. முதல்வர் வீட்டில், அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பின், அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தொண்டர்களின் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

 

Tamil_News_large_175408620170418234829_318_219.jpg

அ.தி.மு.க.,வின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பான பேச்சு, நேற்று முன் தினம் துவங்கியது. நேற்று காலையில், 'இரு அணிகளும் இணைய, சசிகலா குடும்பத்தை, கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அதிரடி நிபந்தனை விதித்தார்.
அது தொடர்பாக, நேற்று காலை, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன் ஆகியோர், சென்னை, தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியுடன் அவசர ஆலோசனை நடத்தி னர். பின், அமைச்சர்கள் முடிவை, தினகரன் வீட்டுக்கு சென்று, அவரிடம் கூறினர்.
 

விவாதித்தனர்


மாலை,6:30 மணியில் இருந்து, 7:30 மணி வரை, தலைமை செயலகத்தில், அமைச்சர்கள் கூடி, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதித்தனர்.

அதன் முடிவில், சசிகலா குடும்பத்தை, கட்சி, ஆட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பது என, முடிவு செய்தனர். அதை, அனைத்து அமைச்சர் களும், கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டுக்கு சென்று, முதல்வர் பழனிசாமியிடம் தெரிவித்தனர்.
அங்கு இரவு, 8:00 மணியில் இருந்து, 9:20 மணி வரை, முதல்வர் தலைமையில், இறுதிகட்ட ஆலோசனை நடந்தது. இக்கூட்டத்தில், அமைச்சர்களுடன், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும்கட்சி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

அ.தி.மு.க.,வில் ஏற்பட்டுள்ள பிளவுக்கும், குழப்பத்திற்கும் தீர்வு காண, கட்சியிலும், ஆட்சியிலும் இருந்து, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை, விலக்கி வைப்பது தான் ஒரே வழி என, முடிவு செய்தனர். அதை, நிதியமைச்சர் ஜெயகுமார் அதிகாரப்பூர்வமாக, இரவு அறிவித்தார்.

இதுகுறித்து, அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது:
கட்சியையும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியையும், வரும் நான்கு ஆண்டுகள் மட்டுமல்ல, ஆண்டாண்டு காலம் தொடர, உரிய நடவடிக்கை மேற்கொள்வது குறித்து பேசி னோம். அனைவருடைய ஒரு மித்த கருத்து, அ.தி.மு.க., தொண்டர்களின் ஒட்டு மொத்த விருப்பம், தமிழக மக்களின் ஒரே கோரிக்கை எல்லாமே, கட்சியும், ஆட்சியும், ஒரு குடும்பத் தின் தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது தான்.
அதற்காக, தினகரன் சார்ந்த குடும்பத்தை, முழுமையான அளவிற்கு ஒதுக்கி விட்டு, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த முடிவுசெய்துள்ளோம்.

 

 

அமைச்சர்கள் விருப்பம்


இது, தொண்டர்கள் விருப்பம்; பொது மக்கள் விருப்பம்; தலைமை நிர்வாகிகள் விருப்பம்; எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் விருப்பம். அது, நிறைவேற்றப்பட்டு உள்ளது. தினகரன் குடும்பத்தை முழுமையாக ஒதுக்கி விட்டு, எள்ளளவும் கட்சியிலும், ஆட்சியிலும், அவர்களின் தலையீடு இல்லாமல், கட்சியை, ஆட்சியை வழி நடத்துவோம்.

கட்சியை வழி நடத்த, அன்றாட நடவடிக்கை கள் மேற்கொள்ள, குழு அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப் படும். அனைத்து அமைச்சர்களும், எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும், இந்த கருத்தை ஆதரிக்கின்றனர்.

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'பேச்சுவார்த்தைக்கு தயார்' என்றார்; நாங்களும் தயார் என்றோம். நாளையே வந்தாலும் பேசத் தயார். அனைவரும் ஒற்றுமையாக இருக்க விரும்புகிறோம். கட்சியை கட்டுக்கோப்புடன் கொண்டு செல்ல விரும்புகிறோம். இரட்டை இலை சின்னத்தை மீட்க வேண்டும்.

தொண்டர்கள், பொது மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளித்து, அந்த குடும்பத்தை ஒதுக்கி வைத்து, கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவோம்.இவ்வாறு ஜெயகுமார் தெரிவித்தார்.
அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.பி., வைத்திலிங்கம் ஆகியோர் கூறும்போது, 'பன்னீர் அணியினர் பேச வந்தால், பேசத் தயாராக உள்ளோம். அவர்கள் கூறும் கருத்தை ஏற்பது குறித்து, குழு கூடி முடிவு செய்யும்' என்றனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1754086

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.