Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்

Featured Replies

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
நகைச்சுவை
---------------
ஆறடி பனை போல் 
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை 
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே 
குதி இருக்குது உன் கால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர 
கண்டதையும்வைதிருந்தவளே 
கை இருக்குது உன்கைப்பை எங்கே ...?

கண்டதையும் ........
பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
முகம் இருக்குது உன் அழகு எங்கே ..?

^^^
கவிப்புயல் இனியவன்
கானா நகைச்சுவை கவிதை 

  • தொடங்கியவர்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
பொருளாதாரக்கவிதை 
---------------
ஏழையின் வீட்டில் ...
பசி வயிற்றில் பிறக்கிறது ...
செல்வந்தன் வீட்டில் ...
பசி கண்ணில் பிறக்கிறது ...!

ஏழையின் வீட்டில் ...
வயிறு அடுப்பாக எரியும் ...
செல்வந்தன் வீட்டில் ...
அலங்காரமாய் அடுப்பு எரியும்....!

ஏழையின் வீட்டில் ...
பசி நோய்க்கு காரணி ..
செல்வந்தன் வீட்டில் ...
நோய்நீக்கும் காரணி பசி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
வறுமையின் கொடுமை

  • தொடங்கியவர்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தன்னம்பிக்கை கவிதை
---------------

தனக்கிருக்கும்.....
உறுதியான சக்தி ......
தன்னம்பிக்கை..............!

தன்மானம் காத்திட .....
தலைசாயாத சக்தி ....
தன்னம்பிக்கை.............!

எல்லாமே இழந்தாலும் ....
எஞ்சியிருக்கும் சக்தி ....
தன்னம்பிக்கை...............!

உயிரே போனாலும் .............
உயிர்த்தெழும் சக்தி ...........
தன்னம்பிக்கை...........!

இரக்க பார்வையை ......
இல்லாதொழிக்கும் சக்தி .....
தன்னம்பிக்கை............!

எல்லாம் சாத்தியமே என்று ......
அறிவை நம்பும் சக்தி ........
தன்னம்பிக்கை.............!

^^^
கவிப்புயல் இனியவன்
தன்னம்பிக்கை கவிதை 

  • தொடங்கியவர்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
தகவளுடன் காதல்கவிதை
---------------

கண்ணே ...
ஜேர்மனியின் பெர்லின் சுவர் ...
இடிக்கப்படு பலவருடமாகிறது ...
இரு வேறுபட்ட பொருளாதார ...
முறைமைகள் கூட ஒன்றாயின ...!

கண்ணே நீ ...
எனக்கு விதிக்கும் காதல் ..
சுவர் ஏனடி நீண்டுகொண்டே ...
செல்லுகிறது ....
காதலுக்கு கண்டிப்பு தேவை....
துண்டிப்பாக இருக்கக்கூடாத்தடி ...!

^^^
கவிப்புயல் இனியவன்
தகவளுடன் காதல்கவிதை 

  • தொடங்கியவர்

கவிப்புயலின் பலரசக்கவிதைகள்
---------------
ஒருதலைக்காதல் கவிதை 
---------------
உன்னை
நினைத்துக் கொண்டிருக்க .......
இனிப்பாய் இருக்கிறது......
நீயும் என்னை...........
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நினைத்துக்கொள்வது.....
ஒருதலைக்காதல் .......!

கோலங்களை......
மனசுக்குள் போடுகிறேன்......
பூவை தலையில் சூட ...
ஏங்கிக்கொண்டு ....
இருக்கிறேன் ..........
காதலிலே கொடூரமானது ...
ஒருதலை காதல் தான் ...!

^^^
கவிப்புயல் இனியவன்
ஒருதலைக்காதல் கவிதை

  • தொடங்கியவர்
----------------------------------
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
----------------------------------
 
சின்ன சண்டையிட்டு .....
சின்ன கோபத்துடன் ....
சின்னனாய் விலகியிருப்பது ...
ஊடல் எனப்படும் ....!!!
 
ஊடலின் அதிக இன்னமே ....
கூடலின் அதிக இன்பமாகும் ....
கூடலின் ஒரு செயலே ....
ஊடல் ஆகும் ......!!!
 
+
குறள் 1330
+
ஊடலுவகை
+
ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 250
 
 
^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^
 
திருக்குறளை கவிதையாக அமைக்கும் எனது சின்ன முயற்சியில் தற்போது "இன்பத்துப்பால் " என்னும் பகுதியில் 250 குறள்கள் அமைந்துள்ளன . அவற்றை ஒவ்வொன்றாக கவிதையாக்கி அதற்கு பொருத்தமான தலைப்பிட்டு கவிதை வடிவத்தில் அமைத்துள்ளேன்
  • தொடங்கியவர்

ஒரு காதல் ஒரு ஓசை........!
---------------------------

இதயத்தில் இதமாய் வந்- தாய்
காதலை சுகமாய் தந்- தாய்
நினைவில் இன்பமாய் இருந்- தாய்
சொல்லடி என்ன செய்- தாய்............?

உன்னில் என்னை மறந் -தேன்
உயிராய் உன்னை நினைத் -தேன்
உறவுகளோடு உன்னிடம் வந் -தேன்
உன் சம்மதத்தால் மெய்மறந் -தேன்

^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் இனியவன்
மணிபல்லவம் -வட இலங்கை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^^^^^^^^^^^^^^

  • தொடங்கியவர்

வலிக்கும் இதயத்தின் கவிதை
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------
என் ........
காதலின் வலிமை ......
உனக்கு புரியவில்லை .....
என்றோ என் காதலை .....
நினைத்து பார்ப்பாய் ......
அப்போது புரியும் என்னை .....
இழந்ததால் வலி ...........!!!

உன்னை காணும் ....
போது வேண்டுமென்றே.....
இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன் .....
உள்ளே இதயம் நொறுங்கும் ....
சத்தம் யாருக்கு புரியும் .....?

^^^^^
கவிப்புயல் இனியவன் 
வலிக்கும் இதயத்தின் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^
200 கவிதைக்கு மேல் இந்த தலைப்பில்
கவிதை உள்ளது

  • தொடங்கியவர்

இனியவன் கஸல் கவிதைகள் 
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------

நீ 
சொன்ன ஒரு வார்த்தை.... 
ஆயிரம் கஸல் கவிதையை ... 
தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ... 
திறந்த சிறைச்சாலைக்குள் .... 
அடைத்துவிடும் .... 
காதல் ......!!!

இதயங்களை .... 
இணைக்கும் .... 
சங்கிலி -காதல் ... 
துருப்பிடிக்காமல் .... 
பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது ..... 
என் இதயத்தில் பூத்த .... 
முள் பூ நீ ................!!!!

நீ 
காதலோடு...... 
விளையாட வில்லை .... 
என் 
மரணத்தோடு ..... 
விளையாடுகிறாய் ......!!!

^ 
கவிப்புயல் இனியவன்

  • தொடங்கியவர்

முள்ளில் மலரும் பூக்கள்
---------------------------------------------
பல்சுவைக்கவிதைகள்
---------------------------------------------

உன் 
எடையை ...
காட்டிலும் என் எடை ...
அதிகம் ...
உன் வலியையும்....
சுமப்பதால் .....!!!

காதல் ...
தோல்வியே இல்லை ....
நினைவுகளோடு ....
வாழ்பவனுக்கு .....!!!

நான் 
கிழிந்த காற்றாடியல்ல ...
விழுந்த காற்றாடி .....
உன் மூச்சுக்காற்று ....
போதும் நான் பறப்பதற்கு .....!!!

^
^^^^^
கவிப்புயல் இனியவன் 
முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை
பல்சுவைக்கவிதைகள்
^^^^^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.