Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வாகரையை கைப்பற்றி விட்டோம் என்பது சிறிலங்காவின் அறியாமையே': எஸ்.ஜெயானந்தமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'வாகரையை கைப்பற்றி விட்டோம் என்பது சிறிலங்காவின் அறியாமையே': எஸ்.ஜெயானந்தமூர்த்தி

"வாகரையை சென்றடைந்த பின்னர், தாங்கள் பாரிய இராணுவ சண்டையைச் செய்து அங்கு பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டோம் என்று கூறுவதும், இராணுவ வெற்றியாக அதனை கருதிக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொள்வது என்பதும் அவர்களுடைய அறியாமையே"

மேற்கண்டவாறு தான் நினைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு கடந்த சனிக்கிழமை (17.02.06) வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார்.

அவரது சிறப்புப் பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே தொகுத்து தரப்படுகின்றன.

வாகரை நிலைமை உண்மையும் புனைவும்..

"கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாணம் எவ்வாறான பூகோள ரீதியான அமைப்புகளைக் கொண்டது என்பதனை நாம் முதலில் சிந்திக்க வேண்டும்.

இன்று, சிறிலங்கா அரசாங்கம் தங்களுடைய கட்டுப்பாட்டில் 85 வீதமான நிலப்பரப்புக்களை வைத்திருக்கின்றோம், அங்கே விடுதலைப் புலிகளை துரத்திவிட்டோம், விடுதலைப் புலிகள் பலம் இழந்துவிட்டார்கள், பல இடங்களை நாம் புதிதாக கைப்பற்றியிருக்கின்றோம் என பல பிரச்சாரங்களை சிறிலங்கா அரசாங்கம் செய்து வருகின்றதே தவிர, அங்கே என்ன நடைபெற்றிருக்கின்றது என்பதனை அங்கே நேரடியாக சென்று பார்ப்பவர்களுக்குத் தெரியும்.

உண்மையில் கடந்த வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் மூதூர், சம்பூர் மற்றும் மூதூர் கிழக்கு போன்ற பிரதேசங்களிருந்து விடுதலைப் புலிகள் சில காரணங்களுக்காக பின்வாங்கியிருந்தனர். அதுபோன்று, இந்த வருடத்தில் வாகரையிலிருந்து, விடுதலைப் புலிகள் சற்றுப் பின்வாங்க வேண்டிய நிலமை ஏற்பட்டிருந்தது.

இதற்கு உண்மையில் முக்கியமான காரணம் என்னவென்று கூறினால், வாகரைப் பிரதேசத்திலிருந்து மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள், எறிகணைத் தாக்குதல்களினால் ஏற்பட்ட படுகொலைகள், படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத நிலை, மற்றும் உணவுப் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் ஏ-15 பாதை மூடப்பட்டமை போன்ற பிரச்சினைகளால் சிக்கித்தவிக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக அவர்கள், அங்கு இருக்க முடியாத காரணத்தினால் அவர்களை வெளியே செல்வதற்கு அனுமதித்திருந்த வேளையில்தான் அதனை சாட்டாக வைத்து, வாகரைப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் உள்நுழைந்தனர். ஆனால் உண்மையில் அங்கே சண்டை என்று எதுவும் நடைபெறாமல்தான் அந்தப் பிரதேசத்திலிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியிருந்தனர். அது மாத்திரமல்லாமல் இராணுவ தந்திரோபாயங்களும் அதில் இருக்கின்றன.

ஆகவே, வாகரைக்குச் சென்று, வாகரையை சென்றடைந்த பின்னர், தாங்கள் பாரிய இராணுவ சண்டையைச் செய்து இராணுவ வெற்றியாக அதனை கருதிக்கொண்டு தாங்கள் அங்கு பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டோம் என்று கூறி சிறிலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொள்வது என்பது அவர்களுடைய அறியாமையே என்றுதான் நான் நினைக்கின்றேன்.

ஏனெனில் 1984 ஆம் ஆண்டில் முதன் முதலாக வாகரைப் பிரதேசத்துக்கு இராணுவம் சென்றிருந்தது. அந்த வாகரைப் பிரதேசத்தை எடுத்துப் பார்த்தால் ஒருபுறம் கிழக்காக வங்காள விரிகுடாவும், வடக்காக மூதூருக்கு உடாக திருமலைக்கு செல்கின்ற அந்த நிலப்பரப்பும், மேற்காக வாவியும் அது களப்பு போன்ற பகுதியும், தெற்காக மட்டக்களப்பு நிலப்பரப்பும் இருக்கின்றன.

ஆனால், அங்கே சென்ற இராணுவத்தினர், தாங்கள் அந்தப் பிரதேசத்தை கைப்பற்றிவிட்டோம், அந்தப் பிரதேசம் மிக முக்கியமானது என்று கூறுகின்ற அளவுக்கு அங்கே அதில் அவ்வளவு முக்கியத்துவம் இல்லை. சில போக்குவரத்து மார்க்கங்களாக அது இருந்தாலும் அதனை ஒரு பாரிய இராணுவ முற்றுகையாக நாங்கள் கூற முடியாது. ஏனெனில் 84 ஆம் ஆண்டிற்குப் பின்பு மாறி, மாறி இராணுவத்தினரும் விடுதலைப் புலிகளும் அப்பிரதேசத்தினை தக்க வைத்திருந்திருக்கின்றனர்.

84 ஆம் ஆண்டிலிருந்து 87 ஆம் ஆண்டு வரையும் அங்கிருந்த இராணுவத்தினர் வெளியேறியிருந்தனர். பின்பு 90 ஆண்டிற்குப் பின்னர் சென்றிருந்தனர். பின்பு 94, 95 ஆண்டில் வெளியேறியிருந்தனர். பின்னர் தொடர்ச்சியாக அங்கே இராணுவத்தினர் இல்லாத நிலையில் மாங்கேணி வரைதான் இராணுவத்தினர் இருந்தனர்.

ஆகவே, இது ஒரு பாரிய ஒரு வெற்றியாக கூறிக்கொண்டு, தாங்கள் 85 சதவீத நிலப்பரப்பை கைப்பற்றியிருக்கின்றோம் என்று கூறுவது, நிச்சயமாக அது உண்மைக்குப் புறம்பானதொரு செய்தி. அதேவேளை, தொப்பிக்கல பகுதியில் மாத்திரம் தான் விடுதலைப் புலிகள் இருக்கின்றனர் என்று கூறினால், அங்கே இப்போதும் 70 வீதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அவர்களுடைய முகாம்கள் இருக்கின்றன. இப்போதும் அங்கே சகல நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதற்கு என்ன விளக்கத்தை சிறிலங்கா அரசு கூறப் போகின்றது என்பது எமக்கு தெரியாமல் உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் இவ்வாறான கதைகளைக் கூறி இவ்வாறான பிரச்சாரங்களை செய்து, அரசியல் ரீதியான சில மாற்றங்களை செய்வதற்கு இன்று சிறிலங்கா அரசு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. உண்மையில் நிலமை இதுதான். ஆகவே, இதனை சிறிலங்காவின் தற்போதைய ஒரு பாரிய அரசியல் பிரச்சாரமாகத்தான் இதனை நாம் பார்க்கின்றோமே தவிர, எமது தரப்பில் விடுதலைப் புலிகள் தரப்பில் இது ஒரு பாரிய தோல்வியாகக் கூற முடியாது.

போராட்டத்தில் புதிய, புதிய இடங்களைப் பிடிப்பதும் சில பிடித்த இடங்களை கைவிடுவதும் சில தந்திரோபாய பின்நகர்வுகள் ஏற்படுவதும் சகஜம். அதேவேளை மட்டக்களப்பைப் பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக பலருக்கு நீண்டகாலமாகத் தெரியும் அங்கே பின்தளங்கள் இல்லாத ஒரு நிலையில்தான் சண்டைகள் நடைபெறுவது வழக்கம். ஆகவே அங்கே நடமாடும் சண்டை முறைகள், கெரில்லா தாக்குதல்கள் போன்றவற்றை செய்து படைக்குறைப்பைச் செய்வதுதான் மிக முக்கியமானதொரு விடயம். ஆகவே அதுதான் அங்கே சாத்தியப்படக்கூடிய வகையில் அதற்கான ஏற்பாடுகளைத்தான் நாம் எதிர்காலத்தில் எதிர்பார்க்கலாம் என்று நான் நினைக்கின்றேன்"

கண்காணிப்புகுழு பற்றி..

"...புரிந்துணர்வு உடன்படிக்கையில் மிகத் தெளிவாக இந்த விடயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. அதன் படி கடந்த வருடத்திலிருந்து இந்தப் பிரதேசங்களுக்குள் உள்நுழைவதும் பிரதேசங்களை கைப்பற்றுவதும் போன்ற பாரிய போர் நிறுத்த மீறல்களை சிறிலங்கா அரசாங்கம் செய்து கொண்டு வந்தது.

இது தொடர்பாக சில மேலோட்டமான அறிக்கைகளைத்தான் உண்மையில் போர்நிறுத்த கண்காணிப்புக்குழு விடுத்திருந்தது. அதுவும் ஒரு அழுத்தங்களைக் கொடுக்கக்கூடிய வகையில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் இந்த அறிக்கைகள் வழங்கவில்லை.

உண்மையில் இது தொடர்பாக கண்காணிப்புக்குழு பாரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் போர் நிறுத்தத்தை கண்காணிப்பதற்கு வந்த இந்த கண்காணிப்புக் குழுவினரே இன்று பக்கசார்பாக நடந்து கொள்வதனைத்தான் நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

அண்மையில் வாகரைப் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்த பிரச்சினைகள் தொடர்பாக நான் அந்தப் பிரதேசத்துக்கு செல்ல வேண்டும் என்று போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவிடம் கூறுகின்ற போதெல்லாம் அவர்கள் அதற்கு மௌனம் சாதித்தார்களே தவிர, பாரியளவில் அதற்குரிய முக்கியத்துவம் கொடுத்து அந்த விடயத்தை கவனிப்பதற்குக் கூட அவர்கள் முன்வரவில்லை.

அவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாதொரு நிலைமை இருக்கின்றது என்பது பற்றியும், நாங்கள் எவ்வாறு அங்கே செல்வது என்ற கேள்விகளையும் சில நேரங்களில் கேட்கின்றனரே தவிர, அவர்கள் அங்கே நேரடியாகச் சென்று அங்கே உள்ள நிலைமைகளை அறிந்து அறிக்கை விடுவதற்கு, அழுத்தங்களை கொடுப்பதற்கு கூட அவர்கள் முன்வராத நிலைமைதான் இருந்தது.

இங்கே எத்தனையோ போர் நிறுத்த மீறல்கள் இடம்பெற்றிருந்த போதிலும் அந்த மீறல்கள் பலவற்றை சிறிலங்கா அரசாங்கம் செய்திருந்த போதிலும் அதனை தெளிவாக அல்லது உறுதிப்பட கூறுகின்ற நிலையில் கண்காணிப்புக்குழுவும் இல்லாமல் தள்ளாடிக் கொண்டு இருக்கின்றது என்பதுதான் உண்மை..."

"...நீண்டகாலமாக இவர்கள் மீதான நம்பிக்கையீனங்கள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால், உண்மையில் இந்த போர் நிறுத்த உடன்படிக்கை என்பது, ஒரு அனைத்துலக அழுத்தங்களுக்கும் அனைத்துலக நியதிப்பாடுகளுக்கும் ஏற்ப இதனை செய்துகொண்ட காரணத்தினால் இந்த அனுசரணையாளர்களையும் அனுசரிக்க வேண்டிய நிலமை. அவர்கள் அனுசரணையாளர்களாக இருப்பதனை விட நாங்கள் அனுசரிக்க வேண்டியதொரு தேவைப்பாடு இருந்தது. ஆனால் உண்மையில் இந்த அனைத்துலக சமூகம், நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்த கண்காணிப்புக்குழு போன்றவற்றின் மீது, மக்கள் முற்றுமுழுதாக நம்பிக்கை இழந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. இப்போது அவர்கள் என்பது செல்லாக்காசு போன்றதொரு நிலைமைதான் காணப்படுகின்றது..."

புலம்பெயர்ந்தோர் பற்றி..

"நாங்கள் இப்போது புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுடன் பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் கூட புலம்பெயர் வாழ் மக்களினுடைய எழுச்சிகளும், மக்களுடைய பேரணிகளும், மக்களினுடைய வெளிப்படுத்தல்கள்தான் இன்று எங்களுக்கு பாரியளவில் இந்த அனைத்துலக நாடுகள் மத்தியில் பாரிய பிரச்சாரமாக அமைந்திருந்தது. அதாவது பிரச்சாரம் என்பதனை விட உண்மையை வெளியில் கொணர்ந்திருந்தனர்.

எமது உறவுகள் அங்கே கொல்லப்படுகின்ற வேளைகளில் எல்லாம், இங்கே எதிர்ப்புக்கள், உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அவ்வாறான உணர்வுகள் இங்கே தொடர்ச்சியாக வெளிப்படுத்தல் வேண்டும். இது மிக முக்கியமானதொரு விடயம். நாம் அங்கே இடம்பெறுகின்ற ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு நீண்ட இடைவெளிகளுக்குப்பின்பு ஒரு எழுச்சியை செய்வது என்பது அது சாத்தியமானதொன்றல்ல.

அண்மைக்காலங்களாக கடந்த வருடத்தில் எல்லாம் பல நிகழ்வுக்கள் அவ்வாறு இடம்பெற்றன. பேரணிகள் இடம்பெற்றன. இவ்வாறான நிகழ்வுகள், பேரணிகள் இங்கே தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். உண்மையான அந்த மக்களினுடைய துன்பங்கள், அந்த மக்கள் படுகின்ற அவலங்களை நாங்கள் தொடர்ச்சியாக புலம்பெயர் வாழ் மக்கள் அந்த அந்த நாடுகளில் தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்பதுதான் எமது நிலைப்பாடு."

-புதினம்

இப்போது போர்நிறுத்த கண்காணிப்பு குழு என்ன செய்கிறது? பழையவர்கள் இருந்தபோது ஓரளவுக்காவது செயற்பட்டது. புதியவர்கள் வந்தபின் எல்லாம் புதுமையாக நடக்கிறது. சிறீ லங்காவுக்கு உளவு வேலையும் பார்ப்பதாய் கேள்வி!

போர்நிறுத்த கண்காணிப்பு குழுவின் அறிக்கைகள் எழுதும் திறமையை அவதானித்து புள்ளிகள் போடுவதற்கு இங்கே அழுத்தவும்!

புலம்பெயர்ந்தோர் பற்றி..

"நாங்கள் இப்போது புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுடன் பல சந்திப்புக்களை நடத்திக்கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் கூட புலம்பெயர் வாழ் மக்களினுடைய எழுச்சிகளும், மக்களுடைய பேரணிகளும், மக்களினுடைய வெளிப்படுத்தல்கள்தான் இன்று எங்களுக்கு பாரியளவில் இந்த அனைத்துலக நாடுகள் மத்தியில் பாரிய பிரச்சாரமாக அமைந்திருந்தது. அதாவது பிரச்சாரம் என்பதனை விட உண்மையை வெளியில் கொணர்ந்திருந்தனர்.

எமது உறவுகள் அங்கே கொல்லப்படுகின்ற வேளைகளில் எல்லாம், இங்கே எதிர்ப்புக்கள், உணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்தியிருந்தனர். அவ்வாறான உணர்வுகள் இங்கே தொடர்ச்சியாக வெளிப்படுத்தல் வேண்டும். இது மிக முக்கியமானதொரு விடயம். நாம் அங்கே இடம்பெறுகின்ற ஒரு சம்பவத்தை வைத்துக்கொண்டு நீண்ட இடைவெளிகளுக்குப்பின்பு ஒரு எழுச்சியை செய்வது என்பது அது சாத்தியமானதொன்றல்ல.

உவர் ஜெயானந்த மூர்த்தி உந்த புலம்பெயர் பன்னாடைகள் பற்றி பொய் எல்லாம் சொல்ல வெளிக்கிட்டார்... வெளிநாட்டு காசு வேணும் எண்டதுக்காக இப்படி எல்லாம் சொல்லுறார்.... உதை நம்பி எங்கட சனம் அங்கலாய்க்கிறதுதான் நடக்க போகுது... எங்கட புலம்பெயர் சனத்துக்கும் வேற வேலை இல்லைத்தானே....!

ஈழத்திலை இருக்கிற சனத்துக்கு சொல்லுறதை என்ன கோதாரிக்கு புலம் பெயர் சனத்துக்கும் சேர்த்து சொல்லுறார்... எல்லாருக்கும் தனி தனியா சொன்னால்தானே போக வேண்டியவைக்கு செய்தி தனித்தனியாய் போய் சேரும்...

Edited by Thala

  • கருத்துக்கள உறவுகள்

உவர் ஜெயானந்த மூர்த்தி உந்த புலம்பெயர் பன்னாடைகள் பற்றி பொய் எல்லாம் சொல்ல வெளிக்கிட்டார்... வெளிநாட்டு காசு வேணும் எண்டதுக்காக இப்படி எல்லாம் சொல்லுறார்.... உதை நம்பி எங்கட சனம் அங்கலாய்க்கிறதுதான் நடக்க போகுது... எங்கட புலம்பெயர் சனத்துக்கும் வேற வேலை இல்லைத்தானே....!

ஈழத்திலை இருக்கிற சனத்துக்கு சொல்லுறதை என்ன கோதாரிக்கு புலம் பெயர் சனத்துக்கும் சேர்த்து சொல்லுறார்... எல்லாருக்கும் தனி தனியா சொன்னால்தானே போக வேண்டியவைக்கு செய்தி தனித்தனியாய் போய் சேரும்...

என்ன தல!

நீங்களும் குறுக்கால போகின்றீர்கள்? இருந்தாலும் இப்போது கருணா கும்பலின் கொலை வெறிக்கு முதலிடத்தில் உள்ளவர் இவர் தான். பாதுகாப்பு குறித்து அக்கறையோடு இருப்பது நல்லது. அவர் தேசிய ஆதரவு அரசியல்வாதி மட்டுமல்ல, ஒரு சிறந்த வரலாறு தெரிந்த பத்திரிகையாளர். முதலில் முஸ்லீம் குழுக்கள் அச்சுறுத்தலாக இருந்தன. இப்போது கருணா கும்பலும், இராணுவமும் அச்சுறுத்தலாக இருக்கின்றன.

பா.உ தன் பாதுகாப்பில் கூடிய அக்கறை செலுத்தி நடந்துகொள்வாராக.

தூயவன்.! நாங்கள் இப்ப தனியா றூட்டு போட்டு நிகள்ச்சி நிரல் எல்லாம் நிரப்பீட்டம்... சிங்களம் எல்லாம் இப்ப போராட்டத்தை மக்கள் மயப்படுத்தி தமிழருக்கு எதிராய் திருப்பீட்டுது... இராணுவத்துக்கு எல்லாம் தொண்டர் அடிப்படையில் ஆள் சேர்க்குதாம்... அதோட நில்லாமல் சண்டக்களுக்கு வாகனங்களை எல்லாம் சனங்களிட்டை இனாமாய் வாங்கித்தான் செய்யுது.... அதோட தாயகத்துக்காய் இறந்து போறவைக்கு எல்லாம் நட்ட ஈடு எண்டுற பேச்சுக்கே இடம் இல்லை. அதைவிட நிதிகளை எல்லாம் வெளிநாடுகளில் இருந்து கடண் வேண்டாமல் நன்கொடையாய் வாங்கி வடக்கு கிழக்கு சிங்களவர் தாயகத்துக்காய் போராடுது....

அதை எல்லாம்விட முக்கியமாய் வெளிநாடுகள் எல்லாம் தங்களின் நலன்கள் எண்டது இலங்கையில் இருப்பதுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிங்களவர் தாயகத்துக்காய் எவ்வளவு எண்டாலும் முதலீடு செய்ய இருப்பதாலும் எங்களின் நிகள்ச்சி நிரலில் மாற்றம் வந்திட்டுது...

அதனால் புலம் பெயர் நாட்டில் வாழும் மக்கள் எல்லாம் ஊரிலை இருக்கும் உறவுகளுக்காய் கவலைப்படாமல், அவர்களுக்கு ஒரு தீர்வு வேணும் எண்டு எல்லாம் நினைக்காமல் , அது தமிழர் தாயகம்தான் எண்டதை எல்லாம் முடிவு எடுக்க கூடாது என்பதை கடுமையான தொனியில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்... அதோடு அவலத்தை தந்த சிங்களவனுக்கு திருப்பி கொடு எண்ட சொல்லையும் திரும்ப பெறவேணும் எண்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்...!

இணயத்தளங்கள் எனப்படுபவை - சூடான செய்திகள் என்பதை விட....

பொறுப்புணர்வுகளூடனும் நடந்து கொள்ளணுமில்லையா?

எதுவிதபாதுகாப்புமே இல்லாமல்... தான் எடுத்த கொள்கைக்காக தடம் மாறாமல்...இருக்கிறவங்களை -

பேட்டி - அது இது என்று போய் - உணர்ச்சி வசப்படாம....

மெளனமாய் அவங்களிருந்து - உதவியாய் இருக்க விடலாமே!

பிறகு மெழுகுவர்த்தியும் - சொய்ங்க்க் என்று சோககீதமும் - பண்ணி ஒன்றும் ஆகபோறதில்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.