Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுத படகு அழிப்பு

Featured Replies

:rolleyes:

:rolleyes: குறுக்ஸ் அண்ண சொல்றதிலையும் நியாயம் இல்லாமல் இல்லைப் பாருங்கோ!!

இங்க வெளிநாட்டில இருக்கிறவையில பலர்...இப்படித்தான் புலம்பிறவை..களத்தில் நின்று போராடுபவர்களுக்கு இல்லாத உணர்ச்சியா இவையளுக்கு இருக்கப் போகுது!...

குறுக்ஸ் அண்ணை இந்த வகையில் நான் உங்க பக்கம் தான்.

ஒரு தம்பியையும் தங்கையையும் இழக்க விரும்பவில்லை ஆகவே அமைதியாக இருங்கள்.குறுக்ஸ் தம்பி குறுக்காலை போகிறார் என்றுதான் வெளிநாட்டுக்கு அனுப்பியவை.மீண்டும் அங்கு போய் குறுக்காலை போய் மிஸ்பயரில் அம்பிடாமல் இரண்டு பேரும் இங்கு இருங்கள்

இந்தியாவில் ஒரு தொலைக்காட்சி சேவைகூட இல்லையா? ஏனென்றால் ஒன்றையுமே காட்டாமல் செய்கிறார்கள்.அப்ப பிறகென்ன இதெல்லாம் றீல் தான்

காட்டினார்களே இங்கு சக்தியில்....படகையல்ல... இந்தியப் பொலிசார். ஒரு ஆயுதம். சில வெடி பொருட்கள் தொலைத் தொடர்புக் கருவிகள்... மேலும் சில பொருட்கள் (என்னவென்று தெரியவில்லை)

Edited by saanakiyan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காட்டினார்களே இங்கு சக்தியில்....படகையல்ல... இந்தியப் பொலிசார். ஒரு ஆயுதம். சில வெடி பொருட்கள் தொலைத் தொடர்புக் கருவிகள்... மேலும் சில பொருட்கள் (என்னவென்று தெரியவில்லை)

<<<

இங்க ஏ.ரி என் ஜெயா செய்தில் தினமும் காட்டுறாங்களே..

மைனாரிட்டி திமுக அரசு விடுதலைப் புலிகளின்பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு...ஆயுதம் கடத்தல்...! ஒரே பல்லவியைத் தினமும் பாடுறாங்க....!!...

  • தொடங்கியவர்

தமிழக கடலோரங்களில் ஆயுத பறிமுதல்களை தொடர்ந்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம்

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற்பிரதேசத்திலும் அதை ஒட்டிய கரையோரங்களிலும் தொடர்ந்து பல்வேறு விதமான ஆயுதங்கள், ஆயுத உதிரிபாகங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் பிடிபட்டு வரும் பின்னணியில் தமிழக அரசுக்கும் இந்திய ராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையிலான உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம், புதன்கிழமை தமிழக அரசின் தலைமைச்செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எல்.கே திரிபாதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் பி.சிவசங்கர், தமிழகக் காவல்துறைத்தலைவர் முகர்ஜி மற்றும் ராணுவம், இந்திய கப்பற்படை, இந்திய கடலோர காவல்படை, விமானப்படை, மற்றும் தமிழக காவல்துறையின் தீவிரவாத கண்காணிப்புபிரிவைச்சேர்ந்த உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

எல்லைப்புறக்காவல் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகளுக்கும் மாநிலத்தின் சிவில் நிர்வாகத்திற்கும் இடையிலான இதுபோன்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூட்டப்பட்டிருப்பதாகவும் இந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையே, ராமேசுவரம் கடற்பிரதேசத்தில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலமான ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதற்கு முன்னர் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை நடத்தப்பட்டு வந்த ஹெலிகாப்டர் மூலமான ரோந்துப்பணி, தற்போது ஒருநாளைக்கு பத்து முதல் பதினொன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த படகில் 500 கிலோ கிராம் வெடிமருந்துகள் பக்கப்பாட்டில் வைத்திருந்தது என்றால் இரண்டு பக்கத்திலும் மொத்தம் 1000 கிலோ கிராம் இருந்து இருக்க வேண்டும் ஆனால் அவர்கள் சொல்வது சரியானால் எப்படி அந்த படகு தாக்கு பிடித்து இருக்கும் என்பதில் சந்தேகம் இருக்கின்றது காரணம் சாதாரண போக்கு வரத்துக்கு பயன் படுத்தும் நார் இழைப்படகுகள் 21 அடி அல்லது 22 அடி படகுகளையே தான் விடுதலைப் புலிகள் இந்தியாவிற்க்கும் இலங்கைக்கும் இடையில் பயன் படுத்துவார்கள் அப்படி இருக்கும் போது இவர்கள் கூறியது ப டி பார்த்தால் விடுதலைப்புலிகள் தாங்கள் இலங்கை இராணுவத்தை துரத்தி அடிக்க பயன் படுத்தும் படகு போல் அல்லவா இருக்கின்றது ஆனால் அவர்கள் இன்னும் ஒரு கருத்தை அல்லவா சொல்லி இருக்கின்றனர் அதாவது கரும்புலிப்படகு என்றும் அதற்கான யாக்கட் கள் இருந்ததாக கடலுக்கு செல்லும் கரும்புலிப்படகுகள் எக்காரணம் கொண்டும் லைவ் யக்கட் பாவிக்க மாட்டார்கள் காரணம் அவர்கள் உடலில் குண்டை பொருத்தி வெடிக்க வைப்பது இல்லை அத்தோடு அவகள் இன்னும் ஒரு ஓட்டையை விட்டு இருக்கின்றார்கள் அதாவது எகே 47 ரக ஆயுதம் விடுதலைப்புலிகள் வைத்து இருந்ததாக இவை எல்லாம் இந்திய கடல் படை கட்டிய புனைகதை என்பது தெரிகின்றது அதாவது இவர்கள் சொல்வது போல் பக்கவாட்டில் 500 + 500 வெடிப்பொருற்கள் மறைத்து வைத்து இருந்தாள் அந்த படகில் மற்றய பொருட்கள் இருந்து இருக்க வாய்ப்பே இல்லை அத்தோடு 500 கிலோ எடை என்பது கிட்ட தட்ட 10 நபர்களின் சாதாரண எடையாகும் அப்படியான எடைகளை இரண்டு பக்க வாட்டில் வைத்து படகை இயக்குவது கடினம் அத்தோடு படகில் பக்க வாட்டில் விடுதலைப்புலிகள் வெடிப்பொருக்களை கொண்டு செல்வது இல்லை காரணம் அப்படி பக்கவாட்டில் வெடிப்பொருற்களை கொண்டு சென்றால் இடிக்க முடியாது வெடிக்க வைப்பதிலும் சிரமம் இருக்கும் வெடிப்பொருக்களை படுக்கையாக வைத்து அதாவது இரண்டு இடத்தை அவர்கள் தெரிவு செய்வது இலகு ஒன்று அணியப்பகுதி மற்றது கடையால் ( தண்டைப்பகுதி) இவற்றைத்தான் தெரிவு செய்வார்கள் அல்லது மிகவும் பாரம் கூடிய வெடிப்பொருட்களை கொண்டு செல்ல வேண்டுமானால் அடித்தளத்தில் பாட்டில் போட்டு அதனை கவர் செய்து இருக்கலாம் இதுவும் விரும்பினால் மட்டுமே ஆனால் அதற்க்கும் சிரமங்கள் இருக்கின்றன காரணம் வெடிப்பொருக்கள் இப்படி கொண்டு சென்றால் படகுக்குள் வரும் தண்ணீரை வெளியில் எடுப்பது சிரமம் இருந்தாலும் சரி செய்ய முடியும் அத்தோடு இரண்டாவது வெளி இணை இயந்திரப்படகு என்பதால் அந்த படகு நிச்சயம் 22 அல்லது 21 அடி நார் இழை படகாக இருந்திருக்க வேண்டம் அப்படிப்பார்த்தால் 1000 கிலோ+ 5 ஆட்கள் ( கிட்டத்தட்ட 300 கிலோ) இன்னும் வெளி இணை இயந்திரங்கள் 3 வைத்து இருந்திருப்பார்கள் 200 கிலோ + அவற்றை இயக்குவதற்க்கு பாவிக்கும் எண்ணை 400 லீற்றர்கள் சாதாரணமாக இருக்கும் 300 கிலோ இன்னும் வெடிப்பொருக்கள் வைத்து இருந்ததாக கதை விட்டு இருக்கினம் அவற்றை இன்னும் 100 கிலோ என்று பார்த்தால் அந்த படகு நிச்சயம் விடுதலை புலிகளின் படகு அல்ல காரணம் சிந்திக்கும் பொழுது நிறையவே பிரச்சனைகள் இருக்கு ஆதலால் இந்த ஓட்டைகளை சரிசெய்யாமல் சரியாக விடுதலை புலிகளை தெரியாமல் தப்பான கணக்கு என்பது புரிகின்றது

நன்றி

மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்யும் தற்கொலை ஜாக்கெட் படகில் இருந்தது தான் "கியூ' பிரிவு போலீசுக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ய வைத்தது மனித வெடிகுண்டு தான். அந்த வகையில், 14 கிலோ எடையுடைய தற்கொலை ஜாக்கெட்டை எடுத்துக் கொண்டு இந்திய கடலோரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது ஏன்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் அதிபயங்கர தகவல் கிடைத்தது. புலிகள் வந்த படகு புத்தம் புதிய படகு. பைபரால் செய்யப்பட்டது. படகில் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் 500 கிலோ எடையுள்ள வெடி மருந்து பொருட்கள் பதுக்கி, அதை பைரறக தகடால் சீல் வைத்திருப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் நேற்று முன்தினம் பிற்பகலில் தெரிவித்ததும், "கியூ' பிரிவு போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர்.

எங்களை பலஸ்தீனியர்களோட ஒப்பிடுகிறதுக்கு இலங்கை அரசாங்கம் ஒண்றும் தனிப்பொருளாதார பலம் கொண்ட இஸ்ரேலும் கிடையாது...! கண்டவனும் வந்து பூந்துவிட பக்கத்தில் இருக்கிறது கேணைத்தமான சிரியாவோ இல்லை எமிரேட்சோ கிடையாது, அது பெருமலை இந்தியா....!

பொருத்தமில்லாத உதாரணங்கள் எல்லாம் எதுக்கு....??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.