Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

வடிவேலு ஸ்ரீ லங்கா அணியின் தீவிர ஆதரவாளர் போல இருக்கு :)

வடிவேலுக்கு சக்களத்தி பூஜாவை கலியாணம் பேசுவமா?

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply

என்னா மாப்பு யாரச்சும் ஒருதன மாட்ட்ல் விடுற ஐடியாவிலயே இருக்கிறீங்களா.....? :P

தென் ஆபிரிக்கா பாகிஸ்தான் அணிகள் தங்கியிருந்த Hilton hotel ல் நேற்றுக்காலை எரிவாயு கசிவினால் அல்லோகல்லாபட்டது. முதலில் தீபற்றியுள்ளது என எண்ணி அனைவரையும் Hilton hotel பாதுகாப்புப் பிரிவினர் ் வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். பாகிஸ்தானிய வீரர்கள் பதட்டத்துடன் வெளியேறியுள்ளார்கள். பின்னர் அது எரிவாயுக் கசிவினால் ஏற்பட்ட சிறு தீ விபத்து என்று இரு ஹொட்டேல் பணியாளர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானார்கள் என அறியப்படுகின்றது.

ஜானா

பாகிஸ்தான் அணி யாரில முழிச்சிட்டுப் போனங்களோ தெரியல :mellow::mellow:

உலகக் கிண்ணப் போட்டிக்கான விதிமுறைகளில் அதிரடி மாற்றங்களை அறிமுகப்படுத்துகிறது ஐ.சி.சி.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

அதன் விபரம் வருமாறு:

* லீக் மற்றும் `சுப்பர் 8' சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 2 புள்ளிகள் வழங்கப்படும். `ரை' மற்றும் முடிவு கிடைக்காத போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். தோல்வியுறும் அணிக்கு புள்ளி கிடையாது.

* லீக் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் `சுப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த இரண்டு அணிகளில் ஏதேனும் ஒரு அணி ஏற்கனவே, லீக் ஆட்டத்தில் மற்றொரு அணியை வீழ்த்தியிருந்தால், அந்தப் புள்ளியை மட்டும் `சுப்பர் 8' சுற்றுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

*`சுப்பர் 8' சுற்றில் தங்களது பிரிவில் இருந்து தகுதிபெற்ற அணியை தவிர, மற்ற அணிகளுடன் ஒவ்வொரு அணியும் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

இதில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணிகள் சம அளவில் புள்ளிகள் பெற்றிருந்தால், அரை இறுதிக்கான அணியை தேர்வு செய்ய கீழ்க்கண்ட 5 முறைகள் பின்பற்றப்படும்.

*1. லீக் அல்லது `சுப்பர் 8' சுற்றில் அதிக வெற்றி பெற்ற அணி

2. லீக் அல்லது `சுப்பர் 8' சுற்றில் அதிக ஓட்ட விகிதம்.

3. லீக் அல்லது `சுப்பர் 8' சுற்றில் குறைந்த பந்துகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அணி.

4. இரு அணிகளிடையே நடந்த போட்டிகளில் அதிக வெற்றி.

5. குலுக்கல் போன்ற ஐந்து முறைகளில் முடிவு அறிவிக்கப்படும்.

* அரையிறுதிப் போட்டியில் ஆட்டம் `ரை' ஆகும் பட்சத்தில் கால்பந்தில் பயன்படுத்தப்படும் `பெனால்டி ஷூட் அவுட்' முறைபோல், `பவுல் அவுட்' என்ற புதிய முறை பயன்படுத்தப்படும். இதன்படி இரண்டு அணியிலும் தலா ஐந்து பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 முறை பந்துவீச வேண்டும். துடுப்பாட்ட வீரரோ தேர்வு செய்யப்படுவர். அவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 முறை பந்து வீச வேண்டும். துடுப்பாட்ட வீரரோ, கீப்பரோ இருக்க மாட்டார்கள். இதில் வீரர்கள் விக்கெட் வீழ்த்துவதை கணக்கில் கொண்டு வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும். ஒரு வேளை இதிலும் சமநிலை ஏற்பட்டால் `சடன்டெத்' முறை பின்பற்றப்படும்.

`பவுல் - அவுட்' முறை கடந்த ஆண்டு பெப்ரவரி 16 ஆம் திகதி நியூஸிலாந்து - மேற்கிந்திய அணிகளிடையே நடந்த 20/20 ஓவர்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. அதில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது.

ஆனால், இரு அணிகளும் சமமாக ரன் எடுத்து ஒரு ஆட்டம் `ரை' யில் முடிவது என்பது, எப்போதாவது நிகழக்கூடியது. உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை 2 போட்டிகள் மட்டுமே ரையில் முடிந்திருக்கின்றன.

*அரையிறுதிப் போட்டியில் முடிவு கிடைக்கவில்லை. (மழை மற்றும் இதர காரணங்களால் தடைப்படும்போது) என்றால், `சுப்பர் 8' பிரிவில் அதிக ஓட்ட விகிதம் எடுத்த அணிக்கு இறுதிப் போட்டி வாய்ப்பளிக்கப்படும்.

*இறுதிப்போட்டி `ரை' ஆகும்போது, `பவுல் - அவுட்' முறை பின்பற்றப்படும். அதேசமயம், மழை போன்ற காரணங்களால் முடிவு கிடைக்காதபோது இரு அணிகளும் கூட்டாக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படும்.

* மோசமான வானிலையால் போட்டியில் தாமதம் ஏற்படும்போது, இரு அணிகளையும் குறைந்தது 20 ஓவர்கள் விளையாட வைத்து முடிவு அறிவிக்கப்படும்.

* ஒரு அணி முழுமையாக விளையாடி விட்டு மற்றொரு அணி ஆடிக் கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டால், அந்த அணி 20 ஓவருக்கு மேல் விளையாடியிருக்கும் பட்சத்தில், `டக்வேர்த் - லூயிஸ்' விதிமுறைப்படி வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படும்.

* கிரிக்கெட்டில் சில சமயம் நடுவர்களின் தவறான தீர்ப்பால் போட்டியின் முடிவே மாறி விடுவதுண்டு.

`கேட்ச்'சில் இந்த மாதிரி சர்ச்சைக்குரிய அவுட்டுகள் கொடுக்கப்படுகிறது. இதனை தடுக்க இந்த உலகக் கிண்ணத்தில் புதிய விதி அமுலாகிறது. இதன்படி பந்து துடுப்பில் பட்டுத்தான் கீப்பரிடம் சென்றதா? துடுப்பாட்ட வீரர் அடிக்கும் பந்தை களத்தடுப்பாளர் தரையோடு அள்ளிக்கொண்டு கேட்ச் என்று முறையிடுகிறாரா என்பது போன்ற சந்தேகம் மைதானத்தில் இருக்கும் நடுவருக்கு ஏற்பட்டால், அவர் உடனே 3 ஆவது நடுவர் உதவியை நாடலாம். அவர் ரி.வி. ரீப்ளேயை பல முறை அலசி ஆராய்ந்து, ஆட்டமிழப்பா, இல்லையா என்பதை அறிவிப்பார். இதன்மூலம் 3 ஆவது நடுவரின் அதிகாரம் அதிகரிக்கிறது.

* 20 ஓவர்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் களத்தடுப்பு செய்யும் `பவர் பிளே' முறை ஒரு நாள் போட்டியில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த முறை இந்த உலகக் கிண்ணத்திலும் நீடிக்கிறது.

  • தொடங்கியவர்

L B W இனையும் மூன்றாவது நடுவரை பார்க்கச் சொல்லலாம் தானே. :mellow:

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

untitledmy8.png

தீ விபத்தினால் இடம் பெயர்ந்துள்ள இன்சமாம்.

  • தொடங்கியவர்

இன்ஸமாம், நஸீரிடம் ஐ.சி.சி. திடீர் ஊக்கமருந்து சோதனை.

பாகிஸ்தான் அணித்தலைவர் இன்ஸமாம் மற்றும் இம்ரான் நஸீரிடம் ஐ.சி.சி. திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தியது. பாகிஸ்தான் கனடா அணிகளுக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயிற்சிப்போட்டி முடிந்த பின்னர் ஐ.சி.சி.யின் மருத்துவக்குழு இன்ஸமாம், இம்ரான் நஸீர் இருவரிடமும் திடீரென இந்த ஊக்கமருந்து சோதனையை நடத்தியுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் ஒவ்வொரு அணியில் இருந்தும் தலா இரண்டு வீரர்களிடம் திடீரென ஊக்கமருந்து சோதனை நடத்தும் என ஏற்கனவே அறிவித்திருந்தது.

-Virakesari-

சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றாற் போல மேற்கிந்திய தீவு மைதானங்கள் அமைந்துள்ளதால் ஆசிய நாட்டு அணிகளுக்கு வெல்லும் வாய்ப்பு அதிக உள்ளதென முன்னாள் இந்திய அணித்தலைவர் கவஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளங்கள் வேகப்பந்தைக் காட்டிலும் சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான களங்கள் . ஆதலால் இந்தியாவின் அனில் கும்ளே ஹர்பஜன் சிங் இலங்கையின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளி சனத் அதே போன்று பாகிஸ்தானின் கனேரியா அப்ரிடி மாலிக் ஆகியோருக்கு இக் களம் நல்ல பெறுபேறுகளைப் பெற்றுத்தரும் என நம்பப்படுகின்றது.

இதே வேளை இம் முறை ஒஸ்ரேலியா உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றாது என முன்னாள் மேற்கிந்திய கிரிக்கட் வீரர் விவியன் றிச்சட் உறுதியுடன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்பார்க்கத ஒரு அணி அனைவருக்கும் அதிர்ச்சியளித்து கிண்ணத்தைக் கைப்பற்றலாம எனவும் கூறியுள்ளார்.

ஜானா

இதுவரை யாழ்களப் போட்டியில் ரமா, ஈழவன்,வெண்ணிலா,யமுனா, புத்தன், மாப்பிள்ளை,ஜனார்த்தனன்,சின்ன

  • தொடங்கியவர்

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

வினோ உமக்கு பங்களாதேஷ் அணி என்றால் இழக்காரமாப் போய்ட்டா....? :angry: :angry: :angry: எப்படிதன் 96 இலங்கை அணியையும் சொன்னாங்க, பங்களா தேஷ் கப் தூக்கினாலும் தூக்குவாங்க. சொல்ல முடியாது :P

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள், விளையாடிய மைதானம் சிறியதாக இருந்தாலும் Cricinfo.com ல் பங்களாதேஷ் பந்து வீச்சாளன் இறுதி ஓவர்களில் Bond ன் பந்து வீசுக்கு அடித்த சிக்சர்கள் Massive hit - Huge Sixes என எழுதப்பட்டிருந்தது.

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் கப் தூக்கினாலும் தூக்குவாங்க. சொல்ல முடியாது :P

பிரசு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இப்படி எல்லாம் கனவு காணலாமா?? :blink:

பிரசு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இப்படி எல்லாம் கனவு காணலாமா?? :blink:

ஆனால் லொத்தரி அடிச்சால் பங்களாதேஷ் அரை இறுதிவரை முன்னேறக்கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

கடந்த முறை கென்யா அணி அரையிறுதியில் விளையாட வில்லையா......?

  • தொடங்கியவர்

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள், விளையாடிய மைதானம் சிறியதாக இருந்தாலும் Cricinfo.com ல் பங்களாதேஷ் பந்து வீச்சாளன் இறுதி ஓவர்களில் Bond ன் பந்து வீசுக்கு அடித்த சிக்சர்கள் Massive hit - Huge Sixes என எழுதப்பட்டிருந்தது.

மாப்பு, பந்து வீச்சாளர்கள் சிக்ஸ் அடிக்கும் போது அதனை புகழ்ந்து பேசுவது வழக்கம் அதுவும் அன்று அந்த பந்து வீச்சாளர் Mashrafe Mortaza அடிச்சது மச் வின்னிங் சொட் என்ற படியால் அதனை இப்படி தான் புகழுவார்கள். போன முறை உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் பொன்டிங் அடிச்ச சிக்சருகள் பார்த்தீங்களா?? அது தான் சிக்ஸ்.

மாப்பு, பந்து வீச்சாளர்கள் சிக்ஸ் அடிக்கும் போது அதனை புகழ்ந்து பேசுவது வழக்கம் அதுவும் அன்று அந்த பந்து வீச்சாளர் Mashrafe Mortaza அடிச்சது மச் வின்னிங் சொட் என்ற படியால் அதனை இப்படி தான் புகழுவார்கள். போன முறை உலக கிண்ண இறுதி ஆட்டத்தில் பொன்டிங் அடிச்ச சிக்சருகள் பார்த்தீங்களா?? அது தான் சிக்ஸ்.

எனேய் அப்பு வினோ சிக்சர் யாரடிச்சாலும் சிக்ஸ் தான் நீர் 96ம் ஆண்டு யெயசூரிய அடிசத பாக்கலியா........? 99 ஆண்டு அதே சிரி லங்காக்கு கங்குலி அடிச்சத பாக்கலியா.....?

மைதானங்கள் எல்லாமே ஒப்பீட்டளவில் கொஞ்சம் சிறிதாக தான் உள்ளன அது தான் பயிற்சி ஆட்டங்களில் அளவு கணக்கில்லாமல் சிக்சருகள் போகுது. பங்களாதேஸ் வீரனே சிக்சர் அடிக்கிறார் என்றால் பாருங்கோவன். :blink:

வினோ உமக்கு பங்களாதேஷ் அணி என்றால் இழக்காரமாப் போய்ட்டா....? :angry: :angry: :angry: எப்படிதன் 96 இலங்கை அணியையும் சொன்னாங்க, பங்களா தேஷ் கப் தூக்கினாலும் தூக்குவாங்க. சொல்ல முடியாது :P

நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள், விளையாடிய மைதானம் சிறியதாக இருந்தாலும் Cricinfo.com ல் பங்களாதேஷ் பந்து வீச்சாளன் இறுதி ஓவர்களில் Bond ன் பந்து வீசுக்கு அடித்த சிக்சர்கள் Massive hit - Huge Sixes என எழுதப்பட்டிருந்தது.

பிரசு கற்பனை பண்ணுறதுக்கும் ஒரு லிமிட் இருக்கு இப்படி எல்லாம் கனவு காணலாமா?? :)

ஆனால் லொத்தரி அடிச்சால் பங்களாதேஷ் அரை இறுதிவரை முன்னேறக்கூடும் என்பதை மறந்துவிடக்கூடாது.

கடந்த முறை கென்யா அணி அரையிறுதியில் விளையாட வில்லையா......?

பெரும்பாலும் ஒவ்வொரு உலக கிண்ண போட்டியிலும் கணக்கிலெடுக்காத அணி ஒன்று மிக சிறப்பாக விளையாடி எல்லோருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

கடந்த உலக கிண்ண போட்டியில் கென்யா அணி சிறப்பாக விளையாடி அரை இறுதிவரை சென்றது.

1999 உலக கிண்ண போட்டியில் சிம்பாவே அணி சூப்பர் 6இற்கு தகுதி பெற்று மற்றைய அணிகளுக்கு பெரும் சவாலாக திகழ்ந்தது.

1996 உலக கிண்ண போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது.

இந்திய அணி கூட 1983இல் வென்றது யாரும் எதிர்பாராத வகையில்தான்.அந்த வரிசையில் இந்த முறை பங்களாதேஷ் அணி மற்றைய அணிகளுக்கு பெரும் சவாலாக திகழக்கூடும்.

எனேய் அப்பு வினோ சிக்சர் யாரடிச்சாலும் சிக்ஸ் தான் நீர் 96ம் ஆண்டு யெயசூரிய அடிசத பாக்கலியா........? 99 ஆண்டு அதே சிரி லங்காக்கு கங்குலி அடிச்சத பாக்கலியா.....?

அடேங்கப்பா! பிரசுக்கும் கூட இப்படி ஆராய்ந்து, அனலைஸ் பண்ணி சிந்திக்க முடிகிறது. வெரி குட் பிரசு!

  • தொடங்கியவர்

பொன்டிங் அடிச்ச 7 சிக்ஸ் இல் 3 சிக்ஸ் ஸ்ரேடியத்துக்கு வெளியால அல்லவா போய் விழுந்தது அதை தான் நான் சொல்லுறன். :blink:

பொன்டிங் அடிச்ச 7 சிக்ஸ் இல் 3 சிக்ஸ் ஸ்ரேடியத்துக்கு வெளியால அல்லவா போய் விழுந்தது அதை தான் நான் சொல்லுறன். :blink:

சிக்ஸ் என்றால் சிக்ஸ் தான். அது பவுண்டரி எல்லையில் போய் விழுகின்றதா அல்லது ஸ்டேடியத்துக்கு வெளியால் போய் விழுகின்றதா என்பதல்ல முக்கியம்! 06 ஓட்டங்கள் கிடைக்கின்றதா என்பது மட்டுமே முக்கியம்! :)

  • கருத்துக்கள உறவுகள்

96 ல் இருந்த இலங்கை அணிக்கும் தற்பொழுது உள்ள பங்களதேச அணிக்கு பல வித்தியாசங்கள் உண்டு. இலங்கை அப்பொழுது 95ல் முதன் முதலாக வெளி நாட்டில் டெஸ்ட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்றது. நீயூசிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. பிறகு பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் ஒரு தினப் போட்டியிலும் தொடரைத் தட்டிக்கொண்டது. பிறகு சார்ஜாவில் நடந்த முக்கோண துடுப்பாட்டப்போட்டியிலும் மேற்கிந்தியா, பாகிஸ்தானை வென்று இலங்கை வெற்றி பெற்றது. பிறகு அவுஸ்திரெலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஒருனாள் முக்கோண துடுப்பாட்ட அரம்பச் சுற்றில் சில போட்டிகளில் அவுஸ்திரெலியா, மேற்கிந்தியா அணிகளை இலங்கை வென்று இறுதிப் போட்டியில் அவுஸ்திரெலியாவிடம் தோல்வி கண்டது. இத்தொடரின் இறுதி ஆட்டங்களில் முரளிதரன் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சென்ற உலகப் போட்டியில் கென்யா, இலங்கை பங்காளதேசம் சிம்பாவேயினை வென்று இருந்தாலும், நியூசிலாந்து கென்யாவில் விளையாடததினால் அப்போட்டியில் கென்யா வெற்றி பெற்றது. நியூசிலாந்து அப்போட்டியில் விளையாடி இருந்தால் கென்யா அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருக்குமா என்று சொல்ல முடியாது. பங்களதேச அணி உலகக்கிண்ணத்தினை இம்முறை வெல்லாது. ஆனால் வருங்காலத்தில் வெல்லலாம்.

அடேங்கப்பா! பிரசுக்கும் கூட இப்படி ஆராய்ந்து, அனலைஸ் பண்ணி சிந்திக்க முடிகிறது. வெரி குட் பிரசு!

எல்லாம் உங்க புனியத்திலதான் மாப்பு :P :P

  • கருத்துக்கள உறவுகள்

எனேய் அப்பு வினோ சிக்சர் யாரடிச்சாலும் சிக்ஸ் தான் நீர் 96ம் ஆண்டு யெயசூரிய அடிசத பாக்கலியா........? 99 ஆண்டு அதே சிரி லங்காக்கு கங்குலி அடிச்சத பாக்கலியா.....?

எல்லாவற்றிலும் சிறந்த 6 ஒட்டம். ஆசிய அவுஸ்திரெலியா ஒருனாள் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக இறுதிப்பந்தில் 6 ஒட்டங்கள் எடுத்தால் வெல்லலாம் என்ற நிலையில் செட்டான் சர்மாவின் பந்துக்கு பாகிஸ்தான் வீரர் ஜவீட் மியன்டாட் அடித்த 6 ஒட்டமே சிறந்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.