Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை?

Featured Replies

மோசடிக் களமாக மாறியுள்ளதா வடக்கு மாகாண சபை?

 

வடக்கு மாகாண அமைச்­சர்­கள் சிலர் மீதான மோசடி விசா­ரணை அறிக்கை முத­ல­ மைச்­ச­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த அறிக்கை மீது உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­வது முத­ல­மைச்­ச­ரின் பொறுப்­பா­கும்.

நீண்ட போர் கார­ண­மா­கப் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளில் பலர் இன்­ன­மும் தமது இயல்பு நிலைக்­குத் திரும்­பாத நிலை­யில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். ஏகப்­பட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்து வரு­கின்ற அவர்­கள், அவற்­றுக்­குத் தீர்வு காண்­ப­தற்­கா­கப் போராட்­டங்­க­ளி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில்தான், தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டன் அவர்­கள் வடக்கு மாகாண சபை­யைத் தெரிவு செய்­த­னர். அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு பெற்­றுத் தரு­வ­தில் மாகா­ண­சபை எந்த அள­வுக்­குப் பாடு­பட்­டது என்­பதை மக்­கள் தற்­போது நன்­றாக உணர்ந்­துள்­ள­னர்.

முத­ல­மைச்­சர் உட்­பட நான்கே நான்கு பேர் மட்­டுமே வடக்கு மாகாண சபை­யில் அமைச்­சுப் பொறுப்­புக்­களை வகிக்­கின்­ற­னர். மகா­ண­ச­பைத் தேர்­த­லுக்­கான வேட்­பா­ளர் பட்­டி­ய­லைத் தெரிவு செய்த வேளையிலும், பின்­னர் அமைச்­சுப் பத­வி­களை வழங்­கிய வேளையிலும்கூட கூட்­ட­மைப்­புக்­குள் பெரும் இழு­பறி காணப்­பட்­டது.

மக்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கச் சிந்­திப்­பதை விடுத்­துப் பத­வி­க­ளுக்­கா­கத் தமிழ் அர­சி­ யல்­வா­தி­கள் தமக்குள் மோதிக் கொண்டமை வெட்­கக்கேடா­னது. ஆனால் அது நடை­பெற்று முடிந்­தது. தற்­போது மோசடி செய்­த­தா­கக் கூறி அமைச்­சர்­க­ளி­டம் விசா­ரணை செய்து அறிக்கை சமர்ப்­பிக்­கும் அள­வுக்கு நிலைமை மோச­மான கட்­டத்தை எட்டி நிற்­கின்­றது.

அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு முதலமைச்சரே பொறுப்பேற்க வேண்டும்

ஏற்­க­னவே தமி­ழர்­கள் ஆளத் தெரி­யா­த­வர்­கள்; ஒற்­று­மை­யில்­லா­த­வர்­கள் என்ற பழிச் சொற்­கள் எம்மவர்கள் மீது சுமத்­த ப்­ப­டு­வ­துண்டு. தற்­போது ஊழல் வாதி­கள் என்­ற­தொரு புதிய பழி­யும் சேர்ந்து நிற்­கின்­றது. அமைச்­சர்­கள் மீதான மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் நிச்­ச­ய­மா­கப் பொறுப்­புக் கூற வேண்­டும். ஏனென்­றால் மாகா­ண­ச­பை­யின் தலை­மைப் பொறுப்பு அவர்­வ­சமே உள்­ள­தால் அவர் இதி­லி­ருந்து விலகி விட முடி­யாது. நெருப்­பில்­லா­மல் புகை­யாது என்று கூறு­வார்­கள். விசா­ர­ணை­க­ளில் ஏதோ உள்­ளமை தெளி­வா­கின்­றது.

தமி­ழர்­க­ளின் போராட்­டங்­கள் அடக்கி ஒடுக்­கப்­பட்ட நிலை­யில் அதன் .போராட்டக் களமாக மாகாண சபை காணப்­ப­டு­கின்­றது. அதி­கா­ரங்­கள் குறை­வா­கக் காணப்­பட்­டா­லும், தமி­ழர்­கள் தமது அபி­லா­சை­க­ளைத் தெரி விப்­ப­தற்கு மாகாண சபை­யைப் பயன்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும். ஆனால் அங்கு மோச­டி­கள் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­ப­டு­ கின்­றமை தமி­ழர்­க­ளுக்­குப் பெரும் இழுக்­கைத் தேடித் தந்து விடும்.

ஊழல் மோசடிகள் தமிழ்நாட்டு அரசியலைப் போன்று ஆகி விட்டுள்ளன

ஏற்­க­னவே தமிழ் நாட்­டில் ஊழல் மோசடி அர­சி­யல் வாதி­க­ளால் பெரிய பிரச்­சி­னை­கள் தோன்­றி­யுள்­ளன. அங்கு முத­ல­மைச்­ச­ரா­க­வி­ருந்த மறைந்த ஜெய­ல­லிதா ஊழல் வழக்­கொன்­றில் குற்­ற­வா­ளி­யா­கக் கரு­தப்­பட்­டுச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டமை தமிழ் இனத்­துக்கே இழுக்­கைத் தேடித் தந்து விட்­டது.

அவர் உயி­ரோடு இருந்­தி­ருந்­தால் சிறை­யி­லேயே காலத்­தைக் கடத்­திக் கொண்­டி­ருப்­பார். தற்­போது அவ­ரது நெருங்­கிய தோழி­யாகி சசி­கலா அதே வழக்­கில் குற்­ற­வா­ளி­யா­கத் தீர்ப்பு வழங்­கப்­பட்­டுச் சிறைச்­சா­லைக் கம்­பி­களை எண்­ணிக் கொண்­டி­ருக்­கின்­றார். அவ­ரால் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பிரச்­சி­னை­கள் தமிழ் நாட்­டின் அர­சி­ய­லையே தற்­போது ஆட்­டம் காண வைத்­துள்­ளன.

தற்­போது வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மோச­டி­யில் ஈடு­பட்­ட­தாக வெளி­வ­ரு­கின்ற செய்­தி­கள் தமி­ழர் தரப்­பைப் பொறுத்­த­வ­ரை­யில் தலைக்­கு­னிவை ஏற்­ப­டுத்­தக் கூடி­யவை.

ஆனா­லும் மோசடி செய்­த­வர்­கள் எவ­ராக இருந்­தா­லும் அதற்­கான தண்­ட­னையை அவர்­கள் அனு­ப­வித்தே தீர வேண்­டும். தற்­போது மாகா­ண­ச­பை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் இலங்­கைத் தமி­ழ­ர­சுக் கட்சி, ரெலோ, புளட் ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய நான்கு கட்­சி­க­ளைச் சேர்ந்த உறுப்­பி­னர்­கள் பதவி வகிக்­கின்­ற­னர். இவர்­கள் கூட்­ட­மைப்­பில் இணைந்­தி­ருந்­தா­லும் வெவ்­வேறு கொள்­கை­க­ளைக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

முத­ல­மைச்­சர் மோசடி தொடர்­பான விசா­ரணை அறிக்­கையை மாகாண சபை­யில் சமர்ப்­பிக்­கும்போது உறுப்­பி­ர்களி டையே மோதல்­கள் கூட வெடிக்­க­லாம். ஆனால் ஜன­நா­யக மர­பு­க­ளுக்கு அமை­வாக இவை அமை­வது தான் இன்­றைய தேவை­யா­கும். கூட்­ட­மைப்பு என்ற மிகப்­பெ­ரிய அர­சி­யல் சக்­தி­யா­கப் பரி­ண­மித்­தி­ருக்­கும் கூட்­ட­மைப்­பி­னர், தமது ஐக்­கி­யத்தை எந்த வகை­யி­லும் இழந்து விடக்­கூ­டாது. மோசடி செய்­த­வர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்கு அர­சி­யல் ரீதி­யில் எவ­ருமே முன்­வ­ரக் கூடாது. மோச­டி­யா­ளர்­கள் தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர வேண்­டும். இதில் பாகு­பாட்­டுக்கு இட­மே­யில்லை.

சுயநல அரசியல்வாதிகளது மோசடிகள் அனுமதிக்கப்படலாகாது

ஆகவே கூட்­ட­மைப்­பின் தலைமை இந்த விட­யத்­தில் உட­ன­டி­யா­கத் தலை­யிட்­டுத் தகுந்த முடி­வொன்றை எடுக்க வேண்­டும். முத­ல­மைச்­சர் கூட்­ட­ மைப்­பின் தலை­மைக்­குக் கட்­டுப்­பட்­ட­வர் என்­ப­தால் அவர் தலை­மை­யு­டன் கலந்து ஆலோ­சித்­துத் தகுந்த தீர்­வொன்­றைக் காண முற்­பட வேண்­டும்.

பாதிக்­கப்­பட்ட மக்­கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காணும் பொருட்­டுத் தொடர் போராட்­டங்­க­ளில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கும் இந்த வேளை­யில், சுய­நல அர­சி­யல்­வா­தி­கள் மோச­டி­க­ளில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருப்­பதை எவ­ரா­லும் பொறுத்­துக் கொள்ள முடி­யாது. கூட்­ட­மைப்­புக்கு நேர்ந்த களங்­க­மா­கவே இதைக் கருத வேண்­டும். மாற்று அணி­யி­னர் கூட்­ட­மைப்­பின் நட­வ­டிக்­கை­க­ளைக் கண்­கொத்­திப் பாம்பு போன்று அவ­தா­னித்­துக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

மாகாண அமைச்­சர்­க­ளின் மோசடி விசா­ரணை அறிக்­கையை அவர்­கள் நிச்­ச­ய­மா­கக் கையில் தூக்கி வைத்­துக் கொண்டு பேயாட்­டம் ஆடவே செய்­வார்­கள். ஆகவே கூட்­ட­மைப்பு இதில் பக்­கச்­சார்­பற்ற விதத்­தில் நட­வ­டிக்கை எடுத்­துக் குற்­றம் புரிந்­த­வர்­க­ ளுக்கு உரிய தண்­டனை பெற்­றுக் கொடுக்க வேண்­டு்ம்.

http://uthayandaily.com/story/4005.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.