Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இயற்கையின் சீற்றத்தால் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

Featured Replies

இயற்கையின் சீற்றத்தால் பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது : மேலும் அதிகரிக்கலாம் என அச்சம்

 

 

 

நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதுடன் 99 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையலாமெனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

DAwYZH-VoAA2-y6.jpg

இதேவேளை, இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மண்சரிவுகளில் சிக்கி காணாமல்போனவர்களளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் உடன் இணைந்து முப்படையினரும் ஈடுபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.virakesari.lk/article/20404

  • தொடங்கியவர்

தெற்கில் பேரனர்த்தம் 95 பேர் பலி 150 பேரை காணவில்லை

01-8986b1cdae573684d55002a929957087ee11486e.jpg

 

களுத்­துறை, இரத்­தின­புரி  காலி மாத்­தறை உள்ளிட்ட 14 மாவட்­டங்கள்  வெள்ளத்­தில் மூழ்­கின;  பல்­வேறு பிர­தே­சங்­க­ளிலும் மண்­ச­ரிவு 

(ரொபட் அன்­டனி, எம்.எப்.எம். பஸீர்)

நாட்டில் நிலவும் மிக மோச­மான கால­நிலை கார­ண­மாக தென்­னி­லங்­கையின் களுத்­துறை, இரத்­தி­ன­புரி மற்றும் மாத்­தறை உள்­ளிட்ட ஏழு மாவட்­டங்­களில் ஏற்­பட்ட மண்­ச­ரிவு, வெள்­ளப்­பெ­ருக்கில் சிக்கி 95 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் மேலும் 150 பேர் காணாமல்போயுள்­ளனர்.

அத்­துடன் சுமார் ஐந்து இலட்சம் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் 16,759 குடும்­பங்­களை சேர்ந்த 61,315 பேர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந் துள்ளனர். பாதிக்­கப்­பட்ட பிர­தேசங்­களில் மக்­களின் இயல்பு வாழ்க்கை முற்­றாக பாதிப்­ப­டைந்­துள்­ளது.

மாத்­தறை, காலி, களுத்­துறை, இரத்­தி­ன­புரி, அம்­பாந்­தோட்டை, கம்­பஹா ஆகிய மாவட்­டங்­களின் தாழ்­நிலப் பிர­தே­சங்கள் அனைத்தும் நீரில் மூழ்­கியுள்­ளன. காலி, களுத்­துறை, இரத்­தி­ன­புரி மாத்­தறை மாவட்­டங்­களில் வீடுகள் வீதிகள் என அனைத்துப் பகு­தி­களும் நீரில் மூழ்­கி­யுள்­ளன.   

வௌ்ளப்­பெ­ருக்கு மண்­ச­ரிவு அனர்த்தம் கார­ண­மாக களுத்­துறை மாவட்­டத்தில் 37 பேரும் மாத்­தறை மாவட்­டத்தில் 4 பேரும் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் 28 பேரும் உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் சில பிர­தே­சங்­களில் உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன.

வெள்­ளத்தில் சிக்­கி­யுள்ள மக்­களை மீட்­ப­தற்கு விமா­னப்­ப­டையின் 15 ஹெலி­கப்­டர்கள் மற்றும் கடற்­ப­டையின் 22 டிங்கி பட­குகள் என்­பன ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மீட்புப் பணி­களில் 300 இரா­ணு­வத்­தி­னரும், 143 கடற்­ப­டை­யி­னரும் மற்றும் பொலி­ஸாரும் ஈடு­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் காலி களுத்­துறை மற்றும் இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் அனைத்து பாட­சா­லை­களும் நேற்­றை­ய­தினம் மூடப்­பட்­டன. மாவட்­டங்­களின் பிர­தான வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்­கி­யுள்­ள­மை­யினால் போக்­கு­வ­ரத்தும் கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­துடன் மக்­களின் அன்­றாட செயற்­பா­டு­களும் முடங்­கி­யுள்­ளன.

களு­கங்கை, ஜின்­கங்கை ஆகி­யன பெருக்­கெ­டுத்­துள்­ள­தனால் அப்­ப­கு­தி­களின் வீதிகள் மற்றும் தாழ்­நி­லப்­பி­ர­தே­சங்கள் நீரில் மூழ்­கி­யுள்­ளன. அத்­துடன் கேகாலை அம்­பாந்­தோட்டை கொழும்பு ஆகிய மாவட்­டங்­களில் வௌ்ளம் கார­ண­மாக பாதிப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ளன.

களுத்­துறை

களுத்­துறை மாவட்­டத்தில் நேற்­று­மா­லை­வரை 37 பேர் உயி­ரி­ழந்­தி­ரு­ருந்­த­துடன் 70 பேர் காணாமல் போயி­ருந்­த­தாக மாவட்ட செய­லாளர் யு.டி. ஜயலால் தெரி­வித்தார். இந்த மாவட்­டத்தின் பெல்­லன்­வில பகு­தியில் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்ற மண்­ச­ரிவில் 11 பேர் காணாமல் போயி­ருந்­தனர். இதில் மூவரின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. பது­ர­லிய பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் 2 வீடுகள் முற்­றாக மண்­ணுக்குள் புதை­யுண்­டுள்­ளன. அந்த வீடு­களில் 11 பேர் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஒருவர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்ளார்.

அத்­துடன் புளத்­சிங்­கள பகு­தியில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் ஆறுபேர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் நால்வர் காணா­மல்­போ­யுள்­ளனர். காணா­மல்­போ­யுள்ள நால்­வரை தேடும் பணிகள் தொடர்­கின்­றன.

கொக்­கந்த பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இரவு ஏற்­பட்ட மற்­று­மொரு மண்­ச­ரிவில் எட்­டுபேர் காணாமல் போயுள்­ளனர். சப்­பு­கஸ்­கந்த ஹெய்­யாந்­து­டுவ என்ற பகு­தியில் வீட்டின் மேல் மதில் சரிந்து விழுந்­ததில் இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த சம்­ப­வத்தில் வீட்­டி­லி­ருந்த தாயும் மக­ளுமே உயி­ரி­ழந்­துள்­ளனர். போகா­வத்தை பிர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் 10 பேர் காணாமல் போயுள்­ளனர். மேலும் இம்­மா­வட்­டத்தில் பல பிர­தே­சங்­களில் பாரிய பாதிப்­புக்கள் ஏற்­பட்­டுள்­ளன.

மாத்­தறை

மாத்­தறை தெனி­யாய பகு­தியில் ஏற்­பட்ட மண்­ச­ரிவு அனர்த்­தத்தில் 4 பேர் உயி­ரி­ழந்­த­துடன் 16 பேர் காணாமல் போயுள்­ளனர். 12 வீடுகள் முற்­றாக சேத­ம­டைந்­துள்­ளன. காணாமல் போன­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்­கின்­றன.

நெலுவ என்ற பிர­தே­சத்தில் தேயிலை தொழிற்­சாலை விடுதி மீது மண் திட்­டொன்று சரிந்து விழுந்­ததில் 10 பேர் காணாமல் போயுள்­ளனர். இத­னை­ய­டுத்து பொலி­ஸாரும் விமானப் படை­யி­னரும் இணைந்து மேற்­கொண்ட தேடுதல் பணியில் 3 பெண்கள் மீட்­கப்­பட்டு அவர்­களில் இருவர் கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் அதில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.

காய­ம­டைந்த மற்­றைய பெண் கராப்­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­கின்றார். மண்­ணுக்குள் புதைந்­துள்ள ஏனைய பெண்­களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

அத்­துடன் பெலி­யத்த, வஹ­ரக்­கொட பிர­தே­சத்தில் நீரில் அடித்துச் செல்­லப்­பட்டு 11 வய­து­டைய பாட­சாலை மாணவர் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நீரில் அடித்துச் செல்­லப்­பட்ட மாண­வனை மீட்­டெ­டுத்த பிர­தே­ச­வா­சிகள் தங்­காளை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த பின்னர் மாணவர் உயி­ரி­ழந்­துள்ளார். மேலும் வௌ்ளத்தில் சிக்கி பாது­காப்­பான இடங்­க­ளுக்கு செல்ல முடி­யாத மக்­களை விமான படை­யி­னரும் கடற்­ப­டை­யி­னரும் மீட்­டி­ருந்­தனர்.

ஜின் கங்கை பெருக்­கெ­டுத்தன் கார­ண­மாக பத்­தே­கம, தவ­ளம, நாகொட, வெலி­பிட்­டிய திவி­துர ஆகிய பிர­தே­சங்கள் நேற்­றைய தினம் நீரில் மூழ்­கின.

இரத்­தி­ன­புரி

இதே­வேளை இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் இது­வ­ரையில் மண்­ச­ரி­வி­னாலும் வெள்­ளத்­தி­னாலும் பலி­யானோர் எண்­ணிக்கை 28 ஆக உயர்ந்­துள்­ள­தாக பதி­வா­கி­யுள்­ளது.

 பெய்­து­வரும் அடை­ம­ழையால் இரத்­தி­ன­புரி நகரை முற்­றாக நீர் ஆக்­கி­ர­மித்­துள்­ளது. மாவட்­டத்தில் பர­வ­லாக பல இடங்­களில் தாழ் நிலங்கள் வெள்­ளத்தில் மூழ்­கி­யுள்­ளன.

களு­கங்­கையின் நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் இரத்­தி­ன­புரி பகு­தியின் தாழ்­நி­லங்­களில் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு பெரும் வெள்­ளக்­கா­டாக நேற்று காட்­சி­ய­ளித்­தது.இரத்­தி­ன­புரி நகரம் மற்றும் புற­ந­கரப் பகு­தி­களில் சுமார் 3 தொடக்கம் 7 அடி வரையில் நீர் நகரை ஆக்­கி­ர­மித்­தி­ருந்­தது.

இதன்­கா­ர­ண­மாக இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் அரச இயந்­திரம் முற்­றாக செய­லி­ழந்­தி­ருந்­தது.அரச ஊழி­யர்கள் பெரும்­பா­லானோர் சேவைக்கு செல்ல முடி­ய­வில்லை. அத்­துடன் பெரும் பாலான அரச அலு­வ­ல­கங்­களும் பாட­சா­லை­களும் மூடப்­பட்­டி­ருந்­தன.

பாட­சா­லைகள் மூடப்­பட்ட முறை­யான அறி­வித்தல் கிடைக்­கா­மை­யினால் சில பகு­தி­களில் மாண­வர்கள் பாட­சா­லை­க­ளுக்கு சென்­ற­தனால் தமது பிள்­ளை­களை அழைத்துச் செல்ல பாட­சா­லை­க­ளுக்கு படை­யெ­டுத்­தனர்.

 வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்டு வீடு­க­ளுக்குள் நீரினால் சூழப்­பட்­டி­ருந்த மக்­களை மீட்க படகுச் சேவை ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த போதிலும் மக்­களை பாது­காப்பு முகாம்­க­ளுக்கு மீட்டுச் செல்ல போது­மான படகுச் சேவை கிடைக்­க­வில்லை தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரத்­தி­ன­புரி பெல்­ம­துளை உட்­பட 12 பிர­தே­சங்­களில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு தற்­கா­லிக தங்­கு­மி­டங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.இவற்றில் பாதிக்­கப்­பட்ட மக்கள் பெரு­ம­ளவில் தங்க வைக்­கப்­பட்டு பரா­ம­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றனர். கஹ­வத்தை பிர­தே­சத்தில் வீதியில் நடந்து சென்ற ஒரு­வரின் மீது மர­மொன்று முறிந்து விழுந்­ததில் அந்த நபர் உயி­ரி­ழந்­துள்ளார்.

அவி­சா­வளை, வெலன்­கல்ல பிர­தே­சத்தில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்­ததில் இரண்டு பாட­சாலை மாண­வர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். 14 வயது மற்றும் 10 வய­து­டைய இரண்டு மாண­வர்­களே இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக அத தெரண செய்­தி­யாளர் கூறினார்.

நேற்று முன்­தினம் இரவு தவ­ளம, இரத்­தி­ன­புரி, களுத்­துறை உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் மழை­வீழ்ச்சி 150 மில்லி மீற்­ற­ராக பதி­வா­கி­யுள்­ளது. அம்­பாந்­தோட்­டை­யிலும் ஆங்­காங்கே ஏற்­பட்­டுள்ள வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக மக்­களின் இயல்­பு­வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மாத்­தறை மாவட்­டத்­திலும் பல்­வேறு பிர­தே­சங்­களில் மக்­களின் இயல்பு வாழ்க்கை வெள்­ளப்­பெ­ருக்­கினால் பாதிப்­ப­டைந்­துள்­ளது. நேற்­றைய தினம் காலி பிர­தே­சத்தில் வெள்­ளப்­பெ­ருக்கில் சிக்­கிய மக்­களை பாது­காப்­பாக மீட்­ப­தற்­காக விமா­னப்­ப­டையின் பெல்2012 மற்றும் எம்.ஐ.17 ஆகிய ஹெலி­கொப்­டர்கள் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. காலி மற்றும் மாத்­தறை மாவட்­டங்­களில் வௌ்ளப் பெருக்­கினால் பாது­காப்­பான இடங்­களை நோக்கி செல்ல முடி­யாமல் தத்­த­ளித்த மக்­களை விமான படை­யி­னரும் கடற் படை­யி­னரும் மீட்­டி­ருந்­தனர். நேற்­று­மாலை வரை இவ்­வாறு வௌ்ளப் பெருக்­கினால் மக்கள் சிக்­கி­யி­ருந்­தனர்.

வெள்­ளப்­பெ­ருக்கு கார­ண­மாக தெற்கு அதி­வேக பாதையின் போக்­கு­வ­ரத்தும் பாதிக்­கப்­பட்­டது. வெலிப்­பன்ன மற்றும் கொக்­மா­துர ஆகிய தெற்கு அதிவேகப்பாதையின் பிரவேச வாயில்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது.

காலி மற்றும் களுத்துறை, இரத்தினபுரி பகுதிகளில் வெள்ளப்பெருக்கின் காரணமாக பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் சிறிய படகுகளில் நலன்புரி நிலையங்களை நோக்கி பயணித்ததை காண முடிந்தது.

இதேவேளை நேற்றைய தினம் களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயத்தில் இருந்தமையினால் கடுவல, கொட்டிகாவத்தை, களனி, களனிமுல்ல, கொலன்னாவ, தொப்பே, ஹங்வெல்ல, பாதுக்க அவிசாவெலை ஆகிய பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்கவேண்டுமென அறிவிக்கப்பட்டது.

இதனிடையே மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்காக கடற்படை வீரர்கள் 143 பேரை ஈடுபடுத்தியள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் 22 டிங்கி படகுகளை மீட்பு பணிகளில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் கடற்படை அறிவித்துள்ளது. 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-05-27#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.