Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது

Featured Replies

மலேசிய விமானத்தில் குண்டு புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி கைது

arreste.jpg
மலேசிய விமானத்தில் குண்டுப் புரளியை ஏற்படுத்திய இலங்கைப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசிய விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று அவுஸ்திரேலியாவின் மெல்பர்னிலிருந்து கோலாலம்பூர் நோக்கிப் பயணித்த போது, குறித்த இலங்கையர் குண்டுப் புரளியை ஏற்படுத்தி சக பயணிகளை அச்சமடையச் செய்துள்ளார்.

தம்மிடம் வெடிகுண்டு இருப்பதாகவும் விமானத்தை வெடிக்கச் செய்யப் போவதாகவும் கூறி குறித்த இலங்கைப்பயணி  விமானியின் அறையை நோக்கிப் பிரவேசிக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த பிரச்சினை காரணமாக விமானம் மீளவும் அவுஸ்திரேலியாவிற்கே திரும்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த இலங்கையரிடமிருந்த பொருள் வெடி குண்டு அல்ல எனவும் அது ஓர் செல்லிடப்பேசிகளை மின் ஏற்றும் பவர்பாங்க் எனவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் சக பயணிகள் குறித்த நபரை மடக்கிப் பிடிக்க உதவியுள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/28599

  • தொடங்கியவர்

வெடிகுண்டு மிரட்டலால் தரையிறக்கப்பட்ட மலேசிய விமானம்: சாதுர்யமாக செயல்பட்ட பயணிகள்

 

 
விமானத்திலிருந்து தரையிறங்கிய பயணிகளிடம் தகவலை சேகரிக்கும் போலீஸார் (இடது), வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் (வலது)
விமானத்திலிருந்து தரையிறங்கிய பயணிகளிடம் தகவலை சேகரிக்கும் போலீஸார் (இடது), வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் (வலது)
 
 

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பயணி ஒருவர் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், பயணிகள் சாதுர்யமாக செயல்பட்டு மிரட்டல் நபரைப் பிடித்து கட்டிவைத்தனர்.

புதன்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூருக்கு எம்.எச் 128 என்ற விமானம் புறப்பட்டது. ஆனால் புறப்பட்ட 30 நிமிடங்களில் பயணி ஒருவரது வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் தரையிறங்கியது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய போலீஸார் தரப்பில், "மலேசிய விமானம் எம்.எச் 128-ல் பயணம் செய்த பயணி ஒருவர் தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தார். மேலும் அவர் விமான ஓட்டியின் அறைக்கு சென்றுள்ளார். இதனால் பயணிகளுக்கிடையே பதற்றம் நிலவியிருக்கிறது. எனினும் விமானத்திலிருந்த பாதுகாவலர்கள் மற்றும் பயணிகள் சாதுர்யமாக செயல்பட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் பிடித்து கட்டி வைத்தனர்.

பின்னர் இதுதொடர்பாக மெல்போர்ன் விமான நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு விமானம் பத்திரமாக தறையிறக்கப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காரணமாக மெல்போர்ன் விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.

சினிமா பாணியில் பயணிகளே ஹீரோக்கள் போல் துரிதமாக செயல்பட்டு மிரட்டல் நபரைப் பிடித்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி பாராட்டைப் பெற்றுள்ளன.

http://tamil.thehindu.com/world/வெடிகுண்டு-மிரட்டலால்-தரையிறக்கப்பட்ட-மலேசிய-விமானம்-சாதுர்யமாக-செயல்பட்ட-பயணிகள்/article9717473.ece?homepage=true

  • தொடங்கியவர்

மலேசிய விமானத்தில் அச்சுறுத்தல் விடுப்பதற்கு முன் பேஸ்புக்கில் செல்பீ படங்களை வெளியிட்ட இலங்கையர்

03-bca1d3c13779536472dd8191bcdcbbe130424e20.jpg

 

அவுஸ்­தி­ரே­லிய மெல்போர்ன் நக­ரி­லி­ருந்து மலே­சிய கோலா­லம்பூர் நகரை நோக்கி கடந்த புதன்­கி­ழமை பின்­னி­ரவு பய­ணித்த மலே­சிய எயார்லைன்ஸ் விமா­ன­ மொன்றில் குண்டுத் தாக்­குதல் அச்­சு­றுத்­தலை விடுத்த மன­நலம் பாதிக்­கப்­பட்ட 25 வய­தான இலங்­கையர் மனோத் மன­ர­கலா மார்க்ஸ் என அடை­யாளம் காணப்­பட்­டுள் ளார். அவர் 300க்கு மேற்­பட்ட பய­ணி­க­ளுடன் பய­ணித்த அந்த எம்.எச்.128 விமான த்தை வெடிக்க வைத்துச் சித­ற­டிக்கப் போவ­தாக அச்­சு­றுத்தி

 அந்த விமா­னத்தைக் கடத்த முயற்­சிப்­ப­தற்கு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்னர் சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்து ரப் இசைப் பாடலை இர­சித்துக் கொண்­டி­ருந்­துள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அவர் இது தொடர்பில் இணை­யத்­த­ளத்தில் தனது இன்ஸ்­டா­கிராம் பக்­கத்தில் காணொளிக் காட்­சி­யொன்றை வெளி­யிட்­டி­ருந்தார். 

அந்தக் காணொளிக் காட்­சியில் இந்த விமா­னத்தை வெடிக்க வைத்­துள்ளேன் என அவர் ஜம்­ப­ம­டித்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. மெல்­போர்­னி­லுள்ள மேற்­படி துல்­லா­மாரின் விமான நிலை­யத்­துக்கு தனது காரில் செல்லும் போது அவர் புகை­பி­டித்துக் கொண்டு பல­மான சத்­தத்தில் இசையைக் கேட்டு இர­சித்துக் கொண்டு சென்­றுள்ளார். 

அவர் அந்த இன்ஸ்­டா­கிராம் பக்க காணொளிக் காட்­சியில் மிகவும் நிதா­ன­மா­கவும் ஓய்­வா­கவும் காணப்­பட்­டுள்ளார். போல்ட் பாலம் மற்றும் மெல்போர்ன் ஸ்டார் கட்­ட­மைப்பு என்­ப­வற்றை கடந்து செல்லும் போது அவர் புகை­பி­டித்தக் கொண்­டி­ருப்­பதை அந்தக் காணொளிக் காட்சி வெளிப்­ப­டுத்­து­கி­றது. 

கடந்த புதன்­கி­ழமை இரவு 8 மணிக்கு முன்னர் மனோத்தால் 3 காணொளிக் காட்­சிகள் சமூக இணை­யத்­தளப் பக்­கங்­களில் பரி­மா­றப்­பட்­டுள்­ளன. அந்தக் காணொளிக் காட்­சி­களில் அதற்கு 3 மணித்­தி­யா­லங்­க­ளுக்குப் பின்னர் தன்னால் முன்­னெ­டுக்க உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருந்த அச்­சு­றுத்தல் நாடகம் தொடர்பில் எது­வித விப­ரத்­தையும் அவர் குறிப்­பிட்­டி­ருக்­க­வில்லை.

மனோத்தின் பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் அவர் இலங்­கையில் கொழும்பைச் சேர்ந்­தவர் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் அந்த இணை­யத்­தளப் பக்­கத்தில் மேலா­டை­யின்றி தோன்றும் ஒரு தொகை செல்பீ புகைப்­ப­டங்­க­ளையும் (சுய புகைப்­ப­டங்கள்) இரா­ணுவச் சீரு­டையை ஒத்த ஆடை அணிந்து தான் காணப்­படும் புகைப்­ப­டங்­க­ளையும் வெளி­யிட்­டுள்ளார்.

இசையில் ஆர்வம் மிக்­க­வ­ராக காணப்­பட்ட அவர், அமெ­ரிக்க ரப் இசைப் பாட­க­ரான துபக் ஷகுர், அமெ­ரிக்க பாடகி றிஹன்னா மற்றும் ஜமெய்க்கா இசைக்­க­லைஞர் பொப் மார்லி ஆகி­யோ­ரது புகைப்­ப­டங்­க­ளையும் குறிப்­பு­க­ளையும் அவர்­களால் தெரி­விக்­கப்­பட்­ட­வற்­றையும் தனது பேஸ்புக் இணை­யத்­தளப் பக்­கத்தில் வெளி­யி­டு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­துள்ளார்.

மாணவ விசாவைப் பெற்று இலங்­கை­யி­லி­ருந்து அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வந்­தி­ருந்த அவர், பயிற்சி சமை­யல்­கா­ர­ராக பணி­யாற்றி வந்­துள்ளார்.

அந்த விமானம் புதன்­கி­ழமை பின்­னி­ரவு 11.11 மணி­ய­ளவில் புறப்­பட்டு சில நிமி­டங்­களே ஆகி­யி­ருந்த நிலையில் மனோத் திடீ­ரென எழுந்து தன்­னிடம் வெடி பொருட்கள் இருப்­ப­தாக தெரி­வித்து தான் அந்த விமா­னத்தை வெடித்துச் சிதற வைக்கப் போவ­தாக தெரி­வித்­ததும் விமா­னத்­தி­லி­ருந்த பய­ணிகள் மற்றும் விமான ஊழி­யர்கள் உட்­பட அனை­வ­ருமே அதிர்ச்­சியில் உறைந்­துள்­ளனர்.

"என்­னிடம் குண்டு ஒன்று இருக்­கி­றது. நான் இந்த விமா­னத்தை வெடிக்க வைக்கப் போகிறேன்" என அவர் அச்­சு­றுத்­தி­யுள்ளார்.

இந்­நி­லையில் மனோத்தை அந்த விமா­னத்தில் பய­ணித்த முன்னாள் அவுஸ்­தி­ரே­லிய உதை­பந்­தாட்­ட­வீ­ர­ரான அன்ட்றூ லியோன்­செல்லி எதிர்­கொண்ட போது சின­ம­டைந்த அவர், அ்ங்கிருந்த விமானப் பணிப்­பெண்ணைத் தாக்கி விட்டு 'எனக்கு விமா­னத்தின் கப்­டனை பார்க்க வேண்டும்' எனக் கூச்­ச­லிட்­ட­வாறு விமா­னியின் அறையை நோக்கி விரைந்து சென்­றுள்ளார்.

இதன்­போது அன்ட்றூ லியோன்­செல்­லியும் அங்­கி­ருந்த விமான ஊழி­யர்கள் மற்றும் பய­ணி­களில் சிலரும் தைரி­யத்தை வர­வ­ழைத்துக் கொண்டு அவ­ருக்கு பின்னால் ஓடி அவரைக் கீழே வீழ்த்தி மடக்கிப் பிடித்­துள்­ளனர்.

சுமார் 5 பேர் வரை­யா­ன­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்டு விமா­னத்தின் தரைப் பகு­தி­யோடு அழுத்திப் பிடிக்­கப்­பட்­டி­ருந்­ததால் மனோத் அசைய முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து விமானம் திசை திருப்­பப்­பட்டு மெல்போர்ன் நகரில் மீளத் தரை­யி­றக்­கப்­பட்­டது.

எனினும் விசேட படை­யினர் விமா­னத்­துக்கு வந்து உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்கும் வரை பய­ணி­களும் விமான ஊழி­யர்­களும் சுமார் ஒன்­றரை மணி நேரம் குறிப்­பிட்ட இலங்­கையர் சகிதம் அந்த விமா­னத்தில் காத்­தி­ருக்க நேர்ந்­துள்­ளது.

படை­யினர் அந்த நபரை கைது­செய்து பரி­சோ­த­னைக்­குட்­ப­டுத்­திய போது அவ­ரிடம் வெடி­குண்டோ அல்­லது வேறு எது­வி­த­மான அபா­ய­க­ர­மான பொருளோ இல்லை என்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

மனோத் இந்த மேற்­படி அச்­சு­றுத்­தலை விடுத்த போது பாத­ணியின் அள­வான இசைக் கரு­வி­யொன்றை தன்­னுடன் வைத்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவர் பிளாஸ்டிக் பையொன்று சகி­தமே விமா­னியின் அறைக்குள் பிர­வே­சிக்க முயற்­சித்­தி­ருந்தார்.

  மேற்­படி விமான கடத்தல் நாட­கத்­துக்கு சில மணித்­தி­யா­லங்­க­ளுக்கு முன்­னரே மெல்­போர்­னி­லுள்ள மன­நல சிகிச்சை நிலை­ய­மொன்றில் சிகிச்சை பெற்று வெளியேறியிருந்த அவர், உடனடியாக அந்த விமானத்தில் பயணிப்பதற்கான பயணச்சீட்டைக் கொள்வனவு செய்துள்ளார்.

 மேற்படி சம்பவத்தால் பயணிகளுக்கோ அன்றி விமான ஊழியர்களுக்கோ எதுவித காயமும் ஏற்படவில்லை என்ற போதும், அவர்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 கைதுசெய்யப்பட்டுள்ள மனோத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் நிரீபிக்கப்படுமானால் அவர் 10 வருட கால அளவான சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-03#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.