Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும்

Featured Replies

சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும்

 

சம்பந்தனும், விக்னேஸ்வரனும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக வேண்டும்

 

 
 
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் இனிமேலும் இந்த அரசாங்கத்தை நம்பி பயனேதுமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய விடுதலையை வென்றெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கிறோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும்இ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டார்.

எங்களுடைய இனம் விடுதலை பெறுவதற்கு எங்களிடையே பேதங்கள் எதுவுமிருக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவும், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயாவும் எங்களுடைய இனத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக மாற வேண்டும் என எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=92117

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் இரத்தக்கறை படியாத ஆளப்பா.. அவரை எல்லாம் துப்பாகி கூட  ஒப்பிடக் கூடாது.

தமிழன் அடிவாங்கிச் சாகலாம்.. இல்ல வறட்சியில் சாகலாம்.. ஐயா எப்பவும் வாளேந்திய சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு சிங்கள மக்களுக்கு அரிசி போடுவார். தமிழ் மக்களுக்கு வெறுவாய் தான். tw_blush:

  • தொடங்கியவர்

சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் எமது இனத்தின் இரட்டை குழல் துப்பாக்கியாக மாறவேண்டும்

p19-a02faf95c81915daa33b6045a8a1a9171b0778d4.jpg

 

(எம்.நியூட்டன்)

எங்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்பில் இனி­மேலும் இந்த அர­சாங்­கத்தை நம்பி பய­னே­து­மில்லை. எங்­க­ளு­டைய விடு­த­லையை வென்­றெ­டுக்க நாம் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்­டிய முக்­கி­ய­மான கால­கட்­டத்தில் இருக்­கிறோம் என்று தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் வட­மா­காண சபை உறுப்­பி­னரும், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.கே.சிவா­ஜி­லிங்கம் தெரி­வித்­துள்ளார். 

எங்­க­ளு­டைய இனம் விடு­தலை பெறு­வ­தற்கு எங்­க­ளி­டையே பேதங்கள் எது­வு­மி­ருக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் ஐயாவும், வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் ஐயாவும் எங்­க­ளு­டைய இனத்தின் இரட்டைக் குழல் துப்­பாக்­கி­க­ளாக மாற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமி­ழீழ விடு­தலைப் போராட்­டத்தின் முதல் மாவீரர் பொன். சிவ­கு­மா­ரனின் 43ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்றுக் காலை யாழ். உரும்­பி­ரா­யி­லுள்ள அவ­ரது நினை­வி­டத்தில் உணர்வு பூர்­வ­மாக அனுஷ்­டிக்­கப்­பட்­டது.

இந்த நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

 அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எங்­க­ளு­டைய தமி­ழி­னத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக கிளர்ந்­தெ­ழுந்த மாணவர் சமு­தா­யத்­தி­லி­ருந்து உரு­வா­கி­ய­தொரு விடு­தலை உணர்­வாளர் தான் பொன். சிவ­கு­மாரன். அன்­றைய பிர­த­ம­ரா­க­வி­ருந்த சிறீ­மாவோ பண்­டா­ர­நா­யக்கா அம்­மை­யாரால் கொண்டு வரப்­பட்ட தரப்­ப­டுத்­த­லுக்­கெ­தி­ராக எழுச்சி கொண்ட மாணவர் சமு­தா­யத்­தினால் உரு­வாக்­கப்­பட்ட தமிழ் மாணவர் பேர­வையில் முக்­கிய தலை­வ­ராக அவர் விளங்­கினார்.

தியாகி சிவ­கு­மாரன் தரப்­ப­டுத்­த­லுக்­கெ­தி­ராகப் பாட­சா­லைகள் தோறும் பிரச்­சாரம் மேற்­கொண்ட காலத்தில் அந்தப் பிரச்­சா­ரத்­தினால் ஈர்க்­கப்­பட்­ட­வர்­களில் நானும் ஒருவன்.

1971 ஆம் ஆண்டு வல்­வெட்டி சிதம்­பராக் கல்­லூ­ரியில் அவர் நடத்­திய பிரச்­சா­ரத்தில்,

“இனி­வரும் காலங்­களில் இலங்கை அர­சாங்­கத்­துடன் நாங்கள் அகிம்சை வழியில் போராட முடி­யாது. ஆயுத வழியில் தான் போராட முடியும்” என அவர் பிரச்­சாரம் மேற்­கொண்ட போது அந்தக் கல்­லூ­ரியில் நான் 09ஆம் தரத்தில் கல்வி கற்றுக் கொண்­டி­ருந்தேன்.

அவரைப் பார்த்து ஆயு­தங்கள் எங்­கே­யி­ருந்து வரும் எனக் கேட்டேன். அதற்கு அவர் கைக்­க­டி­கா­ரங்கள், புட­வைகள் என்­பன வல்­வெட்­டித்­து­றைக்கு எவ்­வாறு வரு­கி­றது? அதே­போன்று ஆயு­தங்­க­ளையும் இங்கே கொண்டு வர முடியும் என்று கூறினார்.

தியாகி சிவ­கு­மா­ரனும் காட்டிக் கொடுப்­பினால் தான் சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்டார். இந்­தி­யா­விற்கு மயி­லிட்­டி­யூ­டாகப் படகில் பயணம் செய்­வ­தற்குப் பணத்தை வாங்­கி­யவர் ஏமாற்றி விட்டார். அதனால், அவர் மிகவும் துன்­பப்­பட்டார்.

அவர் இறப்­ப­தற்கு ஒரு வாரத்­திற்கு முன்­ன­தாக அவரைச் சந்­தித்து வல்­வெட்டித் துறை­யூ­டாக உங்­களை இந்­தி­யா­விற்கு அழைத்துச் செல்­கிறோம் என்று கூறிய போது நான் சில வேலைத்­திட்­டங்­களைச் செய்ய வேண்­டி­யுள்­ள­தா­கவும், எங்­க­ளு­டைய போராட்­டத்தைத் தீவி­ரப்­ப­டுத்த வேண்டும் எனவும் கூறினார்.

ஆனால், அவர் துர­திஷ்­ட­வ­ச­மாக கோப்­பாயில் வைத்துச் சுட்டுப் படு­கொலை செய்­யப்­பட்டார் என்ற செய்தி எங்­க­ளுக்குக் கிடைத்­தது.

கிடைத்­த­வுடன் அவ­ரது வீட்­டிற்கு விரைந்தோம். அவர் இறந்து மூன்றாம் நாளில் உரும்­பிராய் வேம்­பயன் மயா­னத்தில் தமிழ்த் தலை­வர்­க­ளான அமிர்­த­லிங்கம், சிவ­சி­தம்­பரம், வி. என். நவ­ரத்­தினம் உட்­படப் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் முன்­னி­லையில் அவ­ரது பூத­வுடல் ஊர்­வ­ல­மாக எடுத்துச் செல்­லப்­பட்டுத் தகனம் செய்­யப்­பட்­டது.

தமி­ழீழ விடு­தலைப் போராட்­டத்தில் முத­லா­வ­தாகத் தனது இன்­னு­யிரை ஆகு­தி­யாக்கி ஆரம்­பித்து வைத்த அவ­ரது தியாகம் பின்னர் ஆயு­தப்­போ­ராட்­டத்தில் தம்மை ஈடு­ப­டுத்தி ஆயி­ரக்­க­ணக்­கான மாவீ­ரர்கள் தங்கள் இன்­னு­யிர்­களைத் தியாகம் செய்­வ­தற்கு வழி வகுத்­தது.

அதன் பின்னர் தியாகி பொன் .சிவ­கு­மா­ரனின் வழியில் ஆயுத விடு­தலைப் போராட்­டத்தில் தன்னை ஈடு­ப­டுத்­திய விடு­தலைப் போராட்ட முன்­னோ­டி­களில் ஒரு­வ­ரான தள­பதி குட்­டி­மணி இரா­ணு­வத்­தி­னரால் சித்­தி­ர­வதை செய்­யப்­பட்ட போது 'என்னைத் தூக்­கி­லி­டுங்கள்...ஆனால், என்­னு­டைய உடலை விடு­த­லைப்­பு­லி­க­ளிடம் கைய­ளி­யுங்கள்.

ஒரு குட்­டி­மணி போனா­லென்ன? இன்னும் நூற்­றுக்­க­ணக்­கான, ஆயி­ரக்­க­ணக்­கான குட்­டி­ம­ணிகள் உரு­வா­கு­வார்கள் என்று குறிப்­பிட்டார். அதே­போன்று பின்­னாளில் ஆயி­ரக்­க­ணக்­கான குட்­டி­ம­ணிகள் எமது மண்ணில் உரு­வா­னார்கள்.

பொன். சிவ­கு­மா­ரனின் முத­லா­வது ஆண்டு நினைவு நாளில் அவ­ரது ஞாப­கார்த்­த­மாக ஈழ விடு­தலை இயக்கம் எனும் பெயரில் ஓய்­வு­நிலை நீதி­பதி - தம்­பித்­து­ரையின் மகன் பொன். முத்­துக்­கு­மா­ர­சா­மி­யினால் அவ­ரது உருவச் சிலை நிறு­வப்­பட்­டது. இதன் பின்னர் இரு தட­வைகள் அரச படைகள் அவ­ரது உருவச் சிலையை இடித்துச் சேத­மாக்­கி­யது.

ஆனால், தமிழ்­மக்கள் விழ விழ எழுந்து நிற்­பது போன்று சிவகுமாரனின் சிலையும் தற்போது கம்பீரமான முறையில் எழுந்து நிற்கிறது.

ஆகவே, தமிழ் மக்களுடைய விடுதலைக்காகத் தன்னுயிரை ஆகுதியாக்கிய தியாகி சிவகுமாரன், ஆயிரக்கணக்கான மாவீரர்கள், இலட்சக்கணக்கான பொதுமக்கள் ஆகியோருக்கு நாங்கள் செய்யும் அஞ்சலி என்பது அவர்கள் விட்டுச் சென்ற விடுதலை உணர்வுகளை, கனவுகளை வென்றெடுப்பதேயாகும். தமிழீழ தாயகத்தில் சுயாட்சியை நிறுவுவது தான் இதற்கான ஒரே வழி. தமிழரின் தாகம்....தமிழீழத் தாயகம்....என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.