Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ள அரசியல்வாதிகள் மீது கடும் நடவடிக்கை: கருணாநிதி எச்சரிக்கை

Featured Replies

சென்னை, பிப். 23: விடுதலைப் புலிகளுடன் ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவை கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்குத் தேவையான அலுமினியத்தைத் தரும் தொழிற்சாலை ஒன்றை மதுரையில் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் காரணமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் சிங்கள ராணுவத்தால் கொடுமைப் படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் குறிப்பாக திராவிடர் கழகம் போன்றவை கேட்டுக் கொள்கின்றன. இவ்வாறு கேட்டுக்கொள்வதற்கும் விடுதலைப் புலியினருக்கும் ஆயத விநியோக இடமாக தமிழகத்தைப் பயன்படுத்துவதற்கும் அனுமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணராமல் இல்லை.

ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டுள்ளோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். அத்தகைய ஆயுதங்களை தாங்கி வரும் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டும் உள்ளன.

தமிழகத்து அரசியல்வாதிகளுடைய ரகசிய கூட்டு இருக்குமேயானால் அவைகளும் கண்டுபிடிக்கப்பட்டு தயவு தாட்சண்யமின்றி சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கும் இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் எனற நோக்கத்துடன் மத்திய அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள்களையும் எடுக்கும நடவடிக்கைகளையும் இந்தியாவில் ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ள இது போன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாமல் கருதிக்கொண்டு செயல்படக் கூடாது.

நாட்டு நலனையும் பாதுகாப்பையும் அதற்காக இந்திய நாட்டு மத்திய அரசு எடுக்கின்ற தேவையான நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNL20070223074451&Title=Latest+News+Page&lTitle=L%FBP%A3+%F9Nn%A7Ls&Topic=0

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதை அனுமதிக்க முடியாது - தமிழக முதல்வர்

இந்தியாவின் தமிழ்நாட்டை களமாகக் கொண்டு இலங்கையிலிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் கடத்துவதை தமது அரசு அனுமதிக்காது என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற ஆயுதக்கடத்தல் நடவடிக்கைகளில் எந்த அமைப்போ அல்லது கட்சிகளோ ஈடுபட்டால் அவற்றின்மீது கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், இதில் எந்தவித பயமும், பாரபட்சமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த சில வாரங்களில் தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடற் பிரதேசத்திலும், தமிழக கடற்கரையோர பகுதிகளிலும் தொடர்ந்து ஆயுதங்கள் பிடிபடுவது தொடர்பாக தமிழகத்தைச்சேர்ந்த தினசரி ஒன்று எழுதியிருந்த தலையங்கத்தை சுட்டிக்காட்டி, அதுதொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக கருணாநிதி இந்த கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இலங்கை ராணுவத்தால் கொடுமைப்படுத்தப்படுகிற அல்லது கொல்லப்படுகிற அப்பாவி தமிழர்களைக் காப்பாற்றுவதற்கு இந்திய நடுவணரசு முன் வர வேண்டுமென்று தமிழ்நாட்டிலே உள்ள கட்சிகள், குறிப்பாக தி.மு.க. போன்றவை கேட்டுக் கொள்வதற்கும், விடுதலைப்புலிகளுக்கான ஆயுத விநியோக இடமாக தமிழ்நாட்டை பயன்படுத்த அனுமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை இன்றைய தமிழக அரசு உணந்திருப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் தமிழக அரசும், தமிழக மக்களும், இந்திய நடுவணரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோளையும் அதற்காக எடுக்கும் நடவடிக்கைகளையும், இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ள இதுபோன்ற காரியங்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதி என்று எவரும் தவறாக கருதிக் கொண்டு செயல்படக் கூடாது என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்திய நாட்டு நலனையும், பாதுகாப்பையும் அதற்காக இந்திய நடுவணரசு எடுக்கும் நடவடிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கை பிரச்னையில் தமிழகம் தலையிடும் என்று யாரும் கனவு காண வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்

தமிழக முதல்வர் கருணாநிதி

ஈழத் தமிழர்களைக் காக்குமாறு தமிழக அரசு மத்திய அரசுக்கு விடுத்து வரும் கோரிக்கைகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமிழகத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கடத்தலாம் என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆயுதக் கடத்தல் தொடர்பாக தமது அரசு அலட்சியமாகவோ, மெத்தனமாகவோ இருக்கவில்லை என்றும் சமீபத்தில் பெருமளவில் ஆயுதங்கள், வெடிபொருட்கள், படகுகள் பிடிபட்டதைத் தொடர்ந்து தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பலரைக் கைது செய்துள்ளதாகவும் பறிமுதல் செய்யப்பட்ட படகு அழிக்கப்பட்டுள்ளதாகவும் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் குறித்து தீவிரமாக கண்காணிக்கப் பட்டு வருவதாகவும் விடுதலைப் புலிகளுக்கு இங்கு எந்த அரசியல் கட்சியாவது உதவுவதாக தெரிந்தால் அவர்கள் மீது கண்டிப்பான, உறுதியான நடவடிக்கை எடுக்க தமது அரசு தயங்காது என்றும் இதுதொடர்பாக காவல்துறைக்கு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:P :P :P :P :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.