Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும்’

Featured Replies

’கிளிநொச்சிக்கு அமைச்சை வழங்குவதை மீள் பரிசீலிக்கவும்’
 

எஸ்.நிதர்ஷன்

வடமாகாண கல்வி அமைச்சு, கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும், என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வடமாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறியுள்ளதாவது,

அக்கடிதத்தில் மேலும்,

'வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன். அது தங்களுக்கும் தெரியும். தொடர்ந்து வடமாகாண சபை போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வினைத்திறனுடன் சேவையாற்ற வேண்டும். அதற்கு தாங்கள் தொடர்ச்சியாக முதலமைச்சராக பதவி வகிப்பது பொருத்தமானது. நான் தமிழரசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றமையால் தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன். காரணம், கட்சி தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். ஆதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் உங்களின் தொடர் மக்கள் நலன்சார் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதவாக இருப்பேன்.

மேலும், வடக்கில் ஊழலுக்கு எதிரான தங்களின் நடவடிக்கையை நான் வரவேற்கின்றேன். இருப்பினும் விசாரணை பொறிமுறையில் காணப்படட குறைபாடுகளை நீங்கள் நீக்கியிருந்தால் நிலமை இந்தளவு சிக்கலுக்குள் சென்றிருக்காது என்பது எனது கருத்து.

அத்தோடு, குற்றம் சாட்டப்பட்டு தங்களின் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு மாற்றீடாக புதிய அமைச்சர்களை தெரிவு செய்யும்போது, மாவட்ட ரீதியில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ, கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன்.

அவ்வாறே கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால் அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதோடு, இனிவரும் குறுகிய காலத்துக்குள் தங்களுக்கு பொருத்தமான அமைச்சர்களை நியமித்து சிறிப்பாக செயற்பட எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்' என குறிப்பிடப்பட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/கிளிநொச்சிக்கு-அமைச்சை-வழங்குவதை-மீள்-பரிசீலிக்கவும்/71-199232

  • தொடங்கியவர்

சிறிதரன் எம்.பியின் கடிதத்தால் பரபரப்பு

அது போலி என அவர் மறுப்பு

 
 
சிறிதரன் எம்.பியின்  கடிதத்தால் பரபரப்பு
 

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்வ­ர­ னுக்கு, நான் அனுப்பிவைத்­தா­கத் தெரி­வித்து, சமூக வலைத் தளங்­க­ளி­லும், இணை­யத் தளங்­க­ளி­லும் வெளி­யி­டப்­பட்டு வரும் கடி­தம் போலி­யா­னது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறித­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப் போவ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறீ­த­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கு நேற்றுமுன்­தி­னம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்து அவரது கடிதத் தலைப்புடன் கடிதம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்தது.

அந்தக் கடிதத்தில், வடக்கு மாகாண முதலமைச்சராக நீங்கள் பதவி வகிப்பதே பொருத்தமானது. எனது விருப்பமும் அதுதான். நான் தமிழரசுக் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தங்களுக்கு வெளிப்டையான ஆதரவை வழங்க முடியாத சூழலுக்குள் இருக்கின்றேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், பதவி விலகிய அமைச்சர்களுக்கு மாற்றீடாக புதிய அமைச்சர்களைத் தெரிவு செய்யும்போது மாவட்ட அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்பட வேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன். கல்வி அமைச்சர் பதவி கிளிநொச்சிக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால் அதனை தாங்கள் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனைக் கேட்டபோது, இந்தக் கடிதத்துக்கும் எனக்கும் எதுவித சம்பந்தமும் கிடையாது. இங்கு ஓர் அமைச்சைக் குறி வைத்து எழுதுவதன் மூலம் எனக்கும், கிளிநொச்சி மாவட்ட மாகாண சபை உறுப்பினருக்கும் இடையில் சிண்டுமுடித்துவிடும் விசமத்தனமான செயல் இடம்பெறுகின்றது.

இந்த அமைச்சை இலக்கு வைத்துச் செயற்படும் யாரோ ஒருவரே இதனைச் செய்திருக்க வேண்டும் என்று நான் கருதுகின்றேன். முதலமைச்சருக்கு நான் எனது கடிதத் தலைப்பிலேயே எழுதுவேன். இங்கே நாடாளுமன்ற கடிதத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தக் கடிதத்தில் எனது கையெழுத்து மற்றும் எனது பெயர் பொறிக்கப்பட்ட இறப்பர் முத்திரை குத்தப்பட்டுள்ளது. இதுவும் போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளமையை உணர முடிகின்றது. இது மிகப் பெரும் ஆபத்தானது. இவ்வாறான போலி ஆவணங்கள் தொடர்பில் ஆராய வேண்டும்.

இந்தக் கடிதத்துக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதுடன், இது தொடர்பில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்பதையும் பகிரங்கமாகவே தெரிவிக்கின்றேன். இந்தன் குற்றவியல் செயற்பாடு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளேன் – என்றார்.

http://uthayandaily.com/story/7869.html

  • தொடங்கியவர்
சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக சிறிதரன் குற்றச்சாட்டு
 

image_514e0d05df.jpg-எஸ் நிதர்ஷன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்குரிய நாடாளுமன்ற கடிதத்தலைப்பில், சிவஞானம் சிறிதரன் என்ற முத்திரையுடன், அவரது கையொப்பத்துடன் கூடிய 22ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதம் தொடர்பாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இக்கடிதத்தில், வடக்கு மாவட்டத்தில் ஏற்பட்ட பிணக்கு ஒரு சமரசத்துக்கு வந்தமையிட்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். இதற்காக நானும் என்னால் முடிந்த முயற்சியை மேற்கொண்டேன்.

நான் தமிழசுக்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றமையால், தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளேன். காரணம், கட்சித் தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். அதனை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கின்றேன். இருப்பினும் உங்களின் தொடர் மக்கள் நலன்சார் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதவாக இருப்பேன்.

அத்தோடு குற்றஞ் சாட்டப்பட்டு தங்களின் பதவிகளை இராஜினாமா செய்த அமைச்சர்களுக்கு மாற்றீடாக புதிய அமைச்சர்களைத் தெரிவு செய்யும்போது, மாவட்ட ரீதியில் தெரிவு செய்ய வேண்டும் என்றோ, கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்றோ நான் வலியுறுத்த மாட்டேன்.

அவ்வாறே கல்வி அமைச்சு கிளிநொச்சிக்கு வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாடு தங்களிடம் இருந்தால், அதனை தாங்கள் மீள் பரிசோதனை செய்ய வேண்டும்  என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால், குறித்த கடிதத்தை தான் அனுப்பவில்லை எனவும் கடிதத்துக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்  விளக்கமளித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இக்கடிதம் வெளியிடப்பட்டதனூடாக, எனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக சபாநாயகருக்கு அறிவித்துள்ளேன். மேலும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலும் குறித்த விடயம் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளேன், எனவும் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சிறப்புரிமை-மீறப்பட்டுள்ளதாக-சிறிதரன்-குற்றச்சாட்டு/175-199256

  • தொடங்கியவர்
சிறிதரனை சீண்டியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்?
 

image_fee97e1bbf.jpg-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

தனது உத்தியோகபூர்வ பதவி முத்திரையையும் நாடாளுமன்ற கடிதத் தலைப்பையும் மோசமான முறையில் பயன்படுத்தியமை தொடர்பில், நேற்று (24) கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால், முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

குறித்த முறைப்பாடு சபாநாயகர் கரு ஜயசூரியவின் அறிவுறுத்தலுக்கமைவாக, பாரிய குற்றவியல் செயலின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனது, நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத் தலைப்பு என்பவற்றை தொழில்நுட்ப ரீதியாக மோசடியான முறையில் பயன்படுத்தி, அவர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதைப் போல, தமது நோக்கத்துக்கேற்ப கடிதமொன்றைத் தயாரித்து பேஸ்புக் மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில், சிலர் செய்தியாகப் பரப்பியுள்ளனர்.

குறித்த செயல் தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் இலங்கை நாடாளுமன்ற இலட்சினைகளை அவமதித்து மோசடி செய்தமை போன்றும் அமைந்திருப்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் சிறிதரன் எம்.பி முறையிட்டிருந்தார்.

இதனைப் பாரதூரமான குற்றமாக கருதிய சபாநாயகர், இது குறித்து பொலிஸாரிடம் முறையிடுமாறு கூறியதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

இதற்கமைய, தனது நாடாளுமன்ற பதவி முத்திரை மற்றும் கடிதத்தலைப்பு என்பவற்றை மோசடியான முறையில் கையாண்டு, தனது பேஸ்புக் வழியாகச் செய்தியாகப் பரப்பிய 16இற்கும் மேற்பட்ட பேஸ்புக் சொந்தக்காரர்களும் 10 வரையான இணையத்தளங்களும் பெயர் குறிப்பிடப்பட்டு அவர்களுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/வன்னி/சிறிதரனை-சீண்டியோருக்கு-எதிராக-நடவடிக்கை-எடுக்கப்படும்/72-199278

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.