Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை

Featured Replies

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி நாளை
 

image_aa6927459b.jpg

மன்னார், மடு அன்னையின் ஆடி மாத திருப்பலி, நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல் மற்றும் அநுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை, கூட்டுத் திருப்பலியாக ஒப்பக்கொடுக்கவுள்ளனர்.

மடுத்திருத்தளத்தின் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு, கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை மடு ஆலயத்தில் ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ்பிள்ளை அடிகளார் தலைமையில் பாப்பரசரின் கொடியும் மடு அன்னையின் கொடியும் ஏற்றிவைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த ஒன்பது தினங்கள் மாலையில் திருச்செரூபமாலையுடன் நவ நாள் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நாளைக் காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்படவுள்ளது.

மடு திருவிழாவுக்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான  பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், மருத்துவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியாணுஸ் பிள்ளை அடிகளார் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/temple/மன்னார்-மடு-அன்னையின்-ஆடி-மாத-திருப்பலி-நாளை/64-199683

  • தொடங்கியவர்

சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடுமாதா ஆலயத்தின் ஆடித்திருவிழா! குளோபல் தமிழ் செய்தியாளர்:-


madu.jpg
சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னார் மடு மாதா ஆடித்திருவழிவின் விண்ணேற்பு விழா நாளை காலை இடம்பெறவுள்ளது.  மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் நாளை காலை திருப்பலி  ஒப்புக்கொடுக்கும் நிகழ்வு இடம்பெறும்.

அத்துடன் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோரும் இணைந்து கூட்டுத்திருப்பலியினை ஒப்பக்கொடுக்கவுள்ளனர்.

வரலாற்றில் மடு மாதா

தமிழ் மக்களின் பகுதியில் இருந்தமையால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை எதிர்கொண்ட இவ்வாலயம் போர்காலத்தில் மக்களுக்கு அடைக்கலம் வழங்கியிருந்தது. எனினும் நாலாம் ஈழப்போரில் மடுமாதாவும் இடம்பெயர நேர்ந்தது.

ஈழப்போர் தொடங்கியதில் இருந்து இவ்வாலயத்திற்கு செல்வோரின் தொகை பல மடங்கு குறைந்தது. போரினால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் இவ்வாலயச் சுற்றுவட்டத்தில் பாதுகாப்புக் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.

ஏப்ரல் 2008 இல் ஆலயத்தை நோக்கி இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக நடத்திய பலத்த எறிகணை வீச்சினால் ஆலயம் பலத்த சேதத்துக்குள்ளாகியது.

பாதுகாப்புத் தேடி அங்கு அடைக்கலமடைந்திருந்ந்த மக்கள் அனைவரும் வேறு இடத்தை நோக்கி இடம்பெயர்ந்தனர். அந்த ஆலயத்தில் இறுதியாகத் தங்கியிருந்த குருக்கள் மற்றும் பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

இதனை அடுத்து தேவாலயத்தில் 400 ஆண்டுகளாக அருள் பாலித்து வரும் அன்னையின் திருவுருவச் சிலை ஏப்ரல் 4, 2008, மன்னார் தேவன்பிட்டி புனித சவேரியர் ஆலயத்துக்கு இடம்பெயர்ந்து கொண்டு செல்லப்பட்டதும் இவ்வாலயத்தின் வரலாற்றின் முக்கியதானதொரு குறிப்பாகும்.

 
ஆடி மாத திருவிழாவுக்கான கொடி கடந்த மாதம் 23ஆம் திகதி மடு மாதா வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இருந்து வரும் பக்தர்களுக்குரிய வசதிகள் ஏற்படுத்தப்படடுள்ளதாகவும் மடு மாதா ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

http://globaltamilnews.net/archives/31494

  • தொடங்கியவர்
மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா
 

image_9ecfc70c68.jpgமன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று காலை 6.15 மணிக்கு, மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை தலைமையில், கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இந்தத் திருவிழா திருப்பலியைத் தொடர்ந்து திருச் சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து ஆசியும் வழங்கப்பட்டது.

நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் இரண்டு இலட்சத்துக்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். (படபிடப்பு - லம்பர்ட் ரோஷரியன்)

image_f083a3972d.jpgimage_31a980ad6d.jpgimage_cac7da27f8.jpgimage_4f68672fda.jpgimage_c769b251a7.jpgimage_de15bd5b9c.jpgimage_8bb99b56bf.jpgimage_ee4977b90e.jpgimage_5ce0153aba.jpg

  •  

 

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/மன்னார்-மடு-அன்னையின்-ஆடி-மாத-திருவிழா/46-199712

  • தொடங்கியவர்

மடு அன்னையின் ஆடி மாதப்பெருவிழா

 
மடு அன்னையின் ஆடி மாதப்பெருவிழா
 

மன்னார் மடு அன்னையின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று  காலை 6.15 மணிக்கு தமிழ்,சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலர் மேதகு ஆயர் யோசப் கிங்சிலி சுவம் பிள்ளை ஆண்டகை தலைமையில் திருகோணமலை மறைமாவட்ட ஆயர் நோயல் இம்மானுவல்,அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தunnamed-15.jpg

unnamed-7-2.jpg

unnamed-5-4.jpg

unnamed-6-2.jpg

unnamed-8-2.jpg

http://uthayandaily.com/story/9013.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.