Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கும் ஐஎஸ் இன் திட்டம் முறியடிப்பு!

Featured Replies

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கும் ஐஎஸ் இன் திட்டம் முறியடிப்பு!

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்கும் ஐஎஸ் இன் திட்டம் முறியடிப்பு!

 

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தை தாக்குவதற்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு போட்டிருந்த திட்டத்தை வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

தூதரகத்தைத் தாக்குவதற்காக ஐஎஸ் அமைப்பானது கட்டுநாயக்காவிலிருந்து ஒரு விமானத்தைக் கடந்தவிருந்ததாகவும் அமெரிக்க பாதுகாப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் சிறீலங்காவின் பல பகுதிகளிலிருந்தும் ஐஎஸ் இயக்கத்திற்கு பலர் உதவி செய்து வருவதாகவும், அது தொடர்பான தகவல்களையும், நேரடி எச்சரிக்கைகளையும் விடுக்க அமெரிக்க பாதுகாப்புப் பிரிவின் குழுவொன்று விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும்தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் இந்த எச்சரிக்கை வெளிவந்ததன் பின்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வழமைபோல் அல்லாது பணிநேரத்தைக் குறைத்துக் கொண்டு உரிய நேரத்திற்கு முன்னரே வீடு திரும்புவதாகவும் கூறப்பட்டுள்ளது.

http://thuliyam.com/?p=72424

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய ஐஎஸ் ஆதரவாளர்கள் அன்று தமிழ் மக்களை சிங்கள அரச பயங்கரவாதப் படைகளோடு சேர்ந்து நின்று வெட்டியும் சுட்டும் கொன்று.. ஊர்களை விட்டு விரட்டியபோது கண்டும் காணாமலும் இருந்த அமெரிக்க தூதரகமும் அதன் அதிகாரிகளும்.. இந்த ஆபத்துக்களில் இருந்து தமிழ் மக்களையும் முஸ்லீம் மக்களையும் பாதுகாக்கும் நிமித்தம்.. முஸ்லீம்களை வடக்கில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியதை எப்படி பயங்கரவாதம்.. இனச்சுத்திரிகரிப்பு என்று அறிவித்தது.

இன்று அமெரிக்கா சில முஸ்லீம் நாடுகளின் பிரஜைகள் உள்ளடங்க.. அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழையவே தடை போட்டிருக்கே.. இதெல்லாம்.. பயங்கரவாத நடவடிக்கைகள் என்று தமிழ் மக்கள் சொல்ல முடியுமா.. தனக்குத் தனக்கு என்றால் சுளகு படக் படக் என்றுமாம். :rolleyes:tw_angry:

அமெரிக்கா கடந்த காலத்தில் தமிழ் மக்களின் நடவடிக்கைகள் தொடர்பில் மேற்கொண்ட தவறான பயங்கரவாதச் சித்தரிப்புக்கு பரிகாரமாக.. தமிழ் மக்களின் அரசியல் விடுதலை ஈழத்தீவில் உறுதி செய்யின்.. அவர்கள் எப்போதும் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இருக்கச் செய்யலாம். ஏன் இதனை அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் சிந்திக்காமல்.. விடுதலைப்புலிகளை அழிப்பதில்.., அமெரிக்காவுக்கு எதிரான... தீய சக்திகளோடும் கைகோர்த்து நின்றார்கள்.  இது அமெரிக்கா.. இலங்கைத் தீவில் வகுத்த கொள்கைத் தவறே ஆகும். எனியும் அதைச் செய்யாமல்.. தமிழ் மக்களை அரவணைக்க அமெரிக்கா முன்வர வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்


மிக சீரியஸ் ஆன ஒரு செய்தியை கொழும்பிலுள்ள எந்த ஆங்கில, தமிழ் ஊடகங்களும் சொல்லவில்லை.

இதன் மூலம் என்று ஏதோ ஒரு மூன்றாம் தர இணையத்தளமா?

சும்மா ஒரு செய்தியை சொல்கிறார்களா?

நெடுக்கர், எப்படி இதை நம்பி பதிவிட்டார்? :rolleyes:

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­டம் : ­புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை

 

கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில்.

is.jpg

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது. 

அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற 

நாடு­க­ளுடன் சிறந்த பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­வதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­களை தடுக்­க­லா­மெ­னவும் அவ் அமைப்பு மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான  டிலந்த விதா­னகே 

இலங்­கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு ஊடு­ரு­வி­யுள்­ள­தா­கவும் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அமெ­ரிக்க புல­னாய்­வுப்­பி­ரிவு  தகவல் வெளி­யிட்­டுள்­ளது. இந்த தக­வலை நாம் சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தெரி­வித்­தி­ருந்தோம். 

பல்­வேறு நாடு­களில் செயற்­பட்­டு­வரும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு மிகவும் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­வ­ரு­வதை நாள்­தோறும் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலைமை எமது நாட்­டிற்­குள்ளும் வரக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே நாம் அடிக்­கடி இவ்­வி­டயம் தொடர்­பாக கூறி­வ­ரு­கின்றோம். 

இந்த நிலைமை மிகவும் பயங்­க­ர­மா­னதும் பார­தூ­ர­மா­ன­து­மான ஒன்­றாகும். எனவே, அர­சாங்கம் தொடர்ந்தும் இவ்­வி­டயம் குறித்து கருத்­திற்­கொள்­ளாமல் இருக்­கு­மே­யானால், அதன் எதிர் விளை­வு­களை விரைவில் சந்­திக்க நேரிடும். 

இலங்­கையில் வாழ்­கின்ற அப்­பாவி முஸ்­லிம்­களும் இந்த ஐ.எஸ். ஐ. எஸ் தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளினால் இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு தள்­ளப்­ப­டு­வார்கள். அது­மாத்­தி­ர­மின்றி நாட்­டி­லுள்ள அனைத்து மக்­களும் மீண்டும் அச்­சத்­துடன் வாழும் ஒரு சூழ­லையே எதிர்­கொள்­ள­வேண்­டி­வரும். எனவே, முற்­போக்கு சிந்­த­னை­யு­டைய முஸ்லிம் மக்கள் எம்­மோடு இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். அதே­போன்று அர­சாங்­கத்தின் பாது­காப்­புப்­பி­ரிவு சர்­வ­தேச நாடு­க­ளுடன் சிறந்த வலை­ய­மைப்­பு­களை உரு­வாக்கி செயற்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை, 

இரத்­ம­லானை விமான நிலை­யத்­தி­லி­ருந்து விமானம் ஒன்றைக் கடத்திச் சென்று இந்தத் தாக்­கு­தலை மேற்­கொள்ள திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் சிங்­கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்­டுள்­ளது

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு இதற்­கான ஏற்­பா­டு­களை கொழும்பில் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அது தொடர்பில் இலங்கை அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக குறித்த சிங்­கள பத்­தி­ரிகை மேலும் தெரி­வித்­துள்­ளது

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதானிகள் தூதரகத்துக்குச்செல்வதை  மட்டுப்படுத்தியுள்ளதாகவும்  அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  பொதுபலசேனா அமைப்பு கருத்து வௌியிடுகையிலேயே சர்வதேசத்துடன்  இணைந்து ஐ. எஸ் தீவிரவாதத்தை தடுக்க  அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என்று  சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.virakesari.lk/article/21412

 

13 hours ago, Nathamuni said:


மிக சீரியஸ் ஆன ஒரு செய்தியை கொழும்பிலுள்ள எந்த ஆங்கில, தமிழ் ஊடகங்களும் சொல்லவில்லை.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 02/07/2017 at 7:08 AM, Athavan CH said:

கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­டம் : ­புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை

 

கொழும்­பி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்தின் மீது தாக்­குதல் நடத்த ஐ.எஸ். ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க புல­னாய்வு பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில்.

is.jpg

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் பாது­காப்­ப­தற்கு இலங்கை அர­சாங்கம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து உரிய பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மென பொது­ப­ல­சேனா அமைப்பு தெரி­வித்­துள்­ளது. 

அமெ­ரிக்கா, இந்­தியா, சீனா மற்றும் ரஷ்யா போன்ற 

நாடு­க­ளுடன் சிறந்த பாது­காப்பு உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொள்­வதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களின் செயற்­பா­டு­களை தடுக்­க­லா­மெ­னவும் அவ் அமைப்பு மேலும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. 

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் கருத்துத் தெரி­வித்த பொது­ப­ல­சேனா அமைப்பின் நிறை­வேற்­றுக்­குழு உறுப்­பி­னரும் பேச்­சா­ள­ரு­மான  டிலந்த விதா­னகே 

இலங்­கைக்குள் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு ஊடு­ரு­வி­யுள்­ள­தா­கவும் தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் அமெ­ரிக்க புல­னாய்­வுப்­பி­ரிவு  தகவல் வெளி­யிட்­டுள்­ளது. இந்த தக­வலை நாம் சுமார் இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தெரி­வித்­தி­ருந்தோம். 

பல்­வேறு நாடு­களில் செயற்­பட்­டு­வரும் இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவி­ர­வாத அமைப்பு மிகவும் மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­வ­ரு­வதை நாள்­தோறும் அறி­யக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அவ்­வா­றா­ன­தொரு நிலைமை எமது நாட்­டிற்­குள்ளும் வரக்­கூ­டாது என்­ப­தற்­கா­கவே நாம் அடிக்­கடி இவ்­வி­டயம் தொடர்­பாக கூறி­வ­ரு­கின்றோம். 

இந்த நிலைமை மிகவும் பயங்­க­ர­மா­னதும் பார­தூ­ர­மா­ன­து­மான ஒன்­றாகும். எனவே, அர­சாங்கம் தொடர்ந்தும் இவ்­வி­டயம் குறித்து கருத்­திற்­கொள்­ளாமல் இருக்­கு­மே­யானால், அதன் எதிர் விளை­வு­களை விரைவில் சந்­திக்க நேரிடும். 

இலங்­கையில் வாழ்­கின்ற அப்­பாவி முஸ்­லிம்­களும் இந்த ஐ.எஸ். ஐ. எஸ் தீவி­ர­வாத செயற்­பா­டு­க­ளினால் இக்­கட்­டான சூழ்­நி­லைக்கு தள்­ளப்­ப­டு­வார்கள். அது­மாத்­தி­ர­மின்றி நாட்­டி­லுள்ள அனைத்து மக்­களும் மீண்டும் அச்­சத்­துடன் வாழும் ஒரு சூழ­லையே எதிர்­கொள்­ள­வேண்­டி­வரும். எனவே, முற்­போக்கு சிந்­த­னை­யு­டைய முஸ்லிம் மக்கள் எம்­மோடு இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். அதே­போன்று அர­சாங்­கத்தின் பாது­காப்­புப்­பி­ரிவு சர்­வ­தேச நாடு­க­ளுடன் சிறந்த வலை­ய­மைப்­பு­களை உரு­வாக்கி செயற்­ப­ட­வேண்­டு­மெ­னவும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை, 

இரத்­ம­லானை விமான நிலை­யத்­தி­லி­ருந்து விமானம் ஒன்றைக் கடத்திச் சென்று இந்தத் தாக்­கு­தலை மேற்­கொள்ள திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் சிங்­கள ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்­டுள்­ளது

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்­க­ர­வாத அமைப்பு இதற்­கான ஏற்­பா­டு­களை கொழும்பில் மேற்­கொண்டு வரு­வ­தா­கவும் அது தொடர்பில் இலங்கை அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறும் அமெ­ரிக்க புல­னாய்வுப் பிரிவு எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக குறித்த சிங்­கள பத்­தி­ரிகை மேலும் தெரி­வித்­துள்­ளது

இந்த நிலையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதானிகள் தூதரகத்துக்குச்செல்வதை  மட்டுப்படுத்தியுள்ளதாகவும்  அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  பொதுபலசேனா அமைப்பு கருத்து வௌியிடுகையிலேயே சர்வதேசத்துடன்  இணைந்து ஐ. எஸ் தீவிரவாதத்தை தடுக்க  அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும்  என்று  சுட்டிக்காட்டியுள்ளது.

http://www.virakesari.lk/article/21412

 

 

 

இதனையும் நம்ம முடியவில்லை ஆதவன்.

இது ஒரு சர்வதேச முக்கியத்துவம் மிக்க செய்தி. இதனை அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒரு செய்தியாக தமிழ் ஊடகங்களில் மட்டும் வருவது அதன் நம்பகத்தன்மையை இல்லாமல் செய்கிறது.

அப்படி ஒரு எச்சரிக்கையே வரவில்லை என்கிறது விமானப் படை.
http://www.virakesari.lk/article/21439

 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

எனக்கு ஒன்றும் தெரியாது’

கொழும்பு-03 கொள்ளுப்பிட்டியில் உள்ள, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரால் தற்கொலைத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

  அமெரிக்காவின் புலனாய்வு பிரிவினரே, இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது தொடர்பில் தான் கேள்விபடவில்லை என்றும், சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.  

“இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, தேசிய பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்திகளாக வெளியாகியுள்ளன. எனினும், வெளிநாட்டுக்கு நான் வந்துள்ளேன். அந்தசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் என்னால் எதனையும் கூறமுடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.  

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/எனக்கு-ஒன்றும்-தெரியாது/175-199

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.