Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தமிழர்கள் மீது அறிவிக்கப்படாத இஸ்லாமிய யுத்தம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் கிழக்கே சர்வதேச இஸ்லாமிய நாடுகளில் துணையுடன் அறிவிக்கப்படாத இஸ்லாமிய போரை பாகிஸ்தானிய தீவிரவாத முஸ்லீம் அமைப்புகள் தொடக்கியுள்ளதாக தமிழ் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

கிழக்கில் உள்ள சிவில் சமூக அமைப்புக்கள் எழுச்சி பெறா விட்டால் கிழக்கின்   வரலாறு மாற்றி எழுதப்படும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

சிறந்த தமிழ் பாரம்பரியத்தை கொண்ட மட்டக்களப்பு மாநிலம் தமிழ் மொழி வழி மாநிலமாகவும் தனியே தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்ட இரண்டு இனத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாணமாக  உள்ள நிலையில் இன்று முஸ்லிம் மத அடையாளத்தின் அடிப்படையில் முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளிட்ட முதலமைச்சர் அனைவரும் அரசியல் செய்வதுடன் முஸ்லிம் மத அடையாளங்களை அடிப்படையாக கொண்ட நிர்வாக கட்டமைப்புகளை உருவாக்கி செயற்படுகின்றமை மரத்தால் விழுந்த தமிழ் சமூகத்தின் மீது முஸ்லிம் சமூகமும் ஏறி மிதிக்கின்ற செயலாக உள்ளது. 

ஒரு தேசத்தின் விடுதலைக்காக போராடிய இரண்டு இனங்களில் ஒன்று வீழ்ந்து கிடக்கும்போது அதன்மீது மற்றைய இனம்  தங்கள இன மத அடையாளங்களை கட்டியெழுப்பி வரலாற்றை மாற்றி எழுத நினைப்பது தமிழ்  இனத்தின் மீது முஸ்லிம் தலைமைகள்  மறைமுகமாக தொடுத்துள்ள யுத்தமாகவே பார்க்கவேண்டியுள்ளது.

மிகவும் திட்டமிட்டு மதிநுட்பமாக முஸ்லீம் நாடுகளின் துணையுடன் மிக பெரிய பொருளாதார ஆக்கிரமிப்பை தமிழர் பகுதிகளில் முஸ்லீம் தலைவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். 

தமிழ் மக்களின் பெரும் பான்மையான வாக்குகளையும் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளின் ஆதரவையும் பெற்று அமைச்சர்களாகவும் முதலமைச்சராகவும் ஆகிக்கொண்டவர்கள் இன்று அதே தமிழ் இனத்தின் இருப்பை இல்லாதொழிக்க செயற்படுகின்றமை ஆபத்தானது.

தமிழர்களைப்  பொறுத்தமட்டில் இது அவர்கள் மீது முஸ்லீம் தலைமைகளால் மறைமுகமாக தொடுக்கப்பட்டுள்ள போர்  இதனை உடனடியாக நிறுத்தியாக வேண்டும். 

கிழக்கை பொறுத்தமட்டில் தமிழ் மக்களின் இருப்பை அழித்துவிட்டு முஸ்லீம் சமூகம் ஒருபோதும் வாழ முடியாது. 

முஸ்லீம்களின் வியாபாரம் உள்ளிட்ட அனைத்து பொருளாதாரமும் தமிழர்களிலேயே தங்கியுள்ளது. அதே போன்று தமிழர்களின் வியாபார தேவைகள் பல முஸ்லீம் சமூகத்தில் தங்கியுள்ளன. 

இன்நிலையில் அரசியல் அதிகாரப் பகிர்வில் முஸ்லீம் தலைமைகளின் ஆதரவு தேவை என்பதை காரணம் காட்டிக்கொண்டு தமிழ் மக்கள் மீது மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மறைமுகமான காணி கலாசார பண்பாட்டு ஆக்கிரமிப்பிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு குடை பிடித்து திரிகிறது.

இறுதியில் கிழக்கில் தமிழர்களுக்கான அதிகாரத்தை முஸ்லீம் தலைமைகளிடமோ அல்லது பாகிஸ்தான் அரசிடமோ கெஞ்சி பெறவேண்டிய நிலையை தமிழ் அரசியல் தலைவர்கள் உருவாக்கி கொடுத்துவிட்டு கிழக்கு முஸ்லீம்களுக்கு வடக்கு தமிழர்களுக்கு என்ற சித்தாந்தத்தை உருவாக்கி விடப்போகின்றார்கள் என்பது மட்டும் உண்மை. 

கிழக்கில் தங்களது இருப்பை பாதுகாக்க பல ஆயிரக்கணக்கான உயிர்களை தமிழர்கள் தியாகம் செய்துள்ள நிலையில் இன்று முஸ்லீம்  தமிழ் உறவு பற்றி பேசிக்கொண்டு தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தில் முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழர் களின் இருப்பை இல்லாதொழித்து முஸ்லீம் மத அடையாளங்களை கொண்ட மாகாணம் ஒன்றை உருவாக்க முற்படுவதை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

இதற்கான சரியான பதிலையும் தெளிவுபடுத்தலையும் முஸ்லீம் சமூக தலைவர் வெளியிட வேண்டும். எதிர்காலத்தில் மிகப்பெரிய இன வன்முறையை ஏற்படுத்த கூடிய சம்பவங்கள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. 

ஊடகங்களிலும் பொது நிகழ்வுகளிலும் அரசியல் மேடைகளிலும் தமிழ் முஸ்லீம் உறவு குறித்து எந்த வித பிரச்சினைகளும் இல்லாதது போன்று  படம் காட்டுபவர்கள் பின்னர் இரகசியமாக அதற்கு மாறாக செயற்படுகின்றனர்.

உண்மையில் இந்த விடயம் பொது வெளியில் அலசி ஆராயப்பட்டு தீர்வு காணப்படவேண்டியது கட்டாயமாகும். 

30 வருட போராட்டத்தின் பின் வீழ்ந்து கிடக்கும் தமிழினத்தின் இயலாமை மீது ஏறிநின்று முஸ்லீம் மாகாண நிர்வாகம் ஒன்றை நிறுவ முற்படுவதும் அதற்கு  மைத்திரி அரசாங்கம்  குடைபிடித்து ஆதரவு வழங்குவதானது கிழக்கில் மீண்டும் திட்டமிட்ட தமிழின அழிப்பு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த சந்தேகம் தமிழர்களுக்கு எழுவதற்கு பல நியாயமான ஆதாரவூர்வமான சம்பவங்கள் கிழக்கில் நடைபெற்று வருகிறது.  அது குறித்து தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயம் முஸ்லீம் தலைமைகளுக்கு உண்டு.

தமிழர்கள் சிங்கள தலைவர்களுடன் தங்களுக்கான உரிமையை கேட்டு போராடி வரும் பொது நீங்களோ அதே உரிமையை எந்தவித போராட்டமும் இன்றி தமிழர்களை காட்டிக்கொடுத்து தமிழர்களின் இருப்பை அழித்துவிட்டு பெற நினைப்பது எந்தவகையில் நியாயமானது.

  ஏன் முஸ்லிம்கள் மட்டும்  மதவாதபோக்குடன்    பிரித்து தனியான  அரசியல் அதிகாரம்  தனியான கல்வி அதிகாரம்  அரசியல் நிருவாகம் என உருவாக்கி வருகின்றீர்கள்  ?

உங்கள் செயற்பாடு  ? உங்கள் நோக்கம் தனியான இஸ்லாமிய மாகாணமாக கிழக்கை மாற்றி   பாக்கிஸ்தானுக்கு கிழக்கை கையகப்படுத்தி  இந்தியாவுக்கு எதிராகவும் இலங்கைக்கு எதிராக  கிழக்கில் பாக்கிஸ்தானுக்கு ஆதரவான மாகாணத்தை உருவாக்குவதா?  

பாக்கிஸ்தான் போன்று கிழக்கில் மத தீவிரவாதத்தை தோற்றுவித்து? இலங்கையில்  கிழக்கிஸ்தானை உருவாக்கவா நீங்கள் செயற்படுகிறீர்கள்.

தமிழின அழிப்பு நிறைவேற்றப்பட்ட மண்ணில்  மீண்டும் மற்றுமொரு மத கலாசார  அழிப்பை நடாத்தி வருகின்றனர்.

ஏன் தமிழர்களோடு இணைந்து வாழ முடியாது ?உங்களிடமிருந்து மதம் மட்டுமே வேறுபடுகிறது ? முஸ்லீம்கள் மத தீவிரப்போக்கே கடைப்பிடிக்கின்றனர் மதத்தின் பேரால் ஒரு இனமாக நீங்கள் சர்வதேசத்துக்கு அடையாளப்படுத்தியுள்ளீர்கள் 
தமிழ் தாய்மொழி பேசும் நீங்கள் வடகிழக்கை மொழிரீதியில் இணைந்து அரசியல்  அதிகாரம் பெற தடை விதிக்கின்றீர்கள் .

இந்திய தேசத்திற்குள் வாழும் முஸ்லீம்கள் இவ்வாறு வாழவில்லை அவர்கள் தமிழ் கலாசாரத்ததுடனும் இணைந்து வாழ்கின்றார்கள். 

கிழக்கில்  மட்டக்களப்பில் 85 வீத தமிழர் வாழும் இடத்தில் இஸ்லாமிய முறைப்படி சர்வதேச பல்கலைக்கழகம்   அனைத்து தொழில் நுட்பங்கள் அடங்களாக நிறுவப்பட்டுள்ளது.

கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு எதிராக இன உறவை முறித்து தனித்து இஸ்லாமிய மத வாத நீக்கம் கொண்ட  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை நீங்கள் எவ்வாறு ஆரம்பிக்கலாம். 


மற்றும் தென்கிழக்கில்   பல்கலைக்கழகத்தில் அரேபிய இஸ்லாமிய மதக்கல்வி  முஸ்லிம் வரலாற்று நூதனசாலை  ஆய்வு துறை அடங்களாக இஸ்லாமிய மதச்சாயத்துடனே  இஸ்லாமிய நிருவாகத்தின் கீழ்  முன்னெடுக்கப்பட்டுச்செல்கிறது .இவை இன மத நல்லுறவை  எதிர்காலத்தில் ஏற்படுத்துமா? 

ஏறாவூர் முஸ்லிங்களுக்கான தனியான புற்று நோய்வைத்திய சாலை,
முஸ்லிம் பெண்களுக்கான தனியான பேருந்து சேவை , அல்கிமா இஸ்லாமிய  முஸ்லிம்களுக்கான மருத்துவக்கல்லூரி சார்ந்த மருத்துவபீடம் ஓட்டமாவடியில் அமையப்பெற்றுள்ளது .

இலங்கை சட்டதிட்ட த்துக்கு மாறாக முஸ்லிம்களுக்கான தனியான காதிநீதிமன்றம் 
காத்தாங்குடி போன்று கல்முனையில் ஈச்சமர சாலை அமைக்கும் திட்டம் அரசியல் செல்வாக்குடன் அரச நிதியில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நிந்தவூரில் முஸ்லிம்களுக்கு தனியான தொழில் நுட்பக்கல்லூரி அமைக்கப்பட்டமை

காத்தாங்குடியில்   நூதனசாலை  தொல்பொருளியல் அமைக்கப்பட்டு இன்டர்நேஷனல் ஜோக்கிரப்பில் இணைத்துள்ளனர்.
  கிழக்கில் பூர்வீக  வரலாறு கொண்ட தமிழர்களுக்கோ 

அல்லது சிங்களவர்கோ பொதுவான  பூர்வீக நூதனசாலை முழுமையானதாக  இல்லாத போது முஸ்லீம்களுக்கு பூர்வீக நூதன சாலை அமைத்து அதைஇன்டர்நேஷனல் ஜோக்கிரப்பில் இணைத்துள்ள கிஸ்புல்லாவின் நோக்கம் என்ன?

மட்டக்களப்பு கச்சேரியில் ஒரு குடிசையில் சில வரலாற்று சான்று பண்டய காலம் தொட்டு பாதுகாக்கப்படுகிறது  இது அரச அதிபரின்  கவலையீனம் காரணமாக இதுவரையில் நடவடிக்கை எடுக்காது முஸ்லிம்களுக்கு தனியே அனுமதி வழங்கியுள்ளார். 

மட்டகளப்பு நூதனசாலை ஏன் சர்வதேசமயப்படுத்த வில்லை அரச பண்டய நூதன சாலையை விட காத்தான்குடியில்  வரலாற்று தொல்பொருளியல்  நூதன சாலை எதற்கு?   

முஸ்லிம்களின் இஸ்லாமிய தீவிர மதபோக்கை இஸ்லாமிய வரலாற்றை நிறுவ  காத்தான்குடிக்கு முன்னெடுத்துச்சென்றுள்ளனர் இவை எதை காட்டி நிற்கிறது?

மட்டக்களப்பு மாவட்டமே  ஒட்டுமொத்த கிழக்கின் முக்கிய  தலைமையகமாகவும் ஆங்கிலேயர் காலம் தொட்டே மட்டக்களப்பு மாவட்டமே  ஒட்டுமொத்த கிழக்கின் முக்கிய  தலைமையகமாகவும்  இருந்துவந்துள்ள நிலையில் இதுவரை எவரும் சிந்திக்காத  தமிழின அழிப்பையும்  உலகவரலாற்றையும் இலங்கை வரலாற்றையும் மற்றும் செயலையும்  முஸ்லீம் தலைமைகளால்  முன்னெடுத்துச் செல்கின்றனர். 

இஸ்லாமிய. சட்டதிட்டங்களுடன் கூடிய சர்வதேச இஸ்லாமிய வங்கி மற்றும் காப்புறுதி நிதியம் கிழக்கு பகுதியில் தமிழ் கிராமங்கள் அடங்களாக சேவை அமையப்பெற்றுள்ளது 
இலங்கை அரச வங்கிகள் காப்புறுதி  சட்ட திட்டங்களை நிறுவனங்களை எதிர்த்து அமானா வங்கி  கடன் திட்டம் என இஸ்லாமிய இன்ரநசனல் வங்கி காப்புறுதி நிறுவனங்கள் கிழக்கில் ஆதிக்கம் செலுத்துகிறது .

மேலும் வீதிகளில் அரபு வாசகங்களும் இஸ்லாமிய வீதிக்கோபுரங்களும் அரச பொது கட்டிடங்களுக்கும் மதச்சாயம் பாடசாலை நூலகம் நூதன சாலை  பல்கலைக்கழக உட்பட    கடும்போக்கு இஸ்லாமிய சவுதி அரேபியா போன்று  பேரீச்ச மரங்களும் பொது வீதிகளில் நடப்பட்டுள்ளன .

இவை ஏனைய இன மதத்தினருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

சர்வதேச இஸ்லாமிய சரியா சட்டத்தின் படி அமைந்த சுற்றுலா உல்லாச நீச்சல் தடாகத்துடன் கூடிய சுற்றுலா விடுதி
அரசு கிழக்கு மாகாணத்திற்கு வழங்கிய தொழில் பேட்டைகள் அனைத்தும் முஸ்லிம் ஊர்களில் நிறுவி முஸ்லிம்களுக்கு வேலைவாய்பு வழங்கியுள்ளனர்.

இஸ்லாமிய பகுதி
வைத்திய சாலைகளை நவினமயப்படுத்தியமை  பண்டய பாரம்பரிய  மாவட்ட வைத்திய சாலைகளை வீழ்ச்சி அடைய செய்தமை என முஸ்லீம் ஆக்கிரமிப்பு  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழர்களை வறுமையான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.

85வீதமான தமிழர்களுக்கு அபிவிருத்தி சென்றடயாமல் செய்த   முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட்டாக திட்டமிட்டு இச் செயல்களை  செய்து வருகின்றனர். 

கிழக்கில் தனியார் வைத்திய  சாலை ஆய்வுகூடம் ,சர்வதேச தரதிலான இஸ்லாமிய செல்வாக்கும் ஆதிக்கமும் உள்ள  வெளிநாட்டு தனியார் வைத்தியசாலை  கிளைகளையும் நிறுவியமை உள்ளிட்ட  முஸ்லிம் பகுதியில் முன்னெடுத்து செல்லும் இன்னும் பல செயற்பாடுகள் தமிழர்களைஅச்சமடைய வைத்துள்ளது.

குறிப்பாக அண்மையில் அரசாங்க அதிகாரி ஒருவர் முஸ்லீம்கள் சிலரின் அத்துமீறிய சட்டவிரோத காணி அபகரிப்பை தடுக்க முற்பட்ட போது சுடப்பட்டமையானது தமிழர்கள் மீது இஸ்லாமியர்கள் மறைமுக யுத்தம் ஒன்றை நடத்தி வருகின்றனர் என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது. 

எனவே இதனை இனவாத பதிவாக கருதாமல் உடனடியாக இதற்கான வெளிப்படையான பதிலை முஸ்லீம் தரப்புக்கள் தந்தாக வேண்டும்.

http://www.battinaatham.com

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு அபிசேகம் பண்ணி எமது இருப்பை தக்க வைக்க வேண்டும்...இதுதான் இனி எம்மால் முடிந்த காரியம்....

இவர்களின் கொட்டம் நீண்ட காலத்துக்கு தாக்குப்பிடிக்காது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.