Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னார் பகுதியில் முறுகல் நிலையை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் மூவர் கைது

Featured Replies

மன்னார் பகு­தியில் முறுகல் நிலையை ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் மூவர் கைது

01-db854328028d11cbcfec96e89971d9a78698720e.jpg

 

17 ஆம் திகதி வரை விளக்­க­ம­றியல்
(தலை­மன்னார் நிருபர்)

நீதி­மன்ற கட்­ட­ளையை மீறி செயல்­பட்டு இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே முறுகல் நிலையை உரு­வாக்­கி­னார்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் மன்னார் பொலி­ஸாரால் சந்­தே­க­ந­பர்கள் மூவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். 

கைது­செய்­யப்­பட்ட இவர்கள் பலத்த பொலிஸ் பாது­காப்­புடன் மன்னார் மாவட்ட நீதிவான் ஆசீர்­வாதம் கிறே­சியன் அலெக்ஸ்­ராஜா முன்­னி­லையில் நேற்று மாலை ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து இவர்­களை ஒரு வாரத்­துக்கு விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­துள்ளார்.  

இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட காணிப் பிணக்­கினை அடுத்து ஒரு­த­ரப்­புக்குச் சார்­பாக தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்தத் தீர்ப்பை அடுத்து குறித்த காணியில் எல்­லை­யி­டப்­பட்­ட­போது இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மீண்டும் முரண்­பாடு ஏற்­பட்­டி­ருந்­தது.

இத­னை­ய­டுத்து வன்­மு­றையில் ஈடு­பட்­ட­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின் பேரி­லேயே இந்த மூவரும் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இச்சம்­பவம் பற்றி தெரிய வரு­வ­தா­வது,

மன்னார் மாவட்­டத்தில் அரு­க­ருகே இருக்கும் இரு கிரா­மங்­களின் (சின்ன கரிசல், பெரிய கரிசல்) இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே நீண்ட கால­மாக காணி சம்­பந்­த­மான பிரச்­சினை ஒன்று தலை­தூக்­கி­யி­ருந்­தது.

இந்தப் பிரச்­சி­னையை பெரி­யோர்கள் பலர் சுமுக­மாக தீர்ப்­ப­தற்கு எடுத்த முயற்­சிகள் பலன் அளிக்­கா­மையால் 2015 ஆம் ஆண்டு இந்த காணி சம்­பந்­த­மான வழக்­கொன்று மன்னார் நீதிவான் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட நிலையில் இக் காணியை மன்னார் மாவட்ட நீதிவான் நேரடி பார்­வையின் பின் இவ் வழக்கின் தீர்ப்பு 25.11.2016 அன்று ஒரு சாரா­ருக்கு வழங்­கப்­பட்­டது.

இதைத் தொடர்ந்து இக்காணி வழக்கில் தங்­க­ளுக்கு சாத­க­மாக தீர்க்­கப்­பட்ட சமூ­கத்­தினர் கடந்த 08.01.2017 அன்று நீதி­மன்றின் தீர்ப்­புப்­படி எல்­லை­யிட்டு அடைக்க முற்­பட்­ட­போது எதிர்த்­த­ரப்­பினர் மீண்டும் இவர்­க­ளுக்கு தொந்­த­ரவு கொடுக்­கவே இவர்கள் மீண்டும் நீதி­மன்­றத்தை நாடி­யி­ருந்­தனர்.

இதைத் தொடர்ந்து நீதி­மன்றின் கட்­ட­ளைக்கு அமைய கடந்த 06.07.2017 வியா­ழக்­கி­ழமை நீதி­மன்ற பதி­வாளர் உட்­பட நீதி­மன்ற அலு­வ­ல­கர்கள் இக் காணி பகு­திக்குச் சென்று இரு தரப்­பி­ன­ரையும் அழைத்து நீதி­மன்றின் கட்­ட­ளையை வாசித்து காட்­டி­யபின் இதற்கு மாறாக சட்­ட­வி­ரோத செயல்­பாட்டில் இறங்­கு­ப­வர்­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்க நேரிடும் எனவும் எச்­ச­ரித்­துள்­ளனர்.

அத்­துடன் நீதி­மன்ற அலு­வ­லர்கள் முன்­னி­லை­யி­லேயே நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்ட வரை­ப­டத்­துக்கு அமை­யவும் நீதி­மன்றின் தீர்ப்­புக்கு அமை­யவும் உரி­மைக்கு உரித்­தான சமூ­கத்­தினர் எல்லைக் கற்­களை நாட்­டி­யுள்­ளனர்.

அந்­நே­ரத்தில் எதிர்த்­த­ரப்­பினர் மைய வாடிக்குச் செல்ல பத்­தடி பாதை கோரி­யுள்­ளனர். உரி­மை­யா­ளர்கள் பன்­னி­ரண்டு அடி பாதையை விட்டுக் கொடுத்­த­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தச் செயற்­பாடு காலை 10 மணி முதல் பிற்­பகல் 2.30 மணி வரை இடம்­பெற்­றுள்­ளது எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதன் பின் போடப்­பட்ட எல்லைத் தூண்­களில் ஏழு உடைக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து இது சம்­பந்­த­மாக உடன் பாதிப்­ப­டைந்­த­வர்கள் மன்னார் பொலிஸில் முறை­யீடும் செய்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவர்கள் பொலிஸில் முறை­யீடு செய்து கொண்­டி­ருந்­த­பொ­ழுது மேலும் ஒரு சில தூண்கள் சேத­மாக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதைத் தொடர்ந்து இவ்­விரு கிரா­மங்­க­ளுக்­கி­டை­யேயும் முறுகல் நிலை உரு­வா­கி­யதை அடுத்து பொலிஸ் பாது­காப்பும் இரு பகு­திக்கும் இடப்­பட்­டி­ருந்த நிலை­யிலும் இவ் வழக்கில் வெற்­றி­யீட்­டி­யி­ருந்தோர் சார்­பான சமூ­கத்தில் முக்­கிய ஒரு­வரின் வீட்­டுக்கு பெற்றோல் குண்டு வீசப்­பட்­டதை அடுத்து அவ் வீடு சேத­ம­டைந்­த­துடன் அதற்குள் இருந்த சொரூ­பமும் சேத­மாக்­கப்­பட்­ட­தா­கவும் பொலிசில் முறை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இத்­துடன் 07.07.2017 அன்று காணியின் எதிர்த்­த­ரப்பு சமூகம் தங்கள் மத வழி­பாட்டை முடித்த கையோடு இந்தக் காணியில் எல்லை இடப்­பட்­டி­ருந்த அனைத்து தூண்­க­ளையும் சேதப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் முறை­யீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் நேற்­று ­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை காணி வழக்கில் வென்ற சமூகம் வழ­மை­யாக காலை 8.30 மணிக்கு நடை­பெறும் வழி­பாட்டில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த வேளையில் அதன் அருகே பொலிஸ் பாது­காப்பு போடப்­பட்­டி­ருந்தும் வழி­பாட்டுத் தலம் மீது கல்­வீச்சுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ளது.

இதனால் வழி­பாட்டில் இருந்­த­வர்கள் வெளியே வந்­த­தா­கவும் ஒரு சிலரை துரத்திக் கொண்டு பொலிஸார் சென்­ற­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதைத் தொடர்ந்து இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யேயும் முறுகல் நிலை உச்சக் கட்­டத்­துக்கு வந்­த­தை­ய­டுத்து அர­சியல் தலை­வர்கள், மதப் பெரியோர், பொலிஸ் உயர் அதி­கா­ரிகள் சம்­பவ இடத்­துக்குச் சென்று நிலை­மை­களை நேரில் பார்த்தும் தெளி­வு­ப­டுத்­தியும் உள்­ளனர்.

இரண்டு கிரா­மங்­க­ளுக்கும் பலத்த பொலிஸ் பாது­காப்பு இடப்­பட்ட நிலையில் பொலிஸார் சம்­ப­வங்­க­ளுக்கு கார­ண­மாக தெரி­விக்­கப்­படும் சந்­தே­க­ந­பர்­களை நேற்று நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­து­மு­க­மாக மன்னார் நீதி­மன்றில் காலை தொடக்கம் மாலை வரை பலத்த பொலிஸ் பாது­காப்பு இடப்­பட்­ட­துடன் வழக்­கு­க­ளுக்கு சென்றோர் கடு­மை­யான முறையில் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்கள் காலை­யி­லேயே நீதி­மன்றில் ஆஜர்படுத்தப்படுவர் என எதிர்பார்த்தபோதும் பிற்பகல் மூன்று மணிக்கு பின்பே நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்தச் சந்தேக நபர்கள் மூவரையும் மன்னார் மாவட்ட நீதிவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து நீதிமன்ற கட்டளையை துஷ்பிரயோகம் செய்ததைக் கண்டித்த நீதிபதி இவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஆஜர்படுத்தப்பட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-07-11#page-1

மிக தெளிவாக முஸ்லிம் தமிழனை தாக்கினான் என்று ஏன் வீரகேசரி கூற மறுக்குது ...??

அதை விடுத்து வென்ற சமூகம் தோற்ற சமூகம் என்று யாரை ஏமாற்றுகிரார்கள் !!!!

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.