Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமாதானம் பற்றிப் பேசும் தகைமையை சர்வதேசம் இழந்து விட்டது -சி.இதயச்சந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் பற்றிப் பேசும் தகைமையை சர்வதேசம் இழந்து விட்டது -சி.இதயச்சந்திரன்

வாகரையில் அமெரிக்கத் தூதரக உயர் அதிகாரிகள் கால் பதித்துள்ளனர். இதேபோல சம்பூருக்கு இந்திய அதிகாரிகளும் அனல்மின் நிலைய முதலீட்டாளர்களும் முன்பு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த அமெரிக்காவும் இந்தியாவும் யுத்த நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறும் போக்கினை அங்கீகரிப்பது போலவே இவை அமைந்துள்ளது. இவர்களின் இரட்டை வேடத்திற்கான சான்றுகள் இதைவிட வேறெதுவுமில்லை.

அரசு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கும்போது பேசித் தீருங்களென்று புராணம் பாடுவதை சர்வதேசத்தின் ஒப்பாரியாகி விட்டது.

இருபது வருடங்களாகப் போரிட்டும் புலிகளை வெல்ல முடியவில்லையென அமெரிக்கா ஆதங்கப்படுவதை பெரும் சவாலாகவே ஜனாதிபதி மஹிந்த ஏற்றுக்கொண்டுள்ளார்.

போரில் வெல்வதற்கு ஆதரவாக தமிழ் துணைக் குழுக்களை உருவாக்கிக் கொடுத்தும் பெரியளவில் வெற்றிகளை குவிக்கவில்லையென அமெரிக்கா வேதனையடைவதால், வாகரையைக் காட்டியிருப்பார் ஜனாதிபதி.

மனித உரிமை மீறல், பேச்சுவார்த்தை என்கிற கோஷங்களை முன் வைத்து நிதி வழங்குவதை தள்ளிப்போடும் அமெரிக்கக் குழுவினருக்கு வாகரையை காட்டியாவது போரின் மூலம் புலிகளை வெல்ல முடியுமெனவும் அதற்கான நிதியுதவியை அளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்திருப்பார்.

அதாவது தம்மால் வெல்லப்படக்கூடிய புலிகளுடன் பேசுமாறு வலியுறுத்துவதை விடுத்து இராணுவ முன்னெடுப்பிற்கு ஆதரவாகப் பொருளுதவி செய்வதே பொருத்தமானதாகவிருக்குமென அமெரிக்காவிடம் மறைமுகமாக மகிந்த கூற முற்படுகிறார்.

இருப்பினும் வாகரையைப் பார்வையிட்ட அமெரிக்க அதிகாரிகளுக்கு தம்மால் பயிற்றுவிக்கப்பட்ட படையினர் ஆனையிறவிலிருந்து தப்பி ஓடிய காட்சி கண்முன்னே நிழலாடியிருக்கும்.

மிலிந்த மொறகொட ஊடாக பிரித்தெடுக்கப்பட்ட துணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றிய உலக மன்றங்களின் குற்றச்சாட்டுக்களை புன்சிரிப்புடன் எதிர்கொள்ளும் அமெரிக்காவிற்கு அங்கோலா நாட்டு ஞாபகம் வந்திருக்கும்.

வாகரையைக் கைப்பற்றியவுடன் துணைவர்களை அங்கு அழைத்துச் செல்லாததன் காரணத்தையும் மஹிந்தரிடம் அமெரிக்கா வினவியிருக்கலாம்.

புலிகளைப் பலவீனப்படுத்த துணைவர்களை உருவாக்கி தம்மோடு இணைய வைத்த வல்லரசின் உத்தியினை நினைத்து ஜனாதிபதி மஹிந்தா உள்ளூரச் சிரித்திருப்பார்.

ஜெயசிக்குறு சமர் களத்தில் பணியாற்றிய துணைவனின் துணையோடு ஜெயசிக்குறு 2 சமரினை வெல்லுவேன் என அமெரிக்காவிற்கு அடித்துச் சத்தியம் செய்திருப்பார் மஹிந்தா.

வாகரை போல், புளியங்குளத்தில் கொடியேற்றி உங்களை அழைத்துச் செல்வேனென வீர முழக்கமிட்டிருப்பார். அதுவரை பொறுத்திருந்து நிதியளித்து உதவி செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகோளும் விடுத்திருப்பார்.

சிங்களத்தில் ஒருமித்த குரலை உருவாக்க அவர்களிடையே ஜனநாயகப் பண்பற்ற கட்சி உடைத்தலையும், அசசுறுத்தும் அரசியலை ஜனாதிபதி மஹிந்த மேற்கொண்டாலும் பேச்சுவார்த்தை என்கிற மந்திரத்திற்காக அனைத்தையும் ஜீரணிக்கும் வல்லமை இந்த வல்லரசுகளுக்கு உண்டு.

எவ்வகையான தில்லு முல்லுகளுக்கூடாகவும் ஆட்சியில் பெரும்பான்மை உருவாகுவதை பகிரங்கமாகவே சிலாகித்துப் பேசும் இணைத் தலைமை நாட்டினரை அண்மைய பேட்டியொன்றினூடாக அறிந்திருக்கலாம்.

எப்போதுமே சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும்பொழுது தென்னிலங்கை அரசியல் களத்தில் குழப்பங்கள் உருவாக்கப்படுவது இயல்பான நடைமுறையாகும்.

கடந்த ஐந்து வருட யுத்த நிறுத்த ஒப்பந்த காலத்தில் தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் அதிகரிப்பு இதற்கான நியாயபாட்டினைத் தெளிவாக்குகிறது.

வரலாற்றைப் பின்னோக்கி நகர்த்தும் அரசியல் சக்திகளின் செயற்பாடுகளே ஸ்ரீலங்காவின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை ஏற்படுத்த முடியாமல் தடுக்கின்றன.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்குரலை இராணுவத் தீர்வு வழிமுறைகளால் அடக்கி விடலாமென்பதே தற்போதைய தீவிரத் தன்மையின் வெளிப்பாடாக உள்ளது.

இராணுவ மயப்பட்ட ஸ்ரீலங்காவின் அரசியல் சிந்தனை தனது உச்ச நிலையை அடைந்துள்ளது.

அதேவேளை, போர்நிறுத்த ஒப்பந்தத்தை வரவேற்பதாகக் கூறும் இந்தியாவும், அமெரிக்காவும் சம்பூரிலும் வாகரையிலும் எப்போது காலடி எடுத்து வைத்தார்களோ அன்றிலிருந்தே சமாதானம் பற்றிப் பேசும் தகைமையையும் அவர்கள் இழந்து விட்டார்கள்.

யுத்தம் முழு அளவில் ஆரம்பமாகும் வரை அரச இறையாண்மைகள் ஒரு இசைவான போக்கையே கடைப்பிடிக்கும்.

ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை இரு பாரிய இராணுவப் பின்னடைவுகளான ஜெயசிக்குறுவும் ஆனையிறவும் அவர்களின் உளவியல் பரிமாணத்தில் இற்றை வரை வடுக்களாக நிலை பெற்றுள்ளன.

ஓயாத அலைகள் ஒன்றில் முல்லைத்தீவும் மூன்றில் ஆனையிறவும் இடையில் புளியங்குளம், மாங்குளம் போன்ற பெரும் படைத் தளங்களை அரசு இழந்தது.

இழந்தவற்றை மீட்டெடுக்க இறுதிப் போரொன்றை நிகழ்த்த வேண்டிய காலம் அண்மித்து விட்டதாக ஜனாதிபதி மஹிந்தா எடை போடுகிறார்.

முழு வன்னி நிலத்தையே பெட்டி வடிவ வியூகத்துள் அடக்குவதற்காக முகமாலை, நாகர்கோவில் வன்னி வடக்கின் இரு நிலைகளாகவும் வவுனியா, மணலாற்றினை தெற்கின் இரு முனைகளாகவும் கொண்டு பாரிய தாக்குதலொன்றை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்படுகிறது.

இதில் வவுனியாவிலிருந்து புறப்படும் ஏ-9 பாதையின் கிழக்குப் பகுதியிலமைந்துள்ள மாமடு, களமுனை வாசலாக அமையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.

புளியங்குளம், நெடுங்கேணி பகுதிகளில் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் செறிவான வான் தாக்குதல்கள் அதற்கான ஊகங்களை ஏற்படுத்துகின்றன.

மாமடுவிலிருந்து படை நகர்வு ஆரம்பிக்கப்பட்டால், புலிகளிடமிருந்து வரும் எறிகணை வீச்சுக்களை தவிர்ப்பதற்காக இவ்வான் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

வன்னியிலுள்ள புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள்ளே அரச இராணுவம் இழந்த முக்கிய தளபாடங்களை மீட்க வேண்டுமென்கிற ஏக்கம் தளபதிகளுக்கு உண்டு.

அரச அதிகாரத்தினை இராணுவ முனைப்பு இழுத்துச் சென்று தனது ஏக்கத்தை தணிக்க முயற்சிக்கிறது. இதனை தமிழ் தேசியத்தின் 'வொன் கியாப்" எவ்வாறு எதிர்கொள்வாரென்பதை ஊகிக்க முடியாமல் யாவரும் தடுமாறுகின்றனர். தற்போது இந்தியாவும் புலிகளை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டது.

இந்திய பங்குச் சந்தையில் புலிகளின் தலையீடு, சர்வதேசக் கடத்தல்கள் என்று போலிப் பரப்புரைகள் பலவற்றை இந்திய உயர் அதிகாரிகள் கட்விழ்த்துள்ளனர். ஆனையிறவிலிருந்து யாழ். நகரை நோக்கிய புலிப் பாய்ச்சலை இடைநிறுத்தக் கையாண்ட அதேவகையான அச்சுறுத்தல் உத்திகளை திரும்பவும் பிரயோகிக்க இந்தியா முனைவது போலுள்ளது.

பாகிஸ்தானின் உள்நுழைவால் தடுமாற்றமடைந்துள்ள இந்தியா, 450 கோடி கொடுத்து புலிகளையும் சாடியபடி ஜனாதிபதி மஹிந்தாவைக் குளிர்விக்கலாமெனத் தப்புக்கணக்குப் போடுகிறது.

இந்தியாவின் இராஜதந்திர காய்நகர்த்தல்களும் தமது பிராந்திய நலன் பேண புதிய கூட்டுக்களை உருவாக்குவதும் பின் அதை அழிப்பதும் பின்னடைவுகளையே அந்நாட்டிற்கு அளிப்பதை அதன் கொள்கை வகுப்பாளர்கள் இன்னமும் புரியாதிருப்பது சோகமானதுதான்.

தனது மாநிலமொன்றின் உள்விவகாரத்தை கையாள்வது போன்று வட கிழக்குப் பிரச்சினையை அணுகும் போக்கே தவறாக பல முடிவுகளை இந்தியா எடுப்பதற்கு காரணியாக அமைகிறது.

இலங்கை- இந்திய ஒப்பந்தம் தொடக்கம் மாகாண சபை உருவாக்கும் வரை, இனப்பிரச்சினையின் ஆழத்தை உணராத மேம்போக்கான திணிப்பொன்று பிரயோகிக்கப்பட்டதாகவே உணரப்படுகிறது.

வானிலிருந்து உணவுப் பொட்டலங்கள் வீசியதும், மாகாண சபையொன்றை வலிந்து திணித்ததும், வெளியேற்றப்பட்ட சம்பூர் மக்களின் எஞ்சியிருந்த கால்நடைகளை பார்வையிடச் சென்றதும் ஏன் என்பதை தமிழ் மக்கள் நன்கறிவர்.

நலனென்பது ஒருவழிப் பாதையல்ல, தமது சுயநலன்களைத் திணிப்பதற்காக, மற்றவரின் அடிப்படையான பிறப்புரிமையை மறுப்பதும், அதற்கான போராட்டத்தைச் சிதைக்க முனைவதும் காந்திய வழிமுறையல்ல.

காந்தி பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை பாதுகாக்க அணுகுண்டு தேவையென்றால் தமிழ் மக்கள் தமது சுதந்திரத்தை வென்றெடுக்க ஏன் மாற்று வழியை நாடக்கூடாது.

அவ்வழியை எதிரியே தீர்மானித்த பின் அஹிம்சையைப் போதிப்பது கோழைத்தனம். ஏனெனில் சகல அடக்கு முறைகளையும் உடைத்தெறியும் வல்லமையை எதிரியே கொடுத்துள்ளான.

http://www.tamilnaatham.com/articles/2007/...chandran/25.htm

இதயச்சந்திரனுக்கு என்ன நடந்தது?

தனது கட்டுரையை ஆத்திசூடி பாணியில் எழுதியுள்ளாரே?

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை

ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே!

1. அறம் செய விரும்பு

2. ஆறுவது சினம்

3. இயல்வது கரவேல்

4. ஈவது விலக்கேல்

5. உடையது விளம்பேல்

6. ஊக்கமது கைவிடேல்

7. எண் எழுத்து இகழேல்

8. ஏற்பது இகழ்ச்சி

9. ஐயம் இட்டு உண்

10. ஒப்புரவு ஒழுகு

11. ஓதுவது ஒழியேல்

12. ஒளவியம் பேசேல்

13. அ·கம் சுருக்கேல்

14. கண்டொன்று சொல்லேல் ...........

:lol::lol::o:o:o:o:o:o:o:o:o:unsure::unsure::unsure::unsure::unsure::unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.