Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி

Featured Replies

டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

 
டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி
 
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. அதாவது பவுலர்களுக்கு பதிலாக பந்துவீசும் எந்திரம் மூலம் பந்துகள் வீசப்படும். ஒவ்வொருவருக்கும் 6 பந்துகள் வீசப்படும். அதில் யார் அதிக சிக்சர் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளராக தீர்மானிக்கப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் சம எண்ணிக்கையில் சிக்சர் அடித்திருந்தால் யார் அதிக தூரத்துக்கு சிக்சர் அடித்திருக்கிறார்கள் என்பது கணக்கிடப்படும்.

ரசிகர்களை குதூகலப்படுத்துவதற்காக இந்திய வீரர்கள் முன்னாள் கேப்டன் டோனி, மொகித் ஷர்மா, பத்ரிநாத், பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருதா ஸ்ரீகாந்த் ஆகியோர் எந்திரத்துக்கு எதிராக மல்லுகட்டி சிக்சர் அடிக்க களம் காண உள்ளனர். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் எல்.பாலாஜி, எம்.விஜய், தமிழக ஆல்-ரவுண்டர் கணபதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். சிக்சர் போட்டி மாலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் நிறைவடையும். அதைத் தொடர்ந்து முதலாவது ஆட்டம் இரவு 7.15 மணிக்கு தொடங்கும். 

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/22103000/1097852/MS-Dhoni-Matthew-Hayden-and-others-to-feature-in-a.vpf

  • தொடங்கியவர்

சிக்சர் விளாசும் போட்டி: ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து டோனி அசத்தல்

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் தொடக்க விழாவான சிக்சர் விளாசும் போட்டியில் டோனி ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து அசத்தினார்.

 
சிக்சர் விளாசும் போட்டி: ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து டோனி அசத்தல்
 
டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று நடக்கிறது. இந்த தொடரின் தொடக்க விழாவாக சிக்சர் விளாசும் போட்டி நடத்தப்பட்டது. இதில் டோனி, மோகித் ஷர்மா, பத்ரிநாத், பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், தமிழ்நாடு பேட்ஸ்மேன் அனிருத் ஸ்ரீகாந்த் கலந்து கொண்டர்.

மெஷின் மூலம் வீசப்படும் பந்தை சிக்சருக்கு விளாசுவதுதான் இந்த சிக்ஸ் விளாசும் போட்டி. முதல் நபராக ஹெய்டன் சிக்ஸ் அடிக்க களம் இறங்கினார். அவர் முதல் பந்தை தவிர மற்ற இரண்டு பந்துகளையும் சிக்சருக்கு தூக்கினார்.

அடுத்து வந்த நெஹி சிக்ஸ் அடிக்கவில்லை. அனிருத் ஸ்ரீகாந்திற்கு சரியாக பந்துகள் அமையவில்லை. அதன்பிறகு மெஷினில் டோனி பந்தை வைத்தார். இதில் மூன்று சிக்ஸ் விளாசினார்.

இறுதியாக டோனி களம் இறங்கினார். டோனி தான் சந்தித்த மூன்று பந்துகளையும் அதிக தூரத்திற்கு சிக்சர்களாக விளாசி அசத்தினார்.

போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் கூடியிருந்த சி.எஸ்.கே. ரசிகர்களை உற்சாகப்படுத்தி ஜெர்ஸி வழங்கினார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/22190332/1097975/TNPL-Six-hit-competion-dhoni-hat-trick-six.vpf

  • தொடங்கியவர்

3 பந்துகளில் 3 சிக்ஸர்கள் விளாசல்: மீண்டும் மஞ்சள் உடைஅணிவதில் மகிழ்ச்சி - டிஎன்பிஎல் தொடக்க விழாவில் தோனி கருத்து

dhonijpg

மஞ்சள் நிற உடையை அணிவதில் மகிழ்ச்சி அடைவதாக டிஎன்பிஎல் தொடக்க விழாவில் தோனி தெரிவித்தார்.

டிஎன்பிஎல் 2-வது சீசன் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தூத்துக்குடி டூட்டி பேட்ரியாட்ஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதியது. முன்னதாக ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிக்ஸர் விளாசும் போட்டி நடைபெற்றது. இதில் மகேந்திர சிங் தோனி, மேத்யூ ஹைடன், பத்ரி நாத், மோகித் சர்மா, எல்.பாலாஜி, அனிருத்தா ஸ்ரீகாந்த், கணபதி, பவன் நெகி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தோனி உள்ளிட்ட அனைவரும் மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்திருந்தனர். சிக்ஸர் விளாசும் போட்டிக்கு முன்னதாக மைதானத்தை வலம் வந்த தோனியும், ஹைடனும் பார்வையாளர்கள் இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர்களுக்கு மஞ்சள் நிற டி-சர்ட்களை வழங்கினர்.

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தடை முடிவுக்கு வந்துள்ளதை குறிக்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இதை தொடர்ந்து நடைபெற்ற சிக்ஸர் விளாசும் போட்டியில் முதலில் ஹைடன் பேட் செய்தார். 3 பந்துகளில் அவர் 2 சிக்ஸர்கள் அடித்தார். தொடர்ந்து பவுலிங் மெஷின் மூலம் தோனி பந்துகள் வீசினார். இதில் அனிருத்தா 2, பத்ரிநாத் 2, பாலாஜி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டனர். பவன் நெகி, மோகித் சர்மா ஆகியோர் அடித்த பந்துகள் எல்லை கோட்டை தாண்டி விழவில்லை. கடைசியாக தோனி பேட் செய்தார். அவருக்கு மெஷின் மூலம் மோகித் சர்மா பந்து வீசினார். அவர் வீசிய 3 பந்துகளையும் தோனி, ரசிகர்கள் அமர்ந்திருந்த கேலரிக்கு பறக்கவிட மைதானமே கரகோஷத்தில் சற்று அதிர்ந்தது. இதைத் தொடர்ந்து தோனி கூறியதாவது:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த இரு வருடங்களுக்கு முன்பு சேப்பாக்கத்தில் பேட் செய்தேன். அதன் பின்னர் ஒருநாள் போட்டி உட்பட எந்த வடிவிலான போட்டிகளிலும் நான் இங்கு விளையாடவில்லை. மீண்டும் இங்கு பேட் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடைசியாக இங்கு இந்திய அணி கடந்த ஆண்டு இறுதியில் டெஸ்ட் போட்டியில் விளையாடியது. ஆனால் அதில் நான் இடம்பெறவில்லை. சென்னை ரசிகர்கள் எப்போதுமே நிபந்தனையற்ற ஆதரவு வழங்கக்கூடியவர்கள்.

இங்குதான் நான் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானேன். 8 வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி உள்ளேன். சென்னை எனக்கு 2-வது தாய் வீடு என்பதை எப்போதுமே பெருமையாக கூறுவேன். மீண்டும் மஞ்சள் நிற உடையை அணிவது மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணிக்கான நீலநிற உடை போன்று மஞ்சள் நிறமும் கடந்த 8 ஆண்டுகளாக சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

டிஎன்பிஎல் போட்டிகளை முழுவதுமாக நான் பார்த்தது இல்லை. ஆனால் அதன் சிறப்பம்சங்கள் அடங்கிய தொகுதியை பார்த்துள்ளேன். தமிழக அளவில் நடத்தப்படும் இந்த தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்த தொடரின் மூலம் சிறந்த வீரர்களை தமிழகம் உருவாக்குகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் விளையாடும் போது வீரர்கள் அதிகம் கற்றுக்கொள்கின்றனர். முதல்தர போட்டிகளில் அவர்கள் தங்களது திறனை அதிகரித்துக் கொள்ளவும் உதவியாக உள்ளது. சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு தேர்வு செய்யப்படுவது கூடுதல் சிறப்பு.

இவ்வாறு தோனி கூறினார்.

http://tamil.thehindu.com/sports/article19335681.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.