Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உயிரிழந்தவரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து கதறி அழுத நீதிபதி:-

Featured Replies

கதறி அழுத யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

 
கதறி அழுத யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்

யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் 18 ஆண்டுகால நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர் கேமரத்ன (வயது -58) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை யாழ் போதனா வைத்திய சாலையில் உயிரிழந்தார்.

இந்நிலையில் கதறி அழுத நீதிபதி யாழ் மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தனது இரு கைகளையும் கூப்பி குறித்த மெய்பாதுகாவலரின் மனைவியிடம் மன்னிப்பு கோரினார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Judge-Jaffna-High-Court-Judge-Ilancheliyan

 

 

உயிரிழந்தவரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து கதறி அழுத நீதிபதி:-

elancheliyan.jpg
நல்லூர் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்பாதுகாவலரின் உறவினர்களின் காலில் வீழ்ந்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கண்ணீர் விட்டழுதார்.

நல்லூர் பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.மேல்.நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரான பொலிஸ் சார்ஜென்ட் ஹேமரத்ன என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலத்தை யாழ்.போதனா வைத்திய சாலையில் பொறுப்பெற்பதற்காக உயிரிழந்தவரின் உறவினர்கள் இன்று ஞாயிற்றுகிழமை யாழ். சென்று இருந்தனர்.

சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலை பிணவறைக்கு சென்றிருந்த வேளை அங்கு நின்றிருந்த நீதிபதி உறவினர்களை கண்டதும் கதறி அழுதார். அத்துடன் அவர்களின் காலிலும் வீழ்ந்து அழுதார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களின் மனதை உருக்கி இருந்தது.

http://globaltamilnews.net/archives/33832

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியின் சிறப்பு  சிங்களவர் என்பதை விட பல ஆண்டுகளாக விசுவாசத்குரிய நபர் இடமாற்றமாகி கிழக்கில் வந்த போது அவரிடமே இருந்துகடமையாற்றிவர்  இவர் நீதிபதியின் விசுவாசியான சிங்களவர் இவர் 

 

அழ்ந்த அனுதாபங்கள் ஒரு  நேர்மை தவறாத நீதிபதியை காப்பாற்றியதற்கு 

  • தொடங்கியவர்

 

தாங்க முடியாது கதறியழுத மேல் நீதிமன்ற நீதிபதி

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்து நடத்தட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகாயமுற்று உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர நேற்று இரவு சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

அவரது இழப்பைத் தாங்க முடியாத யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி ஹேமச்சந்திரவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழுதார்.

பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திரவுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

http://uthayandaily.com/story/13251.html

  • தொடங்கியவர்

என்னைப் பாதுகாக்க உயிர் துறந்த பொலிஸ் அதிகாரி – இளஞ்செழியன் உருக்கம்

 
 
 
 
 

என்னைப் பாதுகாக்க உயிர் துறந்துள்ளார் பொலிஸ் அதிகாரி என்று கண்கலங்கித் தெரிவித்தார் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன்.

 

http://uthayandaily.com/story/13323.html

  • தொடங்கியவர்

அச்சுறுத்தல் நிலவிய வேளை போகாத உயிர். அமைதியான காலத்தில் போய்விட்டது. – யாழ்.மேல் நீதிபதி வருத்தம்.

20375858_2114687608758072_72819194347530

 

வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலத்தில் எனக்கு பாதுகாப்பு வழங்கும் போது போகாத உயிர் யாழ்பாணத்தில் அமைதி நிலவும் போது போயுள்ளது என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்து உள்ளார்.

 
நல்லூரில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நீதிபதியின் மெய் பாதுகாவலர் உயிரிழந்து உள்ளார். அது தொடர்பில் தெரிவிக்கையிலையே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
ஆயுத போராட்ட காலத்தில் வவுனியாவில் அச்சுறுத்தல்கள் நிலவிய காலம் தொடக்கம் எனது மெய் பாதுகாவலராக இருந்தவர். நான் இடமாற்றம் செய்து செல்லும் இடமெங்கும் எனது மெய்பாதுகாவலராக இருந்தவர். அவர் சிலாபத்தை சேர்ந்தவர் அவருக்கு ஒரு பெண் பிள்ளையும் ஆண் பிள்ளையும் உண்டு

 

 
குறித்த உத்தியோகஸ்தர் என்னுடைய உயிரை பாதுகாப்பதற்காக துப்பாக்கிதாரியுடன் சண்டையிட்டு துப்பாக்கி பிரயோகத்தில் இறந்துள்ளார். மற்றைய மெய் பாதுகாவலரும் என்னை காப்பற்றுவதற்காக போராடி அவரும் காயமடைந்துள்ளார்.
 
உயிரிழந்த மெய் பாதுகாவலர் மிகவும் நம்பிக்கைக்கு உரியவர். வவுனியாவில் அதி உச்ச அச்சுறுத்தல்கள் ஆபத்துக்கள் இருந்த கால கட்டத்தில் எனக்கு அருகில் நின்று அனைத்து பாதுகாப்புக்களையும் தந்தவர் அக்கால கட்டத்தில் அவர் உயிர் போகவில்லை.
 
யாழ்ப்பாணம் அமைதியாக இருக்கும் இந்த காலகட்டத்தில் , யாழ்ப்பணத்தில் அனைத்து குற்றங்களும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ள இந்த சூழ்நிலையில் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளபட்டு அவர் உயிரிழந்தது வருத்தத்திற்கு உரியது. என மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/33878

  • தொடங்கியவர்

சிங்­கள மக்­க­ளின் மனங்­களை நெகிழ வைத்த இளஞ்­செ­ழி­யன்

 
சிங்­கள மக்­க­ளின் மனங்­களை நெகிழ வைத்த இளஞ்­செ­ழி­யன்
  •  
  •  

மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் மீதான துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்த உப பொலிஸ் பரி­சோ­த­கர் ஹேம­சந்­தி­ர­வுக்கு, சமூக வலைத் தளங்­க­ளில் தமிழ் இளை­ஞர்­கள் உள்­ளிட்ட பல­ரும் அஞ்­ச­லி­யை­யும், இரங்­கல்­க­ளை­யும் வெளிப்­ப­டுத்­தி­னர்.

அத்­து­டன், உயி­ரி­ழந்த பொலிஸ் அலு­வ­ல­ரின் மனை­வி­யின் காலில் நீதி­பதி வீழ்ந்து அழுத சம்­ப­வம் தொடர்­பில் சிங்­கள மக்­கள் நெகிழ்ச்­சி­யான கருத்­துக்­களை சமூ­க­வ­லைத்தளங்­க­ளில் பகிர்ந்­துள்­ள­னர்.

நல்­லூ­ரில் நேற்று முன்­தி­னம் மாலை, மேல் நீதி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை நோக்கி மேற்­கொள்­ளப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில் அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­ழந்­தார்.

ஹேம­சந்­தி­ர­வின் உயி­ரி­ழப்­புத் தொடர்­பில் தமிழ் இளை­யோர் சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் தங்­க­ளது ஆழ்ந்த இரங்­கல்­களை வெளிப்­ப­டுத்­தி­னர்.

‘நீங்­கள் காப்­பாற்­றி­யது நீதி­ப­தியை அல்ல, யாழ்ப்­பாண மக்­க­ளின் நம்­பிக்­கையை. ஆழ்ந்த அனு­தா­பங்­கள்!!’, ‘சொந்த இனத்­தில் துரோ­கி­கள்…..!!! ஆனால் நம் எதி­ரி­கள் என்று வசை­பா­டிய சிங்­கள இனத்­தில் தியா­கி­க­ளும் உள்­ள­னர் என நிரூ­பித்­த­வன்’, ‘ஓ வீரனே….உந்­தன் பெய­ரும் எங்­கள் மண்­ணில் எழுதி வைக்­கப்­ப­டும்! எம் நீதி­தே­வ­னுக்­காய் உயிர்த்­தி­யா­கம் செய்த காவ­ல­னும் தன் காவ­ல­னுக்­காய் தலை குனிந்து கத­றிய நீதி­தே­வ­னும் மனி­தம் இன்­னும் செத்­து­வி­ட­வில்லை என்­ப­தற்­கான உதா­ரண புரு­சர்­கள்! வீர அஞ்­ச­லி­கள் காவலா!’, ‘நீ காப்­பாற்­றி­யது ஒரு உயிர் அல்ல.

அது பல உயிர்­க­ளுக்கு வாழும்­போதே நிம்­மதி கிடைக்­கக்­கூ­டிய சட்­டத்தை நிலை­யாட்ட கூடிய நீதியை’ என்­ற­வாறு பல்­வேறு கருத்­துக்­கள் பதி­வி­டப்­பட்­டுள்­ளன. பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரது பணியை மெச்­சும் வகை­யில் அவை அமைந்­தி­ருந்­தன.

இதே­வேளை, தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரின் இழப்பை தாங்க முடி­யாத மேல் நீதி­மன்ற நீதி­பதி, ஹேமச்­சந்­தி­ர­வின் குடும்­பத்­தி­னர் முன்­னி­லை­யில் கதறி அழு­தார். இந்த உருக்­க­மான சம்­ப­வம் தமிழ் மக்­கள் மத்­தி­யில் மட்­டு­மன்றி, ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளின் இத­யங்­களை கனக்­கச் செய்­துள்­ளது.

மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழி­ய­னின் இந்­தக் குணத்தை தென்­னி­லங்கை ஊட­கங்­கள் வெகு­வா­கப் பாராட்டி செய்தி வெளி­யிட்­டுள்­ளன. சமூக ஊட­கங்­க­ளி­லும் சகல இனங்­க­ளைச் சேர்ந்­த­வர்­க­ளும் நீதி­ப­தி­யின் குணா­தி­ச­யத்தை வர­வேற்­றுள்­ள­னர்.

இலங்­கை­யில் இவ்­வாறு எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யும் தனது மெய்ப்­பா­து­கா­வ­ல­ரின் உயி­ரி­ழப்பை மதித்­தில்லை. நீதி­ப­தி­யான இளஞ்­செ­ழி­யன், ஹேமச்­சந்­தி­ர­வின் குடும்­பத்­தி­னர் முன்­னி­லை­யில் கதறி அழும் காட்சி நெகிழ வைப்­ப­தாக அவர்­கள் பதி­விட்­டுள்­ள­னர்.

படித்­த­வர், பதவி பெற்­ற­வர் என்ற போதி­லும், மனித உயி­ருக்கு முன்­னால் இவ்­வ­ளவு நெகிழ்ச்­சி­ய­டை­வ­தென்­பது பாராட்­டப்­பட வேண்­டிய விட­யம் என்­றும் அவர்­கள் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

http://uthayandaily.com/story/13411.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.